Saturday, July 11, 2009

கவிதை

சுதந்திரத்தின்

முதல் காற்றை நுகர்ந்தபடி

பசித்தவனுக்கு

கனிகளை கொடுத்திருந்தேன்

தூவி பழக்கப்பட்டவன்

விதைகளை விட்டுச்சென்றான்

நிறைந்த கனிகளுடன்

கல்லடிகளை

வாங்கும்

என்னிடம்

உயிர்நீர் வேண்டி நிற்கின்றன

விதைகள்...

இன்னும் நிரம்பி

வழிகிறது

ஏவாளின்

அட்சய பாத்திரம்.

--- ஜே.எஸ். அனார்கலி

No comments:

Post a Comment