Saturday, February 6, 2010

ஒன்றிரண்டு தானியங்களோடு
கூடு சேர்கின்றன பறவைகள்
வழியனுப்பிய மரங்களும்
வரவேற்று
வழியனுபவங்களைக
கேட்டுக்கொள்கின்றன
எப்போதும்
கைமாற்றி விடப்படும்
அரிதாரங்களை ஏற்று
ஒவ்வாமைகளுடன்
புலப்படாது பிணைந்திருக்கும்
ஏதோ ஒன்றுள்
அறுபடக காத்திருக்கிறது
மனித உறவு.


-
ஜே. எஸ். அனார்கலி

1 comment:

  1. கவிதை அருமை.

    //வழியனுப்பிய மரங்களும்
    வரவேற்று
    வழியனுபவங்களைக
    கேட்டுக்கொள்கின்றன//

    ரசித்தேன்!

    ReplyDelete