Wednesday, February 2, 2011

சொல்வனம் இந்த இதழில்..

சொல்வனம் இந்த இதழில் நிறைய கட்டுரைகள் சிறப்பாக வந்திருக்கின்றன. நண்பர் சேதுபதி எழுதிய மறைந்த இசைமேதை பீம்சென் ஜோஷி பற்றிய கட்டுரையும் இசை பற்றி நிறைய எழுதிவரும் சுரேஷின் இசையமைப்பாளர் கே.வி.எம் பற்றிய கட்டுரையும் அருமை. ஜெயமோகனும் இதை குறிப்பிட்டிருக்கிறார். என்னை மிகவும் கவர்ந்த இன்னொரு கட்டுரை ..மதியழகன் சுப்பையா எழுதிய 'ஆடுகளம்' பற்றிய பார்வை அபாரம். அதே சமயத்தில் நண்பர் சுரேஷ் கண்ணன் இந்த படத்தை முக்கிய படம் என்று பாராட்டி இருப்பதை என்னால் நம்பவும் ஏற்கவும் முடியவில்லை.

களவாணி படம் வந்து ஒரு 'சரித்திரம்' படைத்தபோது நான் சொல்வனத்தில் எழுதிய கட்டுரையில் இந்த யதார்த்த போக்கை விமர்சித்திருந்தேன். நம் இயக்குனர்கள் 'யதார்த்தம்' என்ற பெயரில் செய்துவரும் அசட்டு தனங்களையும் அதன்மூலம் நிகழும் நிகழ இருக்கும் ஆபத்துகளையும் சுப்பையா சிறப்பாகவே சொல்லி இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள்.

No comments:

Post a Comment