Friday, August 6, 2010

மகாகவிக்கு ஒரு சமர்ப்பணம் ..



இந்த மாத 'வடக்கு வாசல்' இதழ் மஹாகவி ரவீந்திர நாத் தாகூரின் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. சத்யஜித் ரே வரைந்த தாகூரின் கோட்டோவியத்துடன் அட்டையில் துவங்கும் இதழ் இந்தியாவின் மிகப்பெரும் கவியான தாகூரை பற்றி நிறைவான தகவல்கள், வங்காள மொழி உட்பட பல மொழிகளில் தேர்ந்தவரும் தாகூரின் படைப்புகளை தமிழுக்கு தந்தவருமான திரு. கொல்கத்தா கிருஷ்ணமூர்த்தி யின் செறிவான நேர்காணல், தமிழில் இது வரை முழுமையாக அறியப்படாத கவியின் பல்வேறு முகங்கள் என்று நேர்மையான படைப்பாக வெளிவந்திருக்கிறது. தாகூரின் படைப்புகளில் இதுவரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்கள், கட்டுரைகள் அவற்றை மொழியாக்கம் செய்தவர்கள் பற்றியும் ஒரு அட்டவணையே வெளியிடப்பட்டிருக்கிறது. வ.வே.சு அய்யர், பாரதி முதல் கிருஷ்ணமூர்த்தி வரை நிறைய பேர் அவர் படைப்புகளை மொழி பெயர்த்திருக்கிறார்கள். எனினும் அவர் படைப்புகளில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை மிக குறைவே என்கிறார் கிருஷ்ணமூர்த்தி. எனில் தாகூரின் படைப்புலகத்தின் பிரமாண்டத்தை நம்மால் உணர முடிகிறது.

ஒரு சில சமகால இலக்கிய நிகழ்வுகள் பற்றிய செய்தி கட்டுரைகளை தவிர, மற்ற அனைத்தும் தாகூரை பற்றியவை. எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் அதன் தீவிரம் குறையாமல் அதே சமயம் 'அறிவு ஜீவி' தனமான மிரட்டலும் இல்லாமல் எளிமையாக இருக்க வேண்டும் எழுத்து என்னும் எண்ணமுடையவர் வடக்கு வாசல் ஆசிரியர் யதார்த்தா .பென்னேஸ்வரன். குறுகிய கால தயாரிப்பாக இதை சிறப்பாக வெளியிட்டிருக்கிறார்.
தாகூரின் புகழ்பெற்ற காபூலிவாலா சிறுகதை இடம்பெற்றிருக்கிறது. தாகூரை மட்டுமல்ல இலக்கியத்தை விரும்பும் அனைவரும் தவற விடக்கூடாத சிறப்பிதழ் இது.

தொடர்புக்கு:

Vadakku Vaasal,
5A/11032, IInd Floor, Gali No:9,
Sat Nagar,
Karol Bagh,
New Delhi-11005.
Ph: 65858656, 9910031958.
vadakkuvaasal@gmail.com
www.vadakkuvaasal.com

2 comments:

  1. இந்தப் பதிவின் சுட்டியை என் பதிவில் தந்துள்ளேன்:
    http://tamilamudam.blogspot.com/2010/08/blog-post_09.html

    ReplyDelete
  2. Thank You Ramalakshmi!
    I read your poetry..Very good.

    ReplyDelete