Friday, July 10, 2009

காலம்

காலம்
கண்கொட்டாமல்
பார்த்து கொண்டிருக்கிறது.
பகல் விழித்திருப்பது பற்றியோ
இரவு விழித்திருப்பது பற்றியோ
கவலை இல்லை அதற்கு
யுகயுகங்களாக
கணம் கணமாக
காலம்
கண்கொட்டாமல்
கதை கேட்டுகொடிருக்கிறது.
விதவிதமான மனிதர்களுடையதும்
விலங்குகளுடையதும்கவியின் பருக்கையில் பசியாறிய பறவையினத்தினுடையதுமான கதைகள்
வளர்மரங்களினுடையதும்
அவற்றிலிருந்து கைவிடப்பட்ட
இலைகளினுடையதும் நகர சந்துகளில்
குத்த வைத்திருக்கும் குல தெய்வங்களினதும்
கதைசொல்லிகளின் கதைகளையும்
கூட
காலம் கேட்டுகொண்டிருக்கிறது.
பார்க்கையில்
காலம்
கதைகளால்
நிரம்பியிருக்கிறது.
----ஜே. எஸ். அனார்கலி


No comments:

Post a Comment