Monday, September 6, 2010

அறை

புறவிசையின்

உதவியின்றி இயங்காப்

பொருள்களைக்

கொண்ட அறை.

அவற்றின்

மௌன ஏக்கங்களால்

நிரம்பியிருக்கிறது.

உள்ளே நுழைந்ததும்

உணர்கிறேன் அதை.

அவை என்னை

சூழ்ந்து கொள்கின்றன

இருக்கையிலிருந்து

எழுந்து நான்

மின்விசிறியை முடுக்கிவிட்டு

அமர்கிறேன்

அப்போதாவது

பொருள்களின்

ஏக்கங்கள் என்னைவிட்டு

அகலும் என்று.

எத்தனைதான் கலைத்துப்போட

முயன்றாலும்

மீண்டும்

ஒழுங்குக்குள் வந்தமர்கின்றன

பொருள்கள்

மீண்டும்

என்னைச் சூழ்கின்றன

அவற்றின்

மௌன ஏக்கங்கள்.

--ஜே.எஸ். அனார்கலி

மார்ச் 2008

உயிர்மை


No comments:

Post a Comment