tag:blogger.com,1999:blog-79431626789504995192024-03-13T08:37:27.544+05:30சந்தனார்இலக்கியம் சினிமா குறும்படம் உலகம்chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comBlogger127125tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-4387135199645731252016-06-09T08:46:00.000+05:302016-06-09T08:47:47.148+05:30மவுனத்தின் மரணம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKDoCFfKmqygxk9Bc-RY11BIcjLFwQUgGO36kctiiXSU4pArcWa-uGsurNDGnPZ2tYHA4WY9y0DPzuaIIRsMQi6HoRoEpFdur04wUUPbLvIDlLgl_qI9N1o7Vz_dDWtemuQ0xrOv0qDhk/s1600/380440_10150445305703750_870142385_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="491" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKDoCFfKmqygxk9Bc-RY11BIcjLFwQUgGO36kctiiXSU4pArcWa-uGsurNDGnPZ2tYHA4WY9y0DPzuaIIRsMQi6HoRoEpFdur04wUUPbLvIDlLgl_qI9N1o7Vz_dDWtemuQ0xrOv0qDhk/s640/380440_10150445305703750_870142385_n.jpg" width="640" /></a></div>
<br />
<br />
<br />
<br />
நீண்ட பயணத்தில்<br />
களைத்த பயணியென<br />
தளர்வுற்றிருக்கிறது<br />
மவுனம்.<br />
கனத்தும்<br />
எண்ணிலடங்காமல்<br />
சிதறியும்<br />
கிடக்கிறது<br />
அது.<br />
நாளை<br />
ஒற்றைச்<br />
சிறகென<br />
அது<br />
காற்றில்<br />
மிதக்கலாம்<br />
அல்லது<br />
கைவிடப்பட்ட<br />
தெருவாசியாகலாம்.<br />
<br />
<b>- ஜே.எஸ்.அனார்கலி</b><br />
ஓவியம்: வெ.சந்திரமோகன்</div>
chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-69866807153542488312015-07-11T20:16:00.002+05:302015-07-11T20:16:24.043+05:30நான் நாவல் எழுத மாட்டேன்: மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி நேர்காணல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiPbFIagNCFMzWwQSAyMhw8uWeJaZDaww6W7RLIAEFyL9W4cit26C90CWtgkOwQi0Ak5HyIdegUShAbFDi3ApQqEYyo1UWNwm_Y-fT9iKqGsqC23ymhk4wn_qwZVzL4k9P9igBzt4k5do/s1600/11716001_620316764737999_1205595687_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="424" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiPbFIagNCFMzWwQSAyMhw8uWeJaZDaww6W7RLIAEFyL9W4cit26C90CWtgkOwQi0Ak5HyIdegUShAbFDi3ApQqEYyo1UWNwm_Y-fT9iKqGsqC23ymhk4wn_qwZVzL4k9P9igBzt4k5do/s640/11716001_620316764737999_1205595687_n.jpg" width="640" /></a></div>
<h2 style="background: rgb(255, 255, 255); border: 0px; display: table-cell; font-weight: normal; margin: 0px 0px 13px; padding: 0px; text-align: left; vertical-align: top; width: 610px; word-wrap: break-word;">
<b style="line-height: 20px; outline: 0px;"><span style="color: #20124d; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: small;"><br /><a href="http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/article7410586.ece?homepage=true&relartwiz=true">’தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியான ஜி. குப்புசாமி நேர்காணலின் விரிவான பதிவு..</a></span><br /><br /><span style="color: #cc0000;"><span style="font-family: Georgia, Times New Roman, serif; font-size: large;">மொ</span><span style="font-family: Latha, Georgia, Times New Roman, Times, serif; font-size: small;">ழிபெயர்ப்பை ஒரு படைப்புச் செயலாகக் கருதும் மிகச் சில மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர் ஜி. குப்புசாமி. மூலப்படைப்பின் பொருளை மட்டுமல்லாமல் அதன் தொனியையும் கொண்டுவருவதற்கு மெனக்கெடுபவர். ஓரான் பாமுக்கின் நூல்கள், ரேமண்ட் கார்வரின் சிறுகதைகள், அருந்ததி ராயின் நாவல் என்று தமிழுக்கு அவர் கொண்டுவந்த புத்தகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. ஓரான் பாமுக்கின் ‘வெண்ணிறக் கோட்டை’ மொழிபெயர்ப்பை முடிக்கும்தறுவாயில் இருக்கும் அவருடன் ஒரு நேர்காணல்…</span></span></b></h2>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<b><span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;"><br /></span></b></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<b><span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">இலக்கியம்,
மொழிபெயர்ப்பில் ஆர்வம் உருவானது எப்படி?</span></b></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">மொழிபெயர்ப்பு பற்றிப்
பேசத் தொடங்குவதற்கு முன், வாசிப்பில் நான் மிகுந்த ஆர்வமுள்ளவன் என்பதை
முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். மிக இளம் வயதிலேயே வித்தியாசமானவனாக
இருக்கவேண்டுமென்ற ஆசையில், புரிகிறதோ இல்லையோ, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி,
ஜி.நாகராஜன் என்று படித்துக்கொண்டிருந்தேன். உண்மையான மனத்திறப்பு பதினேழு வயதில்
ஜெயகாந்தனால் ஏற்பட்டது. கூடவே பி.ஜி.வோடவுஸ், ஹெய்லி, சுஜாதா என்றும்
படித்துக்கொண்டிருந்தேன். வயசுக்கோளாறு காரண்மாக பல நோட்டுப் புத்தகங்களை
கவிதையால் நிரப்பியிருக்கிறேன். சில சிறுகதைகளையும் எழுதினேன். எதையும்
பிரசுரத்துக்கு அனுப்பாமல் எனக்கே எனக்கானவையாக
வைத்துக்கொண்டேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;"><b>ஏன் தொடர்ந்து
எழுதவில்லை?</b></span><span style="font-family: 'Segoe UI', sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">அதற்கு ஒரு விநோதமான
காரணம் உண்டு. வண்ணதாசனைப்போலவே எழுதிக்கொண்டிருந்தேன். ஒரு வண்ணதாசன்
இருக்கும்போது நானும் எதற்கு என்று
நிறுத்திவிட்டேன். </span><span style="font-family: Arial, sans-serif; font-size: 10pt;"> </span><span style="font-family: 'Segoe UI', sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<b><span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;"><br /></span></b></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<b><span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">மொழிபெயர்ப்பின் பக்கம்
உங்களை இழுத்துவந்தது எது?</span></b><span style="font-family: 'Segoe UI', sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">முப்பதுகளின் இறுதியில்
தீவிரமான மன அழுத்தத்தில் இருந்தேன். என் இறுக்கத்தை மொழிபெயர்ப்புதான் தளர்த்தியது என்பேன். 2002
குஜராத் கலவரத்தை எதிர்த்து திருவண்ணாமலையில் கே.என். பணிக்கர், ஆ.இரா.
வேங்கடாசலபதி, ஞாநி போன்றோர் கலந்துகொள்ளும் கண்டனக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது குஜராத் கலவரம் தொடர்பாக அவுட்லுக் இதழில் அருந்ததிராய் எழுதிய நீண்ட
கட்டுரையை மொழிபெயர்த்து கூட்டத்தில் சிறு நூலாக வெளியிடலாம் என்று தீர்மானித்து
பவா செல்லதுரை என்னை மொழிபெயர்க்கச் சொன்னார் அதுதான் ஆரம்பம் பல வருடங்களாக
வாசித்து, வாசித்து மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டிருப்பதை விட மொழிபெயர்த்து
மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதின் இன்பம் அப்போதுதான் புரிந்தது. புதிய
பிறப்பெடுத்ததுபோல என் அபிமான சிறுகதைகளைத் தொடர்ந்து மொழிபெயர்க்க ஆரம்பித்தேன்.</span><span style="font-family: Arial, sans-serif; font-size: 10pt;"> </span><span style="font-family: 'Segoe UI', sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<b><span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;"><br /></span></b></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<b><span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">அருந்ததி ராயின் ‘காட்
ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ நாவலையும் நீங்கள்தான் மொழிபெயர்த்தீர்கள். அது தொடர்பாக</span></b><b><span style="font-family: Arial, sans-serif; font-size: 10pt;"> </span></b><b><span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">அவருடனான உரையாடல்களில்</span></b><b><span style="font-family: Arial, sans-serif; font-size: 10pt;"> </span></b><b><span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏதாவது...</span></b><span style="font-family: 'Segoe UI', sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">அருந்ததிராய் என்
ஆதர்சஎழுத்தாளர். ‘காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ நாவலை ஆகச்சிறந்த நாவல் என்று நான்
சொல்லிக்கொண்டிருந்தது சில நண்பர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், பலருக்குச்
சாதாரணமாகத் தோன்றும் சில பாடல்கள் நம் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும்
அல்லவா! இந்த நாவல் எனக்கு அப்படித்தான். உண்மையில், இந்நாவலின் எஸ்தா பாத்திரத்தை
வாசிக்கும்போது அது நான்தான் என்று தோன்றியது. எனக்கே தெரியாமல் எனக்கு இன்னொரு
வாழ்க்கை இருப்பதாக உணரவைத்த பாத்திரம் அது.</span><span style="font-family: Arial, sans-serif; font-size: 10pt;"> </span><span style="font-family: 'Segoe UI', sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">அந்நாவலின் மொழிபெயர்ப்பு
பணிகள் முடிவடையும் வரை அவருடன் தொடர்பு இருந்ததேயில்லை.</span><span style="font-family: Arial, sans-serif; font-size: 10pt;"> </span><span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">அருந்ததிராய் 2012 ஜனவரியில் சென்னை வந்திருந்தபோதுதான் கண்ணன்
அவரிடம் என்னை அறிமுகப்படுத்திவைத்தார். என்னுள் கலந்துவிட்டிருந்த அந்நாவலைப்
பற்றி அருந்ததிராயிடம் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டேன். அதன்பின்னர் எனக்கு
அனுப்பும் மின்னஞ்சல்களில் ’டியர் குப்புசாமி எஸ்தப்பன்’ என்று என்னைக்
குறிப்பிட்டு, அருந்ததி ராஹேல் என்றுதான் கையெழுத்திடுவார். என் குடும்பத்தில்
ஒருவராக, என் சகோதரியாக இருப்பவர் அவர்.</span><span style="font-family: 'Segoe UI', sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<b><span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">மொழிபெயர்ப்பு விஷயத்தில்
உங்களுக்கான கோட்பாடு என்ன?</span></b><span style="font-family: 'Segoe UI', sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">‘கேட்சிங் தி லெட்டர் பை
தி ஸ்பிரிட் ஆஃப் இட்’ என்பதுதான் எனது தாரக மந்திரம். மூலப்படைப்பில் இருந்து எதையும் திருத்துதல்,
மாற்றுதல், வாசகங்களை இடம் மாற்றிப் பயன்படுத்துதல் போன்றவற்றைச் செய்ய
மொழிபெயர்ப்பாளருக்கு உரிமையே கிடையாது. மூல ஆசிரியருக்கு மொழிபெயர்ப்பாளர் தன்னை
முழுமையாக ஒப்புக்கொடுத்துவிட வேண்டும். அவரது தொனி, மொழி, நடை என்று
எல்லாவற்றையும் அப்படியே கொண்டுவர வேண்டும். அதே சமயம், மொழிபெயர்ப்பு என்பது 100%
முழுமையானதாக வருவதற்கு வாய்ப்பில்லை என்றுதான் சொல்வேன். ஆனால், அந்த 100%-ஐ
நோக்கிய பயணம்தான் மொழிபெயர்ப்பாளர் செய்ய வேண்டியது. அடிக்குறிப்புகளில் எனக்கு
உடன்பாடு கிடையாது.மூலப் படைப்பை விட மொழிபெயர்ப்பு நன்றாக இருப்பதாக யாரேனும்
சொன்னால் அவர் மூலப் படைப்பைச் சரியாகப் படிக்கவில்லை என்று அர்த்தம். ஆனால்,
தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல புலமை கொண்ட எழுத்தாளர் அ. முத்துலிங்கம், ’என்
பெயர் சிவப்பு’ மொழிபெயர்ப்பைப் பற்றி எழுதும்போது ஆங்கிலத்தைவிட தமிழில் நன்றாக
இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். சில விஷயங்களை, ஆங்கிலத்தைவிட தமிழில் உயிப்போடு
எழுத முடிவதுதான் இதற்குக் காரணம், அந்தப் பெருமை தமிழுக்குத்தான் என்று
அவருக்குச் சொன்னேன்.</span><span style="font-family: Arial, sans-serif; font-size: 10pt;"> </span><span style="font-family: 'Segoe UI', sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<b><span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;"><br /></span></b></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<b><span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">படைப்புகளை மொழிபெயர்ப்பதிலும்,
அல்புனைவுகளை மொழிபெயர்ப்பதிலும் இருக்கும் வேறுபாடுகள் என்னென்ன?</span></b><span style="font-family: 'Segoe UI', sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">அயல் மொழிகளில்
எழுதப்பட்ட புனைவுகளை மொழிபெயர்க்கும்போது, முற்றிலும் புதிய நிலப்பரப்புகள்,
புதிய கலாச்சாரத்தை நம் மொழிக்கு அசலாகக் கொண்டு வரவேண்டிய சவால் இருக்கிறது.
எம்.ஆர். ராதா, டி.எஸ். பாலையா போன்ற நடிகர்களைப் போலவே ஆங்கிலத்தில் பேசிக் காட்ட
வேண்டும் என்றால், அவர்கள் பேசும் பாணியை அப்படியே கொண்டுவரவேண்டியிருக்கும்
இல்லையா! அப்படித்தான், புனைவுகளை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர்கள் மிமிக்ரி
ஆர்டிஸ்ட் போல செயல்பட வேண்டும். மூலப் படைப்பின் தனித்தன்மை, அதன் சாரத்தை
முழுமையாகக் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும். நான் – ஃபிக்ஷன் எனப்படும்
அல்புனைவுகளை மொழிபெயர்க்கும்போது ஆசிரியரின் தொனி, நடை போன்றவற்றைவிட சொல்லவரும்
கருத்தைத் தெளிவாக, தேவைப்பட்டால் கூடுதல் விவரத்தையும் அளித்து , ‘ஆம்பிக்யுட்டி’
எனப்படும் தெளிவற்றத் தன்மை இல்லாமல் மொழிபெயர்க்கவேண்டும். ராமச்சந்திர குஹா, கே.
என். பணிக்கர், பி. சாய்நாத் போன்றவர்கள் எழுதும் கட்டுரைகளில் கருத்துகள்தானே
முக்கியம். ஆனால் படைப்பாளிகள் எழுதும் அல்புனைவுகளுக்கு இது பொருந்தாது. அருந்ததி
ராயின் கட்டுரைகளையும், பாமுக்கின் ‘இஸ்தான்புல்’லையும் கலைப் படைப்புகளாகத்தான்
கருதி மொழிபெயர்க்க வேண்டும்.</span><span style="font-family: 'Segoe UI', sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<b><span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">மொழிபெயர்ப்பின்போது
அந்நிய மொழியின் மரபுத் தொடர்கள் என்னென்ன சவால்களைத் தரும்?</span></b><span style="font-family: 'Segoe UI', sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">அயல்மொழி மரபுத்
தொடர்களின் சொற்களை நேரடியாக
மொழிபெயர்ப்பதை விட அபத்தம் வேறில்லை. அச்சொற்றொடர் உணர்த்தும்
பொருளுக்குத் தக்கவாறு வாக்கியத்தை அமைப்பதே உத்தமம். அந்தந்த வாழ்வியல்,
கலாசாரத்துடன் தொடர்புடைய அயலக மரபுத் தொடர்களை நம் நிலத்துடன் வலுக்கட்டாயமாகப்
பொருத்திவிட முடியாது.</span><span style="font-family: 'Segoe UI', sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<b><span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">அப்படி விட்டுவிட்டால்
கதைக்கு நடுவே இடைவெளி இருப்பதாக வாசகர்களுக்குத் தோன்றாதா?</span></b><span style="font-family: 'Segoe UI', sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">அதுதான் இதில் இருக்கும்
சவால். ஒரு மொழிக்கே உரிய பிரத்யேக மரபுத்
தொடர்களை வேறொரு மொழியில் எழுதும்போது, அதற்கு இணையான உள்ளூர் மரபுத் தொடர்களைப்
பயன்படுத்தினால் பொருத்தமாக இருக்காது. ஒரு உதாரணம் சொல்கிறேன். ஓரான் பாமுக்
எழுதிய ‘தி ஒயிட் கேஸில்’ துருக்கிய நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும்
விக்டோரியா ஹால்புரூக், நாவலில் பயன்படுத்தியிருக்கும் மரபுத் தொடர்களில்
பெரும்பாலானவை துருக்கிய மண்ணுக்குத் தொடர்பில்லாதவை போலத் தோன்றுகின்றன. அவை
ஆங்கில மரபுத் தொடர்களாகவே தெரிகின்றன. எனக்குத் துருக்கிய மொழி தெரியாது.
எனினும், துருக்கிய பண்பாட்டுக் கூறுகள் தொடர்பாக இருக்கும் பரிச்சயத்தை வைத்து
இதைச் சொல்கிறேன். நுட்பமான வாசகர்கள் இதுபோன்ற வேறுபாட்டைப்
புரிந்துகொண்டுவிடுவார்கள். மொழிபெயர்ப்பாளர்களுக்கு இருப்பது மிகக் குறுகலான சுதந்திர
வெளிதான்.</span><span style="font-family: 'Segoe UI', sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<b><span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">மொழிபெயர்ப்பில் உங்கள்
முன்னோடி யார்?</span></b><span style="font-family: 'Segoe UI', sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">தமிழில் ஆர். சிவகுமார்,
வெ.ஸ்ரீராம், சி. மணி போன்றொர் மிகவும் சிரத்தையான மொழிபெயர்ப்பாளர்கள். ஆனால்
மொழிபெயர்ப்பில் எனது மானசீக குரு என்றால், சா. தேவதாஸைத்தான் சொல்வேன். என்
ஊரிலேயே எனக்குக் கிடைத்த குரு அவர்.
மொழிபெயர்ப்பு குறித்த நுட்பங்களை, உத்திகளை கற்றுத்தந்த நண்பர், வழிகாட்டி அவர்தான். அவரது மொழிபெயர்ப்புகளை விடவும், நேரடியாக அவரிடம் நான் கற்றுக்கொண்ட
பாடங்கள்தான் என்னைச் செழுமைப்படுத்தின என்பேன். மற்றொரு குரு, வேறு யார்
க.நா.சு.தான்! மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்று அவர் செய்யாத விஷயங்களே இல்லை. அவர்
100% முழுமையான மொழிபெயர்ப்பாளர் இல்லை என்று இன்று சொல்லலாம். ஆனால், அவரது
நோக்கம் அயல் பிரதேசங்களின் படைப்புகளை முடிந்தவரை பரிந்துரை செய்வதாகத்தான்
இருந்தது. </span><span style="font-family: 'Segoe UI', sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<b><span style="font-family: Arial, sans-serif; font-size: 10pt;"> </span></b><b><span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">மொழிபெயர்ப்பு படைப்புகளைப் பொறுத்தவரை, தமிழ்
சரளமாக இருப்பதில்லை என்று பொது வாசகர்களின் ஒரு தரப்பு கருதுகிறதே. அதுபற்றி என்ன
நினைக்கிறீர்கள்?</span></b><span style="font-family: 'Segoe UI', sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">மொழிபெயர்ப்பு கடினமாக
இருப்பதையும், எளிதாக இருப்பதையும் தீர்மானிப்பது மூலப்படைப்புதான் என்பதை பல
தீவிர வாசகர்கள்கூட புரிந்துகொள்ளாமல் இருப்பது ஆயாசமளிக்கிறது. ஓர் இலக்கியப்
படைப்பை மொழிபெயர்ப்பது என்பது மறுகூறலாக இருக்கக்கூடாது. சிக்கலான வாக்கிய
அமைப்பிலும், நனவோடை உத்தியிலும் எழுதப்படும் எழுத்தை, நீர்த்துப்போன எளிமையான
நடையில் பள்ளி ஆசிரியன் வேண்டுமானால் பாடம் நடத்தலாம். மொழிபெயர்ப்பு என்பது ஓர் இணையான படைப்பாக்கம். வாசகனை
படைப்பாளியிடம் மொழிபெயர்ப்பாளன் கொண்டுசேர்க்க வேண்டும். படைப்பாளியை வாசகனிடம்
கொண்டுவருதல் இலக்கிய மொழிபெயர்ப்பாகாது. </span><span style="font-family: Arial, sans-serif; font-size: 10pt;"> </span><span style="font-family: 'Segoe UI', sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<b><span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">ஓரான் பாமுக் படைப்புகளை
மொழிபெயர்ப்பதில் தனி ஆர்வம் காட்டுகிறீர்கள். உங்களை அவர் எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறார்?</span></b><span style="font-family: 'Segoe UI', sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">ஓரான் பாமுக்கை எனக்கு
அறிமுகப்படுத்தியவர் எஸ். ராமகிருஷ்ணன்தான். வாசிக்கத் தொடங்கியதும் அவரது
எழுத்துகள் என்னை முழுமையாகப் பீடித்துக்கொண்டுவிட்டன என்றுதான் சொல்வேன்.
எந்தெந்த எழுத்தாளர்களின் படைப்புகளை மொழிபெயர்க்கலாம் என்று காலச்சுவடு கண்ணன்
என்னிடம் கேட்டபோது நான் ஓரான் பாமுக்கின் பெயரைத்தான் சொன்னேன். அவரது ‘மை நேம்
இஸ் ரெட்’ நாவலை முதலில் மொழிபெயர்த்தேன். துருக்கிக்கும் இந்தியாவுக்கும் ஆன்ம
ரீதியாகப் பிணைப்பு இருக்கிறது. இரு நாடுகளின் நிலப்பரப்புகள் முற்றிலும்
வேறானவையாக இருக்கலாம். ஆனால், துருக்கியர்களின் மனப்பரப்பு இந்தியத் தனமானது
என்றே சொல்வேன். பாமுக்கின் மன உலகம் இயங்கும் விதம் எனக்குப் பரிச்சயமாக இருக்கிறது.
உண்மையில் பாமுக்கை விட என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர் ரேமண்ட் கார்வர்தான்.</span><span style="font-family: Arial, sans-serif; font-size: 10pt;"> </span><span style="font-family: 'Segoe UI', sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<b><span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">மொழிபெயர்ப்பு படைப்புகள்
சமூகத்தில் எந்த விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?</span></b><span style="font-family: 'Segoe UI', sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">ஒவ்வொரு மொழியிலும் அயல்
மொழிப் படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் மிகுந்த தாக்கத்தைச் செலுத்துகின்றன.
தமிழில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புகளால் இலக்கியப் படைப்புகள்
செழுமையடைந்திருக்கின்றன.</span><span style="font-family: Arial, sans-serif; font-size: 10pt;"> </span><span style="font-family: Arial, sans-serif; font-size: 10pt;"> </span><span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">க.நாசு., பிரம்மராஜன், ஸ்ரீராம் என்று வெவ்வேறு
காலகட்டங்களில் பலர் அயல் மொழிப்படைப்புகளை</span><span style="font-family: Arial, sans-serif; font-size: 10pt;"> </span><span style="font-size: 10pt;"> </span><span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">மொழிபெயர்த்தளித்ததால்தான் தமிழில் நவீனஇலக்கியம்
தனது அடுத்தடுத்த அடியை எடுத்துவைத்திருக்கிறது. சமீபத்திய உதாரணம் ஒன்றைச்
சொல்கிறேன். தேவிபாரதி சமீபத்தில் எழுதிய ‘நிழலின் தனிமை’ எனும் குறுநாவல்
சர்வதேசத் தரத்திலானது. இந்த நாவலுக்கான வடிவமும், குரலும் நீண்டகாலமாகப்
பிடிபடாமல் இருந்ததாகவும், </span><span style="font-family: Arial, sans-serif; font-size: 10pt;"> </span><span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">ஜான் பான்வில் எழுதிய ‘கடல்’ நாவலின்
மொழிபெயர்ப்பைப் படித்த பின்னர்தான் நாவலின் தொனி பிடிபட்டதாகவும் என்னிடம்
சொன்னார்.</span><span style="font-size: 10pt;"> </span><span style="font-family: 'Segoe UI', sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<b><span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">நேரடியாகப் புத்தகங்கள்
எழுதும் திட்டம் இருக்கிறதா?</span></b><span style="font-family: 'Segoe UI', sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">இதுவரை அந்தத் திட்டம்
இல்லை. ஏனெனில் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய என் அபிமான புத்தகங்கள் இன்னும்
எத்தனையோ இருக்கின்றன. ஓரான் பாமுக்கையோ, பான்வில்லையோ, கார்வரையோ
மொழிபெயர்க்கும்போது அவர்களுடைய ஆன்மாவில் கலந்திருக்கும் இன்பமே எனக்குப்
போதுமானதாக இருக்கிறது. எனினும் ஒரு நாவல் மனதுக்குள் இருக்கிறது. ஆனால் அதை
எழுதக்கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறேன்.</span><span style="font-family: 'Segoe UI', sans-serif; font-size: 10pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal">
<br /></div>
<br />
<div class="MsoNormal">
<br /></div>
</div>
chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-12540349514783443852014-11-09T17:41:00.002+05:302014-11-09T17:41:55.267+05:30அட்டன்பரோ: வரலாற்றின் கலைஞன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNWMIRUHP2fup-DNf2JqcDVGPFugmNafz3lFTDN_mlUpLDcd3zzT09IEw_TcHRMUSO9rhxnibERcIddpFkldmjzG9NZ_ytRN01NxQo0uKOne_LNRv4REQ1f49y-uElKgZzNfebF_vpEj0/s1600/Richard-Attenborough-014.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNWMIRUHP2fup-DNf2JqcDVGPFugmNafz3lFTDN_mlUpLDcd3zzT09IEw_TcHRMUSO9rhxnibERcIddpFkldmjzG9NZ_ytRN01NxQo0uKOne_LNRv4REQ1f49y-uElKgZzNfebF_vpEj0/s1600/Richard-Attenborough-014.jpg" height="384" width="640" /></a></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
கலையின் பல வடிவங்கள் நம் வாழ்வில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன. எனவே, கலைஞர்களின் இழப்பு ஏற்படுத்தும் பாதிப்பு மிக அதிகம். அதிலும் திரைக்கலைஞர்களின் மரணங்கள் ஆறாத வடுவை ஏற்படுத்திவிடுகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடிகர் ராபின் வில்லியம்ஸ் இறந்தார். தற்போது, ரிச்சர்டு அட்டன்பரோ. ராபின் வில்லியம்ஸைப் போலவே இவரும் இந்திய ரசிகர்களுக்கு நெருக்கமானவர். ‘ஜுராசிக் பார்க்’ படத்தில் டைனோசர்களின் உலகை மீண்டும் படைக்கும் தொழிலதிபராக வெண் தாடி, கைத்தடி என்று நட்புணர்வு கொண்ட தாத்தாவாக அவர் நடித்த பாத்திரம் சராசரி இந்திய ரசிகரும் அறிந்த ஒன்று. ஆனால், இந்தியர்களுக்கும் அட்டன்பரோவுக்கும் இடையே அதையும் தாண்டி ஒரு வலுவான பிணைப்பு உண்டு. அவர் இயக்கிய ‘காந்தி’ திரைப்படம்தான் அது.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<b style="outline: none;"><br /></b></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<b style="outline: none;">20 ஆண்டுகள் தவம்</b></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<br /></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
“1960-களில் என்னிடம் ஒருவர் மகாத்மா காந்தியின் சுயசரிதையைக் கொடுத்து, ‘இவரைப் பற்றித் திரைப் படம் எடுப்பீர்களா?’ என்று கேட்டார். ‘இல்லை… எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லையே’என்றேன். ‘நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல்கொடுப்பவர் அல்லவா? உங்களால் கண்டிப்பாக முடியும். இந்தப் புத்தகத்தைப் படியுங்கள்’என்று அவர் வற்புறுத்தினார். அதன் பிறகுதான் அந்த மனிதரின் கதையைப் படித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார் அட்டன்பரோ. அந்தப் புத்தகம், அமெரிக்க எழுத்தாளரான லூயிஸ் பிஷர் எழுதிய ‘மகாத்மா காந்தியின் வாழ்க்கை’. ‘காந்தி’ படத்தை எடுக்க அட்டன்பரோவைத் தூண்டியவர், மோதிலால் கோத்தாரி என்ற இந்தியர்.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
ஒரு வரலாற்று நாயகரின் வாழ்க்கையை எப்படி திரைப்படமாக்குவது என்பதற்கு உதாரணம் அந்தப் படம். காந்தியின் கதையை இந்திய சுதந்திரம், இந்தியா பாகிஸ்தான் பிரிவினை, அதன் தொடர்ச்சியாக நடந்த வன்முறையின் வலி என்று கலைபூர்வமாக ஆவணப் படுத்தியிருந்தார் அட்டன்பரோ. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் உழைத்ததன் பலன் அது.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<br /></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
படத்தை இயக்க வேண்டும் என்று முடிவுசெய்தவுடன், பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டனின் உதவியுடன் அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேருவையும், இந்திராவையும் சந்தித்து ஆலோசனை கேட்டிருக்கிறார் அட்டன்பரோ. “நேருவின் தாக்கம், ஆலோசனை, நம்பிக்கை ஆகியவற்றின் துணை இல்லாமல் இந்தப் படம் சாத்தியமாகியிருக்காது” என்று படத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அட்டன்பரோ. அத்துடன் மோதிலால் கோத்தாரி, மவுண்ட்பேட்டன், நேரு ஆகிய மூவருக்கும் இந்தப் படத்தை அவர் சமர்ப் பித்திருக்கிறார்.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<br /></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
‘காந்தி’ படத்துக்காக அட்டன்பரோ பட்ட சிரமங்கள் கணக்கற்றவை. அந்தப் படத்தைத் தயாரிக்க ஹாலிவுட்டில் யாரும் முன்வரவில்லை. “இடுப்பில் துண்டுத் துணியுடன் தடியை ஊன்றிச் செல்லும் அந்த மனிதரின் கதையைப் படமாக எடுத்தால் யார் பார்ப்பார்கள்?” என்று ஒரு தயாரிப்பாளர் கேட்டாராம். ஒருகட்டத்தில் தனது சேகரிப்பில் இருந்த கலைப் பொருட்களை விற்று நிதி திரட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டாராம் அட்டன்பரோ. சமையல் எரிவாயு சிலிண்டருக்குப் பணம் கட்ட முடியாத அளவுக்குக் கடும் நிதி நெருக்கடியை அவர் சந்தித்தார்.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<br /></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<b style="outline: none;">அர்ப்பணிப்பின் கலை</b></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<b style="outline: none;"><br /></b></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
“ஒருவரது வாழ்க்கையை ஒரே கதையில் முற்றிலுமாகச் சொல்லிவிட முடியாது. ஒரு ஆவணத்தின் ஆன்மாவுக்கு உண்மையாக இருப்பதும், சம்பந்தப்பட்ட அந்த மனிதரின் இதயத்தை நோக்கிச் செல்வதற்கான பாதையைக் கண்டுபிடிப்பதும்தான் நமக்கு இருக்கும் சாத்தியங்கள்” என்றும் படத்திலேயே குறிப்பிட்டிருக்கிறார் அட்டன்பரோ. தனது வார்த்தைகளுக்கு ஏற்ப காந்தி எதிர்கொண்ட முக்கியமான தருணங்களை முடிந்தவரை ஆவணப்படுத்தியிருந்தார் அந்தப் படத்தில். கோட்சேயால் சுடப்பட்டு காந்தி இறப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்களால் ரயில் பெட்டியிலிருந்து தூக்கியெறியப்படும் காந்தி, அந்த நிகழ்வின் தாக்கத்தை உணர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராட உத்வேகம் பெறும் காட்சிதான் கதையின் தொடக்கப் புள்ளியாகவும் அமைந்தது. லூயிஸ் பிஷர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் சம்பவங்களை இயன்றவரை, நம்பகத்தன்மையுடன் காட்சிப்படுத்துவதிலும் அட்டன்பரோ வெற்றி பெற்றிருக்கிறார் என்று திரைப்பட ஆர்வலர்கள் குறிப்பிடு கின்றனர். காந்தியின் இறுதி ஊர்வலம் குறித்து பிஷர் எழுதிய வாசகங்களைத் திரையில் செறிவுடன் சித்தரித்திருந்தார் அட்டன்பரோ. ஜாலியன் வாலாபாக் படுகொலைக் காட்சி, அந்தக் கொடூரத்தின் உச்சத்தைப் பதிவுசெய்திருந்தது. ஜெனரல் டயரின் தலைமையில் வீதிகளைக் கடந்து சென்ற காவலர்களின் அணிவகுப்பை பிரம்மாண்டமாகவும் அதிர்வுடனும் அவர் பதிவுசெய்திருந்தார்.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<br /></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
பத்து வரலாற்று நூல்கள் ஏற்படுத்தாத விழிப்புணர் வையும் தாக்கத்தையும் ஒரு திரைப்படம் தந்துவிட முடியும் என்பதற்கு உதாரணமாக இந்தப் படம் அமைந்தது. அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை இந்தப் படம் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றதுடன், வணிகரீதியான வெற்றியையும் பெற்றது. காந்தியின் வாழ்க்கையைப் பற்றிய விழிப்புணர்வையும், இந்த உலகுக்கு அவர் விட்டுச் சென்ற மகத்தான செய்தி யையும் பரப்பும் வகையில் மேற்கத்திய நாடுகளில் பல அறக்கட்டளைகளும் நிறுவனங்களும் தோன்றுவதற்கு முக்கியக் காரணமாகவும் இந்தப் படம் அமைந்தது. 11 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த நடிகர் (பென் கிங்ஸ்லி), சிறந்த இயக்குநர் உட்பட மொத்தம் 8 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. ஒரு இயக்குநராக ஒருவர் பெறும் அதிகபட்ச வெற்றிகளை அந்த ஒரு படத்திலேயே பெற்றார் அட்டன்பரோ.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<br /></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
“நம் தேசத் தந்தையைப் பற்றிய திரைப்படம் எடுக்க, நம்மை ஆண்ட பிரிட்டனிலிருந்துதான் ஒருவர் வரவேண்டியிருந்தது” என்ற ஆற்றாமையுடன் கூடிய சுயவிமர்சனத்தை இந்தியர்களிடையே ஏற்படுத்திய படமாக ‘காந்தி’ அமைந்தது. “காந்தியை ஹாலிவுட் பார்வையில் பதிவுசெய்த படம் என்றுதான் முதலில் எனக்குத் தோன்றியது. என்றாலும், ஆப்பிரிக்காவின் பல போராளிக் குழுக்கள், இந்தப் படம் தங்களுக்கு மிகுந்த தாக்கத்தையும் போராட்ட வழிமுறையையும் தந்ததாகக் குறிப்பிட்டது முக்கியமான விஷயம்” என்று எழுத்தாளர் சல்மான் ருஷ்டி குறிப்பிட்டார். அட்டன் பரோவின் மற்றொரு இந்தியத் தொடர்பு சத்யஜித் ராய் இயக்கிய ‘சத்ரஞ்ச் கே கிலாடி’ படம். 1857-ல் நடந்த சிப்பாய்க் கலகத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் ஆங்கிலேய ராணுவ அதிகாரியான ஜெனரல் அவுட்ரம் பாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<b style="outline: none;"><br /></b></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<b style="outline: none;">ஒடுக்கப்பட்டோருக்காக ஒலித்த குரல்</b></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<br /></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
காந்தியின் வாழ்க்கையைப் படமாக்கியது போலவே, தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிய ஸ்டீவ் பீக்கோ என்ற கருப்பினப் போராளியின் வாழ்க்கை வரலாற்றை ‘க்ரை ஃப்ரீடம்’ (1987) என்ற படத்தில் ஆவணப்படுத்தியிருந்தார் அட்டன்பரோ. ஸ்டீவ் பீக்கோ பாத்திரத்தில் நடிகர் டென்சல் வாஷிங்டன் நடித்திருந்தார். அந்தப் படமும் வணிகரீதியான வெற்றியையும் விமர்சனரீதியான வரவேற்பையும் பெற்றது. நெல்சன் மண்டேலாவின் விடுதலைக்காக ஒலித்த குரல்களில் அட்டன்பரோவின் குரலும் ஒன்று.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<br /></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
பிரிட்டிஷ் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ‘தி கிரேட் எஸ்கேப்’ மூலம் ஹாலிவுட்டிலும் புகழ்பெற்ற அட்டன்பரோவுக்கு ஒருகட்டத்தில், ‘பிறரது கற்பனைகளுக்கு ஏற்ப நடிப்பதில்’ ஒரு வெறுமை ஏற்பட்டது. அதுதான் அவரை ஒரு இயக்குநராக்கியது. பல படங்களை இயக்கியும் தயாரித்துமிருக்கும் அட்டன் பரோ பிரிட்டனின் உயரிய விருதுகளைப் பெற்றவர். உயர் பதவிகள் பலவற்றிலும் இருந்தவர். எனினும், அதிகார மட்டத்தில் இருந்துகொண்டே அதன் அத்துமீறல்கள் குறித்து கேள்வி எழுப்பியவர். தனது சாதனைகள் மற்றும் வாழ்வு மூலம், திரைக் கலைஞர் என்ற வார்த்தையை மரியாதைக்குரியதாக மாற்றியவர் என்ற அடையாளம் அட்டன்பரோவுக்கு என்றும் நிலைத்திருக்கும்.<br />
<br />
<i style="outline: none;"><b style="outline: none;">தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரை.</b></i></div>
</div>
chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-193734011200587852014-11-09T17:36:00.001+05:302014-11-09T17:36:53.800+05:30முத்தமிடுவதால் செத்துவிடுமா கலாச்சாரம்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjz_toibXrSV3qPFY9WzT4Ni7tmjvYCfQ9C9DDzktFYd13HvLpDpIec-550a3sKA7dsxo6bvyiNLsy_UxsmWnFsZeHhpwZY8S3Kl3Lg0z9XvRf8Eo_0WIuvu-m2dXyRMirO7RYmAXIiuw8/s1600/mutham_2185810f.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjz_toibXrSV3qPFY9WzT4Ni7tmjvYCfQ9C9DDzktFYd13HvLpDpIec-550a3sKA7dsxo6bvyiNLsy_UxsmWnFsZeHhpwZY8S3Kl3Lg0z9XvRf8Eo_0WIuvu-m2dXyRMirO7RYmAXIiuw8/s1600/mutham_2185810f.jpg" /></a></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<br /></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
பிரான்ஸில் நடந்த சம்பவம் இது. தமிழ் எழுத்தாளர் ஒருவர் பிரெஞ்சு தெரிந்த தனது நண்பருடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். எதிர் இருக்கையில் ஒரு ஜோடி, சூழலையும் மறந்து மிகவும் நெருக்கமாக இருந்தார்கள் (முத்தம் உட்பட). இதைப் பார்த்த எழுத்தாளர் தன் நண்பரிடம், “இதெல்லாம் நம் நாட்டில் சாத்தியமா?” என்று கேட்டாராம். “ஏன், உங்களுக்கு அத்தனை ஆசையா?” என்றாராம் நண்பர் சிரித்துக்கொண்டே. “இல்லை. அந்த ஜோடியின் அருகில் இருப்பவரைப் பாருங்கள். எதுவுமே நடக்காததுபோல் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறார். அதுதான் நம் நாட்டில் சாத்தியமாகுமா என்று வியந்துகொண்டிருக்கிறேன்” என்றாராம் அந்த எழுத்தாளர்.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<br /></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
இந்தியாவில் இதுபோன்ற காட்சிகளைச் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில் பல்வேறு சமூகச் சிக்கல்கள் இருப்பதை மறுக்க முடியாது. இந்தியாவில் சராசரிக் குடும்ப அமைப்பின் பின்னணியிலிருந்து வரும் யாரும் இந்தக் காட்சியைச் சாதாரணமாகக் கடந்துவர மாட்டார்கள் தான். ஆனால், பொதுவெளியில் காதலர்கள், தம்பதியர் தங்கள் அன்பைப் பரிமாறிக்கொள்வதைத் தடுக்கும் வகையில் ‘கலாச்சாரக் காவலர்கள்’ நடந்துகொள்வதுதான் இன்று பெரும் பிரச்சினையைக் கிளப்பியிருக்கிறது. கேரளத்தில் ஞாயிற்றுக் கிழமை நடந்த முத்தப் போராட்டம் இதற்குச் சரியான உதாரணம்.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<br /></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
கோழிக்கோட்டில் உள்ள உணவகம் ஒன்றில் ஆணும் பெண்ணும் முத்தமிட்டுக்கொள்ளும் காட்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. ‘இந்தி யாவில் பேசுவதற்கும் சாப்பிடுவதற்கும்தான் வாயைப் பயன்படுத்துவோம். முத்தம் என்ற ஒன்று நம் நாட்டிலேயே கிடையாதே’ என்ற ‘தார்மிக’ கோபத்தில் கொதித்தெழுந்த ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட யுவ மோர்ச்சா என்ற அமைப்பு, அந்த உணவகத்தைத் தாக்கிச் சேதப்படுத்தியது. இந்த அராஜகத்துக்கு எதிராகப் போராட வேண்டும் என்று ஃபேஸ்புக் மூலம் ‘சுதந்திரச் சிந்தனையாளர்கள்’ என்ற அமைப்பினர் ஒன்றுதிரண்டனர். ‘கிஸ் ஆஃப் லவ்’ என்ற பெயரில் முத்தப் போராட்டம் செய்ய அந்த அமைப்பு முடிவுசெய்தது.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<br /></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
கொச்சியில் ஞாயிற்றுக் கிழமை மாலை ஆயிரக் கணக் கான ஆண்களும் பெண்களும் திரண்டனர். நடுத்தர வயது ஆண்களும் பெண்களும் இதில் அடக்கம். யுவ மோர்ச்சா, ஏபிவிபி, பஜ்ரங் தள் போன்ற இந்து அமைப்புகளும் முஸ்லிம் அமைப்பு ஒன்றும் இந்தப் போராட்டத்துக்கு எதிராகக் களத்தில் இறங்கின. எனினும் ஏற்பாடு செய்யப்பட்டதுபோல், முத்தப் போராட்டம் நடைபெறாமல் காவல்துறை ‘கடமை’யாற்றியது. போராட் டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டனர்.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
எனினும், போலீஸ் வேனுக்குள்ளும், காவல் நிலையத் திலும் முத்தமிட்டுக்கொண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யவும் அவர்கள் தயங்கவில்லை. இதற்கிடையே, கலாச்சாரக் காவலர்களின் கடும் எதிர்ப்பால் ‘கிஸ் ஆஃப் லவ்’ ஃபேஸ்புக் பக்கமும் ஃபேஸ்புக் நிறுவனத்தால் முடக்கப்பட்டது. தங்கள் தரப்பின் நியாயத்தை, அந்த அமைப்பினர் ஃபேஸ்புக்குக்குப் புரியவைத்த பின்னர், மீண்டும் அந்தப் பக்கம் திறக்கப்பட்டது.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<b style="outline: none;"><br /></b></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<b style="outline: none;">அடிப்படைவாதம் என்ற ஆபத்து</b></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<b style="outline: none;"><br /></b></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
போராட்டத்தில் கலந்துகொண்ட பலர், “கலாச்சாரக் காவலர்களின் அத்துமீறலைக் கடுமையாக எதிர்க்க வேண்டிய ஒரே காரணத்துக்காகத்தான் இந்த முத்தப் போராட்டத்தை நடத்த முடிவுசெய்தோம்” என்று குறிப்பிடு கின்றனர். இப்படியான அதிரடியான முடிவுதான் தங்கள் போராட்டம் குறித்த விரிவான கவனத்தை ஈர்த்திருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். “வாழ்வதற்கான அடிப்படை உரிமை, கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றுக்கு அடிப்படை யான இந்திய அரசிய லமைப்புச் சட்டத்துக்கு எதிரான வைதான் காதலர்கள் மீதான தாக்குதல்கள்” என்று இந்த அமைப்பினர் கொந்தளிக்கிறார்கள்.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<b style="outline: none;"><br /></b></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<b style="outline: none;">காரணம் கலாச்சாரமா?</b></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<b style="outline: none;"><br /></b></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
காதலர் தினக் கொண்டாட்டங்கள், பப் கலாச்சாரம் போன்றவற்றையும் அடிப்படைவாத அமைப்புகள் மூர்க்கத்தனமாக எதிர்க்கின்றன. காதலர் தினத்தின்போது பொது இடங்களில் சந்தித்துக்கொள்ளும் காதலர்களிடம் தாலியைக் கொடுத்துக் கட்டிக்கொள்ளச் சொல்வது அல்லது காதலனின் கையில் ‘ராக்கி’கட்டச் சொல்லிக் கட்டாயப்படுத்துவது என்று இவர்கள் செய்யும் அராஜகம் கொஞ்சநஞ்சம் அல்ல.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<br /></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
‘காதலுக்குத் தண்டனை’ என்ற பெயரில், மேற்கு வங்கத்தில் ஒரு பெண்ணை பஞ்சாயத்துத் தலைவர்கள் உட்பட, அதே ஊரைச் சேர்ந்தவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கலாச்சாரக் காவலின் தீவிரம் எந்த எல்லையையும் எட்டும் என்பதற்கு உதாரணம் இது. கலாச்சாரத்தைவிடவும் மேன்மையானது மனிதநேயமே என்பதை நாம் இன்னும் உணரவில்லை என்பதுதான் உண்மை. இதுபோன்ற தருணங்</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
களில் மதத்தின் அடிப்படையில் வேறுவேறு துருவங்களில் செயல்படும் இந்து அடிப்படைவாத அமைப்புகளும், முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளும் ஒரே நேர்க் கோட்டில் வருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<br /></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
அடிப்படையில், சமூக ஒழுக்கம், பண்பாடு என்று பல்வேறு பெயர்களைச் சொன்னாலும் தங்கள் சமூகத் துக்குள் ‘கலப்பு’ நிகழ்ந்துவிடக் கூடாது என்ற பதற்றம்தான் அடிப்படைவாத அமைப்புகளை இயக்குகிறது. காதல், கலப்புத் திருமணம் போன்றவற்றுக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை அந்த அமைப்புகள் எடுப்பதற்கும் காரணம் இதுதான். இயல்பாகவே இவற்றுக்கு எதிரான மனப்பான்மையில் இருக்கும் பெற்றோர்களுக்குத் தார்மிக ஆதரவை இதுபோன்ற அமைப்புகளும், குறிப்பிட்ட சில கட்சிகளும் தாராளமாகத் தருகின்றன. அதன் மூலம் அரசியல் ஆதாயத்தையும் அந்த அமைப்புகள் பெறு கின்றன என்பதைச் சொல்லத் தேவையில்லை.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
இந்தியாவில் பெண்கள், குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் பலாத்கார நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றன. தெருக்களில், பேருந்துகளில் ஏன் வீடுகளிலேயே பாலியல்ரீதியான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நிலையில் பல பெண்கள் இருக்கின்றனர். இந்தியாவில் 53.22 % குழந்தைகள் ஆண்டுதோறும் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள் என்று சொல்கிறது ஐ.நா-வின் புள்ளிவிவரம்.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<br /></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
இவை பற்றியெல்லாம் எந்தக் கலாச்சாரக் காவலர்களும் கவலைப்படுவதில்லை. காதலர்கள் பரிமாறிக்கொள்ளும் முத்தத்தால்தான் உங்கள் கலாச்சாரம் பறிபோகிறதென்றால் கலாச்சாரத்தின் உண்மையான அர்த்தம்தான் என்ன?<br />
<br />
- தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரை.</div>
</div>
chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-22609544018724221702014-11-09T17:32:00.003+05:302014-11-09T17:34:06.394+05:30சிவாஜி கணேசன்: கம்பீரத்தின் கடைசி அவதாரம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibO3jJeGiX3sMuDd2syjce7scKPv6fvXk8NOyE-Pgk3_jxYN3oKoLl-aKdnrz9ABRkzdOVA3pDYZbKYhQflktQdEf2tG9iGkIlWBgAnnXkdZqP8ZGkZMGeg_KcCw1m6u3ImF6FyXGAutY/s1600/6_2015504g.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibO3jJeGiX3sMuDd2syjce7scKPv6fvXk8NOyE-Pgk3_jxYN3oKoLl-aKdnrz9ABRkzdOVA3pDYZbKYhQflktQdEf2tG9iGkIlWBgAnnXkdZqP8ZGkZMGeg_KcCw1m6u3ImF6FyXGAutY/s1600/6_2015504g.jpg" /></a></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<br /></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
ஸ்ரீதர் இயக்கிய ‘சிவந்த மண்' திரைப்படத்தின் இந்திப் பதிப்பான ‘தர்த்தி' 1970-ல் வெளியானது. ராஜேந்திர குமார், வஹீதா ரஹ்மான் நடித்த அந்தப் படத்தில் புரட்சி வீரனாக, கவுரவ வேடத்தில் சிவாஜி தோன்றினார். இந்தப் படம்குறித்து சுவாரசியமான தகவல் ஒன்று உண்டு. படம் வெளியான அன்று பம்பாயில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாம். அதைக் குறிப்பிட்டு சிவாஜியிடம் ராஜேந்திர குமார் சொன்னாராம், “உங்கள் நடிப்பைப் பார்த்து பம்பாயே நடுங்கிவிட்டது!”</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
சிறிய வேடம் என்றாலும் சிவாஜியின் ‘திரை வீச்சு' (ஸ்கிரீன் பிரெசன்ஸ்) அத்தனை கம்பீரமானது. அதனால்தான், இன்றும் கம்பீரமான பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் சிவாஜியுடன் ஒப்பிடப்பட்டே மதிப்பிடப்படுகிறார்கள்.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
சிவாஜியின் நடிப்பு நிச்சயம் விமர்சனத்துக்கு அப்பாற் பட்டதல்ல. மற்றவர்கள் இயல்பாக வசனம் பேசும் காட்சிகளில், அதீத உணர்வுடனும் அழுத்தமான உச்சரிப்புடனும் திரையில் தனிக் கவனம் பெறும் அவர் மீது காத்திரமான விமர்சனங்கள் பல உண்டு. அவற்றையெல்லாம் மீறி, அற்புதமான தன் நடிப்புத் திறனால், பல படங்களின் வெற்றியை உறுதி செய்தார் சிவாஜி. தன்னை விட அதிக வயதுள்ள நாயகர்கள் இளைஞர்கள் வேடத்தில் நடித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில், ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் 13 குழந்தைகளுக்குத் தந்தையாக நடிக்கும் துணிச்சலை வேறு எவரிடமும் எதிர்பார்க்க முடியாது. ‘திருவருட்செல்வர்' தொடங்கி எத்தனையோ வயோதிகப் பாத்திரங்களில் நடிக்கத் தயங்கியதில்லை.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<b style="outline: none;"><br /></b>
<b style="outline: none;">வேறென்ன செய்ய முடியும்?</b></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<br />
உண்மையில், நடுத்தர மற்றும் சற்றே வயதான வேடங் களில் நடித்தபோது சிவாஜியிடம் கம்பீரமும் மிடுக்கும் கூடியிருந்ததைப் பார்க்க முடியும். ‘தெய்வமகன்' படத்தின் புகழ்பெற்ற அந்த கோரமுக மகன் பாத்திரத்தைவிடத் தந்தை பாத்திரத்தில் வரும் சிவாஜிதான் சிறப்பாக நடித்திருப்</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
பார். மகனைப் புறக்கணிக்க நேர்ந்ததால் எழும் குற்றவுணர்ச்சி யும், சமூகத்தின் முன் அவனைத் தன் மகனாக அறிவிக்கத் தயங்கும் போலி கவுரமும் தன்னை அலைக்கழிப்பதை நுட்பமாக வெளிப்படுத்தியிருப்பார். ஒரு காட்சியில், கேமராவுக்கு முதுகைக் காட்டியபடி சிவாஜி விசும்பிக் கொண்டிருப்பார். அப்போது எதிரில் மேஜர் சுந்தர்ராஜன் அசைவற்று அவரையே பார்த்துக்கொண்டு நிற்பார். அதை ஒரு விமர்சனத்தில் இப்படி எழுதியிருந்தார்களாம்: ‘சிவாஜியின் முதுகுகூட நடித்துக்கொண்டிருந்தது. மேஜர் சுந்தர்ராஜன் தேமேயென்று நின்றுகொண்டிருந்தார்’ என்று. பின்னாட்களில் அதைக் குறிப்பிட்டு மேஜர் சுந்தர்ராஜன் சொன்னார், “சிவாஜி நடித்துக்கொண்டிருக்கும்போது அதைப் பார்த்துக்கொண்டு நிற்காமல் வேறென்ன செய்ய முடியும்!”</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
சிவாஜி வந்து நிற்கும் தோரணையைக் கண்டு, அதற்கு முன் ஆர்ப்பாட்டமாகப் பேசிக்கொண்டிருப்பவர்கள், பேச மறந்து உறைந்து நிற்கும் காட்சிகளைப் பல படங்களில் பார்க்கலாம். ‘முதல் மரியாதை' படத்தில் மரணப் படுக்கையில் படுத்திருக்கும் சிவாஜியை, சில சிறுவர்கள் வேடிக்கை பார்க்க வந்து நிற்பார்கள். அந்த நிலையிலும் தன் கோபத்தைக் காட்ட ஒரு உறுமு உறுமுவார். அடுத்த கணத்தில் சிறுவர் குழாம் சிதறி ஓடும். படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் இந்தக் காட்சியே, சிவாஜியின் கதாபாத்திரம் எத்தனை மரியாதைக்குரியது என்பதை உணர்த்திவிடும். ‘பாசமலர்’ படத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஜெமினி கணேசன் எழுப்பும் கேள்விகளைக் கேட்டுக் கொதிப்படைந்து சிவாஜி பேசும் வசனங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. “யாருடைய துணையுமின்றித் தனியாகவே நான் உழைப்பேன்” என்று கர்ஜித்துவிட்டு, முத்தாய்ப்பாக ‘‘கெட் அவுட்'' என்று மெல்லிய குரலில் சொல்ல சிவாஜியால்தான் முடியும்.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<b style="outline: none;"><br /></b>
<b style="outline: none;">எப்போதும் மரியாதை</b></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<br />
மிகை நடிப்பு என்று அவரை விமர்சிப்பவர்கள்கூட பின்னாட்களில் ‘முதல் மரியாதை', ‘தேவர் மகன்' ஆகிய படங்களில் அவர் ஏற்று நடித்த பாத்திரங்களை வியக்கின்றனர். குறிப்பாக, தேவர் மகன் படத்தில், முகத்தில் படர்ந்த வீர மீசையும், தோளைச் சுற்றிய சால்வையுமாக அவர் வந்து நிற்கும் கம்பீரம் அலாதியானது. சிவாஜியைப் புகைப்படம் எடுக்கும் கவுதமி, அவர் சற்று திரும்பி முறைத்ததும் தடுமாறும் காட்சியே சொல்லும் சிவாஜியின் கம்பீரத்தை.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
திரைக்கு வெளியிலும் தன் கம்பீரத்தைக் கடைப்பிடித்தார் சிவாஜி. ஒருமுறை அவரது மகன் ராம்குமார் குறிப்பிட்டார்: “வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அப்பா மிக நேர்த்தியாக உடையணிந்துகொள்வார். விமான நிலையங்களில் எங்களையெல்லாம் சோதனை செய்வார்கள். அப்பா நடந்துவரும் தோரணையைப் பார்க்கும் விமான நிலையக் காவலர்கள் அவரை ஒருபோதும் சோதித்துப் பார்க்கத் துணிந்ததில்லை.” அதுதான் சிவாஜியின் ஆளுமை!</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<i style="outline: none;"><b style="outline: none;">- தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரை.</b></i><br />
<i style="outline: none;"><b style="outline: none;"><b style="font-style: normal; outline: none;">21.07.2014 - சிவாஜி கணேசனின் 13-வது நினைவு நாள்</b></b></i></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<i style="outline: none;"><b style="outline: none;"><br /></b></i></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<i style="outline: none;"><b style="outline: none;"><br /></b></i></div>
</div>
chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-29569167566683484892014-08-14T15:06:00.002+05:302014-08-14T15:09:21.392+05:30ராபின் வில்லியம்ஸ்: உறைந்த புன்னகை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<br /></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<br /></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAJmcTstXqqGgbMYDLgqiYKwWtL1Wb5KPcYJ35IpBp7-fV8VjmPc0FjlZ-_Ljl9zatn_dMvH18LEZkBiE4cHPrZ2MBihYKz59EHGiCgq872rN2ZQT3lIKu4jUUnmv9p8Fwyh9lvqvu3_Q/s1600/robin-williams-celebrity-511923110.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAJmcTstXqqGgbMYDLgqiYKwWtL1Wb5KPcYJ35IpBp7-fV8VjmPc0FjlZ-_Ljl9zatn_dMvH18LEZkBiE4cHPrZ2MBihYKz59EHGiCgq872rN2ZQT3lIKu4jUUnmv9p8Fwyh9lvqvu3_Q/s1600/robin-williams-celebrity-511923110.jpg" /></a></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<br /></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ராபின் வில்லியம்ஸ் இறந்துவிட்டார் என்ற தகவல், ஹாலிவுட்டை மட்டுமல்லாமல், உலகமெங்கும் உள்ள திரை ரசிகர்களைத் துக்கத்தில் ஆழ்த் தியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக மன அழுத் தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எத்தனையோ பேரின் மனஅழுத்தத்தைத் தனது நகைச்சுவை நடிப்பால் நீக்கியவர் தற்கொலை செய்துகொண்டிருப்பாரா என்ற அதிர்ச்சியில் உலக ரசிகர்கள் உறைந்துபோயுள்ளனர்.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
அவருடன் நடித்த நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என்று பலரும் இணையத்தில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல, இந்திய ரசிகர்களும் திரைக் கலைஞர்களும் அவரது மரணத்தால் அதிர்ச்சியடைந் திருக்கின்றனர். இணையத்தில் பாலிவுட் நட்சத்திரங்களின் ‘ஆர்.ஐ.பி.' அஞ்சலி செய்திகள் நிரம்பிவழிகின்றன.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
பொதுவாக, அமெரிக்கர்களின் ரசனைக்கேற்ற வகையில் எடுக்கப்படும் படங்களிலும், உலகமெங்கும் உள்ள பொது ரசிகர்களின் விருப்பத்துக்குரிய படங் களிலும் நடித்து, புகழ்பெற்ற நடிகர்கள் வெகு சிலர்தான். அந்தச் சிறிய பட்டியலில், முக்கிய இடத்தில் ராபின் வில்லியம்ஸ் இருக்கிறார். அவர் நடித்த ‘தி குட்வில் ஹண்டிங்', ‘டெட் பொயெட்ஸ் சொசைட்டி', ‘குட்மார்னிங் வியட்நாம்' போன்ற படங்கள் அமெரிக்க ரசிகர்களையும், ‘ஜுமாஞ்சி', ‘ஃப்ளப்பர்', ‘மிஸஸ். டவுட்ஃபயர்', ‘நைட் அட் தி மியூசியம்' போன்ற படங்கள் உலகெங்கும் உள்ள சாதாரண ரசிகர்களையும் கவர்ந்தவை.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<br /></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<b style="outline: none;">ரிஷிமூலன்</b></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<b style="outline: none;"><br /></b></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
அதேபோல், நகைச்சுவை மிளிரும் பாத்திரங்களிலும், அமைதியான குணம் கொண்ட சாதாரணர்களின் பாத்திரங்களிலும் சிறப்பாக நடித்தவர் அவர். அத்துடன், அவர் நடித்த சில படங்கள் தமிழ், இந்தி படங்களின் ரிஷிமூலமாக இருந்தன. குறிப்பாக, அவர் நடித்த ‘மிஸஸ் டவுட்ஃபயர்’ - ‘அவ்வை சண்முகி’யாகவும், ‘பாட்ச் ஆடம்ஸ்’ படம் ‘முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.’ (தமிழில் வசூல்ராஜா) ஆகவும் நம் கண்களுக்குப் பழக்கமானவை.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
1951-ல் சிகாகோவில் பிறந்த ராபின், மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்டு நகரப் பள்ளியில் படித்தவர். கிளாரமண்ட் மெக்கென்னா கல்லூரியில் படித்த பின்னர், நியூயார்க்கில் உள்ள ஜுல்லியர்ட் நிகழ்த்துகலைக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர். சூப்பர் மேன் படங்களில் நடித்துப் புகழ்பெற்ற கிறிஸ்டோபர் ரீவ்ஸ், இவரது சக மாணவர். கலிஃபோர்னியாவில் உள்ள மரின் கல்லூரியில் மேடை நாடகப் பயிற்சி பெற்றார் ராபின். 1970-களின் இறுதியில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் புகழ்பெற்றார். வேற்றுக் கிரகத்திலிருந்து பூமிக்கு வரும் மோர்க் என்ற பாத்திரத்தில், அவர் நடித்த ‘ஹேப்பி டேஸ்' தொடர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதே பாத்திரத்தை இன்னும் விஸ்தரித்து, ‘மோர்க் அண்ட் மிண்டி' என்ற தொடர் வெளியானது. ‘கேன் ஐ டூ இட்' (1977) என்ற நகைச்சுவைப் படத்தின் மூலம், ஹாலிவுட்டில் அறிமுகமானார்.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<b style="outline: none;">அங்கீகாரமும் விருதுகளும்</b></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
1987-ல் ‘குட்மார்னிங் வியட்நாம்' படத்தில், வியட்நாமில் பணிபுரியும் வானொலி அறிவிப்பாளர் பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்தார். ‘குட் மார்னீஈஈஈங்…வியட்நாம்' என்று அவர் பேசுவது போலவே, ‘லகே ரஹோ முன்னாபாய்’ படத்தில் வித்யாபாலன் இழுத்துப் பேசுவார். அந்த வகையில் இந்திய நடிகைகளுக்கும் ‘இன்ஸ்பிரேஷனாக' இருந்திருக்கிறார் ராபின். 'குட்மார்னிங் வியட்நாம்' படத்துக்காக, முதல் கோல்டன் குளோப் விருது பெற்றார். அதே படத்துக்காக, முதல்முறையாக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். ‘டெட் பொயட்’ஸ் சொசைட்டி' படத்தில், ஆங்கில ஆசிரியர் பாத்திரத்தில் சிறப்பாக நடித்தார். அதில், அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனின் ‘ஓ கேப்டன் மை கேப்டன்' என்ற கவிதை வரிகளை மாணவர்களிடம் பேசி அவர்களைக் கவரும் காட்சி வெகு பிரசித்தம். அந்தப் படத்துக்காகவும் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
நடிகர் மேட் டாமனுடன் இணைந்து நடித்த ‘குட் வில் ஹண்டிங்’(1997) படத்துக்காக அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அந்தப் படத்தில், உளவியல் மருத்துவராக மிகச் சிறப்பாக நடித்தார். ‘ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ்', ‘ஹேப்பி ஃபீட்', ‘அலாதீன்' போன்ற படங்களில் பின்னணிக் குரல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார்.</div>
<div class="body" style="background-color: white; outline: none;">
<div style="color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px;">
பிரபல கார்ட்டூன் பாத்திரமான ‘பாப்பய்’பாத்திரத்திலும் நடித்தார். அமெரிக்காவின் 26-வது அதிபர் தியடோர் ரூஸ்வெல்ட் பாத்திரத்திலும், ‘நைட் அட் தி மியூசியம்' படத்தில் ‘தி பட்லர்' படத்தில் 36-வது அதிபர் டுவைட் ஐசனோவர் பாத்திரத்திலும் நடித்தது, ராபின் வில்லியம்ஸின் தனிச்சிறப்பு. அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: “நம்மைச் சிரிக்க வைத்தவர்; அழ வைத்தவர். அளவிட முடியாத தனது திறமையைத் தாராளமாக நமக்குத் தந்தவர்”.</div>
<div style="color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px;">
<br /></div>
<div style="color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px;">
-தி இந்து இதழில் வெளியான கட்டுரை.</div>
<div style="color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px;">
<a href="https://www.blogger.com/goog_2135183380"><br /></a></div>
<span style="color: #3b3a39; font-family: Latha, Georgia, Times New Roman, Times, serif;"><span style="font-size: 12px; line-height: 20px;"><a href="http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88/article6311160.ece?homepage=true&theme=true">http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88/article6311160.ece?homepage=true&theme=true</a></span></span></div>
</div>
chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-18447287905555234912014-02-09T19:48:00.001+05:302014-02-10T08:17:53.710+05:30புகச்சோவ், புஷ்கின், புரட்சி மற்றும் புன்னகை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMInQ5ksGmJiVnsI24cRfv2aXffznQJGmPO3nw0aZwBhXHD8QyI-ocQxZRmy2ZaQuAee5Bu9HcTAv3yRG3NeoBLAhl9ZPfIwX5mbxYo-4dA1DRjLB0K9JCPz7JidkNa0UvD4GBlF3nJKo/s1600/Pyotr+Konchalovsky+-+Portrait+of+the+Poet+Alexander+Pushkin+1932.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMInQ5ksGmJiVnsI24cRfv2aXffznQJGmPO3nw0aZwBhXHD8QyI-ocQxZRmy2ZaQuAee5Bu9HcTAv3yRG3NeoBLAhl9ZPfIwX5mbxYo-4dA1DRjLB0K9JCPz7JidkNa0UvD4GBlF3nJKo/s1600/Pyotr+Konchalovsky+-+Portrait+of+the+Poet+Alexander+Pushkin+1932.jpg" height="518" width="640" /></a></div>
<div style="font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; text-align: justify;">
<span style="background-color: white;">டெல்லியில் உள்ள சாஹித்ய அகாடமி கட்டிடத்துக்கு வெளியே, சாலையோரத்தில் உயரமான பீடத்தின்மீது நின்றபடி விரையும் வாகனங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் அலெக்ஸாண்டர் புஷ்கின். கைகளைப் பின்னால் கட்டியபடி முதுகை சற்று முன்னோக்கி சாய்த்தது போன்ற நிலையில் அந்த ரஷ்யக் கவிஞனின் சிலையைக் கடந்துசெல்லும் டெல்லிவாசிகளில் எத்தனைபேர் அவரை அறிந்திருப்பார்கள். ‘கேப்டன் மகளை’ அவர்கள் தரிசித்திருப்பார்களா என்று எண்ணம் அவ்வப்போது வந்துபோகும்.</span></div>
<div style="font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; text-align: justify;">
கருப்பு நிறத்திலான அந்த சிலையை முதலில் பார்த்தபோது மனதுக்கு நெருக்கமான ஒரு ஆளுமையை முதன்முதலாக நேரில் பார்த்ததுபோன்ற பரவசம் ஏற்படுவது நிஜம். சாகித்ய அகாடமி அருகே அமைக்கப்பட்டுள்ள இலக்கியவாதியின் சிலை புஷ்கினுடையது மட்டும் தான். 1988-ல் ஒன்று பட்ட இந்தியாவுக்கு வந்திருந்த சோவியத் தலைவர் மிகயீல் கோர்பச்சேவ் இந்த சிலையைத் திறந்துவைப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர் வராமல் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் எடுவர்ட் ஷெவர்ட்னாட்ஸே அந்த சிலையைத் திறந்துவைத்தார் என்று ஒரு குறிப்பு சொல்கிறது. யார் திறந்துவைத்தால் என்ன? ரஷ்ய இலக்கிய பிதாமகரின் உருவச்சிலை இந்திய மண்ணில் நிலைகொண்டிருப்பதே பெருமை தானே! அந்த அற்புத எழுத்தாளனின் நினைவு நாள் இன்று.</div>
<div style="font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; text-align: justify;">
<br /></div>
<div style="font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; text-align: justify;">
அடிப்படையில் கவிஞரான புஷ்கின் ரஷ்ய நவீன இலக்கியத்தின் முன்னோடியாகக் கொண்டாடப்படுபவர். ரொமான்டிசிஸ காலத்திய இலக்கியப் படைப்பாளி. நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்த ‘கேப்டன் மகள்’ நாவல் புஷ்கினின் மகத்தானப் படைப்புகளில் ஒன்று. அவர் எழுதிய இறுதி நாவலும் அது தான். வெள்ளையான வழவழப்பான தடித்த அட்டையில் பதிப்பிக்கப்பட்ட அந்தப் புத்தகத்தில் 18-ம் நூற்றாண்டில் ரஷ்யாவில் வெடித்த விவசாயப் புரட்சியின் பின்னணியில் ஒரு அற்புதமான காதல் கதை ஒளிந்திருந்தது. பிறப்பதற்கு முன்னரே தனது தந்தையால் ராணுவத்துக்கு கிட்டத்தட்ட ‘நேர்ந்துவிடப்பட்ட’ இளைஞன் பியோத்தர் ஆந்திரேயிச் தான் கதையின் நாயகன். செல்வச்செழிப்பு மிக்கக் குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளரும் அவன் தன் தந்தையின் கண்டிப்பான உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து ஓரென்பெர்க்குக்கு அருகில் உள்ள பெலகோர்ஸ்க் கோட்டையின் படைப்பிரிவில் சேர்வதற்காக, விசுவாசமிக்க முதிய வேலைக்காரனுடன் தனது பயணத்தைத் தொடங்குவான். செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் ராணுவ உயரதிகாரியாக உல்லாசமான வாழ்க்கை வாழலாம் என்று கற்பனையில் மிதந்தவனை, ஒரு அரதப்பழசான கோட்டைக்கு அவனது தந்தை அனுப்பிவிடுவார். அந்தக் கோட்டையில் அவனுக்கு அழகான காதலி கிடைப்பாள். கேப்டனின் மகள்!</div>
<div style="font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; text-align: justify;">
<br /></div>
<div style="font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; text-align: justify;">
பனிபடர்ந்த நிலத்தில் பியோத்தர் தொடங்கும் பயணத்தில் விவசாயப் புரட்சியின் தலைவன் புகச்சோவ், கேப்டனின் மகளும் நாயகியுமான மாஷா, வஞ்சக மனம் படைத்த ஷ்வாப்ரின், கேப்டனின் மனைவி என்ற பெருமையுடன் படைப்பிரிவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெண்மணி என்று பலரும் நம்முடன் பயணிப்பார்கள். பனிப்புயலில் சிக்கிக்கொள்ளும் பியோத்தரின் ஸ்லெட்ஜ் வண்டியை வழிநடத்தி ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துச் செல்லும் நாடோடி தான் பின்னாட்களில் விவசாயப் புரட்சிக்குத் தலைமையேற்று ரஷ்யாவின் பல இடங்களைக் கைப்பற்றி ஜார் மன்னனுக்கு பெரும் சவாலாக இருந்த புகச்சோவ். பத்திரமான இடத்தைக் காட்டிய அந்த நாடோடி யாரென்று தெரியாமல் விலையுயர்ந்த ஒரு மேலங்கியை அவனுக்குப் பரிசளிப்பான பியோத்தர். அந்த நன்றிக்கடனை மறக்காத புகச்சோவ், தான் கைப்பற்றும் பெலகோர் ஸ்க் கோட்டை படைப்பிரிவில் இருக்கும் பியோத்தரை அடையாளம் கண்டு அவனைக் கொல்லாமல் விடுவிப்பதுடன், சதிகார ஷ்வாப்ரினிடமிருந்து பியோத்தரின் காதலி மாஷாவையும் மீட்டுக் கொடுப்பான். ஒரு பெரும் புரட்சிக்கே தலைவனான புகச்சோவ், பியோத்தரிடம் இத்தனை கருணை காட்ட அந்த மேலங்கி தான் காரணம். எதற்கும் அஞ்சாத ஒரு வீரனுக்குள் கருணையும் நன்றியும் கலந்திருப்பதை புஷ்கின் அற்புதமாக விவரித்திருப்பார். </div>
<div style="font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; text-align: justify;">
<br /></div>
<div style="font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; text-align: justify;">
கேப்டன் மகள் மாஷா மீது காதல் கொள்ளும் பியோத்தர் அவளை வர்ணித்து எழுதிய கவிதையை ஷ்வாப்ரின் கிண்டல் செய்வதுடன் அவளது நடத்தை பற்றி இழிவாகப் பேசுவதைக் கேட்டு வெகுண்டெழும் பியோத்தர் ஷ்வாப்ரினுடன் வாட்சண்டைக்குப் போவான். அந்தக் காலத்தில் தங்கள் தனிப்பட்ட பகையைத் தீர்த்துக்கொள்ள எதிரிகள் இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சண்டை Dual எனப்பட்டது. இருவரும் சண்டைக்குத் தயராகும்போதே, படைப்பிரிவின் மற்ற அதிகாரிகள் வந்து தடுத்துவிடுவார்கள். இருவரின் வாட்களும் பறிமுதல் செய்யப்படும். இதுவரையான சம்பவங்களை யாராலும் எழுதிவிட முடியும். அதற்குப் பிறகு பியோத்தரும் ஷ்வாப்ரினும் நடந்துகொள்வதை எழுத புஷ்கினால் தான் முடியும். தாங்கள் இருவரும் எப்படியாவது சண்டையிட்டுக் கொள்ள வேண்டும் என்று இருவரும் ரகசியமாகத் திட்டமிடுவார்கள். ஒருவரையொருவர் கொல்ல வேண்டும் என்று மனதுக்குள் பகைமை கொண்ட இருவரும் மீண்டும் சண்டையிட்டுக் கொள்வதற்காக சந்தித்து ரகசியமாகத் திட்டமிடுவார்கள். பகைவர்கள் தங்கள் பகையைத் தீர்த்துக்கொள்ள தாங்களே திட்டமிடுவது வழக்கத்தை விட எத்தனை முரணானது.அது தான் புஷ்கினின் தனித்தன்மை. அதனால் தான் “புஷ்கின் எழுத்துக்கு முன்னால் யதார்த்தம் கூட செயற்கையாகத் தான் தெரியும்” என்று நிக்கலாய் கோகல் குறிப்பிடுகிறார். நாவலில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர் மொழிபெயர்ப்பாளர் தர்மராஜன். அந்நிய நிலத்தின் வாசனை என்றாலும் அதை உறுத்தலில்லாமல் முகரச்செய்யும் மொழி அவருடையது. இதனால், நேரடி தமிழ் நாவலைப் படிக்கும் உணர்வு தான் வாசகர்களுக்கு ஏற்படும்.</div>
<div style="font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; text-align: justify;">
<br /></div>
<div style="font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; text-align: justify;">
கதையில் வருவதுபோலவே, புஷ்கினும் அடிக்கடி வாட்சண்டையில் ஈடுபட்டவர்தான். 20-க்கும் மேற்பட்ட வாட்சண்டையில் அவர் ஈடுபட்டதாக ஒரு குறிப்பு சொல்கிறது. இறுதியாக தனது மனைவியின் மீது மையல் கொண்ட பிரபுவுடன் வாட்சண்டையில் ஈடுபட்ட புஷ்கின் அந்த சண்டையிலேயே மரணமடைந்தார். ஒரு எழுத்தாளர் உடல்வலிவுடன் சண்டைத்திறனும் கொண்டிருந்தார் என்பது முற்றிலும் நம்பமுடியாத விஷயம் அல்ல. தமிழ் இலக்கிய வரலாற்றில் பாரதியும் உடற்பயிற்சிகளில் ஆர்வம் காட்டியவர் தான். எனினும் யாருடனும் சண்டைக்கெல்லாம் சென்றதில்லை. புஷ்கின் எழுதிய பல கவிதைகள் ரஷ்ய இலக்கியத்தில் கொண்டாடப்படுகின்றன. </div>
<div style="font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; text-align: justify;">
<br /></div>
<div style="font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; text-align: justify;">
புஷ்கினின் முன்னோர்கள் பற்றிய தகவல்கள் ஆச்சரியம் தருபவை. அவரது தாயின் தாத்தா ஆப்ராம் பெத்ரோவிச் கேனிபல், கருப்பின அடிமையாக இருந்தவர். அவரை 17-ம் நூற்றாண்டின் புகழ்மிக்க பேரரசரான முதலாம் பீட்டர் அடிமை வாழ்விலிருந்து மீட்டெடுத்து வளர்த்தார். பின்னாட்களில் ரஷ்ய ராணுவத்தில் மிக உயர்ந்த பதவிக்கு உயர்ந்தார் ஆப்ராம் பெத்ரோவிச். அவரது வழிவந்த புஷ்கினுக்கு அடிமைகள், விவசாயிகள் உள்ளிட்ட விளிம்புநிலை மனிதர்கள் மீது கரிசனம் இருப்பதில் ஆச்சரியமில்லை. விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுபவர்கள் பற்றிய அவரது பரிவான குரல் ‘கேப்டன் மகள்’ நாவலில் ஒலிக்கிறது. “குற்றம்சாட்டப்பட்ட ஒருவன் தான் நிரபராதி என்று எத்தனை முறை சொன்னாலும் அது ஏற்கப்படுவதில்லை. ஆனால் பல சித்திரவதைகளுக்குப் பின்னர், தான் குற்றவாளி என்று அவன் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் மட்டும் அது ஏற்கப்பட்டு அவனுக்கு தண்டனை வழங்கப்படுவது என்ன நியாயம்?” என்று புஷ்கினின் கேள்வி இன்றைய சூழலிலும் பொருத்தமானதாக இருப்பது துரதிருஷ்டமானது.</div>
<div style="font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; text-align: justify;">
அதேபோல், ரஷ்ய அரசுக்கு எதிராகக் கலகத்தில் ஈடுபடும் புகச்சோவ் தன்னைக் கொல்லாமல் விட்டாலும் அவனைப் பாசாங்குக்காரன் என்றே கடைசிவரை சொல்கிறான் பியோத்தர். எனினும் ஒரு கட்டத்தில் புகச்சோவை அனைத்து அபாயங்களில் இருந்தும் காப்பாற்ற வேண்டும் என்று அவன் மனம் துடிக்கிறது. பியோத்தர் எழுதிய குறிப்புகளை அடிப்படையாக வைத்து எழுதியது தான் என்றாலும் நேர்மையும் துணிச்சலும் நிறைந்த பியோத்தரின் மன ஓட்டத்தை அதே குணங்கள் கொண்ட புஷ்கினால் தான் புரிந்துகொண்டிருக்க முடியும் என்று தோன்றுகிறது.</div>
<div style="font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; text-align: justify;">
<br /></div>
<div style="font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; text-align: justify;">
’கேப்டன் மகள்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இதுவரை 4 திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ரஷ்ய மொழியிலேயே வெளியான அந்தத் திரைப்படங்களில் ஒன்றான <b>Kapitanskaya Dochka என்ற ரஷ்ய மொழித் திரைப்படம் </b> யூடியூபில் காணக்கிடைக்கிறது. நாவலை முழுமையாக உள்வாங்கி எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் நடிகர்கள் தேர்வு பிரமிக்க வைக்கிறது. பொதுவாக நாவல்கள் திரைப்படமாக்கப்படும்போது அதுவரை ஒவ்வொரு வாசகனின் பிரத்யேகக் கற்பனையுலகில் உலாவந்த பாத்திரங்க்ளைத் திரையில் சித்தரிப்பது என்பது திரைக்கலைஞர்களுக்கு சவாலான விஷயம். ஹாலிவுட் முதல் தமிழ் சினிமா வரை இதற்கு உதாரணங்கள் உண்டு. ஒரே நேரத்தில் பலர் காணும் கனவான சினிமாவில் அது சிரமமான காரியம் தான். வாசகன் ரசிகனாகும்போது திருப்தியடையாமல் போவதும் உண்டு. சில சமயம், தங்கள் படைப்புகள் திரையில் சரியாக சித்தரிக்கப்படவில்லை என்று அங்கலாய்க்கும் எழுத்தாளர்களும் உண்டு.</div>
<div style="font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; text-align: justify;">
<br /></div>
<div style="font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; text-align: justify;">
புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக், அமானுஷ்யமான கதைகளுக்குப் புகழ்பெற்ற எழுத்தாளரான ஸ்டீஃபன் கிங்கின் ‘தி ஷைனிங்’ நாவலை அதே பெயரில் திரைப்படமாகத் தந்தபோது அப் படத்தை ஸ்டீஃபன் கிங் முற்றிலுமாகப் புறக்கணித்தார். ஆனால் அந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இதுபோல் பல உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால், புஷ்கினின் கேப்டன் மகளின் திரைவடிவம் நேர்த்தியான இயக்கம், அற்புதமான நடிகர்கள், உயிர்ப்பான பின்னணி இசை போன்ற அம்சங்களால் நாவலுக்கு முடிந்த அளவுக்கு நேர்மை செய்திருக்கிறது. 1959-ல் வெளியான இந்த கறுப்பு வெள்ளைப் படத்தில் நாவலில் வரும் பல காட்சிகள் வாசகனின் கற்பனைக்கு உயிர்கொடுத்திருக்கின்றன. குறிப்பாக ஓடன்பெர்க் கோட்டையைக் கைப்பற்றும் புகச்சோவ் கேப்டன் உள்ளிட்டவர்களைத் தூக்கிலிட்ட பின்னர் அந்த உடல்கள் கயிற்றில் ஊசலாடும் காட்சி, ஜார் படையினரால் கைதுசெய்யப்படும் புகச்சோவ் கம்பிகளாலான கூண்டுக்குள் சிறைவைக்கப்பட்டு வண்டி ஒன்றில் வைத்து எடுத்துச்செல்லப்படும் காட்சி போன்றவை நாவலின் ஜீவனைக் கண்முன் நிறுத்துகின்றன. அதேபோல், சிரச்சேதம் செய்வதற்காகக் கொண்டு செல்லப்படும் புகச்சோவ், பலிபீடத்தின் அருகே நிற்கும் பியோத்தரைக் கண்டு தலையை உயர்த்திப் புன்முறுவல் செய்யும் காட்சியும் அற்புதம். புஷ்கின் இருந்திருந்தால் படத்தின் இயக்குநர் விளாதிமிர் கப்லுநோவ்ஸ்கியைப் பார்த்து, உடலில் செருகப்பட்ட வாளுடன் அதேபோன்றதொரு ஸ்னேகப் புன்னகையை சிந்தியிருப்பார். </div>
<div style="font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px;">
(<span style="background-color: white; color: #222222; font-family: arial; font-size: x-small;">இன்று </span>ரஷ்ய இலக்கியத்தின் முன்னோடியான அலெக்ஸாண்டர் புஷ்கினின் நினைவுநாள். அதை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரை.)</div>
</div>
chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-4406345362617934672014-01-23T08:54:00.003+05:302014-01-23T08:57:47.549+05:30யங் அண்ட் பியூட்டிஃபுல் - இச்சை உலகில் இயங்கும் மனம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div id="google-ad-border" style="background-color: white; border: 1px solid rgb(243, 243, 243); color: #3b3a39; font-family: verdana, arial, sans-serif; font-size: 12px; line-height: 20px; margin: 1px 0px 16px; outline: none; padding: 2px 5px 4px; position: relative;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3bTEmeEV77cB9zLUZ0ID46WGlzai-vDdk7oxhUEs6DP4p3jRO7LqIdf2XLFFbhUSU23e2gwHNw2cfQb19Ngzr06UqvaH5TskdsWAKKpQQY1vqeKGxAPoxXbCQ6pWV_ocaZAykyRqwp4Y/s1600/Young-and-Beautiful.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3bTEmeEV77cB9zLUZ0ID46WGlzai-vDdk7oxhUEs6DP4p3jRO7LqIdf2XLFFbhUSU23e2gwHNw2cfQb19Ngzr06UqvaH5TskdsWAKKpQQY1vqeKGxAPoxXbCQ6pWV_ocaZAykyRqwp4Y/s1600/Young-and-Beautiful.jpg" height="322" width="640" /></a></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidro9csm-iNLu-V-Pty4Jf0pa4F1Zxf1X094mwPzUx2xMftH7wZ-DinFvB4aAMBpYJHYctSy5_XOQBf8Uus0-QTrLP4Vra4TuM9GKoRngSXPcDj3MQwMNDMhWWzdcGP61v7LJg6QpFqt4/s1600/Young-and-Beautiful-aka-J-010.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidro9csm-iNLu-V-Pty4Jf0pa4F1Zxf1X094mwPzUx2xMftH7wZ-DinFvB4aAMBpYJHYctSy5_XOQBf8Uus0-QTrLP4Vra4TuM9GKoRngSXPcDj3MQwMNDMhWWzdcGP61v7LJg6QpFqt4/s1600/Young-and-Beautiful-aka-J-010.jpg" height="384" width="640" /></a></div>
<br />
இளம் வயதினரின் மனதுக்குள் ஆயிரம் கனவுகள் உண்டு. ஆனாலும் சமூகம், கலாச்சாரம் போன்ற கனமான விழுமியங்களின் போர்வைக்குள் இயங்கும் உலகம் அவர்களுக்கான சுதந்திரத்தை அத்தனை எளிதாக அளித்துவிடுவதில்லை. குறிப்பாக பெண்களுக்கு அது கடுமையாக மறுக்கப்படுகிறது. எனினும் துணிச்சலுடன் அந்த போர்வையை விலக்கிவிட்டு தன்னிஷ்டம் போல் சுதந்திரமாக நடக்க முயலும் பெண்கள் உண்டு. ஆனால் அந்த சுதந்திரத்தைத் தவறாகக் கையாள முடிவு செய்தால் விளைவும் விபரீதமானதாகவே அமைகிறது.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
பிரெஞ்சு இயக்குநர் ஃபிரான்ஸூவா ஓஸோன் இயக்கியுள்ள ‘யங் அண்ட்பியூட்டிஃபுல்’ திரைப்படம் இது குறித்து பிரச்சார மொழியின்றிப் பேசுகிறது.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
குடும்ப அமைப்பில் இருந்துகொண்டே சட்டம் மற்றும் சமூகத்தின் பார்வையில் குற்றம் என கருதப்படும் பாலியல் தொழிலில் இறங்குகிறாள் ஒரு இளம்பெண். பதின்ம வயதைப் பூர்த்தி செய்யாத அந்தப் பெண்ணின் இந்த செயலும், பொருளாதாரத் தேவைக்காகவோ, கட்டாயத்துக்காகவோ அன்றி சுய விருப்பத்தைச் சார்ந்தது என்பது தான் பார்வையாளர்களுக்கு சற்று அதிர்ச்சியூட்டும் விதமாக அமைகிறது. வீட்டுக்கும், கல்லூரிக்கும் தெரியாமல் இணையம் மூலம் வாடிக்கையாளர்களின் தொடர்பைப் பெற்று பாலியல் தொழிலைத் தொடர்கிறாள் அப்பெண். தனது பெயரை மாற்றி லியா என்ற புனைப்பெயருடன் (அது அவளது பாட்டியின் பெயர்) அவள் இரட்டை வாழ்க்கை வாழ்கிறாள். எதிர்பாராத விதமாக அவளது முதிய வாடிக்கையாளர் ஒருவர் உடலுறவின்போது மாரடைப்பால் மரணமடைகிறார். அங்கிருந்து பதட்டத்துடன் வெளியேறி விடுகிறாள் லியா. கசியும் புகையை கூடை போட்டு மூட முயல்வதுபோல் அந்த ரகசியம் அவளைத் துரத்துகிறது. அந்த பயங்கரத்தின் நிழல் அவளது வீடுவரை தொடர்கிறது.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
போலீஸ் நடந்த உண்மைகளை அவளது தாயிடம் சொல்கிறது. மொத்தக் குடும்பமும் அதிர்வுக்குள்ளாகிறது. இளம் பெண் என்பதால் கவுன்சிலிங் தந்து அவளை அந்தப்பாதையிலிருந்து திசைதிருப்ப முயல்கின்றனர். இளம் வயது ஆணுடன் பழகவும் அவள் அனுமதிக்கப்படுகிறாள். எனினும், பாலியல் துணையில் மாற்றம் தேவைப்படும் அப்பெண் மீண்டும் பாலியல் தொழிலைத் தொடர முடிவு செய்கிறாள். மறைத்து வைத்திருந்த தனது சிம் கார்டை எடுத்து போனில் பொருத்தியவுடன் வாடிக்கையாளர்களின் குறுஞ்செய்திகள் வரிசையாக வந்து விழுகின்றன. ஒரு வாடிக்கையாளரை முடிவு செய்து ஒரு ஆடம்பர ஹோட்டலின் வரவேற்பறையில் காத்திருக்கிறாள். அவளது முதிய வாடிக்கையாளர் இறந்தது அந்த ஹோட்டலின் ஒரு அறையில்தான்.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
அங்கு வந்துசேரும் வாடிக்கையாளர் ஒரு பெண். வயதானவள். சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் அமைதியாக இருக்கிறாள் லியா. தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறாள் அந்த முதிய பெண். இறந்த மனிதரின் மனைவி அவள். தனது கணவர் கடைசியாக உடலுறவு கொண்ட பெண்ணை சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருக்கிறாள். இத்தனை வருட தாம்பத்தியத்தில் தனது கணவன் தன்னைத் தவிர வேறு பெண்களை நாடிவந்த விஷயம் தெரிந்தும் ஒரு கட்டத்தில் அதை ஜீரணித்துகொண்ட பெண் அவள். இருவரின் சந்திப்பு லியாவின் மனதில் என்னவோ ஒரு வலியைத் தருகிறது. படம் நிறைவடைகிறது.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
குழந்தைகளுக்குத் தனி அறை, ஆண் - பெண் நண்பர்களுடன் தங்கள் பிள்ளைகளை இரவு நேரங்களிலும் வெளியில் அனுப்பும் இயல்பு என்று வாழும் மேற்கத்தியப் பெற்றோரும் தங்கள் குழந்தை பெரிய தவறுகள் செய்து பிரச்சினையில் உழலும்போது அதிர்ச்சியடைகின்றனர். தனது இளமைக் காலத்தில் பல காதல்கள் என்று கட்டற்ற சுதந்திரத்துடன் வளர்ந்த லியாவின் தாய் தனது மகளின் விபரீதமான இரட்டை வாழ்வு குறித்து அதிர்ச்சியடைந்தாலும், அவளை மாற்ற ஆக்கப்பூர்வமாக முயல்கிறாள். படம் அதீதமான பாலியல் இச்சை, தவறான குடும்ப உறவுகள், பெற்றோர்களின் போதிய கவனிப்பின்மையால் வழிதவறும் குழந்தைகள் என்று பல விஷயங்களைப் பேசினாலும் இது தவறு இது சரியென்று நியாயவாதம் பேசவில்லை.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
எத்தனை பிரயத்தனங்களுக்குப் பிறகும் தனது மனம் விரும்பும் பாலியல் உறவை லியா நாடிச்செல்வது, அவளது மனநிலையில் பதிவாகிவிட்ட இச்சையால்தான் என்றாலும் தன் வயதையொத்த இளைஞர்களைவிட அதிக வயது கொண்ட முதியவர்களிடம் தான் அவள் தன்னை இழக்க ஒப்புக்கொள்கிறாள். இறந்துபோன ஜார்ஜஸ் பற்றி பெண் போலீஸ் கேட்கும் கேள்விகளுக்கு பதில்சொல்லும் லியா ஒன்றைக் குறிப்பிடுகிறாள். “ஜார்ஜஸ் இனிமையான மனிதர். என்னிடம் மிகவும் அன்பாக நடந்துகொள்வார்”. குடும்ப உறவின் சிக்கல்கள் இளம் மனதில் ஏற்படுத்தும் வடு, வேறொரு தவறைத் தூண்டும் காரணியாக அமைகிறது என்ற விஷயம் பூடகமாகச் சொல்லப்படுகிறது.</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
கான் திரைப்பட விழாவில், பால்மே டி’ஓர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள இப்படம், உலகமெங்கும் விமர்சகர்களின் ஏகோபித்தப் பாராட்டைப் பெற்றுள்ளது.<br />
<br />
<span style="color: #222222; font-family: arial; font-size: x-small; line-height: normal;"><b>'தி இந்து' இதழில் வெளியான கட்டுரை </b></span></div>
<div class="cinema" style="background-color: white; border: 0px; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; margin: 0px; outline: none; padding: 0px 0px 10px; position: relative;">
<a href="http://tamil.thehindu.com/cinema/?ref=cinema" style="color: #1f57a5; outline: none; text-decoration: none;"></a></div>
</div>
chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-4984049130881946862014-01-21T23:09:00.004+05:302014-01-21T23:09:50.450+05:30மண் மணக்கும் புன்னகை மொழி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div aria-label="Conversation" autoid="_rp_1" role="list" style="background-color: white; font-family: 'Segoe UI WPC', 'Segoe UI', Tahoma, 'Microsoft Sans Serif', Verdana, sans-serif;" tabindex="-1">
<div tabindex="-1">
<div aria-label="Message Contents" aria-selected="true" autoid="_rp_2" role="listitem" tabindex="0">
<div aria-label="Expanded Message Contents" class="_rp_V3" style="clear: both; min-width: 350px;" tabindex="-1">
<div autoid="_rp_w" class="_rp_L3" style="border-bottom-color: rgb(234, 236, 238); border-bottom-style: solid; border-bottom-width: 1px; min-height: 70px; padding-bottom: 30px; position: relative;" tabindex="-1">
<div role="region">
<div autoid="_rp_z" class="_rp_N3" id="Item.MessagePartBody" role="region" style="clear: both; padding-top: 12px; position: relative; top: -5px; width: auto; word-wrap: break-word;">
<div class="_rp_O3 rpHighlightAllClass rpHighlightBodyClass" id="Item.MessageUniqueBody" role="button" style="color: #282828; font-size: 15px;" tabindex="0">
<div dir="ltr">
<span dir="ltr"><div id="divtagdefaultwrapper" style="margin: 0px;">
<span style="color: black; font-family: Calibri,Arial,Helvetica,sans-serif; font-size: small;"><span style="font-size: 12pt;"><div id="divtagdefaultwrapper" style="margin: 0px;">
<span style="font-size: 12pt;">- வெ.சந்திரமோகன்</span></div>
<div id="divtagdefaultwrapper" style="margin: 0px;">
<br /></div>
<div id="divtagdefaultwrapper" style="margin: 0px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXYwzsRExUTKwd4P0ZswKm0nfIwXNwDtE5X-uS1fOcGVTwST1c1NmzvLoUjtN7U3dGNEeYMTYST8KYT8cx3xhZa_bp15F-HWCWG9Sqzf21dMbOQnDpQxp3lwe6Fs6FhOD9sNfjAaQV0ZE/s1600/vadivelu-wallpaper09.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXYwzsRExUTKwd4P0ZswKm0nfIwXNwDtE5X-uS1fOcGVTwST1c1NmzvLoUjtN7U3dGNEeYMTYST8KYT8cx3xhZa_bp15F-HWCWG9Sqzf21dMbOQnDpQxp3lwe6Fs6FhOD9sNfjAaQV0ZE/s1600/vadivelu-wallpaper09.jpg" height="320" width="212" /></a></div>
<div id="divtagdefaultwrapper" style="margin: 0px;">
<br /></div>
<div id="divtagdefaultwrapper" style="margin: 0px;">
<br /></div>
<div id="divtagdefaultwrapper" style="margin: 0px;">
’என்னை புதுக்கோட்ட பார்ட்டியில கூப்புட்டாக..காரக்குடி பார்ட்டியில கூப்புட்டாக.. எல்லாத்தையும் விட்டுட்டு என் கெரகம் இந்தக் கரகாட்டக் கும்பல்ல வந்து மாட்டிக்கிட்டேய்ங்’ என்று கன்னத்தில் கைவத்து கேட்டுக்கொண்டிருக்கும் கவுண்டமணியிடம் கோவை சரளா சலித்துக்கொள்ளும் காட்சியை ரசிக்காதவர்கள் இருக்கமுடியாது. மண் வாசம் வீசும் மொழியுடன் அசல் நாட்டுப்புறக் கலைஞரைக் கண்முன் கொண்டு வந்த அந்தப்பாத்திரம் வெற்றி பெற மிக முக்கியக் காரணம் வட்டார மொழிதான். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, பொதுவான பேச்சுமொழியில் நாயகனும் நாயகியும் பேசுவது வழக்கமாகிவிட்ட நிலையில், வட்டார வழக்கு என்ற விஷயத்தை அதிக அளவில் இன்றும் கையாள்வது நகைச்சுவை நடிகர்கள் தான். பொதுவான கிராமம் அல்லது நகரம் என்றே கதை நடக்கும் பகுதியை சித்தரிக்கும் தமிழ் சினிமாவில், நகைச்சுவைக் கலைஞர்களின் தனித்திறனால் தான் வெவ்வேறுப் பகுதிகளில் பேசப்படும் வட்டார மொழிகள் ஓரளவு உயிர்ப்புடன் இருக்கின்றன என்றும் சொல்லலாம்.</div>
<div id="divtagdefaultwrapper" style="margin: 0px;">
<div>
<br /></div>
<div>
தொடக்கத்தில் தமிழ்சினிமாவில் ஒரே படத்தில் பல மொழிகள் பேசப்பட்ட வழக்கம் இருந்தது. நாயகனும் நாயகியும் தெலுங்கில் பேச, துணை நடிகர்கள் ஹிந்தியில் பேச நகைச்சுவை நடிகர்கள் மட்டும் தமிழில் பேசிய படங்கள் உண்டு. தமிழ் நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் மிகப்பெரிய ஜாம்பவான்களான என்.எஸ்.கிருஷ்ணன் முதல் நாகேஷ் வரை பல நடிகர்கள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த மொழிக்குரல் என்ற தனித்துவம் பெரிதாகக் கையாளப்படவில்லை என்றே சொல்லலாம். அப்போது மன்னர் காலத்துக் கதை அல்லது சமூகக்கதை என்ற பாகுபாடு இருந்ததே தவிர, மதுரையில் நடக்கும் கதை அல்லது திருநெல்வேலியில் நடக்கும் கதை என்றெல்லாம் பிரத்யேகமான இடங்களை மையப்படுத்தும் படங்கள் அவ்வளவாக வரவில்லை. ’பட்டணம்’ என்றால் அது சென்னை. கிராமம் என்றால் அது பூஞ்சோலை தான். எனினும், நகைச்சுவை நடிகர்களோ துணை நடிகர்களோ சென்னையின் பிரத்யேக மொழியான ‘மெட்றாஸ் பாஷை’ பேசுவதை அவ்வப்போது பார்க்க முடியும். விளிம்புநிலை மனிதர்கள் பிராமணர்கள் பேசும் பாணியில் பேசியதும் தமிழ் சினிமாவின் தொடக்கத்தில் நடந்தது.</div>
<div>
<br /></div>
<div>
60-களின் இறுதிகளில் வெளியான படங்களில் தேங்காய் சீனிவாசன், சுருளி போன்ற நடிகர்கள் சென்னைத் தமிழை சற்று சிரமப்பட்டுப் பேசி நடித்தனர். ஜெய்சங்கர் நடித்த ‘சி.ஐ.டி. சங்கர்’ படத்தில் அலுவலகத்தில் பொதுமொழியில் பேசும் தேங்காய் சீனிவாசன், நகைச்சுவை நாயகி நடத்தும் ஹோட்டல் ஒன்றில் சாப்பிடப் போகும்போது சென்னைத் தமிழில் பேசுவார். ’காசேதான் கடவுளடா’ படத்தில் சென்னை குப்பம் பகுதியைச் சேர்ந்த டீ மாஸ்டரான அவர் முத்துராமன், ஸ்ரீகாந்த் போடும் திட்டப்படி சாமியார் போல வேடமிட்டு மனோரமா வீட்டில் தங்குவார். பக்தர்களுக்கு அட்டகாசமாக அருள்மொழி வழங்கினாலும் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ‘மெட்றாஸ் பாஷை’ ரசிகர்களின் வயிற்றைப் பதம் பார்க்கும். பிறமொழி பேசுபவர்களாக துணை நகைச்சுவை நடிகர்கள் நடித்த படங்கள் இன்று வரை வெளியாகின்றன. மலையாள சாயலுடன் தமிழ் பேசும் டீக்கடை நாயர்கள், தலையில் குல்லா, தங்க ஜரிகை, ஜிப்பா சகிதம் ‘நம்பள்கி பணத்த எப்போ திருப்பித் தரப்போறான்?’ என்று கேட்கும் ஈட்டிக்கார சேட்டுகள் போன்ற பாத்திரங்கள் பெரும்பாலும் நகைச்சுவை காட்சிகளிலேயே பயன்படுத்தப்பட்டனர்.</div>
<div>
<br /></div>
<div>
முதன்முறையாக தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த குரலாக சத்தமாக ஒலித்தது கவுண்டமணியிடமிருந்து என்றே சொல்லலாம். நாடகப் பின்புலம் கொண்ட கவுண்டமணி, திரைப்படங்களில் பிறர் போல பொதுமொழியில் பேசாமல் தான் சார்ந்த கொங்கு நாட்டுப் பகுதியில் பேசப்படும் பாணியில் பேசியதாலேயே தனித்து அறியப்பட்டார். கிராமப் பின்னணி கொண்ட திரைப்படங்கள் என்றாலும் பொதுவான மொழி பேசும் பாத்திரங்கள் என்பதால் அவரது கொங்கு மொழி தொடக்ககாலப் படங்களில் தனித்துவம் பெறவில்லை. அதேசமயம், வித்தியாசமான முறையில் எதிராளியை (பெரும்பாலும் செந்தில்!) கிண்டல் செய்வதன் மூலம் அவரது நகைச்சுவைக்கு ஒரு பிரத்யேக பாணி அமைந்திருந்தது. </div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8CYmItNIfQjnTFT9CTKDX4at8QzR-Tn0jbzAdapKdtQShs9j6QNIcIwXPwZqssyPh-wiBeEEETub4bG3nFN-zS1UeClOg84X0WQGMWMT89C9thcBf88seWmtBnj0G4ci89btOw0ZLE_k/s1600/goundamani.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8CYmItNIfQjnTFT9CTKDX4at8QzR-Tn0jbzAdapKdtQShs9j6QNIcIwXPwZqssyPh-wiBeEEETub4bG3nFN-zS1UeClOg84X0WQGMWMT89C9thcBf88seWmtBnj0G4ci89btOw0ZLE_k/s1600/goundamani.jpg" height="180" width="320" /></a></div>
<div>
<br /></div>
<div>
<span style="font-size: 12pt;">கோவையைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களைப் பின்னணியாகக் கொண்டு ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ‘வைதேகி காத்திருந்தாள்’ கவுண்டமணிக்கு பெரிய வாய்ப்பாக அமைந்தது. படத்தில் வெள்ளை சுண்ணாம்பு அடிக்கப்பட்ட ஓட்டு வீடுகள் கொங்குப் பகுதியைக் கண்முன் கொண்டுவர, சைக்கிள் கடை வைத்திருக்கும் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’வாக வரும் கவுண்டமணி பேசும் வசனங்கள் கொங்கு மண்ணின் அசல் மணத்தை ரசிகர்களுக்குத் தந்தன. ”அழகுராஜா ஒரு வல்லவரு..அவர் ஒரு .....நல்லவரு..அப்பிடீன்னு ஊருக்குள்ள இருக்கிற அம்மிணி அக்காகிட்டேயெல்லாம் போய் சொல்லோணும்” என்று செந்திலுக்கு அன்புக் கட்டளையிடும் காட்சியில் கொங்குப் பகுதியின் குறும்பு அழகாக வெளிப்படும். பின்னர் நகர்ப்புற பின்னணி கொண்ட திரைப்படங்கள் பலவற்றில் நடித்திருந்தாலும் கவுண்டமணி பேசும் பாணியில் பெரிய மாற்றமிருக்கவில்லை. அவரது குரலும் பேசும் முறையும் அவரது அடையாளங்களாகவே மாறின. </span></div>
<div>
<br /></div>
<div>
90-களின் தொடக்கத்தில் கொங்குப் பகுதியை மையமாகக் கொண்ட கதைகளுடன் தமிழுக்கு அறிமுகமான கே.எஸ்.ரவிகுமாரின் படங்களில் கவுண்டமணி பேசும் கொங்குமொழி இன்னும் பொருத்தமானதாக அமைந்தது. பொள்ளாச்சி, உடுமலைப் பேட்டை போன்ற இடங்களைச் சார்ந்து எடுக்கப்பட்ட ’சேரன் - பாண்டியன்’ திரைப்படத்தில் கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகளுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அதற்கு முன்னர், மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடக்கும் கதை என்றபோதிலும் கவுண்டமணி கொங்கு மொழியில் தான் பேசுவார். ‘சேரன் - பாண்டியன்’ படத்தைத் தொடர்ந்து ரவிகுமார் இயக்கிய ‘நாட்டாமை’ படத்தில் கவுண்டமணியின் கொங்கு மொழி அற்புதமாக வெளிப்பட்டது. தனது தாய் யாரென்று தெரியாமல் சொல்லாமல் மறைத்துவைத்து இளம்பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளும் தனது தந்தை (செந்தில்) மீது கொலைவெறியுடன் அலையும் கவுண்டமணி கடைசியில் தனது தாயைக் கண்டுகொள்வார். அம்மா வேடத்தில் வரும் கவுண்டமணி ”யேங்கோ.. நம்ம ரெண்டுபேருக்கும் பொறந்தானே ஒரு மகென். அவென் எங்கெங்கோ?” என்று கேட்கும் காட்சியில் அரங்கம் சிரிப்பால் அதிர்ந்தது. ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ‘திருமதி பழனிச்சாமி’ படமும் கொங்கு பாஷையில் கவுண்டமணி பேசிய முக்கியமான படம். இதுபோன்ற பல படங்களில் அவரது நடிப்பு சிறக்க அவரது மொழி முக்கியக் காரணம் என்பதில் சந்தேகமில்லை. </div>
<div>
<br /></div>
<div>
அதேபோல கோவை சரளாவின் கொங்கு பாஷை பிரசித்திப் பெற்றது. கோவையில் பிறந்திருந்தாலும் மலையாளம் பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். எனினும் கவுண்டமணிக்கு இணையான கொங்குக் குரல் அவருடையது. இளம்வயதிலேயே வயதான வேடங்களில் நடித்துவந்த சரளாவுக்கும் ‘வைதேகி காத்திருந்தாள்’ ஒரு பெரிய திறப்பாக அமைந்தது. மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று கவுண்டமணி சொல்லும் யோசனையை சென் தவறாகப் புரிந்துகொண்டு அவரது மனைவி கோவை சரளாவிடம் மல்லிகைபூ வாங்கித் தரும் காட்சி உச்சகட்ட நகைச்சுவை. செந்திலை துடைப்பத்தால் வெளுத்துக்கொண்டே கவுண்டமணியிடம் சரளா சொல்வார் “இவெங் கூட சகவாசம் வச்சதுக்கு ஒங்களத்தான் மொதல்ல நாலு சாத்து சாத்தோணும்”. பாலுமகேந்திராவின் இயக்கத்தில் கமல் நடித்த ‘சதிலீலாவதி’ படத்தில் அவரது மனைவியாக நடித்தது கோவை சரளாவின் வாழ்நாள் சாதனை. அதற்கு அவரது கொங்கு மொழி தான் காரணமாக அமைந்தது. அந்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்தினார் சரளா. தனது கணவனின் தவறான உறவு குறித்து கமல்-சரளா தம்பதியிடம் புகார் சொல்லும் கல்பனாவைக் கமல் சமாதானப்படுத்தும் காட்சி ஒன்றைச் சொல்லலாம். “ஒரு ஆம்புளைக்கி இதுவா அதுவான்னு சாய்ஸ் கொடுக்கக் கூடாது. ரெண்டையும் பொறுக்கிப்புடுவானுங்க” என்று கமல் சொல்லும்போது ”கண்டிசனா செஞ்சிப்போடுவானுங்கோ..கெரகம் புடிச்சவனுங்கோ” என்று ஒரு அறச்சீற்றக் குரல் கொடுப்பார் சரளா. கமலுக்கு சப்தநாடியும் அடங்கிவிடும். </div>
<div>
<br /></div>
<div>
நகைச்சுவை உலகில் கவுண்டமணிக்குப் பின்னர் கவனம் ஈர்த்த முக்கியக் குரல் மதுரையிலிருந்து ஒலித்தது. வைகைப் புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு மதுரை மண்ணின் மணத்தை திரை ரசிகர்களுக்கு அசலாகத் தந்தார். “யேப்பா..எங்க ஏரியா பக்கம் வம்பு சொல்றது?” “ஆத்தீ..விட்டாக் கொல பண்ணிடுவாய்ங்க போலருக்கே!” என்று மதுரை கிராமப் பகுதிகளில் சலம்பித் திரியும் இளைஞர்களின் பிரதிநிதியாக தமிழ்சினிமாவுக்குள் வடிவேலு நுழைந்தார். உள்ளுக்குள் உதறெடுத்தாலும் எதிராளியை வம்புக்கிழுக்கும் குறும்பு நிறைந்த பாத்திரங்கள் அவரது அடையாளமாக மாறின. ராஜ்கிரணின் கண்டுபிடிப்பு என்றாலும் அவரது முதல் வெற்றி பாரதிராஜா இயக்கிய ‘கிழக்குச் சீமையிலே’ தான். அதில், சைக்கிளில் தன்னை இடித்துவிட்டு செல்லும் உள்ளூர் ரவுடி சற்று தொலைவுக்கு சென்று விட்ட தைரியத்தில் வடிவேலு தனது மிரட்டலைத் தொடங்குவார். “ஏண்ணே..பாத்துப் போனா என்னண்ணே?”. ரவுடி இன்னும் தொலைவு சென்ற பின்னர் ”பெல்லடிச்சி பிரேக் புடிச்சி போனா கொறஞ்சா போய்டுவ?” என்று குரல் கொடுப்பார். பின்னர் தைரியம் உச்சமடைந்த நிலையில், “ஜெயில் பறவை டா நாங்க!” என்று குரலை உயர்த்தி எச்சரிப்பார். ரவுடி சைக்கிளை நிறுத்தி திரும்பி ‘ஆயுதத்தை’ எடுத்த பின்னர் உடலெங்கும் உதறிப்பதற நடுங்கிக்கொண்டே வடிவேலு சொல்வார்” இந்த மம்பட்டியக் கூட நீங்களே வச்சிக்குங்க. நா எப்புடி ஓடுறேங்கிறத மட்டும் பாருங்க”. அந்த காட்சி அவரைப் பெரிய அளவில் அடையாளப்படுத்தியது . அதுவரை அத்தனை அசலான மதுரை வட்டார மொழியைத் திரையுலகம் கண்டதில்லை. </div>
<div>
கவுண்டமணி எல்லா படங்களிலும் கொங்கு பாஷை பேசியது போலவே, வடிவேலுவும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளைக் கதைக் களமாகக் கொண்ட படங்களிலும் மதுரை பாஷை தான் பேசினார். பொதுவாகவே கிராமங்களில் பேசும் மொழி கொச்சையானதாக இருக்கும் என்ற பொதுக்கருத்து கொண்ட ரசிகர்கள், வட்டார வழக்குகள் குறித்து அதீத கவனம் செலுத்தத் தேவையில்லை என்று பெருந்தன்மையாக விட்டுவிடுவதால் இது சாத்தியமாயிற்று என்று சொல்லலாம். வடிவேலுவின் உடல்மொழி பற்றிப் பேசுவதென்றால் அதற்கு இக்கட்டுரையில் இடமிருக்காது. தமிழுலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியக் கலைஞர் அவர். அவருக்குப் பின்னர் கஞ்சா கருப்பு, ’பரோட்டா’ சூரி போன்ற நடிகர்களிடம் மதுரை வட்டார வழக்கு காணப்படுகிறது. எனினும், வடிவேலு அளவுக்கு அவர்கள் மொழியில் பெரிய ஈர்ப்பு இல்லை.</div>
<div>
<br /></div>
<div>
சென்னையில் பரவலாகப் பேசப்படும் ’மெட்றாஸ் பாஷை’ தமிழ் சினிமாவில் பலமாக ஒலிக்க முக்கியக் காரணமாக இருந்தவர் லூஸ் மோகன். ‘இன்னாம்மா.. எத்க்கு என்னாண்ட ராங்கு காட்டுற. அப்பால பேஜாரா பூடும் பாத்துக்க..” என்று கண்ணைச் சுருக்கிக் கொண்டு நின்ற இடத்திலிருந்தே உடலை உயர்த்தி விஸ்வரூபம் காட்டும் குடிகாரப் போக்கிரி பாத்திரங்கள் என்றால் நம் கண்முன் வருவது அவர் தான். அதேசமயம், வாட்ச்மேன், அலுவலக உதவியாளர் போன்ற ’அரசுப்பணிகளும்’ தமிழ் சினிமாவில் அவருக்குக் கிடைத்தன. பிரதான நகைச்சுவை நடிகர்களின் துணை நடிகராகவே வாய்ப்புகள் அமைந்தாலும் தனது பிரத்யேக மொழி பலத்தின் மூலம் அவருக்கு தனி இடம் கிடைத்தது. ’சட்டம் என் கையில்’ படத்தில் சென்னை குப்பத்து இளைஞர் வேடத்தில் நடித்த கமல்ஹாஸன் லூஸ்மோகனிடம் சென்னை தமிழ் கற்றார் என்ற செய்தி இன்றும் சினிமாவுலகில் நிலவுகிறது. ’படிக்காதவன்’ படத்தில் ஜனகராஜ் பேசும் ”தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா..” என்ற புகழ்பெற்ற வசனமும் சென்னைத் தமிழ் பயன்பாட்டுக்கு ஒரு உதாரணம். </div>
<div>
நெல்லைத் தமிழைப் பொறுத்தவரை ஒவ்வொரு வார்த்தைக்கும் இறுதியில் ‘லே’ போட்டால் போதும் எனும் அளவுக்குத் தான் தமிழ் படங்கள் வெளிவந்துள்ளன. மணி ரத்னம் இயக்கும் படங்களில் நெல்லைத் தமிழ் ஸ்பஷ்டமாக ஒலிக்கும். சிம்பு நடித்த ‘ஒஸ்தி’ படம் நெல்லைத் தமிழை மிக மோசமான முறையில் கையாண்ட படம் எனலாம். நெல்லை வட்டார வழக்கு பேசும் நகைச்சுவை நடிகர்களில் நெல்லை சிவா முக்கியமானவர். ”எ.. கட்டபொம்மன் தினெவேலிக்காரன் தானே. அவென் நம்ம மாதிரி தானே பேசியிருப்பான்” என்றபடி சிவாஜி பேசிய புகழ்பெற்ற வசனங்களை நெல்லைத் தமிழில் பேசிக்காட்டும் காட்சி, தமிழ்சினிமாவில் பொதுமொழியை மட்டும் பயன்படுத்தும் படைப்பாளிகளை யோசிக்க வைத்திருக்கும்.</div>
<div>
<br /></div>
<div>
மதுரை வட்டார வழக்கைப் பயன்படுத்தி வடிவேலு பேசிய வசனங்கள் பிற்பாடு தமிழ் வாழ்வியலின் ஒரு அங்கமாகவே மாறின. ‘வந்துட்டா(ன்)யா...வந்துட்டான்’, ‘பில்டிங் ஸ்ட்ராங்கு..பேஸ்மட்டம்(!) கொஞ்சம் வீக்கு’ போன்ற சொல்லாடல்கள் ரசிகர்களிடையே பெரிய அளவில் தாக்கம் தந்தவை. ‘அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா’ என்ற கவுண்டமணியின் பொன்மொழி இந்திய அரசியல் குறித்த நுட்பமான கிண்டல். பொதுவாக நாயக நடிகர்கள் பேசும் ’பஞ்ச்’ வசனங்களை அந்தந்த படங்களுடன் ரசிகர்கள் மறந்துவிடுகின்றனர். ஆனால், நகைச்சுவை நடிகர்கள் பேசும் வசனங்கள் ரசிகர்கள் மனதில் நிரந்தரமாகத் தங்கிவிடுவதற்கான முக்கியக் காரணம் அவர்கள் மக்களின் மொழியில் பேசுவது தானன்றி வேறென்ன!</div>
<div>
-<span style="color: #222222; font-family: arial; font-size: x-small;">'தி இந்து' பொங்கல் மலரில் வெளியான கட்டுரை.</span></div>
</div>
</span></span></div>
</span></div>
</div>
</div>
</div>
<div class="_rp_R3" style="clear: both;">
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-47606762464522552862014-01-10T21:12:00.005+05:302014-01-10T21:15:45.313+05:30கலையின்மீது குவியும் மன வெளிச்சம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjc4fdTyllS1oeVLXp9bmCEgFwFZhiXzKesjyagEXWT4mY602DSak9D4Z5U8ckQxHjRNaBxF9L8LYxF8BC1JznL84_Ghwnzy9hcVwuE8QZPTiotSoDEYGPW02KyAKi5CowpL92YA8F1i1w/s1600/history_of_Bharatanatyam04.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjc4fdTyllS1oeVLXp9bmCEgFwFZhiXzKesjyagEXWT4mY602DSak9D4Z5U8ckQxHjRNaBxF9L8LYxF8BC1JznL84_Ghwnzy9hcVwuE8QZPTiotSoDEYGPW02KyAKi5CowpL92YA8F1i1w/s1600/history_of_Bharatanatyam04.jpg" height="256" width="320" /></a></div>
<span style="background-color: white;">இன்று மாலை மயிலாப்பூருக்கு வேறெதோ வேலைக்காக சென்றபோது கபாலீஸ்வரர் கோயில் பக்கம் போகலாமே என்று தோன்றியது. உள்ளே மஞ்சள் விளக்கொளியில் கடவுளர்களின் சந்நிதிக்கு முன்னால் சின்ன சின்ன கூட்டம். அதிக கூட்டமில்லாத கோயில்கள் தான் ஆன்மாவுக்கு மிக நெருக்கமானவை. ஒவ்வொரு பிரகாரத்திலும் கொஞ்ச நேரம் நின்று நகர்ந்தபோது கபாலீஸ்வரர் சந்நிதிக்குள் இருந்து ஒரு குரல் தமிழில் பாடிக் கொண்டிருந்தது. உள்ளே செல்லாமல் நடைபாதையிலேயே நின்றுகொண்டு அதைக் கேட்க கேட்க மனம் லேசானது. அந்தக் குரல் தந்த அமைதியுடன் </span><span style="background-color: white;">உயர்த்திய பார்வையில் ஓங்கி நின்ற கோபுரம் பட்டது. மேகங்களற்ற மெல்லிய நீல நிற வானத்தின் பின்னணியில் கோபுரத்தில் உறைந்திருந்த சிற்பங்களின் அடர்த்தி மனதை அள்ளியது. </span></div>
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
கோயிலுக்குள் நுழைந்த போதே வலது புற மூலையில் சின்னதாக மேடை அமைத்து அதில் சில இளம்பெண்கள் பரதம் ஆடிக்கொண்டிருந்தது கண்ணில் பட்டது. இப்போது அதை நோக்கி சென்றோம். ஐம்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு நடனக் கலைஞர் தனது அடுத்த நடனத்தின் பின்னணி பற்றி ஆங்கிலத்தில் விவரித்துக் கொண்டிருந்தார். இங்கே எதற்கு ஆங்கிலம் என்று லேசான எரிச்சல் வந்தது. அப்போது தான் கவனித்தேன். இந்திய உடைகளில் பத்து பதினைந்து வெளிநாட்டுப் பெண்கள் காலை மடக்கி கழுத்தை உயர்த்தி மேடை மீது பார்வையைப் பதித்துக் காத்திருந்தனர்.<br />
<div>
நடனக் கலைஞரின் தலைமுடி போலியானது என்று தெரிந்தது. பேசும் பாணியிலும் உடல்மொழியிலும் பெண்மை மிளிர்ந்தது. பின்னர் அவர் மேடைக்கு வந்து ஆடத் தொடங்கினார். பின்னணியில் ஒருவர் ஜதி சொல்ல, அழகான குரலில் ஒரு பெண் பாடினார். வீணை, மிருதங்கத்துடன் அவ்வப்போது உடுக்கையும் ஒலித்தது. அதை வாசித்தவர் சங்கு மற்றும் மணி போன்ற ஒலிக்கருவிகளையும் இசைத்தார். நடனக் கலைஞர் நல்ல தேர்ச்சி பெற்றவர். சிவ நடனத்தை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினார். இசையும், நடனமும் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் மனதில் தானாக உருக்கொண்டு வளர வளர அங்கே கலையின் ஆன்மா மேடையிலும் அதைச் சுற்றிலும் சூல்கொண்டது. நடனம் முடிவுபெறும் தருணம் யாரும் சொல்லாமலேயே அனைவருக்கும் விளங்கியது. நடனக் கலைஞர் தனது கடைசி முத்திரையைக் காட்டியபடி நடனத்தை முடிக்கும் தருணத்தில் கூட்டத்தில் கைதட்டல் எழுந்தது. ஆத்மார்த்தமான மகிழ்ச்சியுடன் நடனக்கலைஞர் மேடையிறங்கினார்.<br />
<div>
அடுத்து நான்கு இளம்பெண்கள் மேடைக்கு வந்தனர். கல்லூரி மாணவிகளாக இருக்க வேண்டும். அவர்களது நண்பர் குழாம் கையில் விலை உயர்ந்த கேமரா, புத்தக அளவிலான டேப்லேட்டுகளுடன் நடனத்தைப் பதிவு செய்துகொண்டும் ஒளிப்படம் எடுத்துக் கொண்டும் இருந்தனர். ஆர்வ மிகுதியில் நண்பர் குழாம் பரபரப்புடன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த ஒரு பெண்மணி செல்லக் கண்டிப்புடன் கைகளை மேலும் கீழும் ஆட்டி அமைதியாக இருக்குமாறு புன்னகையுடன் சைகை காட்டினார். தலையாட்டியபடி மவுனமாக கவனிக்க ஆரம்பித்தனர் இளைஞர்கள். ஆடிய நால்வரில் ஒரு பெண்ணிடம் மட்டும் பாவம் சிறப்பாக வெளிப்பட்டது. பச்சை நிற பட்டு ஜொலிக்க புன்முறுவலான முகத்தில் பாவனைகள் மிளிர அழகாக ஆடினார். அதன் பின்னர் அந்த ஆண் நடனக் கலைஞர் சிவ-பார்வதியின் காஸ்மிக் நடனமான தாண்டவம் ஆடத் துவங்கினார். பார்வதியாக அனுபவம் வாய்ந்த ஒரு பெண்மணியும் ஆடினார். கூடவே கல்லூரி மாணவிகளும் ஆடினர். உடுக்கை ஒலிக்க உச்சபட்ச உத்வேகத்துடன் ஆடிய இருவரும் பார்வையாளர்களுக்கு கடவுளர் தம்பதிகளாகவே பட்டிருக்க வேண்டும். அவ்வப்போது கைதட்டல் எழுந்து அடங்கியது. அதன் பின்னரும் நடன நிகழ்ச்சி தொடர்ந்தது. எனினும் நிறைந்த மனதுடன் அங்கிருந்து வெளியேறினோம். </div>
</div>
</div>
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
எந்தக் கலையாக இருந்தாலும் எந்த மேடையாக இருந்தாலும் கலைஞர்கள் அர்ப்பணிப்பான கலைவெளிப்பாட்டுடன் இயங்கினால் அந்தக் கலை எத்தகைய பார்வையாளரையும் சென்றடையும், அதன் தாத்பரியம் தானே நிலைபெறும் என்று நினைத்துக்கொண்டேன். மனிதர்களுக்கிடையில் கலை என்ற அம்சம் தோன்றியதன் நோக்கம் அது தானே!</div>
<div>
<br /></div>
</div>
chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-60021850363614294572013-08-06T09:50:00.001+05:302013-08-06T09:54:11.807+05:30காபூலிவாலா: தூய அன்பின் நாயகன் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJVXTl331HzO-ibvXf8sPeATnMCOSlVCkMGp3jQuWbBLL72-zyCO7Ywjd7iYMuX9LIqvneiHD-6w2sUVxcpo9hMSY68idYN5eld89lJ0ccUboz_I9bYz8VG6u8qyKB8_FfcIF4f9CT8G4/s1600/vlcsnap-2013-08-05-21h02m21s1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJVXTl331HzO-ibvXf8sPeATnMCOSlVCkMGp3jQuWbBLL72-zyCO7Ywjd7iYMuX9LIqvneiHD-6w2sUVxcpo9hMSY68idYN5eld89lJ0ccUboz_I9bYz8VG6u8qyKB8_FfcIF4f9CT8G4/s320/vlcsnap-2013-08-05-21h02m21s1.png" width="320" /></a></div>
<div style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px;">
<span style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.727272033691406px; line-height: 15.454545021057129px; white-space: pre-wrap;">தெருவில் செல்லும் அந்நிய தேசத்து வியாபாரிகளை பார்க்கும்போது குழந்தைகளிடம் ஏற்படும் பிரமிப்பும் பயமும் பார்க்க அலாதியானவை. அந்த பயத்துக்கு எந்த அர்த்தமும் இல்லை என்று வளர்ந்தவர்களான நமக்கு தெரியும் என்பதால் குழந்தைகளின் பரபரப்பு ரசிக்க வைக்கும். இப்போதெல்லாம் தெருவில் குழந்தைகளை கவரும் பொருட்களை விற்றுச் செல்லும் வியாபாரிகளை காண்பதே அரிதாகி விட்டது. அந்த மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் பற்றி பெரிதாக தெரியாமல் அம்மனிதர்கள் எங்கிருந்தோ உதித்தவர்கள் என்ற எண்ணம் பெரியவர்களுக்கே இருக்கும். குழந்தைகளுக்கு கேட்கவா வேண்டும்? தன்னை ஒருநாள் சாக்கு மூட்டையில் கட்டி அந்நிய தேசத்தில் விற்க தான் அந்த மர்ம மனிதன் வந்திருக்கிறான் என்று மனதுக்குள் பயம் கொள்ளும் அதே சமயம் உலகின் பத்திரமான இடமான தன் வீடு அல்லது தெருவில் இருந்துகொண்டு அந்த விசித்திர மனிதனை நோட்டம் இடவும் குழந்தைகள் தயங்குவதில்லை. அப்படியான ஒரு தொலைதூர தேசத்து வணிகனின் கதை தான் 'காபூலிவாலா' !</span></div>
<div style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px;">
<span style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.727272033691406px; line-height: 15.454545021057129px; white-space: pre-wrap;"> வறண்ட மலைகளும் மண் கட்டிடங்களும் நிறைந்த ஆப்கானிஸ்தான் மூலையில் எங்கோ ஒரு கிராமத்தில் தன் செல்ல மகளை விட்டுப் பிரிந்து வந்து பிழைப்புக்காக நெரிசலான கல்கத்தா வீதிகளில் திரியும் காபுலிவாலாவின் கதை அது. ரவீந்திரநாத் தாகூர் முத்திரை பதித்த கதைகளில் ஒன்று .. கதை சொல்லியின் ஐந்து வயது மகள் மினி திறந்த தன் குட்டி வாயை மூடாமல் பேசிக்கொண்டே இருப்பவள். எழுத்தாளரான தன் </span><span style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 15.453125px; white-space: pre-wrap;">தந்தை</span><span style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.727272033691406px; line-height: 15.454545021057129px; white-space: pre-wrap;">யிடம் ஒரு கேள்வி கேட்டு அதற்கு பதில் வரும் முன்னரே அடுத்த கேள்வியை வீசுபவள். தன்னையொத்த குழந்தைகளை போலவே தெருவில் திரியும் வித்தியாசமான மனிதர்கள் மேல் ஒரு விசித்திரமான பயத்தை கொண்டவள். ஆப்கனில் தான் விட்டு வந்த தன் மகள் வயதுள்ள மினியை பார்த்ததும் பாசம் கொள்கிறான் காபுலிவாலா அப்துர் ரஹ்மான் கான். கதையின் நாயகர்கள் இவர்கள் தான்.
</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjYFyovzEdh_LGeu7SCu5_O3FyePIu2WBceuhjHOO_UPJDw5tklbei74f21GC55G6g171fM8HSxDhZKx5Febte6H1o07JeSaLn_qOkw6PQjIjbQblTRDZirWtgkYPWwLdZ3hgIl63lsBk/s1600/vlcsnap-2013-08-05-21h03m23s111.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjYFyovzEdh_LGeu7SCu5_O3FyePIu2WBceuhjHOO_UPJDw5tklbei74f21GC55G6g171fM8HSxDhZKx5Febte6H1o07JeSaLn_qOkw6PQjIjbQblTRDZirWtgkYPWwLdZ3hgIl63lsBk/s320/vlcsnap-2013-08-05-21h03m23s111.png" width="320" /></a></div>
<div style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px;">
<span style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.727272033691406px; line-height: 15.454545021057129px; white-space: pre-wrap;">மினியின் அம்மாவுக்கு எங்கே அம்மனிதன் தன் மகளை கடத்திச் சென்று விடுவானோ என்ற பயம். தாகூர் வார்த்தைகளிலேயே சொல்வதானால் "தெருவில் ஏதாவது உரத்த சத்தம் கேட்டால் இந்த உலகத்துக் குடிகாரர்கள் எல்லோரும் ஒன்று கூடி தன் வீட்டை நோக்கித் தான் ஓடிவருகிறார்கள் என்று கதி கலங்கிப் போகும் பயந்தாங்கொள்ளி !" எழுத்தாளரான மினியின் தந்தை காபூல்காரன் நல்ல மனிதன் என்பதை அறிந்தவர். தன் மகளுடனான அம்மனிதனின் நட்பையும் அவர்களது உரையாடல்களையும் ரசிப்பவர்.தான் சுமந்து செல்லும் மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்று ஆர்வத்துடன் கேட்கும் மினியிடம் ரஹ்மத் சொல்வான் "அதுவா மூட்டைக்குள் பெரிய யானையை அடைத்து வைத்திருக்கிறேன் !"</span></div>
<div style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px;">
<span style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.727272033691406px; line-height: 15.454545021057129px; white-space: pre-wrap;">நொடி தாமதிக்காமல் மினி சொல்வாள் " ஏமாற்றுக்காரா ..சின்ன மூட்டைக்குள் அவ்வளவு பெரிய யானை யை எப்படி அடைக்க முடியும்?"
"சின்னப் பொண்ணு.. நீ எப்போ மாமனார் வீட்டுக்கு போவே?"
"நீ எப்போ போவே காபூலிவாலா?"
"நானா ..நான் மாமனாரையே கொன்று போடுவேன்"
அக்குழந்தை இடி இடியென சிரிக்கும்.
பிழைப்புக்காக, தான் விற்கும் உலர்திராட்சை, பேரீச்சம் பழம் போன்றவற்றை தன் குட்டி சசிநேகிதிக்கு அன்பளிப்பாக தருவான் ரஹமத். அவற்றை தன் பாவாடையில் முடிந்து வைத்து பாதுகாப்பாள் அந்த குட்டி. அவளுடனான அந்த நட்பு ஊரில் உள்ள தன் மகளின் நினைவின் வலி மறக்க வைப்பதாக உணரும் ரஹமத் மிகவும் சந்தோஷமாக உணர்வான்.அப்பழுக்கற்ற அந்த நட்பில் எதிர்பாராத பிரிவு ஏற்பட்டு விடும். தன்னிடம் கடனுக்கு பொருட்கள் வாங்கிய உள்ளூர்காரன் கடன் வாங்கியதை மறுப்பதுடன் தன் குடும்பத்தை பற்றியும் தரக்குறைவாக பேசியதால் ஆத்திரமடைந்து அவனை கத்தியால் குத்திவிடுகிறான் ரஹமத். போலீஸ் அவன் கைகளில் விலங்கிட்டு அழைத்து செல்லும்போது மினியும் அவள் தந்தையும் அவனை கடைசி முறையாக சந்திப்பார்கள். அவ்வளவு தான். ஆறு வருடங்கள் கழித்து விடுதலையாகி வரும் ரஹமத் , மற்றொரு காபூல் வியாபாரி நண்பனிடம் கொஞ்சம் உலர்பழங்களை வாங்கிக் கொண்டு தன் சினேகிதியை பார்க்க வருவான். அந்தக் கால வழக்கப்படி சுமார் பனிரெண்டு வயதுள்ள மினிக்கு திருமணம் நடக்கும் நாள் அது. அவனை பார்த்து பரிதாபப்பட்டாலும் விசேஷ நாளில் அவன் வருகை ஒரு சங்கடத்தி உண்டுபண்ணிவிடும் என்று நினைக்கும் எழுத்தாளர், அப்புறமாக வரச் சொல்லி அவனை கேட்டுக்கொள்கிறார். உடைந்த மனதுடன் திரும்பிச் செல்லும் ரஹமத், எதோ நினைவு வந்தவனாக திரும்பி வந்து தன் அன்புப் பரிசை மினியிடம் கொடுக்குமாறு அவரிடம் கேட்கிறான். அந்த தூய அன்பை கண்டு நெகிழும் மினியின் தந்தை, உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி மினியை வரச் செய்து அவளது இளம்பிராயத்து நண்பனை சந்திக்க வைக்கிறார். சிறைத்தண்டனையின் கடுமையும் முதுமையும் மாற்றிவிட்ட தன் பரிதாபமான தோற்றத்தோடு அந்த இளம்பெண் முன் நிற்கிறான் ரஹமத். பழைய நண்பர்கள் இருவரும் காலத்தின் வலியை உணர்ந்து ஒருவர் எதிரில் ஒருவர் நிற்கின்றனர். "இப்போ நிஜமாவே மாமனார் வீட்டுக்கு போகப் போறியா ?" என்று ரஹமத் கேட்க, இளம் மணப்பெண் வெட்கத்துடன் வேறுதிசை பார்த்து நிற்கிறாள். ரஹமத்தின் அன்புக்கு பரிசாக தன் மகளின் திருமணத்துக்காக செலவிட வைத்திருந்த பணத்தின் ஒரு பகுதியை அவனுக்கு அளிக்க முடிவு செய்கிறார் எழுத்தாளர். எங்கோ தூர தேசத்தில் இருக்கும் தன் மகளை அவன் விரைவில் சந்திக்க தன்னாலான உதவியை செய்த திருப்தி அவருக்கு. அந்த தூய ஆத்மாவின் ஆசியே தன் மகளுக்கு போதுமானது என்று பூரிக்கிறார்.
இந்தக் கதையை வாசிக்காத இலக்கிய வாசகர்கள் இருக்க முடியாது. பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கதை அது.
காபூலிவாலாவின் கதை, பெங்காலியில் 1951இலும், ஹிந்தியில் 1961இலும் திரைப்படமாக வெளியானது. பிமல் ராய் தயாரிப்பில் ஹேமன் குப்தா இயக்கத்தில் வெளிவந்த ஹிந்தி படத்தை சில நாட்களுக்கு முன் பார்க்க நேர்ந்தது என் வாழ்நாள் பாக்கியங்களில் ஒன்று.
கதையில் வருவதை போல் அல்லாது, படம் ஆப்கானிய கிராமத்தில் ரஹமத்தின் வாழ்க்கைப் பின்னணியில் இருந்து தொடங்குகிறது. வயதான தாய், ஐந்தாறு வயதான தன் செல்ல மகளுடன் வசிக்கும் ரஹமத், கடன் தொல்லை நெருக்குவதால், வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க இந்தியாவுக்கு செல்வது என்று முடிவெடுக்கிறான். அன்னையை இழந்ததால் தந்தையின் மீது அதீத பாசத்துடன் இருக்கும் அவன் மகள் தன்னையும் இந்தியாவுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று அடம்.பிடிக்கிறாள். ஒரு நாள் அதிகாலையில், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் தன் மகளின் கைகளில் மை தடவி அதை ஒரு தாளில் பதிய வைத்து அதை பத்திரமாக மடித்து வைத்துக்கொள்ளும் ரஹமத், சந்தடியின்றி வெளியேறுகிறான். மகளின் கைவிரல்களின் அச்சு படிந்த அந்த காகிதம் தான் அவளை நினைவுபடுத்த அவனிடம் இருக்கும் ஒரே பொருள். தன் மகளை பிரிந்து செல்லும் அக்காட்சியில் இசைக்கும் சலில் சவுத்திரியின் இசை மனதை கனக்க செய்யும். கொல்கத்தாவில் தன்னை போன்ற மற்ற ஆப்கன் குடிமக்கள் தங்கியிருக்கும் அறையில் ரஹமத் தங்குகிறான். கதையில் இந்த விஷயம் சொல்லப்படுவதில்லை. அவன் மினியை சந்திக்கும் காட்சியும் கதையில் இருந்து வேறுபட்டது. கதையில் அவனை தன் வீட்டுக்குள் இருந்து சாலையில் செல்லும் ரஹமத்தை 'காபூலிவாலா!' என்று அழைப்பாள்.அவன் தன் வீட்டை நோக்கி வருவதை பார்த்ததும் குடுகுடுவென்று வீட்டுக்குள் ஓடி மறைந்து கொள்வாள். படத்தில் காபூளிவாலாவை மினி தெருவில் மிக அருகில் பார்ப்பாள். அவன் பேசத் தொடங்கியதும் பயந்து வீட்டுக்குள் ஓடி விடுவாள். இது போன்ற பல மாற்றங்கள் படத்தில்.
</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh20U-rzhKtKGey85LKcG7N8DYb08uTPMu01e0gEtg6norTJaw-_Ni58xj6ZHAOWokK5uG5lA-T12IvP7CGzlnBEBvFKG5Q8CrPUwU9dXzGzvKISydiW2Ivbjdlhfb3vfmMbDHPb7RDNlc/s1600/vlcsnap-2013-08-05-21h03m11s247.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh20U-rzhKtKGey85LKcG7N8DYb08uTPMu01e0gEtg6norTJaw-_Ni58xj6ZHAOWokK5uG5lA-T12IvP7CGzlnBEBvFKG5Q8CrPUwU9dXzGzvKISydiW2Ivbjdlhfb3vfmMbDHPb7RDNlc/s320/vlcsnap-2013-08-05-21h03m11s247.png" width="320" /></a></div>
<div style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px;">
<span style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.727272033691406px; line-height: 15.454545021057129px; white-space: pre-wrap;">ஆனால் கதையை படிக்கும்போது நம் மனதில் உருவகம் கொள்ளும் பாத்திரங்களை மிளிரச் செய்யும் நடிகர்கள் தான் மிகப்பெரிய பலம். நம் மனதில் குடுகுவென்று ஓடி அதே வேகத்தில் வார்த்தைகளையும் கொட்டி மழலையில் கொஞ்சும் குழந்தையாக பேபி ஃபரிதா. நெடுநெடுவென்ற உயரமும் அதை விட உயர்ந்த வெள்ளை மனதும் கொண்ட காபூலிவாலாக நடிகர் பால்ராஜ் சஹானியும். அவர்கள் இருவரும் உரையாடும் காட்சிகள் யார் மனதையும் இளக வைத்துவிடும். அத்தனை தேர்ந்த நடிப்பு அது. </span></div>
<div style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px;">
<span style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.727272033691406px; line-height: 15.454545021057129px; white-space: pre-wrap;">அதே போல் எழுத்தாளராக வரும் நடிகரும் நிறைவாக செய்திருப்பார். சிறுகதையை எப்படி திரைக்கதையாக மாற்ற வேண்டும் என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம். அதற்கு இயக்குனர் வெகு நேர்த்தியான முறையை கையாண்டிருக்கிறார். பாத்திரங்களின் தனிப்பட்ட குணாதியம்சங்கள், அவர்கள் வாழும் சூழல் போன்ற விஷயங்களை கதையை ஒட்டியே விஸ்தரித்தால் போதுமானது. அதை மிக அழகாக செய்திருக்கிறார்கள் படத்தின் திரைக்கதை எழுத்தாளர்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக வரும் பாத்திரங்களுக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. </span></div>
<div style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px;">
<span style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.727272033691406px; line-height: 15.454545021057129px; white-space: pre-wrap;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeXCPsVstP1lGW9KrakBzbpJLMYhSAoPv3Ivvf4xA8jefbfLRNlDlSc4_zQ_JlnZ6-wcNKSg_WXWnjUzugRJC81Z6ISM_QQ2wi_s_7RsH3GS3yZtOWZia4xf_r6gs1Oby5tRRXH_IHZT4/s1600/vlcsnap-2013-08-05-21h05m33s130.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeXCPsVstP1lGW9KrakBzbpJLMYhSAoPv3Ivvf4xA8jefbfLRNlDlSc4_zQ_JlnZ6-wcNKSg_WXWnjUzugRJC81Z6ISM_QQ2wi_s_7RsH3GS3yZtOWZia4xf_r6gs1Oby5tRRXH_IHZT4/s320/vlcsnap-2013-08-05-21h05m33s130.png" width="320" /></a></div>
<div style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px;">
<span style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.727272033691406px; line-height: 15.454545021057129px; white-space: pre-wrap;">குறிப்பாக கதையில் ஒரே வரியில் வரும் வீட்டு வேலைக்காரன் தான் படத்தின் நகைச்சுவை நடிகன். காபூலிவாலாவை பார்த்ததும் </span><span style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.727272033691406px; line-height: 15.454545021057129px; white-space: pre-wrap;">பயந்து நடுங்கி ஏற்கனவே பீதியில் இருக்கும் மினியின் அம்மாவை மேலும் கலவரப் படுத்திவிடுவான். </span></div>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.727272033691406px; line-height: 15.454545021057129px; white-space: pre-wrap;">எங்கே குழந்தையை காபூல்காரன் கடத்திவிடுவானோ என்று அஞ்சும் தாயின் சந்தேகம் மேலும் வலுவடையும் வகையில் ஒரு காட்சி படத்தில் உண்டு. கதையில் இல்லாதது. ரஹமத் வராததால் அவனைத் தேடி வீட்டை விட்டு வெளியே சென்று விடுவாள் மினி. </span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.727272033691406px; line-height: 15.454545021057129px; white-space: pre-wrap;">அவளது வழக்கமான மறைவிடமான தந்தையின் மேஜைக்கு அடியிலும் அவளை காணாத பெற்றோர் பதறிப் போய் தேடுவார்கள். தகவல் அறிந்த ரஹமத்தும் சாலையெங்கும் "மினி பாச்சே..மினி பாச்சே.." என்று கத்திக் கொண்டே தேடியலைவான். எங்குமே அவள் கிடைக்கமாட்டாள். களைத்துப் போய், ஒரு மண்டபத்தில் அமர்ந்திருக்கும் அவன் குழந்தை மழை நீரில் பாதி நனைந்து மண்டப படிக்கட்டின் அடியில் உறங்குவதை கண்டு பதறி அவளை தூக்குவான். அதற்குள் அங்கு கூடும் அறிவற்ற கூட்டம் அவன் குழந்தையை கடத்த முயன்றான் என கூறி அவனை கடுமையாக தாக்கும். அதைப் பார்த்து குழந்தை அழுவாள். அங்கு வரும் அவள் தந்தை உண்மையை உணர்ந்து கூட்டத்தை விலக்கி ரஹமத்திடம் மன்னிப்பு கேட்பார். பெருந்தன்மையுடன் அங்கிருந்து சென்று விடுவான் ரஹமத். அற்புதமான காட்சி அது. </span><br />
<div style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px;">
<span style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.727272033691406px; line-height: 15.454545021057129px; white-space: pre-wrap;">படத்துக்காக இயக்குனர் செய்த மாற்றம், ரஹமத் பாத்திரத்தை மேலும் வெகுளியாக காட்டியது. அது பொருத்தமாகவும் இருந்தது. ஏமாற்றிய வாடிக்கையாளனை கத்தியால் குத்தியதால் கைது செய்யப்பட்ட ரஹமத்தை காப்பாற்ற ஒரு வக்கீலை ஏற்பாடு செய்வார்கள் அவனுடன் தங்கி இருந்த மற்ற ஆப்கானியர்கள். நடந்த சம்பவத்தை அந்த வக்கீல் கோர்ட்டில் மாற்றி சொல்லும்போது பொய் சொல்ல விரும்பாத ரஹமத் தான் அம்மனிதனை கத்தியால் குத்தியதை ஒத்துக் கொள்வான். அவனது நேர்மையை கண்டு வியக்கும் நீதிபதி மரண தண்டனைக்கு பதிலாக பத்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கிறார். கதையில் இக்காட்சி இல்லை. அதே போல் கதையில் மினியின் தந்தையுடன் ரஷ்யர்கள் ஆங்கிலேயர்கள் மற்றும் அரசியல் பற்றியெல்லாம் பேசுகிறான் ரஹமத். கதையில் தன் முன்னே வந்து நிற்கும் இளம்பெண் தான் பத்து வருடங்களுக்கு முன் தான் பார்த்து நட்பு கொண்ட மினி என்பதை அறியாதவனாக இருக்கிறான். அவள் இன்னும் சிறு குழந்தையாகவே இருப்பாள் என்று நினைக்கும் அளவுக்கு அப்பாவியாக படத்தில் சித்தரிக்கப் படுகிறான்.
</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihig7Dgzgerv-b9FMkD5CLxzJHri8zQKX6Zp8ra8IQe4pGjxAQuidFl7-p4OE1WbJAQVkfCzjI3kQtKhG3oj1nh-tlBZXWuBO5h9ObqYlyGMtmbrdlNVVq_XMEGMCofEUFzU9jyzDHcLo/s1600/vlcsnap-2013-08-05-21h06m00s149.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihig7Dgzgerv-b9FMkD5CLxzJHri8zQKX6Zp8ra8IQe4pGjxAQuidFl7-p4OE1WbJAQVkfCzjI3kQtKhG3oj1nh-tlBZXWuBO5h9ObqYlyGMtmbrdlNVVq_XMEGMCofEUFzU9jyzDHcLo/s320/vlcsnap-2013-08-05-21h06m00s149.png" width="320" /></a></div>
<div style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px;">
<span style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.727272033691406px; line-height: 15.454545021057129px; white-space: pre-wrap;">படத்தின் நாயகன் வேடத்தில் நடித்த பால்ராஜ் சஹானியின் நடிப்பை பற்றி எழுத வார்த்தைகளே இல்லை. அத்தனை யதார்த்தம் அத்தனை உருக்கம். படத்துக்கு தன் இசையால் ஜீவன் அளித்திருக்கிறார் சலில் சவுத்ரி. புகழ் பெற்ற பாடலான "கங்கா ஆயே கஹான் ஸே " இடம்பெற்ற படம் இது. கதையை படித்தவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். படத்தை பார்க்காதவர்கள் முதலில் கதையை படித்து விட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். படத்தின் பல காட்சிகளில் என் மனைவி முன்னாலேயே தேம்பி அழுததை வெட்கமின்றி ஒத்துக் கொள்கிறேன். நீங்களும் அவ்வாறே செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...</span></div>
</div>
chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-39425143770294286852013-07-17T11:00:00.000+05:302013-07-17T11:03:28.227+05:30The lone ranger - இசை வழியும் சாகசம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQ0R4TDpZR7htzfbLVjPTyXM45HJLF5enctO6p8gXwdWRQ2liEBOfFB7qz07yn1lUs24hsoywaE-HpExnjrwOY6fzZ_jMLHiLrHd2uog90Dn0WC6Z1VFEMGxID7pRHB8f62kSXe8ZPvEg/s1600/johnny-depp-in-the-lone-ranger.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="212" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQ0R4TDpZR7htzfbLVjPTyXM45HJLF5enctO6p8gXwdWRQ2liEBOfFB7qz07yn1lUs24hsoywaE-HpExnjrwOY6fzZ_jMLHiLrHd2uog90Dn0WC6Z1VFEMGxID7pRHB8f62kSXe8ZPvEg/s320/johnny-depp-in-the-lone-ranger.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px;">அனல் காற்றும் கண்ணைக்கூசும் சூரிய ஒளியும் அலைந்து திரியும் அரவமற்ற வறண்ட மலைப்பகுதிகள். மஞ்சளும் பழுப்பும் அப்பிக்கிடக்கும் பிரதேசத்தில் புழுதி பறக்க விரையும் குதிரைகளின் மேல் அழுக்கு முகம், பரட்டை தலை கசங்கிய உடைகளுடன் பாய்ந்து செல்லும் மனிதர்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும் மரத்தாலான கட்டிடங்கள் கொண்ட அகன்ற தெருக்களில் நேருக்கு நேர் நின்று துப்பாகியால் சுட்டுக்கொண்டு பழிதீர்த்துக்கொள்ளும் வீரர்கள், கொலைகாரர்கள், வயதான கடைக்காரர்கள், </span><span style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px;"> ரயில் பாதை அமைக்கும் பணிக்காக அமேரிக்கா சென்ற சீனர்கள், அழகிய வேலைப்பா</span><span style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px;">டமைந்த கோச்சுகள் கொண்ட ரயில்கள், பழுப்பு நிலத்தில் விழும் தொப்பியின் நிழல், விலை மாதர்களின் பிதுங்கும் மார்பகங்கள் என்று நீளும் </span><span style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px;">western உலக பின்னணியில் வெளியான ஹாலிவுட் மற்றும் ஸ்பாகெட்டி வெஸ்டெர்ன் படங்கள் (இவ்வகை படங்கள் </span><span style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px;"> குறித்து தேசிய விருது வென்ற 'திரைச்சீலை' புத்தகத்தில் </span><span style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px;">ஜீவானந்தன் </span><span style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px;">விரி</span><wbr style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px;"></wbr><span style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px;">வாகவே எழுதியுள்ளார்) எத்தனை முறை எடுக்கப்பட்டாலும் பார்க்க சலிக்காதவை. அந்த வகையில் இந்த ஆண்டு இரண்டு முக்கியமான வெஸ்டேர்ன் திரைப்படங்கள் வெளிவந்தன. குவெண்டின் டாரண்டினோ இயக்கத்தில் </span><span style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px; text-align: start;">ஜாமி </span><span style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px;"> </span><span style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px; text-align: start;">ஃ</span><span style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px;">பாக்ஸ், </span><span style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px; text-align: start;">கிறிஸ்டோபர் </span><span style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px; text-align: start;">வால்ட்ஸ் </span><span style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px; text-align: start;"> </span><span style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px;">நடித்த </span><span style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px;"> Django Unchained மற்றும் தற்போது திரையரங்கங்களில் ஓடிக் கொண்டிருக்கும் The Lone Ranger. </span></div>
<div style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px; text-align: justify;">
படம் ரயிலில் துவங்கி ரயிலில் முடிகிறது. இடையில் கரடுமுரடான, மலை நிலங்கள், வெள்ளிக்கட்டிகள் கொண்ட நதிகள் என்று எங்கெங்கோ நம்மை கூட்டி செல்கிறது. ஆனால் இந்தப்பயணத்தில் லாஜிக் மூட்டைகளை இறக்கி வைத்து விட்டால் தான் நாம் மன பாரமின்றி படத்தை ரசிக்க முடியும். </div>
<div style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px; text-align: justify;">
1933ல் ஒரு பொருட்காட்சிக்கு செல்லும் சிறுவன் பழைய அமெரிக்கா பற்றிய கண்காட்சி கூடத்துக்கு செல்கிறான். அங்கு பாடம் செய்யப்பட்ட பைசன் உடல் போன்ற அதிசயங்களை கண்கள் விரிய பார்க்கும் சிறுவன், வருடங்கள் உடலில் வரைந்த கோடுகளுடன் தொண்டு கிழமான செவ்விந்திய சிலையை உற்று பார்க்கிறான். பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்த சிலையின் விழிகள் அசைகின்றன. சிறுவன் திடுக்கிடுகிறான். பின்னர் அம்மனிதனுடன் உரையாடத் துவங்குகிறான். தான் கேள்விப்பட்ட Lone Ranger பற்றி அறியும் ஆவல் கொண்ட அச்சிறுவனிடம், கிட்டத்தட்ட தொண்ணூறு வயதை தாண்டிய அந்த செவ்விந்தியன் உண்மையான அந்த ஒற்றை ரேஞ்சருடனனான தன் சாகசக் கதையை சொல்கிறான். கதை காட்சியாய் நம் கண் முன் விரிகிறது. ஜானி டெப் தான் அந்த செவ்விந்திய வயோதிகன். <span style="line-height: 1.54;">வினோதமான உடல்மொழிகளுடன், உடலில் தொங்கும் ஆபரணங்களும், முகத்தில் நிரந்தரமான வெண்ணிறப் பூச்சும், தலைக்கு மேல் இறக்கை விரிந்த நிலையில் இறந்த காகத்தின் உடலுமாக </span><span style="line-height: 1.54;">செவ்விந்தியராக ஜானி டெப்(ப்!) வாழ்ந்திருக்கிறார் , சற்று அம்மாஞ்சியான நேர்மை குணம் படைத்த இளம் வழக்கறிஞர் பாத்திரத்தில் ஆர்மீ ஹாமர். ரயிலில் கொண்டு செல்லப்படும் ஒரு பயங்கர குற்றவாளியை (</span><span style="background-color: #f9f9f9; color: black; font-family: sans-serif; font-size: 14.285714149475098px; line-height: 16.89285659790039px; text-align: center;">William Fichtner</span><span style="line-height: 1.54;">)</span><span style="line-height: 1.54;"> காப்பாற்ற குதிரையில் வரும் கொள்ளை கும்பல், வில்லனை வெற்றிகரமாக காப்பாற்றி செல்கிறது. அதை முறியடிக்க மற்றொரு கைதியான ஜானி டெப் முயன்றாலும் நேர்மை </span><span style="line-height: 1.54;">வழக்கறிஞர் சட்டப்படி எடுக்கும் நடவடிக்கையால் அது பிசுபிசுப்பதுடன், ரயில் பெட்டிகளில் இருந்து பிரிக்கப்படும் எஞ்சின் விபத்துக்குள்ளாகிறது. நம்பவே முடியாத வகையில் அவ்விபத்தில் இருந்து ஜானி டெப்பும் ஆர்மி ஹாமரும் தப்புகின்றனர்.</span></div>
<div style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px; text-align: justify;">
<span style="line-height: 1.54;">ரயில் கட்டுப்பாட்டை இழந்து நிற்க வேண்டிய ஸ்டேஷனில் நிற்காமல் ஓடுவதால் , தன் சகோதரன் ஆர்மீ ஹாமருக்காக காத்திருக்கும் அவரது அண்ணன் தலைமையிலான Ranger குழுவும், </span><span style="line-height: 1.54;">தறிகெட்டு ஓடும் ரயிலை தொடர்ந்து வந்து </span><span style="line-height: 1.54;"> அவர்களை மீட்கிறது. ஜானி டேப் சிறையில் அடைக்கப்படுகிறார். </span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgD6X3R_NADo54D7Gtw6_nqfV-eE2OdKTEzZDBDWo6KKJWXtrVZwqJGrd1B9_9Tl0z4_REdVYdKz2u69XeX-I5ikEwhfEgCNJCaakWbmNw1_Wtg4iQk6iz9Zi8UcgeaqUfIOVMOrq12YNY/s1600/lone2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="241" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgD6X3R_NADo54D7Gtw6_nqfV-eE2OdKTEzZDBDWo6KKJWXtrVZwqJGrd1B9_9Tl0z4_REdVYdKz2u69XeX-I5ikEwhfEgCNJCaakWbmNw1_Wtg4iQk6iz9Zi8UcgeaqUfIOVMOrq12YNY/s320/lone2.jpg" width="320" /></a></div>
<div style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px; text-align: justify;">
<span style="line-height: 1.54;">காவல் அலுவலகத்தில் தன்னை பார்க்க வரும் தன் அண்ணனின் மனைவியிடம் தனக்கு இருக்கும் அதீத அன்பை (காதல்!) ஆர்மீ காட்டுகிறார்.</span></div>
<div style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px; text-align: justify;">
<span style="line-height: 1.54;">ரேஞ்சர் அண்ணன் ஆர்மீயையும் தன் குழுவில் சேர்த்துக் கொள்கிறார். தப்பிச்சென்ற வில்லன் கும்பலை தேடி செல்லும் அக்குழுவில் உள்ள மூத்த ரேஞ்சர் ஒருவர் துரோகம் செய்ய, குன்றுகள் சூழ்ந்த இடத்தில வைத்து அக்குழுவை வில்லன் கும்பல் தீர்த்துக்கட்டுகிறது. ஆர்மீ யும் சுடப்படுகிறார். நீண்டநாள் பகையை பழிதீர்க்க வரும் வில்லன், குற்றுயிராய் கிடக்கும் ஆர்மீயின் அண்ணனின் இதயத்தை வெட்டி எடுத்து ருசிக்கிறார். அரைமயக்க நிலையில் அதை பார்க்கும் ஆர்மீ அதிர்ச்சியடைகிறார். இறந்த ரேஞ்சர் குழுவை வில்ல்லன் கும்பல் விட்டு செல்ல, சிறையில் இறந்து தப்பிய ஜானி டெப் அங்கு வந்து சேர்கிறார். இறந்தவர்களை புதைக்க ஏற்பாடு செய்கிறார். இறந்தவர்கள் உடையில் இருந்து தனக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வதுடன், பண்ட மாற்றாக தன்னிடம் உள்ள இறகு போன்ற பொருட்களை உடலில் வைக்கிறார்(படம் முழுவதும் இந்த பண்ட மாற்று காட்சிகளில் திரையரங்கில் உள்ளவர்களை சிரிப்பால் அதிரவைக்கிறார் டெப்!) கடைசியில் ஆர்மீ கண் விழித்து எழ முயற்சிக்க, என்னவோ ஏதோ என்று பயந்து 'பிணத்தை' அடித்து மீண்டும் படுக்க வைக்கிறார் டெப். அங்கு வந்து சேரும் (செவ்விந்தியரான டெப் பின் கணிப்பு படி ) அற்புத சக்தி கொண்ட வெள்ளை குதிரை, இறந்து போன ஆர்மீ மீண்டும் உயிர்பிழைத்ததாக டெப் புக்கு உணர்த்துகிறது. பிறகென்ன, அவரை காப்பாற்றும் டெப், வில்லன் கும்பலை அழிக்க நீதிமான் ஆர்மீ க்கு உதவுகிறார். இடையில் எக்கச்சக்க சண்டை காட்சிகள், சாகச நிகழ்ச்சிகள். </span></div>
<div style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px; text-align: justify;">
<span style="line-height: 1.54;">படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வியடைந்த படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்னைப் பொருத்தவரை, ஜானி டெப் பின் அட்டகாசமான நடிப்புக்காகவே இப்படம் குறைந்தபட்சம் ஹிட் அடிக்க வேண்டும். மனிதர் ரெண்டு நிமிடம் அசையாமல் நின்று கொண்டு உதட்டை பிதுக்கி கண்ணை சுருக்கினாலே அரங்கில் விசில் பறக்கிறது. பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் படத்தின் இயக்குனர் தான் இப்படத்துக்கும் இயக்குனர் என்பதால் இருவரின் கெமிஸ்ட்ரியும் நன்றாக வேலை செய்திருக்கிறது. பல காட்சிகளில் ஜானி டெப் எளிதாக ஸ்கோர் செய்கிறார். அவரது திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படம் இது. தனது முன்னோர்கள் செவ்விந்திய இனத்தை சார்ந்தவர்கள் என்பதால் இப்பாத்திரத்தில் அர்ப்பணிப்புடன் நடித்ருப்பதாக அவர் கூறியிருக்கிறார். அவர் பேசும் செவ்விந்திய பாஷை பிரமாதம் இல்லை என்றாலும் திரைக்கு போதுமானது என்று செவ்விந்திய பேராசிரியர் ஒருவர் கூறியிருக்கிறார். </span></div>
<div style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px; text-align: justify;">
<span style="line-height: 1.54;">படம் பல இடங்களில் முன்னோடி </span><span style="line-height: 1.54;"> </span><span style="line-height: 1.54;">வெஸ்டெர்ன் படங்களுக்கு tribute செய்திருக்கிறது. ஆற்று நீரில் நின்றுகொண்டு, டெப்பும் ஆர்மீயும் பாலத்துக்கு குண்டு வைக்கும் காட்சி , The Good, the bad and the ugly யில் வரும் காட்சியை நினைவுப்படுத்துகிறது. ரயில் பாதை அமைக்கும் காட்சிகள், Once upon a time in the west உள்ளிட்ட பல படங்களில் வரும். 1850 முதல் 1880 வரையிலான காலப் பின்னணி கொண்ட படங்கள் தான் வெஸ்டெர்ன் படங்களில் பெரும்பாலானவை. இப்படமும் அப்படியே. </span></div>
<div style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px; text-align: justify;">
<span style="line-height: 1.54;">படத்தின் பலவீனம் என்னவென்றால் அளவுக்கு மீறிய சாகச காட்சிகள் என்று தோன்றுகிறது. க்ளைமாக்சில் எந்த ரயிலில் யார் போகிறார் என்றே தெரியவில்லை. நம்ப முடியாத அளவிலான சாகசம். கொஞ்சம் நம்பும்படியாய் எடுத்திருந்தால் படம் நின்றிருக்கும். இப்படம் தோல்வி என்றாலும் 'அழகான தோல்வி' என்று தான் சொல்ல வேண்டும். காரணம் இசை. Hans Zimmer ஒவ்வொரு காட்சியையும் இசையால் மொழிபெயர்த்து கலக்கியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு Grand Symphony. நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள திரையரங்கில் பார்த்தால் கண்ணுக்கு மட்டும் அல்ல காதுக்கும் விருந்து தான். </span><span style="line-height: 1.54;">கதையை சிறுவனிடம் சொல்லி முடிக்கும் </span><span style="line-height: 1.54;">வயதான டெப், </span><span style="line-height: 1.54;">அகன்ற திரையில் </span><span style="line-height: 1.54;">End title credits மெல்ல ஊறி செல்ல, </span><span style="line-height: 1.54;">தடுமாறியபடி நடந்து சென்று மறையும் வரையில் நான் நின்று இசையை ரசித்துக்கொண்டு நின்றேன். The lone music lover!!</span></div>
<div style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px; text-align: justify;">
<span style="line-height: 1.54;"><br /></span></div>
<div style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px; text-align: justify;">
<span style="line-height: 1.54;"><br /></span></div>
<div style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px; text-align: justify;">
<span style="line-height: 1.54;"><br /></span></div>
<div style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px; text-align: justify;">
<span style="line-height: 1.54;"><br /></span></div>
<div style="background-color: white; color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px; text-align: justify;">
<span style="line-height: 1.54;"><br /></span></div>
</div>
chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-47646291501657291072013-01-05T10:56:00.001+05:302013-01-05T11:00:41.497+05:30கும்கி: அன்பைக் கொல்லும் காதல் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjw_hnvKkuwf2tVOJT4rBbjxVeImiEhnNMwuFTVxQU6Snuq0f3g7kNcvjWIRqVm7D-TOrBYOrPg8deIGT4v6vGOzGMvdqVvV3w-u7IBPTjriJbC_cfWTHIC9hZntuWYTWirO8y3Xym7jio/s1600/Kumki-Movie-Stills-151.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="222" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjw_hnvKkuwf2tVOJT4rBbjxVeImiEhnNMwuFTVxQU6Snuq0f3g7kNcvjWIRqVm7D-TOrBYOrPg8deIGT4v6vGOzGMvdqVvV3w-u7IBPTjriJbC_cfWTHIC9hZntuWYTWirO8y3Xym7jio/s400/Kumki-Movie-Stills-151.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிரமாண்டங்களின் மீது
மனிதனுக்கு பிரமிப்பும் அச்சமும் எப்போதும் உண்டு. அதை தொலைவில் இருந்து
ரசிக்கவும் அதன் ஆபத்திடம் இருந்து விலகி ஓடவும் மனிதன் என்றோ
கற்றுக்கொண்டு விட்டான். என்றாலும் அந்த பிரமாண்டங்களை தன் கட்டுக்குள்
கொண்டு வரவும் சிலருக்கு முடிந்திருக்கிறது. நிலத்தில் வாழும் உயிர்களில்
மிகப்பெரிய மிருகமான யானையை மையமாக வைத்து தேவர் பிலிம்ஸ் காலத்தில்
இருந்தே திரைப்படங்கள் வந்திருக்கின்றன. பாடலுக்கு ட்ரம்ஸ் வாசிக்கவும்
காதலுக்கு தூது செல்லவும் திரைப்படங்களில் பயன்பட்ட அந்த பெரும் விலங்கு
தொடர்பான உருப்படியான படங்கள் தமிழில் மிகக் குறைவு. ஆகட்டும்டா தம்பி
ராஜா என்று ஆரஞ்ச் கலர் கோட்டணிந்த எம்.ஜி.ஆர் குட்டிக்கரணமடிக்கும்
யானைகளை வழிநடத்திச் செல்லும் படங்களை பார்த்து வந்த தமிழ் ரசிகர்களின்
பார்வைக்கு காட்டு யானைகளை பழக்கவும் அவற்றிடம் இருந்து மனிதர்களை
காக்கவும் பழக்கப்பட்ட கும்கி யானையை வைத்து குறிப்பிடும்படியான படத்தை
தந்திருக்கிறார் பிரபு சாலமன். தலைப்பு தான் கும்கியே தவிர இந்த யானை
கும்கிக்கு மாற்றாக கூட்டி செல்லப்பட்ட குழந்தை யானை என்பது தான் கதையின்
சுவாரஸ்யம். யானைக்கும் சிவாஜி
குடும்பத்துக்கும் ஒரு தொடர்பு உள்ளது போலும். சிவாஜியின் அண்ணனான
வி.சி.கணேசனின் மகன் தரன் மன்றாயர் இயக்கிய எலி மை ஃப்ரெண்ட் (1992) என்ற
ஆங்கிலப்படம் யானையை
மையமாகக் கொண்டது என்பது கூடுதல் சுவாரஸ்யம். படம் பெரிதாகப்
பேசப்படவில்லை.கும்கி மூலம் அறிமுகமாயிருக்கும் சிவாஜியின் பேரனும்
பிரபுவின்
மகனுமான விக்ரம் பிரபுக்கு திரையுலகில் உறுதியான அடித்தளம் அமைக்கப்பட்டு
விட்டது. பிரபு சாலமன் கலந்து கொள்ளும் படம் தொடர்பான நிகழ்சிகளில்
நாயகனின் தந்தை பிரபுவும் கலந்துகொள்கிறார். தொலைபேசியில் வாழ்த்து
சொல்கிறார். குரலில் ஏக மகிழ்ச்சி அவருக்கு.<br />
<br />
படத்தின்
தொடக்கத்திலேயே யானைக்கும் நாயகனுக்கும் இருக்கும் பாசப்பிணைப்பை காட்டும்
வகையிலான காட்சி ஒன்றை வைக்கிறார் இயக்குனர். பாகனான நாயகனின் தாய்மாமன்
பழக்கப்படுத்திய படி கடைகளில் இருந்து சிப்ஸ் பாக்கேட்டுகளை யானை திருடுவதை
கண்டுபிடிக்கும் நாயகன் யானையிடம் கடும்கோபம் கொண்டு இனி ஒரு வாரத்துக்கு
தாய்மாமனே யானையைப் பார்த்துக் கொள்ளட்டும் என்று கோபத்துடன் அதை
நடுரோட்டில் விட்டுவிட்டு சென்று விடுகிறான். பாசம் உள்ள அந்த பிராணி அவனை
பின்தொடர்ந்து சாலையில் நடந்து வருகிறது. பாகன் இல்லாமல் தனியே வரும்
யானையைக் கண்டு பொதுமக்கள் பதறி ஓடுகிறார்கள் (யானை தாக்குதல்களுக்கு
புகழ்பெற்ற கேரளாவில் இந்த காட்சி நடைபெறுகிறது).கடைசியில் கோபத்தோடு
பேருந்தில் அமர்ந்திருக்கும் நாயகனிடம் யானை மன்னிப்பு கேட்கும் விதமாக
துதிக்கையால் அவனை வருடுகிறது. ஒரு வகையில் இந்தக் காட்சி விலங்குகள்
மனிதர்கள் மீது வைத்திருக்கும் பாசத்தை காட்டுவது போல் வடிவமைக்கப்பட்டு
இருந்தாலும் இத்தனை 'பொறுப்புடன்' ஒரு பாகன் நடந்துகொள்வானா என்ற தவிர்க்க
முடியாத கேள்வி எழுகிறது. இந்த காட்சியிலேயே இந்த உறுத்தல் ஆரம்பித்து
விடுகிறது. பின்னர் உரிய ஆவணங்கள் இல்லாமல் அதிகாரிகளுடன் யானை மாட்டிக்
கொண்ட போது உதவிய யானை ஏஜெண்ட், கொம்பன் யானையால் பாதிப்புக்கு உள்ளாகும்
கிராமத்துக்கு கும்கி யானை ஒன்றை ஏற்பாடு செய்து அது குறித்த நேரத்துக்கு
வரமுடியாமல் போக அவருக்கு உதவும் விதமாக நாயகன் தன் யானையை
அந்த மலைகிராமத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளிக்கிறான்.தற்காலிகமாகத்
தான். இரண்டு நாளில் உண்மையான கும்கி யானை வந்ததும் நாங்கள் (யானையோட
சேர்த்து நாங்க நாலு பேருங்க) அங்கிருந்து வெளியேறிவிடுவோம்
என்று ஏஜென்டிடம் சொல்கிறான். அங்கு சென்றதும் கதை மாற காதல் காரணமாக
அமைவது தான் படத்தின் முடிச்சு. <br />
<br />
யானையும் அது சார்ந்த மலைவனப் பகுதியும் பின்னணி என்பதால் படத்தின்
நம்பகத்தன்மை கூடிவிடுகிறது. கடுமையாக உழைத்திருக்கும்
தனது படக்குழுவினரின் துணையுடன் அதை செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்.
வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் பெண்களை கொம்பன் யானை தாக்கும்
காட்சி மிகச் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. படம் தொடக்கத்திலேயே
யானை சண்டை காட்சிகள் விஷூவல் எஃபெக்ட்ஸ் துணையுடன் உருவாக்கப்பட்டவை என்று
டைட்டலில் சொல்லிவிடுகிறார்கள். தொழில்நுட்பத் தவறுகளை தவிர்க்கும் விதமாக
காட்சிகளை இரவு நேரத்தில் நடைபெறுவதாகக் காட்டி யிருப்பது பிரபு
சாலமனுக்கு இருக்கும் புத்திசாலித்தனத்தைக்காட்டுகிறது. மலைகிராமத்தை
சேர்ந்த ஆதிகுடிகள் கொம்பனால் தாக்கப்பட்டு இறந்துபோன பெண்களை வேதனையுடன்
அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யும்போது அங்கு வரும் வனத்துறையினர் மற்றும்
அதிகாரிகள் யானை அபாயம் இருப்பதால் இங்கிருந்து காலி செய்யவேண்டியது தானே
என்று கேட்கும்போது ஆதிகுடிகளின் தலைவர் கேட்கும் கேள்வி நிதர்சனமானது."
நீங்கள் வனப்பகுதியில் கட்டிடங்களை கட்டி வைத்திருப்பதால் தான் யானைகள்
ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இதுவரை வன எல்லைக்கு வெளியில் வராத யானைகள்
ஊருக்குள் வருகின்றன என்றால் என்ன அர்த்தம்?" என்று அவர் கேட்கும் கேள்வி
திரைக்கும் வெளியே ஒலிக்க வேண்டிய முக்கியமானக் கேள்வி.
அதிகாரவர்க்கத்தின் செவிட்டு காதுகளுக்கு விழும்படி அறைந்து
கேட்கப்படவேண்டிய கேள்வி அது. ச. பாலமுருகனின் சோளகர் தொட்டி நினைவு தான்
வந்தது. நாவலில் தற்காப்புக்காக கரடி ஒன்றை கொன்று விட்டு பின்னர்
வனக்காவலர்கள் வலையில் சிக்காமல் இருக்க என்று கடன் வாங்கி அதற்காக வாழ்ந்த
இடத்தையே இழக்க நேரும் பரிதாபத்துக்கு உரிய வனக்குடியினர் போல் அல்லாது
இந்த ஊர் ஆதிகுடிகள் அரசு அதிகாரிகளை கடுமையாக எதிர்ப்பதாகக்
காட்டியிருப்பது உண்மையோ இல்லையோ ஒரு வகையில் ஆசுவாசமாக
இருக்கிறது. வனப்பகுதிகளில் வெறுமே சுற்றிக்கொண்டு இருக்கும் வனத்துறையினர்
கொம்பன் யானையை வைத்து ஆதிகுடிகளை மிரட்டுவது அதிகாரவர்க்கம் ஒன்றுமறியாத
பழங்குடியினரை ஏமாற்ற முயல்வதை தெளிவாகக் காட்டுகிறது.
என்றாலும் அதிகாரவர்க்கத்துக்கு<wbr></wbr>ம் அப்பாவிகளுக்கும் இடையிலான போராட்டம் இல்லை இந்தக் கதை. முன்பே சொன்னது போல் காதல் தான் மையம் படத்தில்.</div>
<div id=":2z7" style="text-align: justify;">
<br />
கொம்பன் யானையிடம் இருந்து கிராமத்தைக் காக்க வந்த கும்கி யானைக்
குழுவினருக்கு அதிகபட்ச மரியாதை காட்டுகிறார்கள் ஆதிகுடி மக்கள். அவர்கள்
காலில் சந்தனம் குங்குமம் வைத்து வணங்குகிறார்கள். தாங்கள் போலி கும்கிக்
குழு என்பதால் உள்ளுக்குள் சற்று கலங்கியபடியே இருக்கும் பாகன்களின்
தலைவனான நாயகன் தமிழ் சினிமா வழக்கப்படி ஒரு பெண்ணைப் பார்த்த முதல் நொடியே
காதலில் விழுவதாகக் காட்டியிருப்பது தான் படத்தின் மிகப்பெரிய உறுத்தல்.
அந்தப் பெண்ணை அடைவதற்காக தான் வளர்த்த யானை, தன் தாய்மாமன், உதவியாளன்
ஆகியோரின் உயிரை பணயம் வைக்க அந்த நொடியே முடிவெடுத்து விடுகிறான். ஆனால்
அந்த உறுத்தல் மீது தான் திரைக்கதையே கட்டமைக்கப் படுவதால் நாம் மேற்கொண்டு
ஒன்றும் சொல்வதற்கில்லை.<br />
<br />
கொம்பன் யானையின் தாக்குதலை நேரில் கண்டதால் யானையைக் கண்டாலே பயந்து
அலறும் நாயகி 'கும்கி' யானையைக் கண்டதும் பயந்து குளத்துக்குள் விழ அவளைக்
காப்பாற்ற நாயகனும் நீரில் விழ, தமிழ் சினிமாத்தனம் தன் தலையை விரித்துக்
காட்டுகிறது. "ய்யேஏஏ ...." என்று அடிவயிற்றில் இருந்து கத்துவதை பின்னணி
இசையாக மாற்றிய புண்ணியவான் யாரென்று தெரியவில்லை. காதல் வந்தால் எப்போதும்
இந்த "ய்யேஏஏ ...." தான். உடனே அரங்கில் காதல் உணர்வு திரையரங்கில் பரவத்
தொடங்குகிறது. துயரம் தான், வேறென்ன சொல்ல! உடுமலைப்பேட்டையில் ஒரு
சாதாரணத் திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்த்தேன். காலைகாட்சிக்கு
திரையரங்கம் நிரம்பி வழிந்தது. தொண்ணூறு சதவீதம் கல்லூரி மாணவர்கள். ஒரு
வரிசையில் ஐந்து ஜோடிகள் வேறு. எல்லோரும் மடியில் தங்கள் புத்தகப் பைகளை
வைத்திருந்தார்கள். காதல் உணர்வுக்குக் கேட்கவும் வேண்டுமா? நாயகன்
உண்மையான கும்கி யானையே வந்தாலும் இங்கிருந்து போகப்போவதில்லை என்று
சொல்லும்போது உடன் இருப்பவர்கள் பதறுகிறார்கள். தாய்மாமனான தம்பி ராமையா
கொம்பன் யானை வந்தால் இந்த கோவில் யானையை வைத்து எப்படி சமாளிப்பது என்று
கேட்கும்போது காதல் பித்தம் ஏறிய நாயகன் சொல்கிறான் "அந்தப் பொண்ண
பாத்தவுடன் நூறு யான வந்தாலும் அதை கையாலப் புடிச்சி இந்தப்பக்கம் ரெண்டு
அந்தப் பக்கம் ரெண்டுன்னு வீசிடலாம் போல இருக்கு"(எண்ணிக்கை கூட குறைய
இருக்கலாம்!) . உடனே அரங்கத்துக்குள் குதூகலக் கூச்சல். கொம்பன் யானை
வந்தால் பெரிய ஆபத்தாகி விடும் என்று சொல்லும் யாரிடமும் அந்தப் பெண்ணை
தான் தீவிரமாகக் காதலிப்பதாகவும் அவளுக்காக இங்கேயே இருக்கப்போவதாகவும்
சொல்கிறான் நாயகன். குறைந்தபட்சம் கும்கியா குமரியா என்று மனதுக்குள் ஒரு
சிறு போராட்டம் கூட நடப்பதில்லை அவனுள். பாலாவின் சேது திரைப்படம் வந்த
பின்னர் நாயகியை மிரட்டியாவது தங்கள் காதலை வெளிப்படுத்தும் நாயகர்கள்
தமிழ் சினிமாவில் அதிகரித்து விட்டார்கள். அதன் பாதிப்பு சமீப காலமாக
நடைபெறும் காதல் கொலைகளில் தெரிகிறது. தன்னை விரும்பாத காதலியைக் கொன்றே
விடுவது அல்லது ஆசிட் வீசி அவள் அழகை சிதைத்து விடுவது என்று தன்
'உள்ளுலகம்' சார்ந்து வெறிப்பிடித்து அலையும் இளைஞர்களை உருவாக்கியதில்
இதுபோன்ற படங்களுக்கு பங்கில்லாமல் இல்லை. முன்பெல்லாம் நாயகர்கள்
காதலியிடம் காதலை சொல்லி அவள் மறுத்து விட்டால் கலங்குவார்கள்.
காத்திருப்பார்கள். இப்போது டாஸ்மாக்கில் குடி. நடனக் குழுவினரிடம்
சேர்ந்து வெறி பிடித்த ஆட்டம். ஆறுதல் சொல்பவனை அடித்து விரட்டுவது என்று
'கொல வெறியுடன்' அலைகிறார்கள். திரைப்படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும்
இது தான் நடப்பு. இங்கே நாயகன் தன்னை நம்பி வாழ்பவர்களின் உயிருடன்
விளையாடுகிறான். <br />
<br />
படத்தில் யானைக்கும் நாயகனுக்குமான உறவு அருமையானதாக இருந்தாலும்
சிறுவயது முதல் இருவரும் சகோதரர்கள் போல் பழகி வந்தாலும் ஒரு பெண்ணுக்காக
அன்பான தன் யானையின் உயிரை பணயம் வைப்பது ஏன் என்ற கேள்விக்கு எந்த
விடையும் இல்லை. அதேபோல் வறுமை காரணமாக சற்று இழிவான குணம் கொண்ட தன்
தாய்மாமன் தலையில் யானை மீதிருந்து செருப்பை வேண்டுமென்றே தவற விடுவது<br />
என்ன மனநிலை என்று புரியவில்லை. தொடர்ந்து நாயகர்கள் இதுபோல்
சித்தரிக்கப்படுவது ஏன் என்பது புரியாத புதிர். இதெல்லாம் நகைச்சுவையா
என்ன? படத்தில் நாயகனை விடவும் அதிகம் பேசுவதும் இயக்குனரை விட அதிகம்
சிந்திப்பதும் தாய்மாமனாக வரும் தம்பி ராமையா தான். கிட்டத்தட்ட அறுபது
சதவீத காட்சிகளில் அவரது 'மைண்ட் வாய்ஸ்' ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதே
போல ஆதிகுடிகளைக் காணும்போது என்னவோ நரமாமிசப் பட்சிணிகளைக் கண்டது போல்
அவர் பதறுவது எரிச்சல். இத்தனைக்கும் அந்த மக்கள் போலியான இந்தக் குழுவினர்
மீது மிகுந்த மரியாதை காட்டுகிறார்கள். நம் சினிமாவில் திரைக்கதை என்பது
செழித்து வளராமல் போனதற்கு இது போன்ற அர்த்தமற்ற காட்சிகள் தான் காரணம்.
நாயகனின் காதலை கேலிசெய்யும் வசனங்கள், நாயகியை நாயகன் பார்த்துக்கொண்டே
நடப்பது, பிறகு ஒரு கட்டத்தில் நாயகியும் இவனைப் பார்த்துக்கொண்டே நடப்பது,
கடைசியில் இருவரும் சேர்ந்தாற்போல் எங்காவது நடப்பது என்றே காட்சிகளை
உருவாக்கி அறுபது சதவீத படத்தை நிறைத்து விடுகிறார்கள். கதைக்கு கால் பங்கு
கூட இடம் இருப்பதில்லை. இந்தப் படத்தில் சொல்லப்படவேண்டிய பல விஷயங்கள்
தவிர்க்கப்பட்டே விட்டன என்று சொல்லலாம். வெற்றியை குறிக்கோளாக கொண்டவர்கள்
மத்தியில் இத்தனை தூரம் கதை சொன்ன கருணைக்காக நாம் பிரபு சாலமனுக்கு நன்றி
சொல்ல வேண்டும். <br />
<br />
தார்மீக ரீதியாக நிறைய கேள்விகள் கேட்கலாம் என்றாலும் தர்க்க ரீதியாகப்
படத்தில் பெரிய குறைகள் இல்லை என்பது பாராட்டுக்குரிய விஷயம். நாயகனும்
நாயகியும் நெருங்கிப் பழகுவதை பெண்ணின் தந்தையான ஊர்த்தலைவரிடம் வனக்
காவலர்கள் சொல்லிவிட அதை அவர் அணுகும் விதம் அருமை. "வனக் காவலர்கள்
தவறுதலாக சொல்லிவிட்டார்கள். நீங்கள் அதை பொருட்படுத்த வேண்டாம்" என்று
நாயகனிடம் அவர் சொல்வது எதிர்பாராத அருமையான காட்சி. மேலும் முன்புபோலவே
நாயகனிடம் பேச வேண்டும் என்று தன் மகளிடம் அவர் சொல்வதும் உயர்வான விஷயம்.
எதிர்பாராத இந்த அன்புத் தாக்குதலால் நாயகன் தவித்து விடுகிறான். "என்னை
தாக்க வந்திருந்தால் கூட எதிர்த்திருப்பேன். என் மீதான நம்பிக்கையை என்
முன்னாலேயே வைத்து விட்டார் உன் தந்தை" என்று நாயகன் சொல்லும்போது
பிரம்பித்து விடுகிறோம். இந்தப் படத்தின் மிக முக்கியக் காட்சி இது தான்.
மனித உணர்வுகளைத் துல்லியமாக கணிக்க தெரிந்த ஒருவரால் தான் இப்படியான
காட்சியை அமைக்க முடியும். இருநூறு ஆண்டுகளாக வெளியாட்கள் யாரிடமும் திருமண
உறவு கொண்டிராத அதற்கு எந்த விதத்திலும் சம்மதிக்காத அந்த ஆதி குடி தலைவன்
புத்திசாலித்தனமாக அவர்கள் காதலை தவிர்க்கப் பார்க்கிறானா இல்லை
இயல்பாகவே அத்தனை தூரம் நல்லவனா என்பது சிந்திக்க வைக்கும் கேள்வி.<br />
<br />
அதே போல் கடைசி காட்சியில் கொம்பன் யானை தாக்க வரும்போது நாயகனின்
சாதுவான யானைக்கு சங்கிலியை அறுக்கும் வலிமை எப்படி வருகிறது என்ற
கேள்விக்கும் முன்பே பதில் வைத்திருக்கிறார் இயக்குனர். அந்த யானைக்கு சில
நாட்களாக மத நீர் வடியத் தொடங்கி விட்டது என்று காட்சி வைத்திருப்பது
தர்க்க ரீதியாக சரியான காட்சி. கொம்பன் யானை இவர்கள் தங்கியிருக்கும் அந்த
மரப் பரணை தாக்கும் காட்சியும் அதைத் தொடர்ந்து வரும் யானை சண்டைக்
காட்சியும் தமிழ் திரைப்படம் இதுவரை கண்டிராதது. புத்திசாலித்தனமாக அதையும்
இரவு நேரக் காட்சியாக வைத்து வெற்றிபெற்றிருக்கிறார் பிரபு சாலமன்.
படத்தின் நாயகனான விக்ரம் பிரபு பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாகவே
நடித்திருக்கிறார். நெடுநெடுவென்ற உயரமும் அம்பு போன்ற உடலும் பாகனுக்கு
நல்ல பொருத்தமாக இருக்கிறது. என்றாலும் அளவுக்கு மீறி விடைத்த நாசி மற்ற
படங்களில் உறுத்தலாகத் தெரிய வாய்ப்பு உண்டு. ஸ்ரீதேவி வழி சென்றால் ஜெயம்
நிச்சயம். நாயகி வழக்கம் போல் மிரள்கிறார், காதல் புரிகிறார், கண்ணீர்
வடிக்கிறார். இயல்பான அழகுடன் தமிழுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு நாயகி.
ஆதிகுடிகளின் தலைவர் மிக இயல்பாக நடித்திருக்கிறார். தொழில்நுட்பம் தான்
படத்தின் பலம். ஒளிப்பதிவாளர் சுகுமார் வனத்தின் அழகை அருவியின்
பிரமாண்டத்தை நம் கண்ணுக்கு அருகில் கொண்டு வந்திருக்கிறார்.
வனத்தின் கரும்பச்சை பின்னணியில் யானை மீதமர்ந்து நாயகன் வரும் காட்சியின்
கோணமும் ஒளியமைப்பும் மிகச் சிறப்பு. இமானின் இசையில் பாடல்கள் மிகப்பெரிய
வரவேற்பைப் பெற்றிருப்பதில் ஆச்சர்யம் இல்லை. அழகான வரிகளுடன் நிறைவான இசை
தந்திருக்கிறார். "சொய்..சொய்" பாடல் தொடங்கியவுடன் மாணவச் செல்வங்கள்
திரைக்கு அருகில் மேலேறி நடனமாடத் தொடங்க அவர்களை தியேட்டர்காரர்கள் அதட்டி
விரட்ட வேண்டி வந்தது.என்றாலும் பின்னணி இசை என்பதில் மவுனத்துக்கும்
முக்கியத்துவம் உண்டு என்பதை இமான் இன்னும் உணரவில்லை என்பது தெளிவாகத்
தெரிகிறது. மரங்கள் அடர்ந்த புள்ளினங்கள் நிறைந்த அந்த கானகத்தின் உண்மையான
சத்தம் ஒருமுறை கூட கேட்கவில்லை. எதற்கெடுத்தாலும் "ய்யே" என்ற
ஓலக்குரல். <br />
<br />
என்றாலும் தமிழில் நிலம் சார்ந்து வந்த படங்களில் முக்கியமானப் படம்
இது என்பதில் சந்தேகம் இல்லை. காதல் காதல் என்பதையும் தாண்டி கதை சொல்ல
முயற்சி செய்தால் இது போன்ற படங்களை மேலும் சிறப்புறச் செய்யலாம்.
இறுதியில் தன்னை நேசித்த அப்பாவி உயிர்களை இழந்து நாயகன் தவிக்கும்போது
தன் சுயநலம்
தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று புலம்பும்போது அந்த செய்தியைத்
தெரிந்துகொள்ள திரையரங்கில் யாரும் இல்லை. எல்லோரும் காதலைக் கையில்
பிடித்துக்கொண்டு வெளியேறி விடுகிறார்கள்.</div>
<div id=":2z7" style="text-align: justify;">
</div>
<div id=":2z7" style="text-align: justify;">
<br />
- காட்சிப்பிழை திரை இதழில் வெளியான கட்டுரை </div>
</div>
chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-33759276545999833542012-12-10T11:00:00.001+05:302012-12-10T11:03:06.766+05:30நாளைக்கு இறந்தவன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLHCoKKswyyOZsgb6GnH5Of7UQdW2vP8pa-JhNnAzeKOeQ6t_eqU2hGUBSpX17GjaIZVyS1lwQj9L4Zg0oEZgxhDUPRXddG09DWCwyu7Yfo86VvJ2MkDCs7ZsHywFwaOLcarv8nGwDYJE/s1600/307402_10150353040083750_46829671_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLHCoKKswyyOZsgb6GnH5Of7UQdW2vP8pa-JhNnAzeKOeQ6t_eqU2hGUBSpX17GjaIZVyS1lwQj9L4Zg0oEZgxhDUPRXddG09DWCwyu7Yfo86VvJ2MkDCs7ZsHywFwaOLcarv8nGwDYJE/s400/307402_10150353040083750_46829671_n.jpg" width="310" /></a></div>
<br />
<span style="background-color: white; font-size: x-small; line-height: 19px; text-align: justify;"></span><br />
<div>
சிலரைப் பார்க்கையில் அவர்கள் ஏதோ ஒருவகையில் தற்காலிகமானவர்கள் என்ற கணிப்பு வரத் தொடங்கியபோது ரமணனுக்கு பதிமூன்று வயது தான் ஆகியிருந்தது. தற்காலிகம் என்றால் வாழ்க்கையிலா, படிப்பிலா வேலையிலா என்று உறுதியாக அவனுக்குத் தெரியவில்லை. வெற்றியடைந்தவர்கள் தோல்வியடைந்தவர்கள் என்ற வித்தியாசமும் இல்லை. நண்பர்கள் தெரிந்தவர்கள் உறவினர்களில் யாரைப் பற்றியேனும் திடீரென்று இந்த நினைப்பு வரும். எதிர்பாராமல் ஏதாவது ஒரு கட்டத்தில் அவர்களுடனான தொடர்பு என்பதே சுத்தமாக இல்லாதபடி ஏதாவது நடக்கும். பின்னர் அவர்கள் அவன் வாழ்க்கையில் ஒரு போதும் திரும்ப வருவதே இல்லை. உள்ளுணர்வு சொல்லியபடியே விஷயங்கள் சிலருக்கு நடக்க ஆரம்பித்தப் பின் ரமணன் இந்த விஷயங்களைக் கவனிக்கத் தொடங்கினான். இன்னதென்று வெளியில் சொல்ல முடியாத விசித்திரமான அந்த நினைப்பு அவனை அலைக்கழிக்கத் தொடங்கியிருந்தது.</div>
<br />
உதாரணத்துக்கு பிரிட்டோ ஸார் பையன் லெனின். பார்ப்பதற்கு இழைத்து வைத்த பனைமரம் போல் இருப்பான். நல்ல உயரம். கருப்பு நிறமானாலும் அதில் ஒரு மின்மினுப்பு இருக்கும். பிரிட்டோ ஸார் ரமணன் படித்த நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர். அவரும் லெனினின் அம்மாவும் நல்ல குள்ளம். அப்படி கருப்பு ஒன்றும் இல்லை. இவன் மட்டும் எப்படி இப்படி இருக்கிறான் என்று தோன்றும். ரமணனுக்கு ஏழெட்டு வயது மூத்தவன். மெட்ராசில் காலேஜில் படித்துக்கொண்டிருந்தான். அறந்தாங்கி ஹவுசிங் யூனிட்டில் இருக்கும் தன் வீட்டுக்கு மாதத்துக்கு ஒரு முறையோ இரு முறையோ வருவான். இவர்கள் கிரிக்கெட் விளையாடுவதை வேடிக்கைப் பார்த்தபடி பம்ப் ரூம் படிக்கட்டில் அமர்ந்திருப்பான். ரமணனிடம் மட்டுமில்லாமல் அவன் நண்பர்களிடமும் நன்றாகப் பேசுவான். இதோவரைக்கும் கேள்விப்பட்டிராத புது விஷயங்கள் சொல்வான். வெளிநாட்டு செனட்டின் மணம் நிழல் காற்றுப் போல அவன் உடலைச் சுற்றிப் படர்ந்ந்திருப்பது போல இருக்கும். நேர்த்தியான உடை அணிவான். மிருதுவான வண்ணங்களில் அவன் அணியும் சட்டைகள் நிச்சயம் உள்ளூர் கடைகளிலோ மெட்ராசிலோ கூட கிடைக்க வாய்ப்பில்லை என்று ஷேக் சொல்வான். பிரிட்டோ சாரின் அண்ணன் கனடாவில் இருந்தார். அக்காவோ தங்கையோ,அப்பாவின் சிஸ்டர் என்று தான் லெனின் சொல்வான், பிரான்சில் இருந்ததால் வசதிக்குக் குறைவில்லாத குடும்பம். நன்றாகப் படித்தானா இல்லையா என்றெல்லாம் தெரியாது. மெட்ராசில் கல்லூரியில் கம்ப்யூட்டர் படித்துக்கொண்டிருந்தான் என்று மட்டும் தெரியும். அப்போது கம்ப்யூட்டர் பற்றிப் பாடப் புத்தகத்திலேயே படித்ததில்லை. கல்கண்டில் தான் இதுபோன்ற விஷயங்கள் வரும். லெனினின் சமவயது நண்பர்கள் யாரும் இவர்களோடுப் பழகுவதில்லை. அவர்கள் எப்போதும் தனிக் குழுவாகத் தான் இருப்பார்கள். லெனின் அவர்களோடு பேசினாலும் ரமணன் குழுவிடம் உரையாடுவதில் அதிக ஆர்வம் காட்டுவான்.<br />
<br />
சில நாட்களாகவே ஏனோ லெனின் இங்கே நீண்டநாள் இருக்க மாட்டான் என்றே ரமணனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. ஒன்று அவன் கனடாவுக்கோ ப்ரான்சுக்கோ சென்று விடுவான் அல்லது ஏதோ ஒரு விதத்தில் நிச்சயம் இங்கிருந்து நிரந்தரமாகப் போய் விடுவான் என்றே ஏனோ ரமணன் நினைக்கத் தொடங்கினான். நாட்கள் செல்லச் செல்ல லெனினைப் பார்க்கையில் அதே எண்ணம் ஓடுவதால் பெரும்பாலும் அவன் இருக்கும் நேரங்களில் விளையாடச் செல்லமாட்டான். திடீரென்று ஒரு நாள் லெனின் இறந்து விட்டான் என்று தகவல் வந்தது. மெட்ராசில் எங்கோ மோட்டார்சைக்கிளில் போகும்போது லாரி மோதி அந்த இடத்திலேயே இறந்திருந்தான். உடல் அறந்தாங்கிக்குக் கொண்டுவரப்படும்போது அதில் காயமே இல்லை. தூங்குகிறவன் போலிருந்தான். பெருங்குரலெடுத்து அவன் குடும்பம் கதறத் தொடங்கும்போது ரமணன் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினான். அது காலாண்டு விடுமுறை நேரம். வீட்டுக்கும் போக முடியாமல் கிரவுண்டுக்கும் செல்லாமல் எங்கெங்கோ நடந்துகொண்டிருந்தான். லெனின் நிரந்தரமாக எங்கோ சென்றுவிடப்போவதை முன்கூட்டியே தெரிந்துகொண்டும் யாரிடமும் அதைச் சொல்லாமல் இருந்தான் என்ற எண்ணம் அவனை உறுத்திக்கொண்டிருந்தது.<br />
<br />
ஒரு வாரத்துக்கு யாரிடமும் அதிகம் பேசாமல் இருந்தான். பின் கொஞ்சம் கொஞ்சமாக விளையாட்டில் மூழ்கிய பின்னர் சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தான். என்றாலும் கிரிக்கெட் விளையாடுகையில் பம்ப்ரூம் படிக்கட்டில் லெனின் அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வு இவனை ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது. விளையாட்டில் தடுமாறத் தொடங்கினான். அணியின் ஹிட்டரான அவன் பல முறை டக் அவுட் ஆனான். கேட்சுகளைத் தவற விட்டான். பம்ப் ரூம் பக்கம் பீல்டிங் செய்யவே மறுத்து விட்டான். கொஞ்சம் கொஞ்சமாக விளையாட வருவதைக் குறைத்துக் கொண்டு விட்டான். பள்ளி விட்டால் வீடு. உலகம் சுருங்கத் தொடங்கியது.<br />
<br />
படிப்பில் மட்டும் கவனம் சிதறவே இல்லை. பள்ளியின் முதல் மாணவன் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருந்தான். சில நாட்களில் இவனுக்குப் பெரும் விருப்பமான இங்கிலீஷ் டீச்சர் ரோஸ்லின் மேரி இனி இந்தப் பள்ளிக்கு வரமாட்டார் என்ற நினைப்பு வரத் தொடங்கியது. ஓரிரண்டு மாதங்களில் பட்டுக்கோட்டையில் தன் கணவன் வேலை பார்க்கும் பள்ளியிலேயே அவருக்கு மாற்றல் கிடைத்துப் போய்விட்டார். அந்த நேரத்தில் தான் சீனிவாசன் அந்தப் பள்ளிக்கு வந்து சேர்ந்தான். காலாண்டு முடிந்து அட்மிஷன் ஆன பையன் ரமணனுக்குத் தெரிந்து அவன் தான். அவன் அப்பா பி.டபிள்.யூ.டியில் எஞ்சினியர் .அடிக்கடி ஊர் மாறும் உத்தியோகம். மெட்ராஸ், ஊட்டி, கோயம்பத்தூர் என்று பல இடங்களில் ஆங்கில மீடியத்தில் படித்தவன். இந்த நேரத்தில் வேறெந்த பள்ளியிலும் அட்மிஷன் கிடைக்காததால் ரமணன் படிக்கும் அரசுப் பள்ளியிலேயே சேர்ந்தான் சீனிவாசன்.<br />
<br />
நல்ல நிறம். வெள்ளைச் சீருடையில் பொலிவாகத் தெரிவான். ரமணன் ட்யூஷன் படிக்கும் கிராண்ட் மாஸ்டர் ட்யூஷன் செண்டரிலேயே அவனும் சேர்ந்தான். வந்த சில நாட்களிலேயே பலர் அவனுக்குத் தோழர்களாகி விட்டனர். கவிதாவும் அவனிடம் அடிக்கடி சிரித்துப் பேசியது ரமணனுக்கு உறுத்தலாக இருந்தது.<br />
<br />
ஏழாம் வகுப்பிலிருந்து அவள் மீது ரமணன் மையல் கொண்டிருந்தான். அவளும் இவனிடம் சிரித்துப் பேசினாலும் ஒரு கட்டத்துக்கு மேல் நெருங்காமல் தள்ளி தான் இருந்தாள். நடுநிலைப் பள்ளியாதலால் எட்டாம் வகுப்புக்குப் பின்னர் இருவரும் வெவ்வேறு பள்ளிகளுக்குப் பிரிந்து விட்டார்கள். அவள் கேர்ல்ஸ் ஹை ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்தாள். ட்யூஷன் மட்டும் ஒரே இடத்தில். கடந்த சில மாதங்களாக அவளிடம் இருந்து சாதகமான சமிஞ்ஞைகள் வரத் தொடங்கியிருந்தன. அவள் வீடு இருக்கும் ப்ளாக்கின் எதிரே இருக்கும் திட்டில் ரமணன் அமர்ந்து அவள் வீட்டு ஜன்னலைப் பார்த்துக்கொண்டிருப்பான். முன்னரெல்லாம் திறக்காத ஜன்னல் இப்போது அடிக்கடித் திறந்தது. ஜன்னல் கம்பிகளூடே விவரிக்க முடியாத முகபாவனைகளோடு அவளும் இவனைப் பார்த்துக்கொண்டே இருப்பாள். இருவரும் வெளி இடங்களில் பேசிக்கொள்ளும்போது சகஜமாக இருந்தாலும் ஜன்னல் சந்திப்பில் முற்றிலும் புதிய நபர்களாய் இருந்தார்கள். முகக்குறிப்பும் சமிஞைகளும் இது வரை கற்பனை கூட செய்திராத பரவஸ் உணர்வை இருவருக்கும் தந்திருந்தது. உலகம் அவள் வீட்டு ஜன்னலை மையமாகக் கொண்டு சுற்றிக்கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. ஒரு மாதிரியான மயக்க நிலைக்கு ரமணன் போய்க்கொண்டிருந்தான். மற்றவர்கள் கவனிப்பதையும் கிண்டலடிப்பதையும் அவன் பொருட்படுத்தவில்லை.<br />
<br />
இந்த நேரத்தில் நந்தி போல் சீனி வந்து விட்டதாக ரமணன் உணர்ந்தான். கவிதா மட்டுமல்லாமல் அங்குப் படிக்கும் எல்லா பெண்களுமே சீனியிடம் பேசினார்கள். முன்பு அந்த இடத்தில் தான் மட்டுமே இருந்தது ரமணனுக்கு நினைவு வந்தபோது சீனி மேல் பகையை வளர்க்கதொடங்கினான். சீனியின் அப்பா அலுவலகத்திலேயே கவிதாவின் அப்பாவும் வேலை பார்த்ததால் இரு குடும்பத்துக்கும் இடையில் புது உறவுத் தொடங்க சீனி அவள் வீட்டுக்கு அடிக்கடி வர ஆரம்பித்தான். அவனுடன் சிரித்துப் பேசினாலும் ரமணனுக்கு ஜன்னல் தரிசனம் தர கவிதா தயங்கவில்லை. எப்படியாவது அவளிடம் தான் காதலைச் சொல்லி விட வேண்டும் என்று முன்பை விடப் பதற ஆரம்பித்தான். சீனி இவனிடமும் பேசினாலும் தான் எங்கோ வெளிநாட்டில் இருந்து வந்தவன் போலவே நடந்துகொண்டான். ரமணனின் நண்பர்களுக்கும் சீனி மீது ஆத்திரம் இருந்தது. ஒரே ஒரு விஷயம் தான் ரமணனுக்கு ஆதரவாக இருந்தது. சீனிக்கு படிப்பில் அவ்வளவுப் பிடிப்பில்லை. ஆங்கிலத்தில் மட்டும் மற்ற அனைவரை விடவும் நல்ல மதிப்பெண் எடுத்தாலும் மற்ற பாடங்களில் சுமாராக இருந்தான். இது தெரிந்ததும் ரமணனுக்கு கொஞ்சம் தைரியம் பிறந்துவிட்டது. நன்றாகப் படிக்காதப் பையன்களை பெண்கள் விரும்ப மாட்டார்கள் என்ற அனுபவ உண்மை அவனுக்குக் கைகொடுத்தது. சீனியிடம் பெண்கள் பேசுவதைக் குறைத்துக் கொண்டனர். அவன் மக்கு என்று ரமணன் ரகசியமாக தகவல் பரப்பி மகிழ்ந்தான்.<br />
<br />
சீனிக்கு இதுகுறித்து பெரிய கவலை இல்லாமல் இருப்பதை ஒருகட்டத்தில் அவன் கவனிக்க ஆரம்பித்தான். பணக்காரப் பையன் என்பதாலோ என்னவோ படிக்காவிட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தவன் போல் அசட்டையாகவே இருந்தான். அவன் நடவடிக்கைகளை உற்று நோக்கி வந்த ரமணன் லெனினைப் போல் இவனும் நிரந்தரமில்லாதவன் என்று தோன்ற ஆரம்பித்தது. ஏனோ ஒரு கட்டத்தில் அவன் விலகிச் சென்று விடுவான் என்று ரமணன் நம்ப ஆரம்பித்தான். ஒருவகையில் இது அவனுக்கு மகிழ்ச்சியையே கொடுத்தது. அவன் விலகி விடும் பட்சத்தில் கவிதாவின் கவனம் தன் மீது மட்டுமே இருக்கும் என்று நினைத்துக்கொண்டான்.<br />
<br />
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்தலில் எதிர்பார்த்தபடியே சீனி தோல்வியடைந்தான். நானூறுக்கும் மேல் மதிப்பெண் எடுத்த ரமணன் மீண்டும் கவனம் பெற்றான். கவிதாவிடம் இருந்து ஒருநாள் கடிதம் கிடைத்தது. தனிமைச் சந்திப்புகளில் முத்தம் பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு அவனிடம் கவிதா நெருங்கியிருந்தாள்.<br />
<br />
இவன் ப்ளஸ் ஒன் படித்துக்கொண்டிருக்கும்போது பள்ளி செல்லும் நேரங்களில் சில சமயம் சீனிவாசன் எதிர்ப்படுவான். முகத்தில் அதே அலட்சியபாவம். இவனிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு ஏதோ முக்கியமான வேலையைப் பாதியில் விட்டு வந்தவனைப் போல் சட்டென கிளம்பிவிடுவான். ரமணனுக்கு முன்பு போல் இவனிடம் கோபமோ பொறாமையோ இல்லை. சொல்லப்போனால் சீனி நிரந்தரமில்லாதவன் என்ற நினைப்பு சற்று வருத்தம் தந்தது. அசம்பாவிதம் ஏதும் நிகழக்கூடாது என்று நினைத்துக்கொண்டான். நல்லவேளையாக சீனியின் அப்பாவுக்கு விழுப்புரத்துக்கு ட்ரான்ஸ்பர் கிடைத்து அங்கு சென்று விட்டார்கள். அதற்கப்புறம் அறந்தாங்கிப் பக்கம் ஒரு முறைக் கூட அவன் வந்ததில்லை.<br />
<br />
கவிதாவுடனான ரமணனின் காதல் ஊர் முழுக்கத் தெரிந்துவிட்டது. தெருவுக்குள் ரமணன் தலை மறையும் சமயத்தில் எங்கிருந்தோ ஒரு குரல் 'கவிதா' என்று கத்தும். விஷயம் அவர்கள் பெற்றோர்களுக்கு மட்டும் தெரியாமல் எப்படி இருக்கும்? ஒரு கட்டத்தில் அவள் அப்பா இவனை சந்தித்து பொதுவாக அறிவுரை செய்வதுபோல் பேசிப்பார்த்தார். இவன் வீட்டிலும் கவிதாவைப் பற்றி இவன் இருக்கும் சமயத்தில் கடும் அர்ச்சனை நடக்கும். என்றாலும் இருவரும் எதையும் பொருட்படுத்தாமல் இருந்தனர். காதல் வேகத்தில் படிப்பில் கவனம் குறைந்ததை ரமணன் அவ்வளவாக கவனிக்கவில்லை. எத்ரிபாராத விதத்தில் ப்ளஸ் டூவில் எழுநூறு சொச்சம் மார்க் தான் எடுத்தான். கவிதா ஆயிரத்தைத் தாண்டியிருந்தாள். எப்படியும் அவளுக்கு மெடிக்கல் சீட் கிடைத்துவிடும் என்று பேசிக்கொண்டார்கள்.<br />
<br />
ரிசல்ட்டுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வருவதைக் குறைத்துக் கொண்டாள் கவிதா. அவளுக்கு மெடிக்கல் சீட் கிடைக்கக்கூடாது என்று கோவில்களில் முறையிடத் தொடங்கியிருந்தான் ரமணன். ஓரிரு முறை அவனைச் சந்தித்தாலும் இதற்கு முன் எதுவுமே நடக்காதது போலவும் தான் அவனுக்கு வெறும் தோழி தான் என்பது போலவும் பேசினாள் கவிதா. ஒரு கட்டத்தில் இவளும் நிரந்தரமில்லாதவள் என்று அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அவன் பதற்றமடையத் துவங்கி இருந்தான். ஒருவேளை அவள் மெடிக்கல் சீட் கிடைத்து சென்று விட்டால் கூடப் படிக்கும் எவன் கூடவோ அவள் பழகத் தொடங்கிவிடுவாள் என்ற எண்ணம் அவனை தாக்கத் தொடங்கியது.<br />
<br />
எப்படியாவது இம்ப்ரூவ்மென்ட் எழுதி நல்ல மார்க் எடுத்து தானும் மெடிக்கல் சீட் வாங்கிவிட வேண்டும் என்று முடிவு செய்தான். என்றாலும் என்ன காரணத்தினாலோ கவிதாவுக்கு மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை. என்ட்ரன்ஸ் எக்சாமில் மார்க் குறைவாக எடுத்துஎடுத்தால் கட் ஆப் குறைந்து அவளுக்கு மெடிக்கல் சீட் வாய்ப்பு பறிபோனது. விஷயம் தெரிந்த ரமணன் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனான். தன்னை உதாசீனப்படுதியவளுக்கு இது சரியான தண்டனை என்று நினைத்துக்கொண்டான். முகத்தில் ஒரு நிரந்தரப் புன்னகை குடியேறியது.<br />
<br />
கவிதாவுக்கு முன்பு விண்ணப்பித்திருந்த புதுக்கோட்டை அரசு கல்லூரியில் பாட்டனி சீட் கிடைத்தாலும் போக மாட்டேன் என்று அடம்பிடித்து விட்டாள். அவளால் அவமானத்தைத் தாங்க முடியவில்லை. அவள் வீட்டில் மேலும் வற்புறுத்தாமல் விட்டு விட்டனர்.<br />
<br />
திரும்பவும் கவிதா வீட்டு ஜன்னல் திறக்கத் தொடங்கியது. என்றாலும் ரமணன் அந்தத் திட்டில் ஒருபோதும் அமரவில்லை. புதுப்புது நண்பர்களுடன் அவன் ஊரெங்கும் சுற்றித் திரிந்தான். அவ்வப்போது புதுக்கோட்டைக்கு சென்று வெஸ்ட் தியேட்டரில் ஆங்கில ஆபாசப் படங்கள் பார்த்து வந்தான். பெண்களைப் பற்றிப் பேசக்கூடிய நண்பர்களிடம் நெருங்கினான். வாணி தியேட்டர் செல்லும் வழியில் உள்ள கட்டைச் சுவரொன்றின் மீது அவனை விடப் பெரியவயது ஆட்களுடன் உட்கார்ந்து ரமணன் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததாக அவன் அப்பாவிடம் சிலர் சொன்னார்கள்.<br />
<br />
அந்த நேரத்தில் தான் கிருஷ்ணன் ஸார் அவன் இருக்கும் ப்ளாக்கில் குடி வந்தார். கலெக்டர் ஆபீசில் பெரிய உத்தியோகம். அவர் மனைவி பட்டணத்தில் வளர்ந்தவள். நல்ல நீண்ட சுருள்முடியுடன் இடுப்பில் மடிப்புடன் வளைய வந்த அவளை ஹவுசிங் யூனிட்டின் கண்கள் வெறித்துக்கொண்டே இருந்தன. தொப்புள் சற்று தெரியும் வண்ணம் எடுப்பாக சேலை கட்டும் அவளை ரமணனும் கவனிக்காமல் இல்லை. என்றாலும் மனதின் ஒரு ஓரத்தில் இன்னும் கவிதா இருப்பதால் அவளைக் கண்டுகொள்ளாமல் இருந்தான். கிருஷ்ணன் ஸார் பல சமயம் ஆபீஸ் வேலைக்கென வெளியூர் சென்று விடுவார். ஒரு முறை வீட்டில் யாரும் இல்லாத போது கிருஷ்ணன் ஸார் மனைவி பழைய பேப்பர் இருக்கிறதா என்று கேட்டு ரமணன் வீட்டுக்கு வந்தாள். அதற்கு முன் அவ்வளவு கவர்ச்சிகரமானப் பெண்ணை அருகில் பார்திரார்த்த ரமணன் அவள் அங்கு இருந்த ஐந்து நிமிடத்துக்குள் அத்தனைப் பதற்றம் அடைந்தான். அவள் அவன் கை தொட்டுப் பேசியது அவனுக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.<br />
<br />
ஒரு முறை வடகரை முருகன் கோவில் தெப்பக் குலத்துக்கு அருகே சைக்கிளில் சென்ற போது பின்னாலேயே கவிதா சைக்கிள் மிதித்துக்கொண்டு வந்ததை கவனித்து நின்றான். நெருங்கி வந்த அவளின் கண்கள் கலங்கியிருந்தன. தன்னுடன் இனிமேல் பேசமாட்டானா என்று அவனிடம் கேட்டாள். தனக்கு எதிலும் பிடிப்பில்லை என்று அவளுக்கு பதில் சொன்னான் ரமணன். என்றாலும் தான் அவளை மறந்து விடவில்லை என்றான். அவள் திரும்பவும் வந்து பேசியதில் மகிழ்ச்சி என்றாலும் உடனே அவளுடன் பழகி விடக்கூடாது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான். மெடிக்கல் சீட் கிடைத்துத் தன்னை விட்டுப் பிரிய அவள் தயாராய் இருந்ததை அவன் மறக்கவில்லை. இன்னொரு நாள் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். அவன் போய் வெகு நேரம் வரை சைக்கிளின் ஹேண்டில்பாரை நிமிண்டியபடி கவிதா அங்கேயே நின்றுகொண்டிருந்தாள்.<br />
<br />
ஒரு நாள் அவன் அம்மா கோவிலுக்கு சென்று இருந்த சமயத்தில் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தாள் மெல்லிய நைட்டியுடன் கிர்சுஷ்ணன் ஸார் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் பார்வை இவனது சட்டை போடாத உடம்பின் மீது இருந்தது. வீட்டில் போரடித்ததால் ஏதேனும் பட கேசட்டுகள் கிடைக்குமா என்று கேட்டாள். தங்கள் வீட்டில் வி.சி.ஆரே இல்லை என்று ரமணன் சொன்ன போது ஆச்சரியத்துடன் சிரித்தவள் அதற்குப் பிறகும் போகாமல் நாற்காலியில் அமர்ந்துகொண்டாள். இந்த வயதில் என் படிக்காமல் இருக்கிறான் என்று உரிமையுடன் கண்டித்தாள். ரமணன் உள்ளே சென்று சட்டை போட்டு வருகையில் அவள் ஹாலின் சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இவனை அருகில் அழைத்து படங்களில் இருப்பவர்கள் யார் யாரேன்றுக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் கை இவன் தோள்பட்டை மீது இருந்தது. ரமணனுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் மெத்தென்ற அவள் உடல் அவன் மீது உராய்ந்தது பிடித்திருந்தது. சற்று நேரத்தில் அவள் அவன் உடலை அனைத்துக் கொண்டிருந்தாள். மயக்கத்துடன் அவள் இடுப்பை அவன் பிடிக்கையில் கிருஷ்ணன் ஸார் மனைவி அவன் உதட்டில் அழுந்த முத்தமிட்டாள். வெகு நேரம் கழித்து தான் அவர்கள் எழுந்தார்கள்.<br />
<br />
திரும்பவும் அவன் உதட்டில் அழுந்த முத்தமிடும் போகும் போது கதவு தட்டப்பட்டது. அவள் பதறாமல் அவனை மீண்டும் அணைத்து இன்னொரு முத்தம் தந்தாள். கதவைத் திறந்த போது வெளியே மாடிப் படிக்கட்டின் மேற்படியில் கைப்பிடி சுவரைப் பிடித்துக்கொண்டு கவிதா நின்று கொண்டிருந்தாள். கிருஷ்ணன் ஸார் மனைவி அவளிடம் 'நல்லா இருக்கியாம்மா?" என்று கேட்டு விட்டு சாவதானமாக மாடியேறிப் போய்விட்டாள். க���ிதா இவனைப் பார்க்காமல் வெளியில் எங்கோ பார்த்துகொண்டு நின்றாள்.பின் மெல்ல இறங்கி கீழே போய்விட்டாள். ரமணன் அவளை கூப்பிடவே இல்லை. ஒரு கையில் தாவணியின் நுனியைத் திருகிக் கொண்டே தன் ப்ளாக்குக்கு நடந்து செல்லும் அவளைப் பார்த்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தான். சுவாசத்தில் கிருஷ்ணன் ஸார் மனைவியின் அக்குள் வாசனை சுழன்றுகொண்டிருந்தது.<br />
<br />
அடுத்த நாள் எல்லோரும் வெளியில் சென்று விட்ட பகல் நேரத்தில் கவிதா உத்தரத்தில் தொங்கினாள். ரமணன் புதுக்கோட்டையில் படம் பார்த்து விட்டு வெளியில் வரும்போது அவசரமாக சென்று கொண்டிருந்த ராமையா விஷயத்தை சொன்னான். அழுது பிடித்து பேருந்தில் ஏறி ரமணன் ஊர் வருமுன்பே கவிதாவை எடுத்து விட்டிருந்தார்கள். போஸ்ட்மார்ட்டம் போலீஸ் பிரச்சனைகளை சமாளிக்க அவள் அப்பா யாரையோ பிடித்து ஏற்பாடு செய்து விட்டிருந்தார். ரமணன் சுடுகாட்டுக்கு சென்றபோது கவிதாவின் இதயம் பற்றி எரியத் தொடங்கி இருந்தது. அதன் பிறகு ரமணன் வீட்டில் தங்கிய நாட்கள் அரிதாகின. புதுக்கோட்டை, திருச்சி தஞ்சாவூர் என்று எங்கெங்கோ திரிந்துகொண்டிருந்தான். செலவுக்கு என்ன செய்கிறான் என்று யாருக்கும் புரியவில்லை. அவனுக்கு பாக்கெட் மணி தருவதை அவன் அப்பா எப்போதோ நிறுத்தியிருந்தார். சில வருடம் கழித்து அவன் சித்தப்பா அவனை மதுரையில் உள்ள தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தார். அவனுக்கு அங்கு ஒரு டெலிபோன் பூத் ஒன்று வைத்துத் தருவதாக சொன்னார். வீட்டில் சில சண்டைகள், அழுகைகள் அரங்கேறியப் பின் மதுரைக்கு பஸ் ஏறினான்.<br />
<br />
தினமும் சாப்பிட்டுவிட்டு மூன்று தெருக்கள் தள்ளி இருக்கும் அந்த பூத்துக்கு சைக்கிளில் செல்வான் ரமணன். காலை ஏழு மணிக்கு சென்றால் இரவு பத்துப் பத்தரை ஆகி விடும். மதியம் ரம்யா கேண்டீனில் சாப்பிட்டு விடுவான். சித்தப்பா கலெக்டர் ஆபீசில் இருந்து திரும்பும் வழியில் எப்போதாவது கடைக்கு வருவார். அதிகம் பேசமாட்டார். இவன் சிகரெட் பிடிப்பது தெரிந்தும் அதைப் பற்றி கேட்கமாட்டார்.ரமணன் பிறந்த சமயத்தில் தான் அவருக்கு வேலை கிடைத்தது. அதனால் இவன் மீது பிரியமாக இருப்பார். வேலை நேரம் அதிகம் இருந்தாலும் ரமணனுக்கு அந்த இடம் பிடித்தமானதாக இருந்தது. கடை குடியிருப்புப் பகுதியிலேயே இருந்தது. மூன்று தெருக்கள் சந்திக்கும் முனையில் பூத் இருந்ததால் நிறையப் பேர் போன் பேசவென்று வருவார்கள். வெளியூரில் வெளிநாட்டில் இருக்கும் உறவினர்களிடம் பேச நிறைய பெண்கள் வருவார்கள். நண்பகல் நேரங்களில் தெருக்களில் பெண்களே அதிகம் தென்படுவார்கள். கிருஷ்ணன் ஸார் மனைவியின் உடல் ஸ்பரிசம் தந்திருந்த மயக்கம் கொஞ்ச நாட்களாகவே தலை தூக்க ஆரம்பித்தது.அவனது மீசை தனது வளர்ச்சியில் முழுமை கண்டிருந்தது.<br />
<br />
வீட்டில் வேலை செய்து விட்டு வருவதால் உடை விலகுவதில் அவ்வளவாக கவனம் கொள்ளாத நடுத்தர வயது பெண்களின் உடல்களை அவர்கள் போன் பேசும்போது ரசிக்கத் தொடங்கினான். முக்கியமாக மகேஸ்வரி. மாநிறம் என்றாலும் நெடுநெடு வென்ற உயரமும் நிற்கும் மார்பகங்களும் அவள் வரும்போதெல்லாம் ரமணனை கிளர்ந்தெழச் செய்தன. அவள் கணவன் ரியாத்தில் இருந்தான். இரண்டு குழந்தைகள். பெரியவளுக்கு ரமணனை விட ஐந்தாறு வயது கம்மியாக இருக்கும். ரமணன் அவளிடம் கேலியாகப் பேசுவான். அவளும் அடிக்கடிக் கடைக்கு வர ஆரம்பித்தாள். தெருவில் ஆளில்லாத பகல் பொழுதொன்றில் அவள் போனில் பேசும்போது ஸ்டூலில் உக்கார்ந்து கொண்டு நின்று கொண்டிருக்கும் அவள் சேலைக்குள் கால் விட்டு அவள் கால்களை வருடினான். அவள் பேசி முடிக்கும் வரை வருடிக்கொண்டே இருந்தான். சில நாட்கள் கழித்து அவர்கள் இருவரும் தங்கம் தியேட்டரில் பாம்பே படம் பார்த்துக்கொண்டிருந்ததை அந்தத் தெருக்காரர் ஒருவர் பார்த்தார்.<br />
<br />
சித்தப்பாவுக்கு விஷயம் தெரிய பல நாட்கள் ஆகியிருந்தன. அதற்குள் அந்தத் தெருவில் உள்ள வி.ஏ.ஓ மனைவி பத்மா, மாட்டுத் தாவணி பஸ் ஸ்டாண்டில் பழக் கடை வைத்திருந்த பழனிச்சாமி மனைவி பிருந்தா ஆகியோரின் உடல் வாசனையை நடமாட்டம் இல்லாத பகல் நேரத்தில் அவர்கள் வீடுகளிலேயே நுகர்ந்து கொண்டிருந்தான் ரமணன். கடை அடிக்கடி பூட்டப்பட்டிருப்பதை பார்த்த தெருக்காரகள் அவன் சித்தப்பாவிடம் தகவல் சொன்னார்கள். அப்போதும் அவன் மீது அவர் சந்தேகப் படவில்லை. சுற்றித் திரிந்த வயசுப் பையன். எத்தனை நேரம் தான் கடையில் உட்கார்ந்துகொண்டிருக்க முடியும் என்று நினைத்தார். கடையில் இவனுக்கு உதவியாக சின்னப் பையன் ஒருவனை உட்கார வைத்தார். ரமணனுக்கு இது வசதியாகப் போய் விட்டது. பகல் வேலைகளில் ஏதாவது ஒரு வீட்டில் திமிறும் உடல்களிருந்து சேலைகளை அவன் அவிழ்த்துக் கொண்டிருந்தான். மெல்லிய உடல்களில் தன்னைப் புதைத்துக் கொள்ளும்போது மனதை அழுத்தும் பாரம் கரைந்து தன்னிலிருந்து இறங்கி வழிவது போல் உணர்ந்தான். வாழ்வில் இழந்தவைகளை அந்த ஸ்பரிசமும் கிசுகிசுப்பாக காதில் வருடும் காமக் குரல்களும் ஈடுகட்டுவது போல் இருந்தது. நிரந்தரம் தற்காலிகம் பற்றி மனதில் ஓடிக்கொண்டே இருக்கும் தர்க்கம் அந்தப் பெண்களின் அக்குள்களுக்குள் புதைந்து பல நாட்களாகி இருந்தன.<br />
<br />
ஒரு முறை பழனிச்சாமி கடையை அவசரமாகப் பூட்டி விட்டு ஏதோ வேலையாக வீட்டுக்கு வந்தபோது ரமணன் ஹாலில் சோபாவில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கு சற்று முன்னர் தான் பிருந்தா அவன் தலையை வருடி விட்டு குடிக்க ஏதாவது எடுத்து வர சமையலறை சென்றிருந்தாள். தன் கணவன் இவனிடம் ஏதோ கேட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவன் டி.வி மெக்கானிக் என்றும் தான் தான் அழைத்ததாகவும் பிருந்தா கூறினாள். என்றாலும் தன் வீட்டு சோபாவில் உட்கார்ந்து ஒரு பையன் டி.வி பார்த்துக் கொண்டிருந்ததை பழனிச்சாமியால் ஜீரணிக்க முடியவில்லை. இவனை வேறெங்கோ பார்த்தது போல் அவனுக்கு நினைவுக்கு வந்தது. கடைக்குத் திரும்பிய ரமணன் பதட்டத்துடன் அமர்ந்திருந்தான். அடிக்கடி வெளியே எழுந்து போய் சிகரெட் குடித்து வந்ததை கடைப் பையன் கவனித்துக் கொண்டிருந்தான். பழனிச்சாமி தன்னை சந்தேகமாகவும் ஆத்திரத்துடன் பார்த்தது ரமணனுக்கு திரும்பத் திரும்ப நினைவில் வந்து கொண்டிருந்தது.<br />
<br />
சித்தப்பாவிடம் ஊருக்கு சென்று கொஞ்சநாள் இருந்து விட்டு வருவதாகச் சொன்னான். அவர் மறுக்கவில்லை. அறந்தாங்கி வந்தபோது தன் வயதையொத்த யாரும் ஊரில் இல்லை என்று அறிந்துகொண்டான். பனிரெண்டாம் வகுப்பில் தவறிய அப்பாஸ், எப்போதோ படிப்பை விட்டு விட்ட சரவணன் போன்ற சிலர் மட்டும் உள்ளூரில் அங்கங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் எங்கெங்கோ படித்துகொண்டும் சிலர் வேலை கிடைத்து சென்று விட்டதையும் அவர்களின் பெற்றோர்கள் பீற்றிக்கொள்வதாக ரமணன் அம்மா அவனிடம் சொன்னாள். அவனும் நன்றாகப் படித்திருந்தால் நல்ல நிலைமைக்கு வந்திருக்கலாமே என்று அழுதாள். ரமணனுக்கு அங்கு இருக்கப் பிடிக்கவில்லை.<br />
<br />
கொஞ்ச நாட்களிலேயே மதுரைக்குக் கிளம்பி விட்டான். பஸ்ஸில் வரும் போது கொஞ்ச காலமாக நினைவுக்கு வராத அந்த எண்ணம் திரும்ப வந்தது. அந்த மதிய வெயில் பயணத்தின் போது வந்த அரைகுறைத் தூக்கத்தில் விசித்திரமான கனவுகள் வந்தன. தன்னை சார்ந்த யாரோ நிரந்தரமில்லாத நபர் என்ற நினைப்புத் திரும்பத் திரும்பத் தோன்றிக் கொண்டிருந்தது. அது யாரென்று சரியாக கணிக்க முடியவில்லை. முகம் வைக்கும் கறுப்புத் துணியால் போர்த்தப்பட்டிருந்த ஒரு உடல் மீது அம்மா புரண்டு அழுவது போல் கனவு வந்து திடுக்கிட்டு விழித்த போது பஸ் மதுரையை அடைந்திருந்தது. பஸ் நின்றதும் அது வரை உள்ளே வீசிக் கொண்டிருந்த காற்று நின்று சட்டென வெக்கை உறைந்தது.<br />
<br />
சித்தப்பாவுக்கு பிருந்தா விஷயம் தெரிந்து விட்டது போல இவனுக்குத் தோன்றியது. அவர் சரியாகப் பேசவில்லை. கடைக்கு வந்தால் வரவு செலவைக் கூட அந்தப் பையனிடமே கேட்டு விட்டு இவனிடம் சொல்லாமல் செல்ல ஆரம்பித்தார். என்றாலும் அவர் வீட்டில் அவனுக்கான இடம் அப்படியே தான் இருந்தது. காலையிலும் இரவிலும் வழக்கம் போலவே அவனுக்கு சாப்பாடு போட்டாள் சித்தி. அவனிடம் முகம் கோணி யாரும் பேசவில்லை. என்றாலும் சித்தப்பா முன்பு போல் இவனிடம் பேசவில்லை என்பது உறுத்த ஆரம்பித்தது.<br />
<br />
இறக்கங்களில் மிதிக்கமலேயே சுழன்று ஓடும் சைக்கிள் சக்கரங்களைப் போல் தன்னிச்சையாக இயங்கிக்கொண்டிருந்தான் ரமணன். முன்பு போல் கடைக்கு செல்வதில்லை. கடைக்கு வந்தாலும் வெளியில் வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டு எங்காவது சென்று விடுவான். அதிகம் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உட்கார்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பான். நிரந்தரமில்லாமல் போய் விடவிருக்கும் தன்னை சார்ந்த ஆள் யாரென்று அவனுக்கு குழப்பமாக இருந்தது. தன் நண்பர்களில் யாரும் அத்தனை எளிதாக தோற்று விடக் கூடியவர்கள் இல்லை என்று நினைத்துக்கொண்டான். அவன் அப்பா அரசு ஊழியர். கண்டிப்பானவர் அவர் அவ்வளவு சீக்கிரம் அறுந்து விடக்கூடிய அளவுக்கு நூலிழைத் தொடர்பா அவருடன் என்று தோன்றும். அவராக இருக்க வாய்ப்பில்லை என்று சமாதனம் செய்துகொண்டான். தான் சிறுவனாக இருந்தபோது என்ன கேட்டாலும் வாங்கித் தந்த அப்பாவைப் பல வகைகளில் ஏமாற்றியதாகக் குற்றவுணர்வு கொண்டான்.பல வருடம் கழித்து அவர் மீது பாசம் தோன்றியது.<br />
<br />
திரும்பி வரும்போது நகரப் பேருந்தில் நெரிசலாக இருந்தது. நடுத்தர வயது பெண் ஒருத்தி இவன் பக்கத்தில் வந்து நின்றாள். பேருந்து ஓட்டத்தில் ப்ரேக் பல முறை விழ அவன் அவள் உடல் அருகில் நெருங்கியிருந்தான். மெல்ல அவளுக்குத் தெரியாதவண்ணம் உரசிக்கொண்டே வந்தாலும் அவள் ஒன்றும் செய்யாதவளாக நின்றுகொண்டே இருந்தாள். மெல்ல தைரியம் வரப்பெற்று உடலோடு ஒட்டினான். பஸ்சின் இயக்கமும் குலுங்கலும் இவனுக்கு சாதகமாக அவன் மேலும் அவளை நெருக்கினான். அந்தப் பெண் முகத்தை முந்தானையால் அடிக்கடித் துடைத்துக் கொண்டாலும் அங்கிருந்து நகரவில்லை. ஒரு நிறுத்தத்தில் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் அவள் இறங்கி சென்று விட்டாள். ரமணனுக்கு சுகத்தின் மெல்லிழை சட்டென அறுந்தது போல் இருந்தது. அவன் உடலெங்கும் அதிர்ந்தது. கிருஷ்ணன் ஸார் மனைவியிலிருந்து பிருந்தா வரை அவனுக்கு நினைவுக்கு வந்தார்கள். பஸ்ஸில் இருந்து இறங்கியதும் நேரே பிருந்தா வீட்டுப் பக்கம் சென்று பார்த்தான். மணி மூன்றரை ஆகியிருந்தது.<br />
<br />
வீட்டில் யாரும் இல்லாதது போல் இருந்தது. உள்பக்கம் தாழிடப்பட்ட கதவைத் தட்டினான். உள்ளிருந்து பதில் இல்லை. உடல் எப்போதும் இல்லாதவாறு நடுங்கிக் கொண்டு இருந்தது. ஏதோ முடிவுடன் திரும்ப செல்ல மனமின்றி அங்கேயே நின்றுகொண்டிருந்தான். திரும்பவும் தட்டினான். சில நிமிடங்களில் தூங்கி எழுந்த முகத்துடன் பிருந்தா கதவைத் திறந்தாள். அவனை உள்ளே வரச் சொன்னாள். கதவை சாத்தியதும் அவளைக் கட்டியணைத்தான். தன் கணவன் வெளியூர் சென்றிருப்பதாகவும் பல முறை அவனை அழைக்க கடைக்கு வந்தும் அவன் அங்கு இல்லை என்று அவள் சொன்னாள். அவன் முகமெங்கும் முத்தமிட்டு சரிந்தாள்.ரமணன் அவள் உடல் மீது வெறியுடன் இயங்கத் தொடங்கினான்.<br />
<br />
திடீரென்று கதவை யாரோ வேகமாகத் தட்டும் சத்தம் கேட்டது. தன் செருப்பை வீட்டுக்கு வெளியே விட்டு வந்ததது நினைவுக்கு வர ரமணனுக்கு உடல் பதறியது. சட்டென எழுந்து உடைகளைப் பொறுக்கினான். பிருந்தா உதட்டில் கைவைத்து பேசாமலிருக்கும்படி சைகை காட்டினாள். பழனிச்சாமி 'கதவைத் திற பிருந்தா' என்று கத்தினான். ரமணனுக்கு உடல் நடுங்கத் தொடங்கியது. பின்புற வழியே சென்றால் பின் வீட்டுக் காரர்கள் யாரேனும் பார்த்து விட வாய்ப்ப்பிருக்கிறது. என்ன செய்வது என்று இருவரும் நின்றுகொண்டிருக்கையில் தாழ்ப்பாளை உடைத்துக்கொண்டு உள்ளே வந்தான் பழனிச்சாமி. திடீரென்று நெருப்பின் பிழம்பு இருட்டில் எறிவது போல் ரமணனுக்குத் தோன்றியது. பழனிச்சாமி கையில் பெரிய தடி ஒன்று இருந்தது. அவன் உள்ளே நுழைந்ததும் அலறிக்கொண்டு பிருந்தா கதவருகில் ஓடினாள். ரமணனுக்கு இது கனவாக இருக்கக் கூடாதா என்று தோன்றியது. கால்கள் கட்டுண்டு விட்டதைப் போல் நகர முடியாமல் ஸ்தம்பித்து நின்றான். பழனிசாமி பிருந்தாவை ஓங்கி உதைத்துத் தள்ளிவிட்டு இவனருகில் வந்து நின்றான். காண நேரம் இவனைப் பார்க்கையில் அவன் கண்களில் ஓடிய ரத்த வரிகள் துடித்தது ரமணனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவன் கட்டையை ஓங்கி ரமணன் தலையில் அடித்தான். தடுக்க தூக்கிய கைகளில் அடி விழுந்துகொண்டே இருந்தது. தலையில் இருந்து ரத்தம் வழிந்து அவன் முகம் சிகப்பாகி கீழே விழும்வரை அடித்துக்கொண்டே இருந்தான். உடலில் அசைவு நிற்கும் வரை அடித்துவிட்டு அவனை காலால் புரட்டிப்போட்டான் பழனிச்சாமி. வழிந்து சென்ற ரத்தம் கட்டில் காலை சுற்றி சற்றுத் தேங்கி பின் மேலும் பரவிக் கதவை நோக்கி சென்றுகொண்டிருந்தது.<br />
<br />
தன் நினைவில் சமீப காலமாக வந்து கொண்டிருந்த நிரந்தரமில்லாத நபர் தான் தான் என்பதை உணர்ந்துகொள்ளும் முன்னரே இறந்து விட்ட ரமணனுக்கு அப்போது இருபத்தி மூன்று வயது தான் ஆகியிருந்தது.<br />
<br />
<br />
<b>-<a href="http://www.vallinam.com.my/issue47/story1.html">வல்லினம் இணைய இதழில்</a> வெளியான சிறுகதை</b></div>
chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-32067834264948446482012-11-14T08:12:00.001+05:302012-11-14T08:12:16.986+05:30'தழும்புள்ள மனிதன் '-மொழிபெயர்ப்பு சிறுகதை <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<b style="font-size: 12.727272033691406px;"><br /></b></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgD0uRV_9_QBBzbAFtr-tDfrdJO3GPk8vOk5KAqub__J0yBQLFytrFZo9NJCfU5_0Jc-z90W-FkYIqnAD9ofFVvGmh2jsNTx2wW9tfxiwFDOj-2fLFm1SditSEs520HtpgRlW6QwjivZjY/s1600/289346_10150304095563750_2260931_o.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgD0uRV_9_QBBzbAFtr-tDfrdJO3GPk8vOk5KAqub__J0yBQLFytrFZo9NJCfU5_0Jc-z90W-FkYIqnAD9ofFVvGmh2jsNTx2wW9tfxiwFDOj-2fLFm1SditSEs520HtpgRlW6QwjivZjY/s400/289346_10150304095563750_2260931_o.jpg" width="300" /></a></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<b style="font-size: 12.727272033691406px;"><br /></b></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<b style="font-size: 12.727272033691406px;"><br /></b></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<b style="font-size: 12.727272033691406px;">(</b><span style="background-color: transparent; font-family: arial; font-size: x-small;">பள்ளிநாட்களில் துணைப்பாட நூலில் படித்த இந்தக் கதை மனதில் பதிந்துவிட்டது. என்னால் முடிந்தவரை மொழிபெயர்த்திருக்கிறேன்.)</span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<b style="font-size: 12.727272033691406px;"><br /></b></div>
<div style="background-color: white;">
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: x-small;"><b>'தழும்புள்ள மனிதன் '</b></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<b style="font-size: 12.727272033691406px;">சாமர்செட் மாம்</b></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<b>தமிழில்: வெ.சந்திரமோகன் </b></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
பெரிய பிறைப் போல நெற்றியின் ஓரத்திலிருந்து தாவாங்கட்டை வரை ஓடிய பெரிய சிவப்புத் தழும்பு தான் அவனை கவனிக்கச் செய்தது. கடுமையான காயம் ஒன்று தான் இந்தத் தழும்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஒரு பட்டாக் கத்தி அல்லது செல்லின் ஒரு துண்டாக இருக்கக்கூடும். வட்டவடிவமான, பெருத்த, நல்ல சிரிப்புடன் கூடிய முகத்துக்கு அது பொருத்தமாயில்லை. சிறிய, கவனம் ஈர்க்காத தன்மைகளுடன் அவன் இருந்தான். கபடமில்லாத முகக் குறிப்பு. </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
அவனது பெருத்த உடலுக்கு அந்த முகம் பொருந்தாமல் தோன்றியது. நல்ல வலுவான மனிதனாக அசாதாரண உயரத்தோடு இருந்தான். கந்தலான சாம்பல் சூட், ஒரு காக்கி சட்டை மற்றும் நைந்து போன சொம்ப்ரேரோ தவிர வேறெதையும் அவன் அணிந்து நான் பார்த்ததில்லை. சுத்தத்துக்கும் அவனுக்கும் நெடுந்தொலைவு இருக்கும். ஒவ்வொரு நாளும் கவுதமாலா நகரத்தின் பேலஸ் ஹோட்டலுக்கு காக்டெயில் நேரத்துக்கு அவன் வருவான். பாரை சுற்றி அமைதியாக உலாத்திக்கொண்டு லாட்ட்டறி டிக்கெட்டுகளை விற்பான். </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
ஒருவேளை இது தான் அவனுக்கு வாழ்வாதாரம் என்றால் நிச்சயம் அவன் ஏழையாகத் தான் இருக்க முடியும். ஏனென்றால் ஒருவரும் அவனிடம் லாட்டரி டிக்கெட் வாங்கி நான் பார்த்ததேயில்லை. என்றாலும் அவ்வப்போது அவனுக்கு குடிக்க மது தருவதைப் பார்த்திருக்கிறேன். அவன் ஒருபோதும் மறுத்ததே இல்லை. ஏதோ நீண்ட தூரம் நடக்கப் பழப்பட்டவன் போல் ஒரு சுழலும் நடையுடன் ஒவ்வொரு மேஜையாகக் கடப்பான். தன்னிடம் இருக்கும் லாட்டரியின் எண்களை ஒரு புன்னகையுடன் சொல்லிக்கொண்டே செல்வான். ஒருவரும் வாங்கவில்லைஎன்றாலும் அதே புன்னகையுடனே கடந்துபோவான். அற்பக் குடிக்காக தான் அவன் அலைகிறான் என்று நினைத்தேன்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
ஒரு மாலை நேரத்தில் நான் அந்த பாரில் பழகிய நண்பர் ஒருவருடன் நின்றுகொண்டிருந்தேன். நல்ல வறுத்த மார்டினி அந்த கௌதமாலா நகர் பேலஸ் ஹோட்டலில் கிடைக்கும். அப்போது அந்த தழும்புடைய மனிதன் அங்கு வந்தான். அவனது லாட்டரி சீட்டு வேண்டாம் என்று நான் இருபதாவது முறையாக நான் தலையை அசைத்து மறுத்தேன். ஆனால் என் நண்பர் இணக்கமாக தலையசைத்தார். </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
'குவா டால், ஜெனெரல்? வாழ்க்கை எப்படிப் போகிறது?'</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
' ஒன்றும் மோசமில்லை. வியாபாரம் ஒன்றும் பெரிதாக இல்லை. என்றாலும் மோசம் ஒன்றுமில்லை' </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
'என்ன குடிப்பீர்கள், ஜெனெரல்?'</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
'பிராந்தி.'</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
அதை குடித்துவிட்டு கிளாசை பாரின் மீது திரும்ப வைத்தான். எனது நண்பரைப் பார்த்து தலையசைத்தான். 'கிரேஷியஸ். ஹாச்டா லியூகோ'</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
பிறகு திரும்பி எங்களுக்கு அடுத்து நின்று கொண்டிருந்தர்வர்களிடம் லாட்டரி டிக்கெட்டுகளை விற்கலானான்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
'யார் இந்த ஆள்?' என்று என் நண்பரிடம் கேட்டேன். 'முகத்தில் கொடூரமானத் தழும்பு இருக்கிறதே!'</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
'அது அவன் முகத்துக்கு அழகு சேர்க்கவில்லை, இல்லையா? அவன் நிகராகுவாவில் இருந்து நாடுகடதப்பட்டவன். ஆள் முரடன், கொள்ளைக் காரன் தான் என்றாலும் மோசமானவனில்லை. அவ்வப்போது நான் சில பெசொக்களை அவனுக்குத் தருவேன். அவன் ஒரு புரட்சிகரமான ஜெனெரல். ஒருவேளை அவனது ஆயுதத்தடவாள கள்ள விற்பனை வெளியில் தெரிந்து அரசை சங்கடப்படுத்தாமல் இருந்திருந்தால் அவன் கவுதமாலாவில் லாட்டரி விற்றுக் கொண்டிராமல் போர் அமைச்சராகி இருப்பான். அவனையும் அவனது உதவியாளர்களையும் அவர்கள் பிடித்து நீதிமன்றம் முன் நிறுத்தினார்கள். இதெல்லாம் அந்த நாடுகளில் பெரியவிஷயம், உனக்குத் தெரியும், அவனை சுட்டுக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். பிடிபடும்போதே தனக்கு என்ன நேரப்போகிறது என்று அவனுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். மற்றவர்களுடன் சேர்ந்து முந்தைய இரவில் போக்கர் விளையாடிக் கொண்டிருந்தான். அவனோடு சேர்த்து மொத்தம் ஐந்து பேர். தீப்பெட்டி அட்டைகளை நோட்டுகளாக அவர்கள் பயன்படுத்தினார்கள். தன் வாழ்வில் அது போன்ற துரதிருஷ்டம் நேரவில்லை என்ற அவன் என்னிடம் சொன்னான்'. </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
விடிந்ததும் படைவீரர்கள் அவர்களை தண்டனைக்காக கூட்டி செல்ல செல்லுக்கு வந்தார்கள். அதற்குள் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை தீப்ப்ட்டிகளை உபயோகிக்க முடியுமோ அவ்வளவு தீப்ப்ட்டிகளைத் இழந்திருந்தான். </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
அவர்கள் காலின் வராந்தாவுக்கு கொண்டு செல்லப்பட்டு பக்கத்துப் பக்கத்தில் சுவற்றைப் பார்த்து நிற்க வைக்கப்பட்டனர். சுடுபவர்கள் அவர்களைப் பார்க்கும்படி அவர்கள் நிறுத்தப்பட்டனர். கொஞ்ச நேரத்துக்கு ஒன்றுமே நடக்கவில்லை. என்ன இழவுக்கு இப்படிக் காக்க வைக்கிறார்கள் என்று இன்சார்ஜ் ஆபீசரிடம் நம் ஆள் கேட்டான். அரசின் கமாண்டிங் ஜெனெரல் தண்டனைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக சொன்னான் அந்த ஆபீசர். அவருக்காக தான் எல்லோரும் காத்திருந்தார்கள். </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
"அப்போ இன்னொரு சிகரெட் பிடிக்க எனக்கு நேரமிருக்கு" என்றான் நம்மாள். "அந்தாள் எப்பவுமே லேட் தான்".</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
என்றாலும் அதைப் பற்றவைப்பதற்குள் அந்த ஜெனெரல் -அவர் பெயர் சான் இக்னேஷியோ, அவனை நீ சந்தித்திருக்கிறாயா என்று எனக்குத் தெரியவில்லை- அந்த வராந்தாவுக்கு வந்துவிட்டான். பின்னாலேயே ஏ.டி.சி.யும். வழக்கமான நடைமுறைகள் முடிந்தவுடன் இக்னேஷியோ குற்றவாளிகளிடம் மரணதண்டனைக்கு முன் கடைசி ஆசை ஏதாவது இருக்கிறதா என்று கேட்டான். ஐந்தில் நான்கு பேர் தலையசைத்து மறுத்தனர். நம்மாள் மட்டும் பேசினான். </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
"ஆமாம், என் மனைவியிடம் விடைபெற விரும்புகிறேன்"</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
"பியூனோ. எனக்கு ஆட்சேபனையில்லை. அவள் எங்கே இருக்கிறாள்?" என்று கேட்டான் ஜெனெரல்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
"அவள் சிறையின் கதவுக்கருகில் காத்துக்கொண்டிருக்கிறாள்" </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
" அப்போ ஐந்து நிமிடத்துக்கு மேல் தாமதமாகாது."</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
"அவ்வளவு தான், செனார் ஜெனரல்"</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
" அவனை ஒரு பக்கம் நிறுத்தி வையுங்கள்" </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
இரு வீரர்கள் முன்னே செல்ல அவர்களுக்கிடையில் அந்த குற்றவாளி புரட்சிக்காரன் காண்பிக்கப்பட்ட இடத்தை நோக்கி நடந்தான். ஜெனரல் தலையசைத்தவுடன் அந்த கமாண்டிங் ஆபீசர் சுடும் ஆணையைப் பிறப்பித்தான். ஒரே சத்தம். நான்கு பேரும் விழுந்தனர். அவர்கள் விநோதமாக விழுந்தனர், எல்லோரும் சேர்ந்தாற்போல் விழவில்லை. ஒருவர் பின் ஒருவராக, ஒழுங்கற்ற முறையில் ஏதோ கைப்பாவைக் கூத்தில் பொம்மைகள் போல் விழுந்தார்கள். அவர்கள் அருகில் சென்ற ஆபீசர் இன்னும் உயிரோடிருந்தவன் மீது இரண்டு சேம்பர் குண்டுகளை தன் ரிவால்வர் மூலம் சுட்டான். நம்மாள் சிகரெட்டை முடித்து அதன் அடிப்பாகத்தை தூர எறிந்தான்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
நுழைவாயிலில் ஏதோ குழப்பம். ஒரு பெண் வராந்தாவுக்கு துரிதமான நடையுடன் வந்தாள். தன் கையை நெஞ்சின் மேல் வைத்தவாறு வந்தவள் சட்டென்று நின்றாள். பிறகு கைகளை விரித்து நீட்டியபடி அழுதுகொண்டே ஓடி வந்தாள். </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
"கரம்பா" என்றான் ஜெனெரல்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
அவள் கருப்பு நிறத்தில் உடையணிந்திருந்தாள். கூந்தலை ஒரு முக்காடால் மூடியிருந்தாள்.முகம் வெளுத்து பிரேதக்களையில் இருந்தது. ஒரு சிறுமியை விட கொஞ்சம் தான் பெரியவளாயிருந்தாள். மெலிந்து சாதாரண உடலமைப்பில் இருந்தாலும் கண்கள் விசாலமாய் இருந்தன. ஆனால் அவை வேதனையால் அலோங்கோலமாய் தெரிந்தன. அவள் ஓடி வருகையில் சிறிது திறந்திருந்த வாயும் வேதனை நிறைந்த முகமும் அவளை அத்தனை அழகாய் காட்டின. வீரர்கள் ஆச்சர்யத்தில் மூச்சுத் திணற அவளைப் பார்த்தபடி நின்றிருந்தார்கள்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
கலகக்காரன் ஓரிரு அடிகள் முன்னால் வந்து அவளை எதிர்கொண்டான். அடைக்கும் குரலில் கத்திக்கொண்டே அவனது கரங்களுக்குள் தன்னை அவள் புதைத்துக்கொண்டாள். 'அல்மா டி மி கோரோசான், என் இதயத்தின் ஆன்மாவே' என்றபடி அவளது உதடுகளின் மேல் தன் உதடுகளை வைத்து அழுத்தினான். அதே கணம் கிழிந்து கசங்கிய தன் சட்டைக்குள் இருந்து ஒரு கத்தியை எடுத்தான் .அதை வைத்திருக்க அவன் என்ன செய்து சமாளித்தான் என்று எனக்குப் புரியவில்லை. அவளது கழுத்தில் குத்தினான். வெட்டப்பட்ட நரம்பிலிருந்து ரத்தம் வெளிப்பட்டு அவனது சட்டையை நனைத்தது. பின் அவளது உடலை கரங்களால் அணைத்துக்கொண்டு மீண்டும் ஒரு முறை அவளது உதட்டில் தன் உதடைப் பதித்தான். </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
அத்தனை சீக்கிரம் அது நடந்துவிட்டது. பலருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. என்றாலும் சிலர் பயங்கரமாக அலறினர். அவன் மீது பாய்ந்து அவனைப் பிடித்துக்கொண்டனர். அவர்கள் அவன் மூச்சு விடும்படி தங்கள் பிடியைத் தளர்த்தினர். ஏ.டி.சி மட்டும் பிடிக்கவில்லைஎன்றால் அந்தப் பெண் கீழே விழுந்திருப்பாள். அவள் நினைவிழந்தாள். அவளை தரையில் படுக்கவைத்த வீரர்கள் துயரம் நிறைந்த முகங்களுடன் அவளைப் பார்த்தபடி நின்றிருந்தனர். கலகக்காரனுக்குத் எங்கு தாக்கவேண்டும் என்று தெரிந்திருக்கிறது. ரத்தத்தை நிறுத்தமுடியாது என்று அவன் அறிந்திருந்தான். சிறிது நேரத்தில் அவள் பக்கம் முழங்காலிட்டு அமர்ந்திருந்த ஏ.டி.சி எழுந்தான். </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
"இறந்துவிட்டாள்" என்று அவன் முணுமுணுத்தான்.<span style="font-size: 12.727272033691406px;">கலகக்காரன் சிலுவையிட்டுக்கொண்டான்.</span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
"ஏன் இப்படி செய்தாய்?" என்றான் ஜெனரல். </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
"நான் அவளை நேசித்தேன்."</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
அந்த கூட்டத்தில் இருந்தவர்களிடையே ஒரு பெருமூச்சு எழுந்தது. விசித்திரமான முகங்களோடு அவர்கள் கொலைகாரனைப் பார்த்தனர். ஜெனரல் மெளனமாக அவனை உற்றுப்பார்த்தான்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
"மேன்மையான செயல் இது" என்றான் கடைசியாக." என்னால் இவனைக் கொல்ல முடியாது. எனது காரை எடுத்துக்கொள்ளுங்கள். இவனை எல்லையில் சென்று விட்டு விடுங்கள். செனார், ஒரு வீரனுக்கு இன்னொரு வீரன் தர வேண்டிய மரியாதையை உனக்கு அளிக்கிறேன்."</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
இதைக் கேட்டவர்களிடம் அமோதிப்பான முணுமுணுப்பு எழுந்தது.கலகக்காரனின் தோளில் தட்டினான் ஏ.டி.சி.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
ஒரு வார்த்தை பேசாமல் இரு வீரர்களுக்கு நடுவே காத்திருக்கும் காரை நோக்கி நடை போடத் தொடங்கினான் கலகக்காரன்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
எனது நண்பர் நிறுத்தியதும் நான் அமைதியாக இருந்தேன். இதைக் கண்டிப்பாக விளக்க வேண்டும். அவர் ஒரு கவுதமாலாக் காரர். என்னிடம் ஸ்பானிஷில் தான் பேசினார். என்னால் முடிந்தவரை அவர் சொன்னதை மொழிபெயர்த்திருக்கிறேன். என்றாலும் அவரது உணர்ச்சிமிகுந்த உரத்த பேச்சை குறைக்க ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. உண்மையை சொன்னால் அது அந்தக் கதைக்குப் பொருத்தமாக இருந்தது. </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
"சரி. எப்படி அவன் முகத்தில் அந்தத் தழும்பு வந்தது?" என்று நீட்டி முழக்கி கேட்டேன்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
"அதுவா , ஒரு முறை பாட்டில் ஒன்றை திறக்கும்போது அது வெடித்ததால் ஏற்பட்டது. இஞ்சி பான பாட்டில் அது."</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
"அது எனக்குப் பிடிக்கவே இல்லை" என்றேன் நான்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
-The man with the scar</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<span style="font-size: x-small; line-height: 16px;">William Somerset Maugham</span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
</div>
chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-79950183771387784742012-11-09T10:38:00.001+05:302012-11-09T10:38:46.991+05:30லூஸ் மோகன் : குரலால் வாழும் நடிகன் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidGkyeg0QMGqKd_PxBon921umAtBBdisblkL53zy9TDCFH4h0Mn4RzOoj-0ulHpco7kJvDIuv9zIXlelcy_3n0o18q-duBLROY6AiiYzG1UXyixhS-Ta3L9rZ0caHyCtarSjU6Tg37j94/s1600/comedy-actor-loose-mohan-passed-away-2012-9-17-15-11-46.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="235" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidGkyeg0QMGqKd_PxBon921umAtBBdisblkL53zy9TDCFH4h0Mn4RzOoj-0ulHpco7kJvDIuv9zIXlelcy_3n0o18q-duBLROY6AiiYzG1UXyixhS-Ta3L9rZ0caHyCtarSjU6Tg37j94/s400/comedy-actor-loose-mohan-passed-away-2012-9-17-15-11-46.jpg" width="400" /></a></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<span style="font-size: 12.727272033691406px;"><br /></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<span style="font-size: 12.727272033691406px;">ஓய்வுபெற்ற பெரிய நடிகர்கள் திரும்பவும் செய்திகளில் தென்பட வேண்டுமென்றால் அவர்கள் மறுபடியும் சினிமாவில் நடிக்க வேண்டும் அல்லது ஏதாவது படம் தயாரிக்க வேண்டி இருக்கும். குறைந்த பட்சம் தற்போதைய நட்சத்திர நடிகர்களின் படங்களின் வெற்றிவிழாக்களில் கலந்துகொண்டு ஆசீர்வாதம் வழங்கவேண்டி வரும். நகைச்சுவை நடிகன் அதுவும் நகைச்சுவைத் துணை நடிகன் திரும்பவும் செய்திகளில் அடிபட அவன் தன் சுவாசத்தையே நிறுத்தவேண்டி வரும். சினிமாவில் சமீபத்தில் காலமான நகைச்சுவை நடிகர் </span><span class="il" style="background-color: #ffffcc; font-size: 12.727272033691406px;">லூஸ்</span><span style="font-size: 12.727272033691406px;"> </span><span class="il" style="background-color: #ffffcc; font-size: 12.727272033691406px;">மோகனை</span><span style="font-size: 12.727272033691406px;">ப் பற்றிய தகவல் திரட்ட கூகிளில் அவர் பெயரில் தேடியபோது அவரது இறப்பைப் பற்றிய செய்திகள் பதிவுகளே கண்ணில்பட்டன. ஒரு வகையில் கொஞ்சம் ஆறுதலாகக் கூட இருந்தது. பல துணை நடிகர்கள், உதவி இயக்குனர்கள் சந்தடியில்லாமல் அமைதியாக மரணம் அடைந்த செய்திகள் சினிமா ரசிகர்கள் பார்வைக்கு வராமலேயே போய் விடுகின்றன. பானுசந்தர் சுமன் நடித்த எனக்காக காத்திரு என்ற படத்தில் இளையராஜாவின் இசையில் அமைந்த 'தாகம் எடுக்கிற நேரம்' பாடலில் அழகிய சின்ன நாசியுடன் மலர்ந்த கண்களோடு வரும் நிஷா என்ற நடிகை சில வருடங்களுக்கு முன்னர் எய்ட்ஸ் வந்து இறந்து போன தகவல் அறிந்திராமல் அந்தப் பாடலை அவளுக்காகவே பார்த்துக்கொண்டிருந்தேன். என் நண்பன் சொல்லித் தான் அந்தப் பெண் இறந்த தகவலே எனக்குத் தெரியும். பிறகு அந்த காதல் பாடல் கூட மனதை கனக்க வைக்கும் பாடலாகி அதை கொஞ்ச நாட்கள் கேட்காமலேயே இருந்தேன். </span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
இறப்பு செய்திக்கு முன்னர் ஒருமுறை செய்தியில் வந்தார் <span class="il" style="background-color: #ffffcc;">லூஸ்</span> <span class="il" style="background-color: #ffffcc;">மோகன்</span> . அவரது மகனும் மருமகளும் அவரை பராமரிக்க மறுக்கிறார்கள் என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்த செய்தியும் தளர்ந்து ஒடுங்கிய அவரது தோற்றமும் என்னவோ செய்தது. பிறகு அவர் குடும்பத்தினர் சமாதானம் ஆகி விட்டதாகவும் அவர் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதாகவும் செய்திகள் வந்தன. அந்தப் பரிதாபத்துக்கு உரிய நடிகன் புகார் கொடுக்க போலீஸ் அலுவலகம் வரும் வரை என்ன நினைத்துக்கொண்டு வந்திருப்பாரோ. திரையுலகம் என்ன வாழ்க்கையே பெரிய சின்ன நடிகர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் புறக்கணித்து விடும் என்பது நாம் அறிந்தது தானே. <span class="il" style="background-color: #ffffcc;">லூஸ்</span> <span class="il" style="background-color: #ffffcc;">மோகன்</span> எனக்கு என் அண்ணன் மூலம் தான் அறிமுகம் ஆனார். அறந்தாங்கி த.மு.எ.ச கூட்டங்களில் கூட்டம் சேர்க்க என் அண்ணன் பலகுரல் நிகழ்ச்சி செய்வார். அவ்வப்போது புது நடிகர்கள் குரலில் அவர் பேசிக் காட்டினாலும் நிரந்தரமான மிமிக் குரலாக உசிலை மணியும், <span class="il" style="background-color: #ffffcc;">லூஸ்</span><span class="il" style="background-color: #ffffcc;">மோகனும்</span> தான் இருந்தார்கள். முன்னவரை விட அடுத்தவரின் குரல் மிகவும் பிரத்யேகமானது. மேலும் அது பிராந்தியம் சார்ந்தது. காலம் காலமாக சென்னையில் வாழ்ந்த ஒரு குடிகார வழிப்போக்கன் குரல் அது. " அ ..வந்துக்கின்னு இருந்தேனா..திடீர்னு ஒரு நாயி எதுக்க வந்து கொல்ச்சிச்சி... நா இன்னா பண்ணேன்..ஒரு கல்ல எட்த்து வீசுனேன் பாரு ..அது டபார்னு காலப் புட்ச்சி கட்ச்சி வச்சீச்சு பா!" என்று பேசி வளராத மிமிக்ரி கலைஞர்கள் இருக்க மாட்டார்கள். திரையுலகம் தராத அங்கீகாரத்தை அவர்களது தனித்த குரல்கள் மிமிக்ரி கலைஞர்களின் வழியாக மக்களிடம் பெற்றுத் தந்தன என்று சொல்லலாம். இன்றும் அவரது குரலில் பலர் பேசுகிறார்கள்.வேலைக்காரன், ரிக்ஷாக் காரன், வாட்ச்மேன் போன்ற அன்றாட வாழ்வில் எதிர்ப்படும் சாதாரண மனிதனின் வேடங்களை அவர் மிக எளிதாக செய்தார். </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
கண்ணை சுருக்கி சுருக்கி அவர் பேசும் வசனங்கள் ரசிகர்களை சிரிக்க வைத்தன. மனோரமா,பிந்துகோஷ் போன்ற நாயகிகளுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். கமலஹாசன் சட்டம் என் கையில் படத்தில் நடிக்கும்போது சென்னைத் தமிழ் உச்சரிப்புக்காக <span class="il" style="background-color: #ffffcc;">லூஸ்</span> மோகனிடம் மொழி பயின்றார் என்பது வரலாறு. அந்த அளவுக்கு சென்னை தமிழின் வீச்சை திரையில் பாய்ச்சியவர் <span class="il" style="background-color: #ffffcc;">லூஸ்</span> <span class="il" style="background-color: #ffffcc;">மோகன்</span>. நான் சென்னை ட்ரஸ்ட்புரம் பகுதியில் சில காலம் தங்கியிருந்தபோது அங்கு பல டிபிக்கல் சென்னை மக்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு நபரின் பெயர் ங்கோத்தா கோயிந்தன் என்று சொன்னார்கள். ஒரு வார்த்தையை தொடங்கு முன் பிள்ளையார் சுழி போல ங்கோத்தா என்று சொல்லி தான் பேசுவார் என்பதால் அவருக்கு இந்த அடைமொழியை வழங்கி இருந்தார்கள் அங்கு உள்ளவர்கள். ஒடிசலான உருவம், கலைந்த தலை, வாயில் பீடி, விளையாடும் சென்னை தமிழ் என்று கோயிந்தன் எனக்கு <span class="il" style="background-color: #ffffcc;">லூஸ்</span> <span class="il" style="background-color: #ffffcc;">மோகன்</span> மாதிரியே தோற்றமளித்தார். திரையில் பார்த்த ஒரு கதாபாத்திரத்தை நேரில் கண்டது போல் இருந்தது அந்த நடிகன் எவ்வளவு தத்ரூபமாக அந்தப் பாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று எனக்கு உணர்த்தியது. என்றாலும் இது போன்ற நடிகர்களுக்கு திரையில் பெரிய முக்கியத்துவம் இருக்காது. பிரபலமான நகைச்சுவை நடிகர்களுக்கு துணையாக வரும் பாத்திரங்களிலேயே நடித்து மறைந்து போன நடிகர்களுள் ஒருவராகி விட்டார்<span class="il" style="background-color: #ffffcc;">லூஸ்</span><span class="il" style="background-color: #ffffcc;">மோகன்</span>. எனினும் சில சிறு பட்ஜெட் படங்களில் சின்ன சின்ன நடிகர்களுடன் பிரதான நகைச்சுவை நடிகனாகவும் நடித்திருக்கிறார். </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
அவரது தந்தை <span class="il" style="background-color: #ffffcc;">லூஸ்</span> ஆறுமுகம் கூட ஒரு நடிகர் என்பது தான் நான் அறிந்திராத செய்தி. அதுவும்<span class="il" style="background-color: #ffffcc;">லூஸ்</span><span class="il" style="background-color: #ffffcc;">மோகனின்</span> இறப்பு செய்திகளின் ஊடாக கிடைத்த செய்தி தான். சிவாஜி நடித்த நீலவானம் படத்தில் ஒரு காட்சியில் குடும்பம் சகிதமாக தியேட்டருக்கு படம் பார்க்க வருவார் <span class="il" style="background-color: #ffffcc;">லூஸ்</span> ஆறுமுகம். டிக்கெட் கிழிப்பவராக வரும் சிவாஜியிடம் தன் குடும்ப நபர்களின் எண்ணிக்கையை சொல்லும்போது "அஞ்சி பொண்டாட்டி ஒரு கொழந்தைங்க" என்று சொல்லிவிட்டு பிறகு சுதாரித்துக்கொண்டு "அஞ்சி புள்ளைங்க ..ஒரு பொண்டாட்டி" என்று சொல்வார். பார்ப்பதற்கு <span class="il" style="background-color: #ffffcc;">லூஸ்</span> <span class="il" style="background-color: #ffffcc;">மோகன்</span> மாதிரியே இருப்பது பெரிய ஆச்சர்யம். அதே குரலும் கூட. <span class="il" style="background-color: #ffffcc;">லூஸ்</span>அண்ட் டைட் என்ற நாடகத்தில் நடித்தால் <span class="il" style="background-color: #ffffcc;">லூஸ்</span> ஆறுமுகம் என்ற பெயர் அவருக்கு வந்தது என்று சொல்கிறது ஒரு செய்தி. அந்தப் பெயர் மோகனிடமும் ஒட்டிக் கொண்டு விட்டது. என்றாலும் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் அவரது பிராக்கெட் <span class="il" style="background-color: #ffffcc;">மோகன்</span> என்று தான் டைட்டிலில் காட்டப்படுகிறது. தொடர்ந்து பல படங்களில் நடித்தார். குறுக்கில் கோடுபோட்ட பனியன், கட்டம்போட்ட கைலி, இடுப்பில் பச்சை கலர் பட்டை பெல்ட் போன்றவை அவரது பெரும்பாலான படங்களின் பாத்திர உடைகளாக இருந்தன. எல்லா நகைச்சுவை நடிகர்களையும் போலவே <span class="il" style="background-color: #ffffcc;">லூஸ்</span> மோகனுக்கும் சோகக் காட்சிகளில் சிறப்பாக நடிக்க முடிந்தது. சிவாஜி இயக்குனராக நடித்த 'சாதனை' படத்தில் உதவி இயக்குனராக வருவார். ஒரு காட்சியில் படப்பிடிப்பு சமயத்தில் அப்செட்டாக இருக்கும் சிவாஜி தவறான ஷாட் எண் சொல்லிவிட்டதாக எண்ணி <span class="il" style="background-color: #ffffcc;">லூஸ்</span> <span class="il" style="background-color: #ffffcc;">மோகனை</span>அடித்துவிடுவார். பின்னர் தன தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்பார் சிவாஜி. அந்தக் காட்சியில் சிவாஜிக்கு முன்னாலேயே 'அழுது' நடித்து கண்கலங்க வைப்பார் <span class="il" style="background-color: #ffffcc;">லூஸ்</span> <span class="il" style="background-color: #ffffcc;">மோகன்</span>.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
நன்றாக நினைவில் இருக்கும்படியாக கடைசியாக அவர் செய்த பாத்திரம் தங்கர்பச்சானின் அழகி படத்தில் அமைந்தது. கால்நடை மருத்துவமனை உதவியாளராக வரும் பாண்டுவின் தாய்மாமனாக வந்து விவேக் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவார். தின வசூலில் பெரும்பங்கை டாக்டர் விவேக் எடுத்துக்கொள்ள கடுப்பான பாண்டு <span class="il" style="background-color: #ffffcc;">லூஸ்</span> <span class="il" style="background-color: #ffffcc;">மோகனை</span> அழைத்து வந்து விவேக்கை மிரட்டுவார். மண்ணடி மன்னாரு என்ற அந்த பாத்திரத்தில் <span class="il" style="background-color: #ffffcc;">லூஸ்</span> <span class="il" style="background-color: #ffffcc;">மோகன்</span> கலக்கி இருப்பார். விவேக்கிடம் பிச்சுவா கத்தியை காட்டி மிரட்ட, அவர் அரிவாளை எடுப்பார். உடனே "ந்தா ..இதையும் நீயே வச்சிக்க" என்று ஜகா வாங்கி விடுவார் <span class="il" style="background-color: #ffffcc;">லூஸ்</span><span class="il" style="background-color: #ffffcc;">மோகன்</span>. பிறகு கால்நடைத்துறை அமைச்சராகவே ஆகிவிட்ட பாண்டுவிடம் விவேக் தகராறு செய்ய அவருக்கு டிஸ்மிஸ் ஆர்டர் டைப் பண்ணும் காட்சியில் அனாயாசமாக செய்திருப்பார் <span class="il" style="background-color: #ffffcc;">மோகன்</span>. பாண்டுவை மாட்டி விட நினைக்கும் விவேக் முதலமைச்சரின் போன் அழைப்பை மறைத்து வேறொருவர் பேசுவதாக சொல்லி பாண்டுவிடம் கொடுப்பார். பாண்டு கன்னாபின்னா என்று எகிற கொந்தளிக்கும் <span class="il" style="background-color: #ffffcc;">லூஸ்</span><span class="il" style="background-color: #ffffcc;">மோகன்</span> போனை வாங்கி சொல்வார் " என் மாப்ளைய நீ மினிஸ்டர் ஆக்கினியா ? உன்ன அலேக்கா தூக்கி மல்லாக்க போட்டுடுவேன்". </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
அவருக்கு என்று பெரிய இடம் சினிமாவில் அமையவில்லை என்றாலும் அவர் விட்டுச் சென்ற அந்த சிறிய இடத்தை இன்னொருவரால் நிரப்ப முடியாது என்பது உண்மை. மேலும் மிமிக்ரி கலைஞர்கள் அவரது குரலில் வெவ்வேறு வசனங்களை உருவாக்கி அவரை உலவ விட்டுக்கொண்டே இருப்பார்கள் என்பது நிச்சயம் என்பதால் அந்திமக் காலத்தில் கஷ்டப்பட்ட அவரது ஆத்மா சற்று நிம்மதியடையும்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.727272033691406px;">
-காட்சிப்பிழை திரை இதழில் வெளியான கட்டுரை </div>
</div>
chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-72219947760002010822012-11-06T10:03:00.000+05:302012-11-06T10:03:07.900+05:30ராஜன் குறை: நேர்காணல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiY9KSiSqai6XEVvbA3Ekl7adspEis2c3ZBmaV4BMt0sJKMXh69NeUREdUnY5CcoFK0cNE66jGDicBnRy4eiK5q_ak5lHdZsYDGKHwtHP6zhTAvpzg50s-ORKoCzU3hdg3d73UhUsEzhew/s1600/blog.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="306" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiY9KSiSqai6XEVvbA3Ekl7adspEis2c3ZBmaV4BMt0sJKMXh69NeUREdUnY5CcoFK0cNE66jGDicBnRy4eiK5q_ak5lHdZsYDGKHwtHP6zhTAvpzg50s-ORKoCzU3hdg3d73UhUsEzhew/s400/blog.JPG" width="400" /></a></div>
உலக சினிமா மற்றும் தமிழ் சினிமா மீதான தெளிவான பார்வையோடு இயங்கி
வருபவர்களில் முக்கியமானவர் ராஜன் குறை. தமிழ் வணிக சினிமாவின்
சாத்தியங்களையும் அதன் உள்ளீடான விஷயங்களையும் பற்றி தொடர்ந்து பேசியும்
எழுதியும் வருபவர். தில்லியில் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில்
பேராசிரியராகப் பணியாற்றி வரும் அவருடன் <b>த சன்டே இந்தியன்</b> பத்திரிக்கையின்
சார்பில் செய்த நேர்காணல்...<strong><br clear="all" /> </strong><br />
<br />
<strong> உங்கள் கல்வி மற்றும் இளமைப்பருவம் பற்றி..</strong><br /><br />விசேஷமாக
சொல்லக்கூடிய இளமைப்பருவம் கிடையாது. சாதாரண நடுத்தரக் குடும்பம் தான்.
சாதாரண பள்ளிகளில் தான் கல்வி. ஆனால் என் மிக இளைய வயதிலேயே நாவல்கள்
வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். அறுபத்தெட்டாம் ஆண்டு ஆடிப்பெருக்கு சமயம்
என்று நினைக்கிறேன். எனக்கு அப்போது ஆறு வயது இருக்கும். கல்கியின்
பொன்னியின் செல்வன் நாவலை வாசிக்க தொடங்கினேன். பதினொன்றாம் வகுப்பு
முடிக்கும் முன்னர் சுமார் முன்னூறு தமிழ் நாவல்கள் வாசித்திருப்பேன்.
வாரம் ஒன்று அல்லது இரண்டு நாவல்கள் வாசித்திருப்பேன். உள்ளூர் நூலகங்களில்
நாவல்கள் படிக்கக் கிடைத்தன. என் அண்ணன் எடுத்துத் தருவார் .
அடிப்படையில் அந்த நாவல்கள் படித்தது தான் என்னை உருவாக்கியது என்று
நம்புகிறேன். அது தான் எனக்குள் ஒரு சிந்தனையை உருவாக்கியது என்று
நினைக்கிறேன். கல்லூரி சென்ற பின்னர் ஆங்கில நாவல்களை வாசிக்கத்
தொடங்கினேன். அப்போது உலக இலக்கியங்களுடன் பரிச்சயம் ஏற்பட்டது. 82' இல்
கல்லூரி முடித்த பின்னர் திருச்சி வாசகர் அரங்கம் என்ற சிறுபத்திரிக்கை
சார்ந்த குழு ஒன்றுடனும் சினி ஃபோரம் திருச்சி என்ற அமைப்புடனும் தொடர்பு
ஏற்பட்டது. பி.யூ. சி வரைக்கும் கோவையில் தான் படித்தேன். திருச்சி நேஷனல்
கல்லூரியில் இளங்கலை இலக்கியம் படித்தேன். <br /><br /><strong>திரைப்பட சங்கம் பற்றி..</strong><br /><br />நாவல்
படிப்பதிலும் சினிமா பார்ப்பதிலும் ஆர்வம் இருந்தது. ஒரு கட்டத்தில் ராஜம்
கிருஷ்ணன், ஜெயகாந்தன், அசோகாமித்திரன் போன்றோரின் நாவல்கள் வாசிக்கத்
தொடங்கிய பின்னர் நம் திரைப்படங்களில் அது போன்ற நாவல்களின் பண்பு
இல்லையே என்று பட்டது. நாவல்களில் கிடைத்த அனுபவத்துக்கும் சினிமாவில்
கிடைத்த அனுபவத்துக்கும் ஒரு இடைவெளி இருந்தது போல் எனக்குத் தோன்றியது.
திரைப்பட சங்க பரிச்சயதுக்குப் பின்னர் என்ற Bitter Love ஒரு இத்தாலிய
திரைப்படம் பார்த்தேன். அதைப் பார்த்தவுடன் இதற்காகத் தான்
ஏங்கிக்கொண்டிருந்தேன் என்று தோன்றியது. விஷூவலாக அந்தப்படம் என்னை
ஈர்த்தது. ஹாலிவுட் படங்களில் ஒரு சாகசத் தனம் தான் இருக்கும். அதில்
அன்றாட வாழ்க்கை பதிவாவதில்லை. இந்தப் படம் நான் எதிர்பார்த்தவற்றை
தந்தது. நல்ல இலக்கியங்களில் நாம் காண்பது போல இந்தப் படம் அன்றாட
வாழ்வின் மனித உணர்வுகளின் நுட்பங்களை அழகாகக் கையாண்டிருந்தது அந்தப்
படம்.. அதன் தாக்கத்தில் பிறகு தீவிரமாக திரைப்பட சங்கத்தில் இயங்க
ஆரம்பித்தேன். திருச்சி சினி ஃபோரத்தில் உறுப்பினர்களை சேர்ப்பதில்
தீவிரமாகப் பங்காற்றினேன். அது டிவிடிக்களுக்கு முன்பான காலம்.
வெளிநாடுகளின் தூதரகங்களின் மூலமாக உலகப் படங்களை வாங்கித் திரையிடுவோம். <br /><br /><strong>மானுடவியலில் முனைவர் பட்ட ஆய்வு செய்திருக்கிறீர்கள். சினிமா பின்னணி கொண்டதா அந்த ஆய்வு?</strong><br /><br />திரைப்பட
சங்கத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில் எனக்கு அரசியல் ஈடுபாடு
இருந்தது. சமூகம் மேம்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும் என்பது இளம் வயதில்
இருந்தே இருந்து லட்சியம். பாரதியாரை படித்ததனால் ஏற்பட்ட சிந்தனை அது.
மக்களுக்காக நக்சலைட்டாக மாறிவிடலாமா என்றெல்லாம் எண்ணம் இருந்தது.
மார்க்சியத்தின் மீது ஈடுபாடு இருந்தது. கட்சிகளில் சேராமல் இருந்தாலும்
அரசியல் மற்றும் சமூக அக்கறை இருந்தது. '69 இல் என்று துக்ளக் தொடங்கியதில்
இருந்து தொடர்ந்து பத்து வருடங்கள் அதை வாசித்து வந்தேன். பிறகு அந்த
பத்திரிக்கையுடன் எனக்கு ஒரு விலக்கம் ஏற்பட்டது. வலது சாரி இடது சாரி
கருத்து முரண்பாடுகளால் உண்டான ஒரு விலக்கம் அது. எம்.ஜி.ஆர் முதல்வரான
பின்னர் ஒரு சினிமா நடிகர் ஆட்சிக்கு வரலாமா என்ற பேச்சு இருந்தது. உலக
சினிமாக்கள் பார்த்த அனுபவத்தில் தமிழ் சினிமாக்களை பார்க்கும்போது
மக்களுக்குத் தேவையான சினிமாவாக அது இல்லையே என்று தோன்றியது. ஆனால் மக்கள்
தங்களுக்கு உண்மையில் அவசியம் உள்ள, விழிப்புணர்வு தரக்கூடிய படங்களை
பார்க்காமல் தமிழில் வெளியான வழக்கமான படங்களையே பார்த்துக்கொண்டிருந்தது
எனக்குள் ஒரு கேள்வியை எழுப்பியது. திரைப்பட சங்கம் மூலமாக குடிசைப் பகுதி
மக்களுக்கு நல்ல சினிமாக்களை எடுத்து சென்றோம். நாம் அவர்களிடம் கொண்டு
செல்லும் நல்ல படங்களை அவர்களும் பார்த்தார்கள். ஆனால் அவர்களாகத் தேடி
சென்று பார்த்த படங்கள் வணிகப் படங்களாகவே இருந்தன. அவர்களுக்கு என்ன தேவை
என்று நாம் நினைக்கிறோமோ அதற்கு மாறாக அவர்களுக்கு வேறு வகையான சினிமா
தேவையாக இருந்தது. இதில் ஒரு முரண்பாடு இருக்கிறது அல்லவா? இதை எப்படி
புரிந்துகொள்வது என்ற கேள்வி எனக்கு இருந்தது. அந்த சமயத்தில் கலாச்சார
ஆய்வு தொடர்பான படிப்புகள் கல்விப்புலங்களில் பிரபலமாக ஆரம்பித்தன.
வெகுஜனக் கலாச்சாரத்தை எப்படி புரிந்துகொள்வது..இந்திய வெகு ஜன சினிமா
பற்றி கட்டுரைகள் எழுதப்படுகின்றன என்ற தகவல்கள் நண்பர்கள் மூலம்
தெரியவந்தன. ஆசிஷ் நந்தி போன்றோர் இது பற்றி நிறைய எழுதினார்கள். அவர்
தொகுத்த The Secret Politics of Our Desires புத்தகம் முக்கியமானது.
சுந்தர் காளி போன்றோர் அதில் கட்டுரை எழுதி இருந்தார்கள்.அவர் எனக்கு நல்ல
நண்பர். எம்.எஸ்.எஸ். பாண்டியன் பராசக்தி படம் பற்றி எழுதிய புத்தகமும்
ரம்.ஜி.ஆர் பற்றி எழுதிய Image Trap ஆர்வம் தந்தது. பிறகு வெகுஜன சினிமாவை
புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவானது. எனவே அது தொடர்பாக படிக்க
வேண்டும் என்று உத்வேகம் ஏற்பட்டது. அதே போல கிராம்ஷி எழுதிய புத்தகங்கள்
இந்த சிந்தனையை வலுப்படுத்தின. அப்போது ஏற்பட்ட ஆர்வம் வெகு ஜன சினிமா
பக்கம் செல்ல வைத்தது. எனவே இது தொடர்பான ஆய்வு செய்யலாம் என்று
முடிவெடுத்தேன். <br /><br /><strong>தமிழ் சினிமா குறித்த ஆய்வை தொடர்ந்து
செய்து வருகிறீர்கள். உலக சினிமா மீது பார்வை கொண்ட உங்களுக்கு தமிழ்
சினிமாவின் போதாமைகள் பற்றிய விமர்சனம் என்ன?</strong><br /><br />போதாமை
என்பதை யார் முடிவு செய்வது என்பது தான் முக்கியமான கேள்வி. முந்திரிப்
பருப்பு இல்லாத உணவை சாப்பிடாமல் இருக்கவே முடியாது என்று நாம் இருந்தால்
முந்திரிப் பருப்பு இல்லாதது ஒரு போதாமை மாதிரி தான் தெரியும். நம்முடைய
பழக்கம், தேர்வுகள் போன்றவற்றை வைத்தே விஷயங்களை அணுகினால் அப்படித்
தெரியலாம். சமூக ரீதியாக ஐரோப்பிய கலைப் படங்கள் போல தமிழில் ஏன் வரவில்லை
என்ற கேள்வி இருக்கிறது. இது ஒரு சமூகவியல் கேள்வியா என்றே எனக்கு சந்தேகம்
இருக்கிறது. இதுபற்றி பல கருத்தரங்களில் பேசியிருக்கிறேன். ஆனால் யாரும்
இதை கவனிக்கவில்லை. ஒரு உதாரணம், நமது பக்கத்துக்கு மாநிலமான கேரளாவில்
வெறும் கலைப்படங்கள் தான் பார்ப்பார்கள் என்று ஒரு எண்ணம் இருக்கிறது.
ஆனால் அங்கும் விஜய் நடித்த தமிழ் படங்கள் தான் பார்க்கிறார்கள். சிவாஜி,
எம்.ஜி.,ஆர் காலத்திலும் அவர்கள் படங்கள் கேரளாவில் நல்ல வரவேற்பை
பெற்றன.இங்கே உள்ள ரசனை தான் அங்கேயும். ஆனால் அங்கே அரவிந்தன் நல்ல படம்
எடுக்க முடிந்தது. எப்படிஎன்றால் அவர் நல்ல கார்டூன் வரைபவர், சினிமா பற்றி
பேசுபவர். அவரது அறைக்கு பல நண்பர்கள் வருவார்கள். அவர்களில் ஒரு பணக்கார
நண்பர் "நான் பணம் தருகிறேன்..படம் எடுங்கள்" என்றார். அரவிந்தன் படங்கள்
எடுக்கத் தொடங்கினார். அவரது படங்களுக்கு வெளிநாடுகளில் திரைப்பட
விழாக்களில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் உள்ளூரில் யாரும் அரவிந்தன்
படம் தான் பார்ப்பேன் என்று அலையவில்லை. அவருக்கு அப்படி ஒரு வாய்ப்பு
அமைந்தது. இது தமிழ்நாட்டிலும் நடக்க முடியும். ஆனால் யார் இங்கே இதுபோன்ற
படங்களுக்கு பணம் போட முன்வருவார்கள்? எனக்கும் அருமையான படம் எடுக்க
முடியும். ஆனால் எனக்கு வாய்த்த நண்பர்கள் அப்படி அமையவில்லையே. அது
தற்செயலாக நடக்க வேண்டும். இங்கே தமிழில் ஜெயகாந்தனுக்கும் அப்படி ஒரு
வாய்ப்பு அமைந்தது. அவரும் படம் எடுத்தார். ஆனால் அவ்வளவு சிறப்பாக அவர்
படம் எடுத்துவிடவில்லை . ஏனென்றால் அவருக்கு சினிமா தெரியாது. எனவே
தமிழில் நல்ல படங்கள் வராததற்கு சங்க இலக்கியங்களில் இருந்து உதாரணம்
சொல்வது, ஒட்டுமொத்த சமூகமும் காரணம், திராவிட இயக்கம் காரணம் என்று
சொல்லும் போக்கு உள்ளது. திராவிட இயக்கத்தை குறை சொல்ல என்றே ஒரு ஆசை
உள்ளது சிலருக்கு. வெகுஜன அரசியல் படித்தவர்களுக்கு பிடிக்காது.
அடுக்குமொழி அரசியல் சரியில்லை என்றால் வர்க்க அரசியல் பேசும் கேரளாவின்
சி.பி.எம் கட்சி மட்டும் உயர்வானதா என்ன? அரசியல் என்று வந்து விட்டால்
எல்லா கட்சியும் ஒன்று தான். சில வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் திராவிட
இயக்கத்தை மட்டும் குறைசொல்லும் போக்கு இங்கு உள்ளது. பார்ப்பனர்கள்
திராவிட இயக்கத்தை இகழ்வதில் முன்னணியில் இருக்கிறார்கள். எனவே தமிழ்
சினிமாவின் நிலைக்கு இது போன்ற காரணங்கள் சொல்வது சரியல்ல. உண்மை
என்னவென்றால் எல்லா ஊரிலும் சினிமா என்பது இப்படித் தான் இருக்கிறது.
வெகுஜன ரசனை என்பது வேறுமாதிரியும் கலைப்படங்கள் சார்ந்த ரசனை என்பது
வேறு மாதிரியும் இருப்பது உலகில் எல்லா இடத்திலும் நடக்கிறது. <br /><br /><strong>சினிமா
ஒரு குறைந்த வயதுகொண்ட கலை என்ற கருத்து உள்ளவர்கள் நீங்கள் என்றாலும்
தொழில்நுட்பம் என்பதையும் தாண்டி ஹாலிவுட் மற்றும் பல நாடுகளில் சினிமா கதை
சொல்லலில் நல்ல தேர்ச்சியும் முதிர்ச்சியும் கொண்டுள்ளன. தமிழ் சினிமாவில்
அவ்வாறு தெரியவில்லையே..</strong><br /><br />இது தொடர்பாக வித்தியாசமான
சிந்தனை நிறைய வந்திருக்கிறது. காட்சிப்பிழை திரையில் நாங்கள் எழுதி வருவது
அதைத் தான். கதை சொல்லும் முறைமை ஹாலிவுட் அல்லது ஐரோப்பிய சினிமா
முறைமையில் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தமிழ் சினிமாவுக்கு
என்று கதை சொல்லும் முறைமை உண்டு. அதற்குள் அது எவ்வாறு சிறப்பாக
செய்யப்பட்டிருக்கிறது என்று தான் பார்க்க வேண்டும். உதாரணமாக எம்.ஜி
.ஆரின் வேட்டைக் காரன் படத்துக்கும் படகோட்டி படத்துக்கும் இடையே உள்ள தரம்
வித்தியாசம் பற்றி பேசினால் அது சரி என்று சொல்லலாம். எனவே அந்த
அழகியலுக்குள் அது எவ்வாறு சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது என்று தான்
பார்க்க வேண்டும். வேட்டைக்காரன் படம் நன்றாக இல்லை என்பதுடன் அது நன்றாக
ஓடவும் இல்லை. விமர்சகர்கள் அல்ல மக்களே அந்த படத்தை புறக்கணிக்கிறார்கள்.
எனவே இங்கே நல்ல படங்கள் வரவில்லை என்று புலம்புவதில் அர்த்தமில்லை. நல்ல
படங்கள் வேறு மொழியில் இருக்கும்போது பிறகு அந்த தரம் தமிழில் இல்லையே
என்று புலம்ப வேண்டியதில்லை. அது பற்றிய தேவை இங்கு இருந்திருந்தால்
இந்நேரம் இங்கேயும் நல்ல படங்கள் உருவாகியிருக்குமே! தமிழில் நல்ல படங்கள்
வரவில்லை என்றால் ரஜினிகாந்தை திட்டுவது வணிக வெற்றியை குறை சொல்வது போன்ற
போக்கு சரியானது அல்ல. வணிக சினிமா பக்கம் அவர்கள் யாரையும் கையைப்
பிடித்து இழுக்கவில்லையே..அரவிந்தனும் அடூர் கோபால கிருஷ்ணனும் பிரேம்
நசீரை திட்டிக்கொண்டே இருந்தார்களா என்ன? அவர்கள் தங்கள் வேலையை
செய்துகொண்டு தானே இருந்தார்கள்..! தமிழில் அம்ஷன் குமார் எடுத்த
'ஒருத்தி', ஜான் ஆபிரஹாம் எடுத்த 'அக்ரகாரத்தில் கழுதை' போன்ற படங்கள்
வந்தன. ஒன்றுமே இங்கு நடக்கவில்லை என்று சொல்ல முடியாது. எனவே தமிழ்
சினிமாவில் போதாமைகள் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.<br /><br /><strong>தீவிர சினிமா ஆர்வலர்களும் வணிக சினிமாவை வழி நடத்துபவர்களும் ஒரே நேர்கோட்டில் வர வாய்ப்பே இல்லையா? </strong><br /><br />இயக்குனர்
ஷங்கர் தரமான படங்களை தயாரிக்கிறார். பாலாஜி ஷக்தி வேலின் காதல், வழக்கு
எண் போன்ற படங்கள் வெகுஜன உரையாடல் சார்ந்த படங்கள் தான். வெகுஜன
மனோவியலுக்கு உள்ளே உள்ள படங்கள் அவை. அதைத் தாண்டிய படங்களுக்கு பணம்
போடுவது என்பது அரிதானது. வெகுஜன மனோவியலுக்கு உள்ளேயே நல்ல படங்கள்
தமிழில் வந்திருக்கின்றன. காதல்கொண்டேன், ஆடுகளம், காதல் போன்ற பல படங்கள்
முக்கியமானவை. அவை வெற்றிபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. அவற்றை பாராட்ட
நமக்கு மனம் வருவதில்லை. அப்படி செய்தால் வெங்கட் சாமிநாதன் திட்டுவாரோ
என்று யோசிக்க வேண்டியதில்லை. அவர் செய்வது தான் விமர்சனம் என்றில்லை.
விமர்சனம் என்பது வளர்ந்து வரும் ஒன்று. எனவே கூர்ந்து நோக்கி விமர்சனம்
செய்யும் திறனும் மொழியும் நமக்கு தேவை. அதை காட்சிப்பிழை திரை இதழ் மூலம்
செய்ய முயன்று வருகிறோம்.<br /><br /><strong>காட்சிப்பிழை திரை இதழ் மூலம்
தமிழ் சினிமா பற்றி தமிழ் வாசகர்கள் மத்தியில் என்ன மாதிரியான பார்வை தர
வேண்டும் என்று நினைக்கிறீர்கள்..?</strong><br /><br />முதலில் தமிழ்நாட்டில்
இருக்கும் தாழ்வு மனப்பான்மையை நீக்க வேண்டியிருக்கிறது.ஓ..தாழ்ந்த தமிழகமே
என்ற நினைப்பை மாற்ற முயற்சி செய்கிறோம்.சமீபத்தில் ஒரு சந்திப்பில்
பேசும்போது ஒருவர் தமிழ் சினிமா ஐ.க்யூ பற்றி கவலைப்படுவதில்லை என்றார்.
ஹாலிவுட்டில் அவ்வளவு செலவு செய்து இண்டிபெண்டன்ஸ் டே என்றொரு படம்
எடுத்தார்கள். பூமிக்கு வந்த ஏலியன்களை அமெரிக்க அதிபர் நேரடியாக சென்று
அழிக்கிறார். எத்தனை அபத்தமான படம். அங்கே கல்வியறிவு பெற்றவர்கள் அதிகம்.
அவர்கள் அந்த படத்தை ரசிக்கவில்லையா. இங்கே அறிவுக்கும் கேளிக்கைக்கும்
தொடர்பே இல்லை. சினிமா கண்டுபிடிக்கப்பட்டது பிரான்சில். பெரிய மாற்றம்
தந்தது இத்தாலி. நியோ ரியலிச பாணி படங்கள் தந்த பல இயக்குனர்கள் அங்கே
இருந்து வந்தவர்கள். இப்போது பாருங்கள் அங்கே எல்லாம் ஹாலிவுட் படங்கள்
தான் பார்க்கிறார்கள். இத்தாலியன் சினிமா என்று இப்போது இல்லவே இல்லை. அது
பற்றி யாருமே பேசுவதில்லை. இங்கே ஹாலிவுட் படங்களால் நம் படங்கள் முடங்கியா
போய்விட்டன? தமிழனுக்கும் தமிழ் சினிமாவுக்கும் இருக்கும் உறவு மிகவும்
பாராட்டுக்குரிய விஷயம். உலகில் வேறு எங்கும் இப்படி இல்லை. எனவே நம்
மக்களின் தாழ்வு மனப்பான்மையை போக்க வேண்டும் என்பது தான் காட்சிப்பிழையின்
நோக்கம். நிறைவேறுமா என்று தெரியவில்லை. என்றாலும் எங்களால் ஆனவரை முயற்சி
செய்கிறோம்.<br /><br /><strong>பொதுவாக இங்குள்ள சில இயக்குனர்கள் நடிகர்கள்
உலக சினிமா பற்றிய பார்வை கொண்டவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டாலும்
மீண்டும் மீண்டும் வணிக சினிமா வெற்றியையே நம்பி இருப்பதன் காரணம் என்ன? </strong><br /><br />அப்படி
சொல்ல முடியாது. முதலில் இது தொடர்பான மொழியை நாம் உடைக்க வேண்டி
இருக்கிறது. கமல் அன்பே சிவம் என்று ஒரு படம் எடுத்தார். உண்மையில் அது
அற்புதமான படம். அதை ஏன் கொண்டாட நம்மவர்களுக்கு மனம் வரவில்லை. குஜராத்
கலவரத்துக்கு பிறகு வந்த படம் அது . அதில் கிறித்துவ மதம் பற்றிய ஒரு
குறியீடு வரும். தலைப்பே அன்பே சிவம். மதங்களை கடந்து அன்பு என்றால் என்ன
என்று சொன்ன படம். யார் தீவிரவாதி, கம்யூனிசத்தின் வீழ்ச்சி,
முதலாளித்துவத்தின் எழுச்சி என்று பல விஷயங்களை உள்ளடக்கிய முக்கியமான படம்
அது. ஆனால் அதன் முக்கியத்துவத்தை யாரும் பேசவில்லை. அரவிந்தன் நீலகண்டன்
என்ற ஒரு ஆர்.எஸ்.எஸ், காரர் படத்தைப் பற்றி தீவிரமாக சிந்தித்து இந்த படம்
இந்து மதத்தை எப்படியெல்லாம் புண்படுத்துகிறது என்று விளக்கி எழுதினார்.
கம்யூனிஸ்டுகள் கூட படத்தை தீவிரமாக அணுகினார்களா என்று தெரியவில்லை. எனவே
நம்மிடம் நல்ல விஷயங்கள் நடக்கும்போது அதை கொண்டாடும் மனப்பக்குவம் நமக்கு
வரவேண்டும். அதைப் பேசுவதற்கான மொழி நம்மிடம் இல்லை எனது தான் உண்மை. காதல்
போன்ற படங்கள் மீடியாவால் முதலில் கொண்டாடப் படவில்லை. மக்கள் அந்த
படங்களுக்கு தந்த வரவேற்புக்கு பிறகு தான் மீடியா அந்த படங்களை
கொண்டாடியது.<br /><br /><strong>தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமா முழுவதிலும் அனுமதி இல்லாமல் நகலெடுக்கும் கலாசாரம் சர்வசாதாரணமாக காணப்படுகிறதே..</strong><br /><br />இந்த
விஷயத்தில் மூன்று வகை இருக்கிறது. Another version என்று ஒரு கான்செப்ட்
இருக்கிறது. சற்று மாறுபட்ட கதைகளில் ஒரே படம் வேறு மாதிரியாக
எடுக்கப்படுவது. அப்புறம் remake என்ற வகை. உதாரணத்துக்கு கிங்காங் படங்கள்
திரும்ப திரும்ப எடுக்கப்பட்டன,ஒரே கதையில். மூன்றாவது Adaptation. செவன்
சாமுராயைப் பார்த்து மேக்னிஃபிசியன்ட் செவன் படம் எடுக்கப்பட்டது ஒரு
உதாரணம். சினிமாவில் இவை ஏற்றுக்கொள்ளப்பட்டவை. சினிமாவின் பலம் என்று
கதையை மட்டும் பார்க்கக் கூடாது. எப்படி அது எடுக்கப்பட்டிருக்கிறது என்பது
தான் முக்கியம். எனவே இது போன்ற விஷயங்களை நகல் எடுத்தல் என்று பேசுவது
சரியல்ல. சட்டப்பூர்வமாக அது சரியா இல்லையா என்பது வேறு விஷயம். அவற்றை
நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும்.<br /><br /><strong>மானுடவியல் ஆய்வாளர்
என்ற வகையில் தமிழ்ச் சமூகத்தின் இன்றைய நிலை பற்றி என்ன
நினைக்கிறீர்கள்?தமிழ்நாட்டில் கலை இலக்கியம் சார்ந்த ரசனை எவ்வாறு
இருக்கிறது?</strong><br /><br />பொதுவாக உலகில் எல்லா சமூகமும் மோசமான
நிலையில் தான் இருக்கின்றன. தமிழ்நாட்டில் நான் பார்க்கும் நல்ல விஷயம்
இங்கே இருக்கும் அதிகாரப் பரவல், ஜனநாயகம் பற்றிய பார்வை இவை பற்றி
தமிழர்கள் பெருமைப்பட கற்றுக்கொள்ள வேண்டும். ஜனநாயகம் என்ற விஷயத்தை
தமிழர்கள் தான் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள். இந்தியா சுதந்திரம்
வாங்கிய பிறகு இந்த அறுபத்தைந்து வருடங்களில் தமிழ்நாட்டில் நல்ல விஷயங்கள்
பல நடந்துள்ளன. உலகில் இருக்கும் வேறு எந்த பிரதேசத்தை விடவும் தமிழகம்
பலவகைகளில் முன்னேறியுள்ளது. சிகாகோவில் நடக்கும் முறைகேடுகள், மாபியா
நடவடிக்கைகள் பற்றி இங்கு யாருமே எழுதுவதில்லை. தமிழ் நாட்டில் மட்டும்
தான் எல்லா ஜாதியினரின் பங்களிப்பும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.மற்ற
மாநிலங்களை விட தமிழ்நாடு நல்ல நிலையில் இருப்பதை பற்றி பேச ஆரம்பிக்க
வேண்டும். எனவே தாழ்வு மனப்பான்மையை முதலில் கைவிட வேண்டும். அமெரிக்காவில்
உள்ள மக்களின் அரசியல் அறியாமை பிரசித்தம். நம்மூரில் டீக்கடைகளில் கூட
அரசியல் பற்றி நிறைய பேசுவார்கள். அங்கு படித்தவர்கள் நல்ல வேலையில்
இருப்பவர்கள் கூட அரசியல் பற்றி சிறிதளவு பிரக்ஞை கூட இல்லாமல் இருப்பதை
பார்த்தேன். கார், சாப்பாடு, செக்ஸ் பற்றி மணிக்கணக்கில் பேசுவார்கள்.
அரசியல் என்று ஆரம்பித்துவிட்டால் உடனே அங்கிருந்து ஓடி விடுவார்கள். இங்கே
எவ்வளவோ பரவாயில்லை என்பதை சொல்ல வேண்டும். மானுடவியல் துறை இங்கிருந்து
ஆய்வாளர்களை அனுப்பி அமெரிக்க வாழ்க்கையை பதிவு செய்ய வேண்டியது தானே?
அவர்கள் இங்கு வந்து ஆய்வு செய்கிறார்கள் அல்லவா? நமக்கு அவர்களை விமர்சனம்
செய்ய தைரியம் வரவில்லையே..<br /><br /><br /><strong>தமிழக அரசியலில் திராவிட கட்சிகளின் தாக்கம் தேசிய அரசியலில் அதன் தாக்கம் இவை பற்றி சொல்லுங்கள்..</strong><br /><br />முக்கியமான
தாக்கம் தான். அதன் உள்ளடக்கம் சரியானது. ஆனால் அது சரியாக புரிந்து
கொள்ளப்படவில்லை. இந்தியா பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு. அதில் வாழும்
மக்களின் ஏற்றத்தாழ்வுகளை சரியாக புரிந்து கொண்டு தீர்வு காண்பது என்பது
முடியாத ஒன்று. எனில் ஒவ்வொரு மாநிலங்களிலும் தனிப்பட்ட முறையில் அரசியல்
கட்சிகள் உருவாகும்போதுதான் மக்களிடையே சமத்துவம் உருவாகும். பல
மாநிலங்கள் இருக்கும் இந்தியாவில் தனிப்பட்ட அடையாளம் சார்ந்த அரசியல்
உருவானால் தான் ஜனநாயகம் வலுப்படும். கூட்டாட்சி முறையில் தான் நமது
ஜனநாயகத்தை செழுமை படுத்த முடியும். ஆனால் இதன் மூலம் பிரிவினை வந்து
விடுமோ என்ற அச்சமும் உண்டு. இந்தியா முழுவதும் ஒரே மொழி, ஒரே கட்சி
என்பது தவறான கருத்து. இதனால்தான் ஹிந்தி திணிப்பு போன்ற விஷயங்கள் நடந்தன.
ஆனால் தமிழ் நாட்டில் அது சரியாக புரிந்து கொள்ளப் பட்டது. நாங்கள்
இந்தியாவில் இருக்கிறோம் ஆனால் நாங்கள் தமிழர்கள் என்ற தெளிவான பார்வை
இருக்கிறது. இந்த பார்வை கிட்டத்தட்ட இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும்
வரத் தொடங்கிவிட்டது. எதிர்காலத்தில் இது முழுமையாக இருக்கும்.
உத்தரகண்ட் தனிதான் ஜார்கண்ட் தனிதான் என்ற அரசியல் பார்வை தொடங்கிவிடும்.
எல்லா கட்சிகளும் , மாநிலங்களும் சேர்ந்த ஒரு கூட்டாச்சி இருக்கலாமே தவிர
அந்தந்த மாநிலங்களின் அரசியல் என்பது தனித்தனிதான். இதுதான் அறிவார்த்தமாக
இருக்கும். (sensible) ஆனால் தீடிரென்று எந்த மாற்றமும் இந்தியாவில்
வந்துவிடாது. அதற்கு நூறு வருடங்கள் ஆகலாம். தமிழ் நாட்டில் நடந்த அரசியல்
செயல்பாடுகள் தான் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக
இருக்கிறது. அந்த விதத்தில் திராவிட கட்சிகளின் தாக்கம் முக்கியமானது.
திராவிட இயக்கத்தில் பல பலவீனங்கள் இருக்கிறது. எல்லா கட்சிகளிலும்
பலவீனம் இருக்கிறது. பலவீன இல்லாத கட்சி என்பது கற்பனையான ஒன்று. ஆட்சிக்கு
வராத கட்சியை வேண்டுமானால் அப்படி கூறலாம். ஆட்சிக்கு வந்துவிட்டால்தான்
தெரியும். மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் சென்று CPM பற்றி கேட்டால்
தான் தெரியும். அவர்கள் எப்படியென்று. அதிகாரத்திற்கு வந்துவிட்டால் தான்
நல்லவர்களா கெட்டவர்களா என்று தெரியும். ஒப்பிட்டு முறையில் ஆட்சியை
மதிப்பிடலாம். எனக்கு தெரிந்த நண்பர்கள் இதனை செய்கிறார்கள். பிரேர்னா
சிங் என்பவர் இதை போல ஒரு ஆய்வை செய்தார். வட மாநிலங்கள் இரண்டையும்
தென்மாநிலங்கள் இரண்டையும் எடுத்து கொண்டு ஆய்வு செய்தார். அதில் தமிழ்
நாடும் கேரளமும் பலமடங்கு வட மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம்
ஆகியவற்றை காட்டிலும் ஜனநாயக ரீதியில் முன்னேறி இருக்கிறது. அந்த ஆய்வாளர்
political science இல் அதற்க்கான சில அலகுகளை வைத்து செய்தார்கள். அதில்
தென் மாநிலங்கள் இரண்டும் வடமாநிலங்கள் இரண்டைக் காட்டிலும் நல்ல
முன்னேற்றத்தில் இருப்பதாக கண்டறிந்திருக்கிறார். கேரளாவைப் பொறுத்த அளவில்
அங்கு கல்வியின் காரணமாக அந்த முன்னேற்றம் இருப்பதாக கூறுகிறார். தமிழ்
நாட்டை பொறுத்த அளவில் திராவிட அரசியல் ஒரு முக்கிய காரணம் என்கிறார்.
நானும் அதைப் பற்றிய ஆய்வில்தான் இருக்கிறேன். ஆனால் முக்கிய காரணமாக மாநில
அரசியலைத்தான் கூறுவேன். மாநில அரசியல் தான் ஜனநாயக சிந்தனையை
பலப்படுத்துகிறது. ராஜஸ்தானில் என்ன மாநில உணர்வு இருக்கிறது? அங்கு ஹிந்தி
தான் பேசுகிறார்கள். பழமையான மரபை கொண்டது அந்த மாநிலம். <br /><br /><strong>தமிழ் நாட்டின் இந்த அரசியல் விழிப்புணர்வுக்கு கல்வி எந்த அளவுக்கு கரணம் என்று கருதுகிறீர்கள்? </strong><br /><br />கல்வி
விழிப்புணர்வு இருக்கிறது, ஆனால் இன்று ஊடகங்கள் அதில் முதன்மை
பெறுகின்றன. இன்று அச்சு ஊடகம் என்பது பின்னடைந்து விட்டது. மாறாக காட்சி
ஊடகங்கள் முன்னுள்ளன. எடுத்துக்காட்டாக தொலைக்காட்சி. இன்று புதிய தலைமுறை
இருக்கிறது. அதில் எல்லாமும் விமர்சிக்கப்படுகிறது. எல்லாவற்றைப்
பற்றியும் பேசுகிறார்கள். அதைப் பார்த்தாலே போதுமே. ஆனால் கல்வி எத்தனை
முக்கியம் என்பதற்கு சில உதாரனங்களும் இருக்கின்றன. காமராசர் கொண்டுவந்த
கல்வித் திட்டங்களினால் பயனடைந்தவர்கள் எத்தனயோ பேர். சிலர் காமராசர்
பெயர் சொல்லியே அவர் தான் தான் கல்வி கற்பதற்கு காரணம் என்று சொல்லி
கேட்டிருக்கிறேன். <br /><br /><strong>மரண தண்டனை குறித்தான உங்கள் பார்வை
என்ன? குற்றங்களுக்கு தண்டனை அவசியம் என்ற வகையில் எந்த அளவுக்கு
குற்றவாளிகளுக்கு தண்டனை தரப்படலாம்?</strong><br /><br />இதைப்பற்றி நிறைய
இடங்களில் கட்டுரையாகவும் பேசியும் நான் பதிவு செய்திருக்கிறேன்.
Retributive justice என்று ஒன்று உண்டு. Retributive என்றாலே ஒருவர் செய்த
தவறுக்கு அதேபோல வலிக்கும் படியாக தண்டனை கொடுப்பது. இன்று தண்டனை என்பது
குடும்பத்திலிருந்து பிரித்து வைப்பது, சிறைச்சாலையில் போடுவது என்று
இருக்கிறது. அவனை தனிமை படுத்துவதன் மூலம் அவமானப்படுத்துவதன் மூலம் ஒரு
பயத்தை உண்டாக்குவது. இதுதான் Retributive. இதற்கு ஒரு எல்லை இருக்கிறது.
இந்த நாட்டில் ஒரு நாகரிகம் இருக்கிறது. அதாவது கொல்லாமை. மனிதனை மனிதன்
கொல்வதோ, அல்லது மனிதனை அரசாங்கம் கொல்வதோ இருக்கக் கூடாது. ஆனால் மனிதனை
அரசாங்கம் கொல்லலாம் என்பது இங்கு ஒரு முரண். மரண தண்டனை என்பது அரசாங்கம்
செய்யும் கொலை. நாகரீகம் என்று சொல்லிக் கொள்கிறோம். தூக்கில் போடுவதும்,
கை, கால் காலை வெட்டுவது என்பது எப்படி நாகரீகம் அடைந்த ஒரு சமூகத்தில்
நடக்கும் தண்டனையாக இருக்க முடியும். நாகரீகம் என்ற பெயரால் தான் நம் இன்று
அறிவியல் போன்ற விசயங்களில் முதன்மை பெறுகிறோம். சுற்றுச் சூழலைப் பற்றி
கவலை கொள்ளாமல் ஏவுகணைகள் விடுகிறோம். ஆனால் நாகரீகம் என்ற பெயரால்
அரசாங்கம் மரதண்டனை வழங்க முடியும் என்று சொன்னால் அது எப்படி நாகரீகம் ஆகா
முடியும்? எது ஒரு முரண். தவறு செய்வதை தடுக்கலாம். அவன் திருந்துவதற்கு
சந்தர்ப்பமோ கொடுக்கலாம். ஆனால் மரண தண்டனை என்பது அதீதமானது. ஒருவரை
ஒருவர் மனிதர்கள் வெட்டிக் கொள்வது இருந்திருக்கிறது. அது உணர்ச்சி
வசப்பட்டு செய்வது. அது குரூரமானது . மனிதன் ஒரு விலங்கு என்பதால் அதை
தடுக்க முடியாமல் வரலாற்றில்இருந்து வந்திருக்கிறது. ஆனால் நீதியின்
பெயரால் ஒருவனை தூக்கில் போடுவது அதே போல மிக கொடுமையானது. இது இந்தியா
போன்ற நாட்டில் இருப்பது ஏற்க முடியாதது. காந்தி வாழ்ந்த நாட்டில்
அவருக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். மரண தண்டனையை எதிர்த்து இன்னும்
ஒருமித்த குரல் வரவில்லை என்பது துரதிஷ்டவசமானது. மரணதண்டனை இந்தியாவில்
இருப்பது தவறானது. ஒருவர் வாழ்வைப் பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது.<br />
<div style="text-align: justify;">
<strong>உலக வெப்பமயமாதல் குறித்த கருத்துகளை பதிவு செய்திருக்கிறீர்கள். அது தொடர்பாக அரசும் மக்களும் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன? </strong><br /><br />சிந்தனையில்
ஒரு மற்றம் வந்தால் தான் இதை சரி செய்ய முடியும். ஒரு அவசர நிலையில்
இருக்கிறோம். வீடு பற்றி எரியும் போது நாம் வெளிப் பூச்சு செய்ய முடியாது.
அதை போல மனித வாழ்க்கை முறையில் மாற்றம் வந்தால் தான் உலக வெப்பமயமாதலை
தவிர்க்க முடியும். வேறு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் அதிகாரம் இப்போது
முதலீட்டியத்தின் கையில் தான் இருக்கிறது. வளர்ச்சி தான் அரசியல் என்றாகி
விட்டது. வளர்ச்சி அளவு எவ்வளவு இருக்கிறதோ அதை பொறுத்துதான் அரசியல்
இருக்கிறது. உலக வெப்பமாதலை பற்றி தலைவர்கள் ஒன்று கூடி பேசினார்கள்.
ஆனால் ஒன்றும் நடக்க வில்லை.பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதிப்
போலத்தான் அது. எல்லோருக்கும் பொருளாதாரம், வளர்ச்சி தான் முக்கியம்.
வளர்ச்சிதான் இன்று ஒரே மொழி.</div>
<div style="text-align: justify;">
<strong>செயல்பாட்டு
அளவில் தொழிலாளர்களுக்கான உரிமைகள் கிடைத்து விட்டன என்று
நினைக்கிறீர்களா? இந்தியாவின் தொழில் நிறுவனங்களில் தொழிலாளர் நிலை எவ்வாறு
இருக்கிறது?</strong><br /><br />கடந்த 15, 20 வருடங்களில் பெரிய பின்னடைவு
தான். முதலில் ஜிந்தாபாத் போன்ற முழக்கங்கள் இருந்தன. அப்போது ஒரு
உள்ளடக்கம் இருந்தது. ஆனால் அதற்க்கு பிறகு நடந்தது எல்லாம் ஏமாற்று
வேலைதான். அடிப்படி தொழில் செய்பவர்கள் எல்லோரும் சுரண்டப் படுகிறார்கள்.
ஆனால் அவர்களுக்கு அந்த சுரண்டலே போதுமானது என்று நினைக்கும் அளவுக்கு
அவர்கள் பொருளாதார நிலை இருக்கிறது. குறிப்பாக தலித் மக்கள் நிலை. குறைந்த
கூலி பெறுகிறார்கள் என்பதுடன் குழந்தைகள் படிப்பு மற்றும் தங்கும் இடம்
எல்லாம் மோசமாக இருக்கிறது. ஆனால் முந்தைய நிலையைக் காட்டிலும் இது
முன்னேற்றம் என்று அவர்கள் நினைக்குமளவு நிலை இருக்கிறது. இன்று மோசமாக
சுரண்டலுக்கு தொழிலாளர்கள் ஆளாகிறார்கள். இதை எந்த தொழிலாளர் சங்கம் கேள்வி
கேட்கப் போகிறது? தொழிலாளர்களை சுரண்டி பெரிய கட்டுமானங்கள் உருவாகின்றன.
எல்லோரும் ஒரு ரகசிய உடன்பாட்டில்தான் இந்த வேலையை செய்கிறார்கள். யாரும்
இதைப் பற்றி பேசக்கூடாது என்று இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட்கள் கூட அதை
செய்வதில்லை. அவர்களால் தொழிலாளர்களை ஒன்று திரட்ட முடிவதில்லை. அசாமில்
உள்ளவர்கள் இங்கு வருகிறார்கள் இங்கு உள்ளவர்கள் உத்திர பிரதேசத்தில் வேலை
செய்கிறார்கள். சொந்த மாநிலத்தில் மொழி தெரிந்தவனை அடிமையாக்க முடியாது.
வேற்று மாநிலத்தவனை அதனால் அடிமையாக்கி வேலை வாங்குகிறார்கள். இவர்கள்
பெரும்பாலும் தலித்கள் அல்லது அவர்களைப் போன்றே பொருளாதார நிலைமையில்
பின்தங்கிய பிற்படுத்தப்பட்டவர்கள். இவர்களை ஒன்று திரட்ட தொழிற்சங்கங்கள்
இல்லை. அவை தமது செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டன. முதலாளித்துவத்தின்
செயல்பாடே தொழிலாளர்களை சுரண்டுவது தானே.. அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<strong>மானுடவியல்
ஆய்வு தொடர்பாக பல்வேறு பிரதேசங்களில் தங்கியிருப்பீர்கள். தனி மனித
வாழ்வு பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபடுவது எவ்வாறு என்று சொல்லுங்களேன்..</strong><br /><br />ஒரு
சமூகம் உயர்ந்தது ஒரு சமூகம் தாழ்ந்தது என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு
ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. மேற்கத்திய சமூகத்தை பொறுத்த அளவில்
அங்கு தனிமனித வாழ்வு என்பது முக்கியத்துவம் பெறுகிறது. அனால் அங்கே
தனிமனித வாதத்தினால் மிகப் பெரிய சிக்கல் வந்திருக்கிறது. பெரிய வெறுமையும்
தேக்கமும் இருக்கிறது. அவர்களை பற்றிய மானிடவியல் ஆய்வு செய்யும்
அளவுக்கு நாம் இன்னும் முயற்சி எடுக்கவில்லை. எடுக்க வேண்டும்.
அப்போதுதான் நமக்கு பல உண்மைகள் தெரிய வரும். இங்கு உள்ள பண்பாட்டு
விழுமியங்கள் தனித்துவமானவை. இங்கு சாதி, ஆண் மைய சமூகம் என்று பல
பிரச்சனைகள் இருக்கிறது. இங்கு உள்ள தனிப்பட்ட அம்சங்களில் இன்னும்
தனிமைப் பட்ட மனிதர்களாக இல்லாமல் இருப்பது , எளிதாக ஒன்று கூடுவது என்று
பல அம்சங்கள் இருக்கிறது. அதனை காப்பாற்றுவது முக்கியம்.மேற்கத்திய
முதலீட்டிய சமூகங்களில் மிகவும் தனிமைப் படுத்தல்கள் இருக்கிறது. அதை
இங்கு பார்ப்பது கடினம். ஆனால் அது இங்கும் சீக்கிரம் நடக்கும். ஏனெனில்
வளர்ச்சி என்பது தான் முக்கியம்; பணம் சம்பாதிப்பது தான் முக்கியம் என்ற
சிந்தனை வந்து விட்டது. மேற்கத்திய நாடுகளில் துப்பாக்கி எடுத்து பள்ளி
மாணவன் சுடுகிறான். இங்கு மாணவன் கத்தி எடுக்கிறான். படித்து பணம்
சம்பாதிப்பது தான் முக்கியம் என்று நினைக்கும் போது நிலைமை இப்படித்தான்
மாறும். பெருமாள் முருகன் போன்றோர் இதை பற்றி நிறைய எழுதுகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<strong>கூடங்குளம்
விஷயத்தில் மத்திய மாநில அரசுகளின் நிலைப்பாடுகளும் அங்கு நிறுவப்படும்
அணு உலைக்கு எதிரான போராட்டங்களும் பற்றிய உங்கள் பார்வை என்ன? அங்கு அணு
உலையைத் தொடங்க வேண்டும் என்றே செயற்கையான மின்வெட்டை அரசு
செயல்படுத்துவதாக வெளியாகும் செய்திகள் பற்றி..</strong><br /><br />எனக்கும்
இந்த சந்தேகம் இருக்கிறது. ஆனால் செயற்கையான மின் தட்டுப்பாடு என்பதற்கு
எந்த விதமான ஆதாரமும் கிடையாது. என்றாலும் கூடங்குளம் போராட்டம் இடையில்
நிறுத்தினார்கள். அப்போது மின்சார தட்டுப்பாடு கொஞ்சம் குறைந்தது. 8 மணி
நேர மின் வெட்டு 4 மணி நேரமாக ஆனது. கூடங்குளம் அணுமின் நிலைய
எதிர்ப்புக்கு ஆதரவு பெருகக் கூடாது என்பதற்காக இந்த மின்வெட்டு தொடர்கிறதா
என்று கூட நினைக்க தோன்றுகிறது. ஒவ்வொரு ஊரிலும் மக்கள் கூடங்குளத்திற்கு
ஆதரவாக போராட தொடங்கிவிட்டால் அரசியல் கட்சிகள் அதை விரும்பாது. ஆளும்
வர்க்கமும் விரும்பாது. சிறிது காலம் சென்ற பிறகு நீதிமன்றங்கள் அந்த 17
அம்ச பாதுகாப்பு குறித்து ஏதாவது ஆலோசனைகள் கூறலாம். அதற்குள் தமிழக அரசு
தான் சொன்னது போல 500 கோடி செலவில் மக்கள் நலத் திட்டங்களை
செயல்படுத்தினால் கூட எதிர்ப்பு போராட்டம் நின்று விடும் என்று சொல்ல
முடியாது. இந்த நிலையில் அங்கு அணு மின் நிலையம் திறக்கப்படலாம்.
கூடங்குளத்தை நிறுத்தவும் அரசு முடிவெடுக்காது. அதற்காக அந்த மக்களை
ஒடுக்கவும் முடியாது. எனவே பொறுத்திருந்து ஏதாவது தந்திரங்களை செய்துதான்
அரசு இதை செய்யும் . அந்த பகுதி மக்கள் இதனை எதிர்கொள்ள விழிப்புணர்வு
பெற்றிருக்கிறார்கள் என்பது நிச்சயம்.</div>
<div style="text-align: justify;">
<strong>ஆய்வு மற்றும் எழுத்து தொடர்பாக எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?</strong><br /><br />இது
மிகவும் சிக்கலான கேள்வி. தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைய எழுத வேண்டும்.
ஆனால் நிறைய திட்டங்கள் இருப்பதினால் தெளிவான முடிவுக்கு இன்னும்
வரவில்லை. நான் கடந்த 3 வருடங்களாக வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஆய்வில்
இருக்கிறேன். கடந்த 2 வருடங்களாக தலித் மக்களின் வளர்ச்சி எப்படி
இருக்கிறது என்பது தொடர்பாக கள ஆய்வில் இருந்தேன். படிக்கவும் செய்தேன்.
இது தொடர்பாக புத்தகம் அல்லது கட்டுரை எழுத வேண்டும் . தமிழிலும்
ஆங்கிலத்திலும் முக்கியமாக கிருத்துவ தலித்துகள் பற்றி எழுத வேண்டும்.
அதைப் பற்றி பல படித்திருக்கிறேன். இது அவசியம் செய வேண்டிய வேலை. இவை தவிர
சினிமா மற்றும் அரசியல் பற்றியும் எழுதுகிறேன். மிக தாமதமாக எழுத்து
உலகில் வந்ததினால் எழுத்தில் வேகம் குறைவு. 93 இல் பெரியார் பற்றிய கட்டுரை
ஒன்றை எழுதினேன். அதன் பிறகுதான் எழுதவேண்டும் என்ற எண்ணம்
பிறந்தது.நாடகம் போடுதல், திரைப்பட சங்கம் என்ற நடவடிக்கைகளில்
இருந்ததினால் எழுத வேண்டும் என்று யோசிக்கவில்லை. நிறைய எழுத வேண்டும் என்ற
எண்ணமும் இருக்கிறது; செய்திகளும் இருக்கின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://www.thesundayindian.com/ta/story/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/34/2899/">- த சன்டே இந்தியன் நேர்காணல்</a> </div>
</div>
chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-56724747150048886842012-10-14T11:30:00.003+05:302012-10-14T12:02:12.223+05:30கல்லாப்பெட்டி: நிறைந்த நகையுணர்வு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdX51AeAx7RB5EvgJLQhiXwlX1Miw2yvTY-rAz0aFc0IQx4m1VSJWMOqvkXVbiIifFK-Pl9-DPCvOjkwtREZLvSk_AGRTumks8JhUB2Dd4eEWmJU7hyphenhyphenMmO-562xmak6JrLux3bhyQHUlQ/s1600/vlcsnap-2012-10-14-11h23m45s202.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="184" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdX51AeAx7RB5EvgJLQhiXwlX1Miw2yvTY-rAz0aFc0IQx4m1VSJWMOqvkXVbiIifFK-Pl9-DPCvOjkwtREZLvSk_AGRTumks8JhUB2Dd4eEWmJU7hyphenhyphenMmO-562xmak6JrLux3bhyQHUlQ/s320/vlcsnap-2012-10-14-11h23m45s202.png" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">கறுத்து மெலிந்த தேகம், திகிலடைந்த ஆனால் சுயதைரியம் அளித்துக் கொள்வதன்மூலம் திடீர் பிரகாசமடையும் கண்கள், திறந்த வாய், தோரணையான நடை என்ற அடையாளங்களுடன் நகைச்சுவை கலந்த குணச்சித்திரப் பாத்திரங்களில் வலம் வந்தவர் கல்லாப்பெட்டி சிங்காரம். காணாமல் போன குட்டியை தேடும் ஆடு தமிழில் பேசி அழைத்தால் வரும் குரல் அவருடையது. எண்பதுகளில் அவர் பங்கேற்ற படங்களில் நகைச்சுவை ஏரியாவை கலகலக்க செய்தவர்.</span><span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;"> </span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">தமிழ் வணிக சினிமாவின் வெற்றிகரமான திரைக்கதையாளரான பாக்யராஜ் முதன் முதலில் இயக்கிய சுவர் இல்லாத சித்திரங்களில் கல்லாப்பெட்டி சிங்காரத்தை அறிமுகம் செய்தார். அந்தப் படத்தின் டைட்டில் இதை சொன்னாலும் கிட்டத்தட்ட நாற்பது வயதைத் தாண்டி அவர் சினிமாவில் வந்திருக்க முடியாது என்று தோன்றுகிறது. அறுபதுகளிலேயே மோட்டார் சுந்தரம்பிள்ளை போன்ற படங்களில் சிறு வேடங்களில் சிங்காரம் வந்திருந்தாலும் முக்கியத்துவம் பெற்ற வேடம் என்ற வகையில் இது தான் முதல் படம் என்பதால், ஒருவேளை அறிமுகம் என்று பாக்யராஜ் குறிப்பிட்டிருப்பார் போலும். சில இயக்குனர்களுக்கு என்று கம்பெனி ஆர்டிஸ்ட் மாதிரி சில நடிகர்கள் உண்டு.பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சின்ன சின்ன வேடங்கள் அவர்களுக்குத் தொடர்ந்து தருவார்கள். மகேந்திரனுக்கு சாமிக்கண்ணு, குமரிமுத்து, வெண்ணிறாடை மூர்த்தி. பாரதிராஜாவின் பல படங்களில் அவரது உதவியாளர்கள் எங்காவது தலைகாட்டிக் கொண்டே இருப்பார்கள். பாலுமஹேந்திரா படங்களில் பெரியவர் சொக்கலிங்க பாகவதர் அடிக்கடி வருவார். அது போல் பாக்யராஜ், சிறு வேடம் என்றாலும் கதையுடன் ஒட்டிய பாத்திரங்களை கல்லாப்பெட்டிக்கு தன் பல படங்களில் தந்தார். அவரை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரே இயக்குனர் பாக்யராஜ் தான் என்று சொல்லவேண்டும். அவர் இயக்கிய சுவரில்லாத சித்திரங்கள், ஒரு கை ஓசை, டார்லிங் டார்லிங் டார்லிங், இன்று போய் நாளை வா போன்ற படங்களில் கல்லாப்பெட்டி ஏற்று நடித்தப் பாத்திரங்கள் தனித்த நகைச்சுவைக்காக இன்றும் பேசப்படுகின்றன. </span><span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;"></span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
</span>
<div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">சோகமயமான க்ளைமாக்ஸ் கொண்ட சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் முதல் பாதி முழுவதும் நகைச்சுவையால் நிரம்பியிருக்கும். கல்லாப்பெட்டி சிங்காரம், காந்திமதி இவர்களுடன் கவுண்டமணியும் நடித்திருந்த அந்தப் படத்தில் சிறு நகரம் ஒன்றில் வாழும் மனிதர்களின் அன்றாட நிகழ்வுகளில் தெறிக்கும் நகைச்சுவைத் தருணங்களை மிக இயல்பாகக் காட்டியிருப்பார் பாக்யராஜ். அமெச்சூர் நாடகம் போடும் கதாநாயகனின் அப்பாவாக காக்கி டவுசரும் கைவைத்த பனியனும் அணிந்து படம் முழுக்க வருவார் கல்லாப்பெட்டி . வெளியிடங்களில் சரளமாகப் பேசி சிரித்தாலும் மனைவியைப் பார்த்ததும் சப்த நாடியும் அடங்கி நிற்கும் பாத்திரம் அவருக்கு. கவுண்டமணியின் கடையில் உட்கார்ந்து "கண்ணடிச்சா வராத பொம்பளை..கையப் புடிச்சி இழுத்தா மட்டும் என்ன வந்துடவா போறா?" என்று கேட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் காந்திமதி வந்து நிற்க வெலவெலத்துப் போய் அவரைப் பார்க்கும் காட்சியில் தியேட்டர் சற்று இடைவெளி விட்டு சிரித்து மாயந்திருக்கும். படத்தில் பாக்யராஜ் நடத்தும் நாடக ஒத்திகையின் போது நடிகையின் அம்மாவை சைட் அடித்து பாக்யராஜை வெறுப்பேற்றுவார். அந்த அம்மாவுக்கு கலர் வாங்கிக் கொடுப்பார். அந்தப் படத்தில் மறக்க முடியாத பல நகைசுவு காட்சிகள் உண்டு. கவுண்டமணி, கல்லாப்பெட்டி சிங்காரம் இருவரும் வெவ்வேறு வகைகளில் பாக்யராஜை வெறுப்பேற்றுவார்கள். சரியாக நடிக்க வராத ஒருவனை 'தகுதி நீக்கம்' செய்து விட்டு தானே அந்த பாத்திரத்தை பாக்யராஜ் நடிதுக்காட்டும்போது கவுண்டமணி அந்த நடிகரிடம் சொல்வார், " அவென் நடிப்புக்கு ஒன்நடிப்பு எவ்வளவோ தேவலை!" போதாதக் குறைக்கு சொந்தத் தந்தை இப்படி நடிகையின் அம்மாவிடம் வழிவதைக் கண்டு நொந்து விடுவார் பாக்யராஜ். அந்தக் காட்சியில் மகனின் கண்டிப்புக்கு பயந்தாலும் தன் காதல் உணர்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத பாத்திரத்தின் பாவனைகளை அருமையாகச் செய்திருப்பார் கல்லாப்பெட்டி சிங்காரம். </span><span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;"></span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
</span>
<div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">எண்பதுகளில் குறிப்பிட்ட சில இயக்குனர்களால் கீழ் மத்தியத் தர மக்களின் வாழ்க்கை திரையுலகில் அசலாய் கொண்டு வரப்பட்டபோது எதார்த்தமான முகம் கொண்ட புதிய நடிகர்களின் வருகை முக்கியத்துவம் பெற்றது. அன்றாடம் எதிர்ப்படும் முகங்கள் அறிமகமான சமயத்தில் திரையில் தோன்றிய கல்லாப்பெட்டி மிக அருமையாக அந்த மக்களின் வாழ்க்கையை திரையில் பிரதிபலித்தார். எளிய மக்களின் மொழியை திரைக்கு ஏற்றவாறு சற்று மெருகேற்றிப் பேசி நடித்த நடிகர்களில் அவரும் ஒருவர். முதல் படத்தில் மனைவிக்கு அடங்கி நடக்கும் பாத்திரத்தில் நடித்த அவருக்கு பின்னாளில் தோரணையான குஸ்தி வாத்தியார் வேடம் கொடுத்தார் பாக்யராஜ் . மனிதர் அதிலும் வெளுத்து வாங்கினார். </span><span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;"></span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
</span>
<div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">தமிழில் வந்த நகைச்சுவைப் படங்களில் மிக முக்கியமானப் படமான 'இன்று போய் நாளை வா' வில் அவர் செய்த பாத்திரம் இன்று வரை யாராலும் பிரதி கூட எடுக்க முடியாதது. உடற்பயிற்சி ஆசிரியர்களின் உடல்மொழியை உள்வாங்கிக்கொண்டு அதை இயல்பாக அதே சமயம் நகைச்சுவை கலந்து நடித்து அந்தப் பாத்திரத்தை மெருகேற்றினார். படத்தில் ராதிகாவை காதலிக்கும் வெங்கிட்டு, அதற்காக ராதிகாவின் தாத்தா கல்லாப்பெட்டியைக் கவர முடிவு செய்து அவரைப் பற்றி அந்த ஏரியாவின் துணி வெளுக்கும் தொழிலாளியிடம் விசாரிக்கும் காட்சி குறிப்பிடத்தக்கது. அந்தத் தொழிலாளி சொல்வார் "காலையிலயும் சாயங்காலமும் இந்தாளு லொங்கு லொங்குன்னு ஓடுறாரு..எங்கே ஓடுறாரு..எதுக்கு ஓடுறாரு ன்னே புரியல". திருச்சி நகரத்தில் இருந்து உடுமலைப்பேட்டை போன்ற டவுனுக்குள் குடிவந்த பயில்வான் ஜாகிங் செய்யும் விஷயம் அந்தூர் தொழிலாளிக்கு எப்படித் தெரியும்? அப்பாவித்தனமான அதே சமயம் குறும்பான அந்த விவரிப்பு வார்த்தைகளாக செல்லும்போதே கல்லாப்பெட்டி 'எங்கோ' ஓடிக்கொண்டிருக்கும் காட்சி விரியும். இயக்குனரின் புத்திசாலிதனமான காட்சியமைப்பு என்றாலும் அதற்கு முன் கல்லாப்பெட்டி சிங்காரம் ஒரு கண்டிப்பான ஆனால் நகைப்பு தரக்கூடிய பாத்திரம் என்று பார்வையாளர்களுக்கு முன்கூட்டியே பதிவாகி இருப்பதால் அந்தக் காட்சி இன்றும் வெடிச் சிரிப்பைப் பார்வையாளர்களிடம் தோற்றுவிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. </span><span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;"></span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
</span>
<div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">அவரை அடிக்க அடியாட்கள் ஏற்பாடு செய்து 'காப்பாற்ற' வெங்கிட்டு காத்திருக்க, கல்லாப்பெட்டி அந்த உள்ளூர் ரவுடிகளை பந்தாடும் காட்சியில் அவரே சண்டையிட்டு நடித்திருப்பார் போலும் . பாய்ந்து பாய்ந்து அவர் தரும் உதை தாளாமல் ரவுடிகள் அவரைக் கையெடுத்துக் கும்பிட்டு தலைதெறிக்க ஓடும் காட்சி அபாரமான ஒன்று. தன்னை சந்திக்க வந்து விட்டு தன் பேத்தி ராதிகாவிடம் விடைபெறும் வெங்கிட்டுவிடம் ' ஏன் எனக்கு பை சொல்லலை?' என்று அதட்டுவார். 'சாரி ஸார்..பை ஸார்' என்று பம்மி விடைபெறும் அவனிடம் 'ஓக்கே பை..ஓக்கே பை' என்பார் பிரகாச முகத்துடன். தன்னை மதித்து விடைபெற்ற குதூகலத்தில் நாற்காலியில் அமர்ந்து கொண்டே கைகளை முழங்கால்களில் பெருமையுடன் வைத்து கண்களை மகிழ்ச்சியுடன் உருட்டுவார். காமா பயில்வானின் ஒரே சிஷ்யன் சோமா பயில்வானான தனக்கு உரிய மரியாதையை மிரட்டியாவது வாங்கி விடும் பாத்திரம் அது. அதற்கு அத்தனை நியாயம் செய்யும் நடிப்பு கல்லாப்பெட்டியுடையது. </span><span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;"></span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
</span>
<div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">தன்னிடம் குஸ்தி கற்க வைத்தவனை தலைகீழாக நிற்கவைத்து வயிற்றில் குத்தி அவனைப் படாத பாடு படுத்தும்போது முகத்தில் இருக்கும் கண்டிப்பு. அத்தனை தோரணையுடன் அதிகாரம் செய்யும் அவர் தன்னிடம் 'பாடம்' கற்ற மாணவனிடமே அடிவாங்கிப் பிச்சைக்காரனைப் போல் வரும் காட்சியில் அவரது உடல்மொழி அனாயாசமாக இருக்கும். 'நீ நாசமாகப் போக' என்று யாரிடமும் எரிந்து விழுந்தாலும் எதிராளி வாய் விட்டு சிரித்துவிடும் வகையிலான நகைப்பூட்டும் குரல் அவருக்கு. எனவே அந்தக் காட்சி நகைச்சுவையின் உச்சத்துக்குக் கொண்டு செல்லும். ராதிகாவை காதலித்து ஏமாந்த மற்றொரு வாலிபன் ராஜேந்திரனிடம் (புகழ் பெற்ற 'ஏக் காவ் மேய்ன் ஏக் கிஸ்ஸ்ஸ்ஸ்ஸான்' வசனம் நினைவிருக்கும்!) அடிபட்டு கட்டிலில் படுத்திருக்கும் தன் ஹிந்தி பண்டிட் மருமகனைப் பார்த்து ' இவன் அந்தப் பயல அந்தத் தூண்ல வச்சி ச்சொத்து ச்சொத்து னு மோதும்போதே நெனச்சேன்..இப்படி ஏதாவது நடக்கும்ன்னு' என்று சொல்வார். வார்த்தைகளை கடித்து அவர் உச்சரிக்கும் விதம் சிறப்பாக இருக்கும். பிற நடிகர்களிடம் இருந்து நகைச்சுவை நடிகர்கள் பார்வையாளனை நெருங்கி வரக் காரணம், எழுதப்பட்ட வசனங்களை அப்படியே ஒப்பிக்காமல், சாதாரண மக்களின் மொழியிலேயே பேசி நடிப்பதால் தான். சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்துப் படங்களில் நாயகர்கள் "கடவுளே..இவ்வாறு நடந்து விட்டதே... இனி என் எதிர்காலம் என்ன ஆகுமோ?" என்று தூய தமிழில் துக்கப்படும்போது நகைச்சுவை நடிகர்கள் "அட இதுக்கெல்லாம் கவலைப்படாதய்யா..எல்லாம் கூடிய சீக்கிரம் சரியாப்போவும்" என்று எளிய வார்த்தைகளில் ஆறுதல் தருவார்கள். முக்கியத்துவம் பெற்ற நடிகர் இல்லையென்றாலும் கல்லாப்பெட்டி சிங்காரம் இன்றும் நினைவுகொள்ளப்பட அவரது வசன உச்சரிப்பும் முகபாவனையும் பிரத்யேகக் குரலுமே காரணம். </span><span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;"></span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
</span>
<div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் இன்னும் உச்சமாக என்னியோ மோரிக்கொன் இசையமைத்த த குட் த பேட் த அக்லி தீம் இசை பின்னணியில் ஒலிக்க குளியல் தொட்டியில் இருந்து கம்பீரமாக எழுந்து சென்று கோட் சூட் அணியும் காட்சியில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த புதுப் பணக்காரர் போலவே இருப்பார். அடுத்த காட்சியில் அவர் வெறும் வாட்ச்மேன் தான் என்று பார்வையாளர்களுக்குப் போட்டு உடைத்து விடுவார் மகன் பாக்யராஜ். " அப்பா..மொதலாளி கோட்டை போட்டு சேரில் உக்காந்தாலும் நீ வாட்ச்மேன் தான்" என்று சொல்லும்போது குட்டுடைந்த கல்லாப்பெட்டியின் முகபாவனை சிறப்பாக இருக்கும். உண்மை தான் என்றாலும் 'அதுக்கென்ன' என்பது போலும் ஒரு பார்வைப் பார்ப்பார் முழித்துக் கொண்டே. அந்தப் படத்தில் மகன் முதலாளியின் மகளைக் காதலிக்க வேண்டுமே என்று எதிர்பார்க்கும் அல்ப அப்பா பாத்திரத்தை தன் நடிப்பால் மிளிரச் செய்தார். மகனுக்கும் முதலாளி மகளுக்கும் திருமணம் நடக்கும் என்ற பெரு நம்பிக்கையில் சேட்டிடம் கடன் வாங்கி விடுவர் கல்லாப்பெட்டி. ஏற்கனவே கடன்வாங்கி சேட்டிடம் 'கைதியாக' இருக்கும் வாய் பேச முடியாதவரைப் பார்த்து கல்லாப்பெட்டி கேட்பார் " என்ன தைரியத்துலே நீ எல்லாம் கடன் வாங்கணும்? ஒண்ணு கடன் திரும்பக் குடுக்க வக்கிருக்கணும்..இல்லேன்னா அதுக்கான அதிர்ஷ்டமாவது இருக்கணும் " என்பார் எகத்தாளமாக . சேட்டிடம் சிக்கிய கைதி இவரைப் பார்த்து ஒரு கெக்கலிப்பு சிரிப்பார். "அடுத்து நீதான்" என்ற பொருள்படும்படியாக. </span><span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;"></span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
</span>
<div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">ஒரு காட்சியில் பூர்ணிமா அறையில் எதையோ தேடும் பாக்யராஜை அவர் பூர்ணிமாவுடன் சரசத்தில் இருப்பதாக நினைத்து எல்லையில்லா சந்தோஷமும் பொய்க்கோபமும் கொப்பளிக்க அவர்கள் இருவரையும் கண்டிக்கும் காட்சி அவரது நடிப்புத் திறனுக்கு ஒரு சான்று. ஒருபுறம் முதலாளியின் மகள் தன் மகனுக்குத் தான் என்ற குதூகலம், அதே சமயம் தான் பொறுப்பான தகப்பன் என்பதைக் காட்ட வேண்டிய ஆர்வம் இரண்டும் கலக்க துள்ளலுடன் முன்னும் பின்னும் நடந்து திட்டிக்கொண்டே இருப்பார். பெரும்பாலான படங்களில் மகனின் செயல்கள் மீது எரிச்சல் கொண்ட தகப்பனாகவே தோன்றினார் கல்லாப்பெட்டி. உதயகீதத்தில் கவுண்டமணியின் தந்தையாக வந்து அவரைக் கரித்துக் கொட்டிக்கொண்டே இருப்பார். அப்படி திட்டிய பின்னர், உத்திரத்தில் இருந்து தொங்கும் கால்களையும் சிந்திக் கிடக்கும் சிவப்பு பெயின்டையும் வைத்து கவுண்டமணி தன் கண்டிப்பால் தற்கொலை செய்துகொண்டு விட்டாரோ என்று அதிர்ச்சியடைவார். கவுண்டமணியின் ஜெயில் சிநேகிதத்தை வைத்து செந்தில் கல்லாப்பெட்டி வீட்டில் கன்னம் வைத்து பொருட்களைக் களவாடி சென்ற பின்னர், கட்டிய துண்டுடன் சிறையில் இருக்கும் மகனை சந்திக்க வருவார் "நல்லவேளை துண்ட விட்டுட்டுப் போய்ட்டான்..இல்லேன்னா என் கதி என்ன?" என்பார். பாக்யராஜின் வீட்டு ஓனராக நடித்த அந்த ஏழு நாட்களிலும் தன் தனிச் சிறப்பை அவர் பதிவு செய்தார். வீடு பார்க்க பாக்யராஜிடம் அவரது உயர்த்திய வேட்டியை கீழே சொல்லும் காட்சி இயல்பான நகைச்சுவைக்கு ஒரு சான்று. "பொண்ணை மட்டுமில்லாமல் பொண்ணோட அம்மாவையும் சேத்துத் தள்ளிக்கிட்டுப் போய்விடுவானுங்கள்" என்ற பயத்தில் பேச்சிலர்களுக்கு வீடு கொடுக்க மறுக்கும் வீடு சொந்தக் காரர் வேடம். சிறிய வேடங்கள் என்றாலும் தனக்குரிய பாணியில் முத்திரை பதிக்க கல்லாபெட்டி தயங்கியதே இல்லை. காக்கிசட்டையில் கமலுக்கு அப்பாவாக நடித்திருந்தார். கவுண்டமணி கதாநாயனாக நடித்த ஒரு படத்தில் அவருக்குத் தந்தையாக வருவார். தன் மகனைப் புறக்கணிக்கும் பணக்காரத் தந்தையாக எதிர்மறையான வேடத்தில் நடித்தார். </span><span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;"></span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
</span>
<div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">ஒரு படத்தில் காது கேளாத பாத்திரத்தில் கல்லாப்பெட்டியும் கரிக்கோல் ராஜும் வருவார்கள். சுற்றி பூகம்பமே வந்தாலும் காதுகளுக்கு சத்தம் எட்டாமல் தங்களுக்குள் சந்தோஷமாக உரையாடிக்கொண்டே இருப்பார்கள். எங்க ஊருப் பாட்டுக்காரன் படத்தில் அதிர்ஷ்டமற்ற செந்தில் எங்கு வேலைக்கு சென்றாலும் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடும். அந்தப் படத்தில் பண்ணையார் வேடத்தில் வரும் கல்லாப்பெட்டி சிங்காரத்திடம் வேலைக்கு சேர்வார் செந்தில். சேர்ந்த முதல் நாளே வாயில் மாங்காயைக் கடித்தபடியே இறந்து விடுவார் கல்லாப்பெட்டி சிங்காரம். அவர் மனைவி செந்திலை ஆத்திரத்தில் அடிபின்னிவிடுவார். பாண்டியராஜன், எஸ்.வி.சேகர் இருவரும் நடித்த, மலையாள ரீமேக் படமான் கதாநாயகன் என்ற படத்தில் அவர்களின் வீட்டு உரிமையாளராக வருவார். கோனார் வேடத்தில் நடித்த கல்லாப்பெட்டியிடம் சேகர் கேட்பார் " நீங்க தானே கோனார் நோட்ஸ் எழுதுனீங்க?". ஏற்கனவே வாடகை தராமல் இழுத்தடிக்கும் அவர்களின் கிண்டலை கேட்டு கடுப்பாகி திட்டுவார் கல்லாப்பெட்டி. இது போன்ற சிறு பாத்திரங்களில் பல படங்களில் நடித்தார். என்றாலும் அவரது பிரத்யேகக் குரல் அந்த சிறு பாத்திரங்களையும் மிளிரச் செய்தது. </span><span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;"></span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
</span>
<div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">இன்றும் டீக்கடைகளில் நேற்றைய மனிதர்கள் தங்கள் வயதையொத்த மற்றவர்களுடன் எஞ்சிய தங்கள் வாழ்க்கையின் நினைவுகளை தேநீருடன் பகிர்ந்துகொண்டிருக்கும்போது கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். சுற்றியிருப்பவர்கள் வெடித்து சிரிக்கும்படி பேசி விட்டு சிரிக்கும் நண்பர்களைப் பெருமிதத்துடன் பார்த்து ரசிக்கும் ஏதேனும் பெரியவரிடம் கல்லாபெட்டியின் சாயலைக் காணலாம்.</span><span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;"></span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
</span>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<div style="text-align: justify;">
<span style="color: black; font-family: arial; font-size: x-small; text-align: start;">-காட்சிப்பிழை திரை இதழில் வெளியான கட்டுரை </span></div>
<div>
<span style="color: black; font-family: arial; font-size: x-small; text-align: start;"><br /></span></div>
</span></div>
chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-13525445497084006382012-10-10T13:14:00.001+05:302012-10-10T13:14:42.890+05:30ஒ மை காட் - ஒரு பார்வை -1 <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtARq-jJcKl_6baSmlOIpeuvoy6aKpQSaiPnG8aB-vwNAiL2YmWw4sSdujovQjGurGceDPXdA5fgILh-G8IZShCQKZMBQyN9dVR2hpyw2dLwWDJmwC2mrhnUsbBWpEDt06SF4r9H4jfRo/s1600/OMG-Oh-My-God-poster-1024x748.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="233" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtARq-jJcKl_6baSmlOIpeuvoy6aKpQSaiPnG8aB-vwNAiL2YmWw4sSdujovQjGurGceDPXdA5fgILh-G8IZShCQKZMBQyN9dVR2hpyw2dLwWDJmwC2mrhnUsbBWpEDt06SF4r9H4jfRo/s320/OMG-Oh-My-God-poster-1024x748.jpg" width="320" /></a></div>
கோவில்களை விட கழிப்பறைகளே முக்கியம்
என்று மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் பேசியிருக்கும் பேச்சுக்கு கடும்
எதிர்ப்பு கிளம்பியிருப்பது சமீபத்திய செய்தி.<br /><br />'கோயில்கள் கூடாது
என்று சொல்லவில்லை. அவை கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது' என்று
திராவிட இயக்கத்தின் வழி வந்த கருணாநிதி பராசக்தி திரைப்படத்தில் வசனம்
எழுதினார். கடவுளே இல்லை என்று சொல்கிறீர்களே ஒரு வேளை கடவுள் உங்களுக்கு
காட்சி கொடுத்தால் அப்போது என்ன சொல்வீர்கள் என்று பெரியாரிடம்
கேட்கப்பட்டபோது 'அப்போ இனி கடவுள் இருக்கார்னு சொல்வேன்..பாத்தா ஒத்துக்க
வேண்டியது தானே' என்று பெரியார் பதிலளித்ததாக சொல்வார்கள். <br />
<br />தமிழர்கள் கடவுளின் இருப்பு பற்றி கடும் கேள்வி எழுப்பி
பழக்கமுள்ளவர்கள். கடவுளே இல்லை என்று சொன்ன இயக்கத்தின் வழி வந்த அரசியல்
கட்சிகளின் ஆட்சியில் கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றும் போலிச்
சாமியார்களின் குட்டு உடைந்த பின்னரும் அவர்கள் சுதந்திரமாகவும் முன்னை விட
குதூகலத்துடனும் உலா வருவது ஒரு நகை முரண். வட இந்தியாவில் கடவுள் பற்றிய
கருதுகோள் வேறானது. இங்கு கடவுள் இருப்பு பற்றிய பிரச்சனையை விட எந்தக்
கடவுள் உயர்ந்தவர் என்ற சர்ச்சை தான் வழக்கமான புழக்கத்தில் உள்ளது. தவிர
கோவில்கள் எக்கச்சக்கம். பெரும்பாலானவர்கள் மிகுந்த பக்தி கொண்டவர்கள்
இங்கே. மதப்பற்றும் அதன் அடிநாதமாக சாதிப்பற்றும் கொண்ட வட இந்தியாவில்
கடவுளை கேள்வி செய்து படம் எல்லாம் வந்ததில்லை. வரவும் முடியாது. ஆனால்
சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் ஹிந்தி படம் 'ஓ மை காட்'
(OMG). என்றாலும் படத்துக்கு பல இடங்களில்ருந்து கடும் எதிர்ப்பு
கிளம்பியிருக்கிறது. பஞ்சாபில் இந்தப் படம் திரையிடுவதற்கு கடும் எதிர்ப்பு
கிளம்பியதையடுத்து அங்கு படம் தடை செய்யப்பட்டிருக்கிறது. மத அமைப்புகள்
தங்கள் மத நம்பிக்கைகளை இந்தப் படம் கேலி செய்கிறது என்று எதிர்ப்பு
தெரிவித்திருக்கின்றன. வழக்கமான இந்திய சினிமா மரபுப் படி இந்தப் படத்தின்
கருவும் கடன் வாங்கப்பட்டது தான். திருடப்பட்டது போல் தெரியவில்லை. The man
who sued God என்ற ஆஸ்திரேலியப் படத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட படம்.
முதலில் மராத்தியில் '' என்ற பெயரிலும் பின்னர் 'Krishan Vs Kanhaihya'
என்ற பெயரிலும் மேடை நாடகமாக இந்தக் கதை வட இந்தியர்களுக்கு அறிமுகமானது
தான். என்றாலும் அப்போதெல்லாம் இல்லாத எதிர்ப்பு இப்போது ஏன் என்கிறார்
படத்தில் காஞ்சியாக நாத்திகர் வேடத்தில் நடித்திருக்கும் பரேஷ் ராவல். அவர்
தான் படத்தின் தயாரிப்பாளரும் கூட. நாடகத்திலும் அதே வேடத்தில் அவர்
நடித்திருக்கிறார். மிகச் சிறந்த மேடை நாடக நடிகரான அவர் படு அனாயாசமாக
இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். எதிர்ப்பையும் மீறி படம் ஓடுவதற்கு
அவர் நடிப்பு ஒரு காரணம் என்று நினைக்கிறேன். <br />
<br />மும்பையில் தெய்வச் சிலைகள் மற்றும் பக்தி சமாசாரங்களை விற்கும் பரேஷ்
ராவல் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். பக்தர்களின் பலவீனத்தை காசாக்கும்
ஆன்மீக நிறுவனங்களை கிண்டல் செய்பவராகவும் அதே சமயம் தன்னிடம் வந்து
மாட்டும் பக்திமான்களிடம் அதே முறையைப் பயன்படுத்தி ஏமாற்றி பணம்
செர்ப்பவராகவும் அதன் மூலம் இந்த பக்திப் பாமரர்களை கிண்டல் செய்பவராகவும்
வருகிறார் பரேஷ். ஒரு பணக்கார என்.ஆர்.ஐ மறைந்த தன் அம்மாவின் நினைவாக
புனித யாத்திரைக்கு பக்தர்களை அழைக்கும் போது தானும் போக வேண்டும் என்று
விரும்பும் தன் கடை ஊழியரும் உறவினனுமான மகாதேவை கடுமையாக கிண்டல்
செய்கிறார் பரேஷ். 'அந்தம்மா ஆஸ்பிடலில் கிடக்கும்போது அந்தப் பக்கம்
தலைக்காட்டாத மகன் அவன்..அவன் புனிதப் பயணத்துக்கு அழைப்பது தன் அம்மாவின்
நினைவுக்காக அல்ல. சுய விளம்பரத்துக்காக' என்று சொல்கிறார். அவர் மனைவியோ
நம் திராவிட இயக்கத் தலைவர்களின் மனைவிமார்கள் போலவே தீவிர பக்தை. பரேஷ்
ராவல் கடவுளை கிண்டல் செய்யும்போதெல்லாம் கன்னத்தில் போட்டுக்கொள்ளும்
அப்பாவி பக்தை. தன் குழந்தைகள் ஆன்மீக நடவடிக்கையில் இறங்கும்போது அவர்களை
ஊக்கவிக்கும் அம்மா அவர்.<br />
<br />மனைவியின் வற்புறுத்தலின் பேரில் ஹரித்துவார் செல்லும் அந்தக்
குழுவுடன் இணைந்து பரேஷ் ராவலும் செல்கிறார். பயணம் முழுதும் அவர்
அடிக்கும் கமெண்டுகளால் பக்தர் குழு பதறுகிறது. நமக்கு தெரியும். இது போன்ற
பயணங்கள் முற்றிலும் வியாபார நோக்கம் கொண்டவர்களால் ஏற்பாடு செய்யப்படுவது
என்று. வாகன ஏற்பாட்டளர்களுக்கும் வழியில் உள்ள உணவகங்கள், கடைகள்
ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கும் இடையில் ஒரு மறைமுக ஒப்பந்தம் இருக்கும்.
நம் விருப்பமில்லாமேலேயே அங்கு அழைத்து சென்று விடுவார்கள் ஏஜென்ட்டுகள்.
ஒரு முறை தாஜ் மகால் செல்ல ஆக்ரா இறங்கி அங்கு ஒரு பேட்டரி காரில்
சென்றுகொண்டிருந்தபோது அதன் டிரைவர் வழியில் ஒரு கலைப் பொருட்கள்
அங்காடிக்கு எங்களை அழைத்து செல்ல முயற்சித்தான். அதெல்லாம் முடியாது நேரே
தாஜ்மகாலுக்கு போ என்ற போது அவன் எங்களிடம் 'பத்திலிருந்து பனிரெண்டு
மணிவரைக்கும் தாஜ் மகால் மூடியிருக்கும். அந்த நேரத்தை இங்கு செலவிடுங்கள்'
என்று சிரிக்காமல் சொன்னான். பிறகு அவனிடம் தமிழில் கெட்டவார்த்தைகளும்
ஹிந்தியில் நல்ல வார்த்தைகளும் சொல்லி அவனை நல்வழிப் படுத்தி மேற்கொண்டு
பயணம் செய்ய வேண்டி வந்தது. நம் காஞ்சி(பரேஷ் ராவல்) தெய்வச் சிலை
வியாபாரி என்பதால் அவர் அங்கு சென்று சிலைகளுக்கு ஆர்டர் கொடுக்கும் காட்சி
நல்ல நகைச்சுவை. 'அந்த பாடி பில்டர் அனுமார் சிலை ஒரு பத்து, அந்தப் புலி
மேல உக்காந்திருக்கிற காளி சிலை ஒரு பத்து' என்று அவர் ஆர்டர் செய்ய,
கடைக்காரன் திகைத்து நிற்கிறான். கடைசியில் பரேஷ் கேட்கிறார் ' ஏம்பா இவ்ளோ
வாங்குறேன் ஒரு சாய்பாபா சிலை ப்ரீ யா ' தரமாட்டியா?'.<br />
திரும்பி வரும் வழியிலும் அவரது கலாட்டா தொடர்கிறது. புனித கங்கை நீர்
ஊற்றும் சொம்பில் சரக்கை கலந்து அடித்து விட்டு அதை மகாதேவுக்கு கொடுக்க
அவன் குடித்து விட்டு அதை மற்ற ஆண்களிடம் தர சொம்பு ஒரு ரவுண்டு வருகிறது
பஸ்சுக்குள். கடைசியில் புனிதப் பயணத்துக்கு ஏற்பாடு செய்தவனின் மனைவி அதை
குடித்து விட்டு 'என்ன ஒரே காரமாக இருக்கிறது' என்று கேட்க பரேஷ்
சொல்கிறார் ' கங்கையில அழுக்கு ஜாஸ்தியாகி விட்டது அல்லவா?'<br />
<br />இப்படியாப்பட்ட பரேஷ் ராவலின் பையன் கணேஷ் ஒரு லோக்கல் ஆன்மீகவாதி
தலைமையில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு உறியடிக்கும் விளையாட்டில்
ஈடுபடுவதை டி.வியில் பார்த்து விட்டு அங்கு வருகிறார் பரேஷ். கூட்டத்தை
கலைக்க ஒரு தந்திரம் செய்கிறார். இசை நிகழ்ச்சி நடக்கும் மேடையில் ஏறி
மைக்கை பிடித்து 'இது சுவாமிகளின்(விழா நடத்தும் சாமியார்) ஆணை. இன்னும்
பத்தே நிமிடங்களில் எல்லா கிருஷ்ணன் சிலைகளும் வெண்ணையும் ரொட்டியும்
தின்னவிருக்கின்றன. எல்லோரும் ஓடிப் போய் கிருஷ்ணன் சிலைகளுக்கு வெண்ணெய்
ஊட்டுங்கள்' என்று சொல்ல கிருஷ்ணன் கோவில்கள் இருக்கும் திசை நோக்கி
கூட்டம் பஞ்சாய்ப் பறக்கிறது. கீழே இறங்கும் மகனை ஒரு சாத்து சாத்தி
கிளம்பும் போது சாமியார் காஞ்சிக்கு சாபம் விடுகிறார். 'நீ கடவுளை
அவமதித்து விட்டாய்..உனக்கு தகுந்த தண்டனை கிடைக்கும்'. சொன்ன வினாடி மழை
பெய்கிறது. லேசான நிலநடுக்கம் வேறு. வீட்டுக்கு திரும்பினால் மும்பையில்
வேறெங்கும் சேதமில்லை காஞ்சியின் கடை இருக்கும் சோர் பஜாரில் ஒரு கடை
மட்டும் இடிந்து விட்டது என்று செய்தி வருகிறது. பழுதடைந்துள்ள கடையின்
மராமத்து வேலைக்கு செலவு செய்யாமல் ஹஜ்ஜுக்கு போகிறேன் என்று சொன்ன
முஸ்லிம் நண்பர் ஒருவரின் கடை தான் இடிந்திருக்க வேண்டும் என்று காஞ்சி
நினைக்க, செய்தி சேனல் நிலநடுக்கத்தில் இடிந்த கடையைக் காட்டுகிறது. அது
காஞ்சியின் கடை. <br />
<br />நாத்திகரான அவர் கடவுளை நிந்தித்து பேசியதால் தான் அவர் கடை மட்டும்
இடிந்தது என்று அவருக்கு சாபம் விட்ட சாமியார் முதல் மனைவி மற்றும்
உறவினர்கள் வரை பேசத் தொடங்குகின்றனர். அவற்றை பொருட்படுத்தாத காஞ்சி
கடைக்குள் புத்திசாலித்தனமாக பாதுகாப்பாக வைத்திருந்த இன்ஷூரன்ஸ் ஆவணங்களை
எடுத்துக்கொண்டு இன்ஷூரன்ஸ் அலுவலகத்துக்கு போகிறார். ஸ்லோமோஷனில் தாத்தா
நடப்பது, பாட்டி சிரிப்பது போன்ற பல காட்சிகளை மெதுவாக காட்டிவிட்டு
கடைசியாக Terms & Condition ஐ படபடவென்று வாசிக்கும் குரல் கொண்ட
இன்ஷூரன்ஸ்,பங்குச் சந்தை பற்றிய விளம்பரங்கள் நமக்கு தெரியும்.
விண்ணப்பங்களிலும் கண் வலிக்கும் வகையில் சிறிய எழுத்துகளில் தான் அவை
எழுதப்பட்டிருக்கும். ஏஜென்ட் சொன்னதை நம்பி நம் காஞ்சி அவற்றைப்
படிக்காமல் கையெழுத்திட்டுருக்கிறார். . விளைவு, அவரது கடைக்கு மனிதர்களால்
ஏற்படும் அழிவுகளுக்கு மட்டும் தான் காப்பீடு கிடைக்கும். இந்த பூகம்பம்
அந்த category யில் வராது என்கிறார் இன்ஷூரன்ஸ் கம்பெனி அதிகாரி. ஏனென்றால்
இந்த பூகம்பம் கடவுளின் செயல். Act of God! வெகுண்டெழும் காஞ்சி அந்த
அலுவலகத்தில் கலாட்டா செய்து அதிகாரியின் கன்னம் பழுக்க அறை ஒன்று
விடுகிறார். இதற்கு என்ன வழி என்று யோசிக்கும்போது எல்லாவற்றுக்கும்
காரணமான கடவுளை இழுத்தால் என்ன என்று தோன்றுகிறது. மிக முக்கியமாக அவருக்கு
கடவுள் மீதான நம்பிக்கை இல்லை என்றாலும் தனக்கு நேர்ந்த இழப்புக்கு காரணம்
கடவுள் என்று சொல்லப்படுவதால் அந்த கடவுள் மீதே கேஸ் போட
முடிவெடுக்கிறார். ஆனால் இந்த விபரீத வழக்கை எடுத்துக்கொள்ள வக்கீல்கள்
மறுத்து அவரைக் கண்டாலே தலைதெறிக்க ஓடுகின்றனர். கடைசியில் ஒரு ஏழை
முஸ்லிம் வக்கீலை(ஓம் புரி) அணுகுகிறார். அவர் தன்னால் இந்த கேசை நடத்த
முடியாது என்று சொல்கிறார். காரணம் இந்துக்களின் கேஸ் ஒன்றை எடுத்து
நடத்தியதால் சில மதவாதிகள் அவரைத் தாக்கி நடக்க முடியாத நிலையில்
இருப்பதால் தன்னால் வழக்குக்கு உதவ முடியும். ஆனால் அதை எடுத்து நடத்த
முடியாது என்று சொல்லி விடுகிறார். ஆனால் காஞ்சியே தனக்காக கோர்ட்டில்
வாதாட முடியும் என்று சொல்கிறார். கருப்பு கோட்டுடன் காஞ்சி கோர்ட்டுக்குப்
போகிறார். தான் சம்மன் அனுப்பிய சாமியார்களை கோர்ட்டில் சந்திக்கிறார்.
கதை சூடுபிடிக்கிறது.<br /><br />
நாட்டில் உள்ள பக்தர்கள் மத்தியில் காஞ்சிக்கு கடும் எதிர்ப்பு
கிளம்புகிறது. கோர்ட்டை விட்டு வெளியில் வந்தால் அகோரிகளும் இன்னபிற
சாமியார்களும் வழி மேல் வேல் வைத்துக் காத்திருக்கிறார்கள். எப்படி
வெளியில் போகிறாய் பார்க்கிறோம் என்று அவரை மிரட்டுகிறார் முக்கிய சாமியார்
(மிதுன் சக்கரவர்த்தி). அவரது வீட்டை மதவாதிகள் தாக்க மனைவி பயந்து
குழந்தைகளை அழைத்துக்கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்று விடுகிறார்.
கடவுளுக்கு எதிரான வழக்கை நடத்தும் அவரை செல்லும் இடமெல்லாம் மத வெறியர்கள்
துரத்த அவரைக் காப்பாற்ற பைக்கில் வந்து சேருகிறார் - கடவுள். <br />
</div>
chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-17361907960659609042012-10-05T11:16:00.003+05:302012-10-05T11:18:08.974+05:30பி.ஏ.கிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsuqBA28U_o9s9GJqoELJQz4wfem8x60bENVOzsxXWENK0s1bBZ7Mc1b_1yepc_COW2PF3rS1MYbrRbqz_DTG12ce0obG5f0cRpHtq3yunQqHqGLUjWR4WZZdPZ5fCeFdhZDrSmsLnmGY/s1600/P.A.Krishnan05.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="263" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsuqBA28U_o9s9GJqoELJQz4wfem8x60bENVOzsxXWENK0s1bBZ7Mc1b_1yepc_COW2PF3rS1MYbrRbqz_DTG12ce0obG5f0cRpHtq3yunQqHqGLUjWR4WZZdPZ5fCeFdhZDrSmsLnmGY/s320/P.A.Krishnan05.jpg" width="320" /></a></div>
<br />
<i><span style="font-size: large;"><b>நம்மிடம் சரித்திரம் பற்றிய பிரக்ஞை இல்லை</b></span></i><br />
<br />
<br />
<i>வரலாறு மற்றும் சமகாலப் பிரச்சனைகளின் பின்னணியில் புலிநகக்கொன்றை மற்றும் கலங்கிய நதி ஆகிய நாவல்கள் எழுதியிருக்கும் <b>பி.ஏ.கிருஷ்ணன்</b>,
சமூகம் பற்றிய ஆழமான பார்வை கொண்டவர். மேற்கத்திய ஓவியங்கள், சினிமா, பயண
அனுபவங்கள் என்று பலதரப்பட்ட தளங்களில் எழுதி வரும் அவர் தசஇ-க்காக அளித்த
நேர்காணல்...</i><br />
<b>உங்கள் இளமைப் பருவம், கல்வி பற்றி சொல்லுங்கள்.</b>.<br />
<br />
நான்
படித்தது திருநெல்வேலியில் தான். அங்குள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில்
படித்தேன். பின்னர் பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் இயற்பியலில்
இளங்கலையும் சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் முதுகலையும் பயின்றேன்.<br />
<br />
<b>எந்த வயதில் இலக்கியத்துடன் பரிச்சயம் ஏற்பட்டது? தங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள் யார்?</b><br />
<br />
நான்
பிறந்தது இலக்கியத்தோடு என்று சொல்வேன். என் தந்தை பட்சிராஜன் ஒரு
புகழ்பெற்ற தமிழ் அறிஞர். கம்பன் புகழ் பாடியே தன் வாழ்நாள் முழுவதும்
கழித்தவர். அவர் மூலம் இலக்கியத்துடன் இயல்பாகவே பரிச்சயம் ஏற்பட்டு
விட்டது. எனக்கு ஏழெட்டு வயது இருக்கும்போது என் தந்தை மகாபாரதத்தின்
சுருக்கமான மகாபாரத வசன சங்கிரகம் என்ற புத்தகத்தை எனக்குப் பரிசளித்தார்.
அதன் விலை ஐந்து ரூபாய் என்று நினைக்கிறேன். தமிழில் நான் படித்த முதற்
பெரிய புத்தகம் அதுவாகத்தான் இருக்க வேண்டும். சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
கழகம் சிறுவர்களுக்கான புத்தகங்களைக் பதிப்பித்துக் கொண்டிருந்த காலம்
அது. கழகக் கதைக் கொத்து, கழகக் கதைப் பூங்கா போன்ற புத்தகங்கள். எனது
அறுபத்தைந்தாவது வயதிலும் என்னால் அந்தக் கதைகளை நினைவுகூர முடிகிறது. மிக
அருமையான புத்தகங்கள் அவை.<br />
<br />
மீசை முளைக்கும் முன் நான் விரும்பிய
எழுத்தாளர்கள், கல்கி, தேவன், பகீரதன், லக்ஷ்மி. முளைத்த பின் என்னை ஈர்த்த
எழுத்தாளர்கள் புதுமைப் பித்தன், சுந்தரராமசாமி, ஜெயகாந்தன்,
அசோகமித்திரன் அப்புறம் ஜானகிராமன். ஜானகிராமனை இப்போது படிக்கும்போது
சற்று ஏமாற்றமளிக்கிறது என்றாலும் அந்த வயதில் அவர் எழுத்து மிகவும்
பிரமிப்பூட்டியது. அவரது சிறுகதைகளில் இன்னும் உயிர்ப்பு இருப்பதாக
உணர்கிறேன். ஜெயகாந்தனுடைய சிறுகதைகளும் இப்போது ஆகச் சிறந்த படைப்புகளாகத்
தோன்றவில்லை. ஆங்கிலத்தில் எனக்கு ஷேக்ஸ்பியர் பிடித்தமானவர். எனது ஆசான் .
ஈவ்லின் வா, எலிசபெத் போவன், பிஜி உட் ஹவ்ஸ் போன்ற எழுத்தாளர்கள்
பிடித்தமானவர்கள்.<br />
<br />
<b>இளம் வயதிலேயே ஆங்கிலத்தில் படிக்கும்படியான சூழல் இருந்ததா?</b><br />
<br />
இல்லை.
நான் எஸ்.எஸ்.எல்.சி வரை தமிழ் மீடியத்தில் பயின்றவன். எனக்கு
ஆங்கிலத்தில் அப்போது பெரிய ஆர்வம் இல்லை. பி.யூ.சி படிக்கும்போது ஒரு
சம்பவம். எனது முதல் ஆங்கில ஆசிரியர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் சானட்
ஒன்றை பாடமாக எடுத்தார். ஒரு மூன்று மணிநேரம் பாடம் நடத்திவிட்டு கடைசியில்
எங்களைப் பார்த்து 'புரிகிறதா?' என்று கேட்டார். எனக்கு என்னடா இது
ஆங்கிலம் இதன் பக்கத்திலேயே செல்லக் கூடாது என்று தோன்றியது. ஆங்கில
இலக்கியத்தின் பால் எனக்கு நாட்டம் ஏற்பட ஊக்கம் அளித்தவர் எனது தந்தையின்
நண்பர் திரு கோபால பிள்ளை அவர்கள். அவர் படிக்கத் தந்த புத்தகங்கள் காட்டிய
உலகத்தில்தான் நான் இன்று வரை பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.<br />
<br />
<b>ஒரு
அரசு அதிகாரியாகவும் பின்னர் தனியார் துறையில் உயர்ந்த பொறுப்பிலும்
இருந்து வரும் நீங்கள் எழுத வேண்டும் என்று நினைக்க எது காரணமாக இருந்தது?</b><br />
<br />
முன்பே
சொன்னபடி இலக்கியம் என் வாழ்க்கை சூழலிலேயே இருந்தது. என்றாலும்
வாழ்க்கையின் பல அனுபவங்கள், தருணங்கள் என்னை பிற்பாடு எழுதத் தூண்டியது
எனலாம்.<br />
<br />
<b>உல்பாவால் கடத்தப்பட்ட அதிகாரியை மீட்க நீங்கள்
எடுத்த முயற்சிகள் பற்றி கலங்கிய நதி சொல்கிறது என்று அது தொடர்பான மற்றப்
பதிவுகளில் சொல்லியிருக்கிறீர்கள். அந்த சம்பவங்கள் நடக்கும்போதே இதை ஒரு
கட்டத்தில் படைப்பாக வெளியிடலாம் என்று நினைத்திருந்தீர்களா? அல்லது
பின்னர் அது பற்றிய எண்ணம் வந்ததா?</b><br />
<br />
இல்லை. அந்த நாட்களில்
எனக்கு கடத்தல் விவகாரம் எப்படி முடியும் எங்கு என்னைக் கொண்டு
செல்லும்..என்பவைப் பற்றிய பதட்டம் தான் இருந்தது. சொல்லப்போனால் நான்
திரும்பிவருவேனா என்றெல்லாம் யோசிக்க வைத்த சம்பவம் அது. எல்லாம் முடிந்த
பின்னால் அசாமில் இருந்து வரும் சென்டினல் என்ற ஆங்கிலப் பத்திரிக்கையில்
அந்த மீட்புப் பணியில் எனக்கு உதவிய அசாம் மாநில முன்னாள் முதல்வர் சரத்
சந்திர சின்ஹா பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். இக்கட்டுரையின் மற்றொரு
வடிவம் தமிழில் ஒரு கிழவருடன் இரண்டு நாட்கள் என்று வந்தது. அதற்குப் பிறகு
தான் இந்தச் சம்பவத்தை ஒரு நாவலாக்கலாம் என்ற எண்ணம் எழுந்த்து. 2002 ஆம்
ஆண்டில் நாவலை எழுதி முடித்தேன். ஆனால் படித்துப் பார்த்த்தில் மிகவும்
தட்டையாக இருந்தது போல் தோன்றியது. சில வருடங்கள் கழித்து பல மாற்றங்கள்
செய்து நாவலுக்கு புது வடிவம் கொடுத்தேன..<br />
<br />
<b>அசாமில் சமீபத்தில் ஏற்பட்ட கலவரங்கள் உங்களிடம் ஏற்படுத்திய பாதிப்புகள் என்ன?</b><br />
<br />
எனது
நாவலின் களமான கோக்ரஜார் மாவட்டத்தில் தான் சமீபத்தில் கலவரம் நடந்தது.
இது போன்ற கலவரங்களுக்கு நிலம் தான் முக்கியக் காரணம் என்று
சொல்வேன்.கலவரங்களுக்கு எந்த வண்ணமும் பூசப்படலாம். வங்காளக் வண்ணம்,
முஸ்லிம் வண்ணம், போடோ வண்ணம்என்று எது வேண்டுமானாலும் பூசலாம்.
ஆனால்அடிப்படை காரணம் மனிதனுக்கு நிலத்தின் மீது இருக்கும் ஆசை தான். அது
அவனுக்கு மிக முக்கியத் தேவை என்பதில் சந்தேகமில்லை. இதற்கு தீர்வு என்ன
என்று கேட்டால்..தீர்வு இல்லை என்றே சொல்வேன். இந்தியாவில் நிலத்தை
சார்ந்து மனிதன் இருக்கும் வரை இது போன்ற கலவரங்கள் முடிவுக்கு வருவது
கடினம் தான்.<br />
<br />
<b>பங்களாதேஷில் இருந்து குடிபெயரும் முஸ்லீம்கள் இதற்கு காரணமா?</b><br />
<br />
அது
நிச்சயமாக ஒரு காரணம். அது தான் முக்கியக் காரணம் என்று சொல்ல முடியாது.
அசாமில் களத்தில் இறங்கி கடுமையாக உழைத்தவர்கள் வங்க முஸ்லீம்கள் .
அசாமியர்கள் அவ்வளவு கடுமையாக உழைக்காத காலம் இருந்தது. அவர்களுக்கு
தேவையும் இருந்திருக்கவில்லை. நதியில் வெள்ளம் வரும் சமயங்களில் அந்த
நீரைப் பயன்படுத்தி குறுகிய காலத்தில் விவசாயம் செய்வதில் வங்க முஸ்லீம்கள்
தேர்ந்தவர்கள். எஅவர்கள் உழைத்து கொஞ்சம் பணம் சேர்த்தவுடன்
மற்றவர்களுக்கு பொறாமை வந்து விட்டது என்று சரத் சந்திர சின்ஹா என்னிடம்
கூறியது நினைவிற்கு வருகிறது. அவர் சிரித்துக் கொண்டே அப்படிச் சொன்னாலும்
அதன் பின்னால் ஓர் உண்மை இருக்கிறது.<br />
<br />
<b>தீவிரவாதத்துக்குத்
தள்ளப்படும் மக்களுக்கு மாற்று வழிகள் உள்ளனவா? அரசு இதுபற்றி எடுக்க
வேண்டிய நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?</b><br />
<br />
அரசால்
இதற்குத் தீர்வு தர முடியும் என்று எனக்குத் தோன்றவில்ல. அரசுக்கு காது
இல்லை, கண் இல்லை. அதற்கு வாய் பேசவும் தெரியாது. பேசினாலும் என்ன இழவு
சொல்கிறது என்பது புரியாது பெரும்பாலும்.எல்லா நாடுகளிலும் அரசு
இவ்வாறுதான் இயங்குகிறது. இந்த நிலைமையில் தீவிரவாதம் பற்றி அரசு எடுக்கும்
எந்த நிலைப்பாடும் மக்களுக்கு நம்பிக்கை தராது. . அப்படியே அரசு தவறி சில
சரியான முடிவுகளை எடுத்தாலும் அவற்றின் மீது குறைகள் சொல்வது மிகவும்
எளிதாக இருக்கும். இது இருந்தால் அது இல்லை என்று எதைப் பற்றியும் சொல்ல
முடியும். அசாமை எடுத்துக்கொண்டால் பிரச்சனைகள் முற்றும் வரை குறட்டை
விட்டுக் கொண்டிருந்து விட்டு உல்பா அடித்து எழுப்பிய பின்
விழித்துக்கொண்டால் என்ன பயன்? ஆனாலும் தீவிர வாதம் வலுவாக இருக்கும்
இடங்களில் அதன் பிடியிலிருந்து வெளியே வருவதற்கான வழிமுறைகளை அங்கிருக்கும்
மக்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். வழிமுறை வன்முறை சார்ந்து இருந்தால்
ஏழை மக்கள் ஆயிரக் கணக்கில் பலி கொடுக்கப் படுவார்கள். வன்முறை காய்ச்சலைக்
குறைக்கும் மாத்திரை மாதிரி. எல்லாம் சரியாகி விட்டது என்ற மாயையை
ஏற்படுத்தும். இந்த மாயையிலிருந்து விடுபடுவது கடினம். காந்தி மருந்து உடனே
குணம் தராத மருந்து. குணம் தருமா என்ற சந்தேகத்தையும் பலரிடம்
ஏற்படுத்துவது.<br />
<br />
<b>ஒரு படைப்பை ஆங்கிலத்தில் வெளியிட்டு அதை
அந்த எழுத்தாளரே மொழிபெயர்ப்பது என்பது வழக்கமில்லாத ஒன்று. உங்கள் படைப்பை
நீங்களே மொழிபெயர்க்க வேண்டும் என்று நினைக்க காரணம் என்ன?</b><br />
<br />
நான்
தமிழ் மாணவன். தமிழில் ஓரளவு நன்றாக எழுதக் கூடியவன். . I need not to be
modest about it. அதனால் எனக்கு என்னுடைய நாவலைத் தமிழில் மற்றொருவரைக்
கொண்டு மொழிபெயர்ப்பு செய்யலாம் என்ற எண்ணமே தோன்றவில்லை.<br />
<br />
<b>இந்திய ஆங்கில எழுத்துக்கும், இந்திய பிராந்திய எழுத்துக்கும் உள்ள வித்தியாசம் எப்படியானது?</b><br />
<br />
ஆங்கிலத்தில்
இந்தியன் எழுதும்போது சில தடுமாற்றங்கள் ஏற்படலாம். ஆங்கிலத்தில்
ஆங்கிலேயன் எழுதினாலும் பல தடுமாற்றங்கள் ஏற்படும். உதாரணமாக பதினேழாம்
நூற்றாண்டு பற்றிய ஆங்கில நாவலை இன்று எழுதும் போது எந்த ஆங்கிலத்தைக்
கையாளுவது? இன்றைய மொழியையா அல்லது அன்று புழக்கத்தில் இருந்த மொழியையா?<br />
<br />
இந்திய
ஆங்கிலம் என்று ஒன்று இருப்பதாக நான் நினைக்கவில்லை. I don't like the
word 'Indian English'. எழுதுபவர்கள் ஆங்கிலத்தை வெவ்வேறு விதமாக
பயன்படுத்துகிறார்கள். என் ஆங்கிலம் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க
ஆங்கிலங்களின் கலவையாக இருக்கலாம். எனக்குத் தெரியாது.<br />
<br />
என்றாலும்
ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. ஆங்கிலேயன் ஆங்கிலம் எழுதும் போது
ஏற்படும் தடுமாற்றமும் அதிலிருந்து மீள்வதும் இயற்கையாக நிகழும். எனக்கும்
அந்த மீட்சி இயற்கையாக நிகழ்கிறது என்று கூற தயக்கமாக இருக்கிறது. என்னுடைய
ஆங்கிலம் ஏர் கண்டிஷன் அறையில் வளரும் ஒரு potted plant மாதிரி என்று
எனக்கே சில சமயம் தோன்றுகிறது.<br />
<br />
தமிழில் எழுதுவது அவ்வாறு அல்ல. அது என்னுடைய மொழி. என்னுள்ளேயே இருக்கும் மொழி. அது எனக்கு பல உரிமைகளைத் தயக்கமின்றித் தருகிறது.<br />
<br />
<b>இளமையில்
மார்க்சிஸ்ட்டுகளாக இருந்த பலர் ஒரு கட்டத்தில் ஆன்மிகம் பக்கம் நெருங்கி
வருவதைப் பார்த்திருக்கிறோம். உங்கள் எழுத்தில் இன்னும் மார்க்சியம் மீதான
ஆதரவு இருந்தாலும் ஆன்மீகத் தரப்புகளின் உரிமைகளை மதிக்க வேண்டும் என்ற
பார்வை உங்களிடம் தற்போது இருப்பதாகப்படுகிறது. தற்போதைய உங்கள் நிலை என்ன?</b><br />
<br />
ஆன்மீகத்
தரப்பின் உரிமைகளை மதிக்கக் கூடாது என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.
என் தந்தை மிகப் பெரிய ஆன்மீகவாதி. அவரது தரப்பு நியாயங்களை என்றும் நான்
மதித்து வந்தேன்.<br />
<br />
என்னைக் கேட்டால் ஆன்மீகவாதிகளை மலினமான முறையில்
கிண்டல் செய்வது மிகவும் எளிதானது. மக்களின் நம்பிக்கைகளை கேலி செய்து
புகழ் பெறுவது அதைவிட எளிதானது. இதனாலேயே பல மூன்றாம் தரப் எழுத்தாளர்கள்
இவற்றைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். படைப்பின் மீது மதிப்புக்
கொண்ட எந்த எழுத்தாளனும் இதைச் செய்யச் சிறிது கூச்சப்படுவான்.<br />
<br />
நான் ஆன்மீகவாதியாக மாறிவிடவில்லை. மார்க்சியத்தின் மீதான மதிப்பு இன்றும் மாறவில்லை. ஆனால் விமரிசனங்கள் இல்லாமல் இல்லை.<br />
<br />
<b>புலிநகக் கொன்றையில் மார்ச்கிய புத்தகங்களை உடலுறவு சமயத்தில் பயன்படுத்துவது போல் ஒரு காட்சி உண்டே..</b><br />
<br />
அந்த
சம்பவத்திற்கும் மார்க்சியத்திற்கும் என்ன சம்பந்தம்? அது எந்தப்
புத்தகமாகவும் இருக்கலாம் அல்லவா? அந்த நேரத்தில் கிடைத்த்து லெனின் எழுதிய
புத்தகம் . அங்கு வில்லி பாரதப் புத்தகம் இருந்திருந்தால் அது கூட
பயன்பட்டிருக்கலாம்...<br />
<br />
<b>கல்லூரி ஆசிரியராக இருந்தபோது
இயற்பியலை சொல்லிக்கொடுக்கவும் மாணவர்களிடம் நெருங்கவும் தமிழ் தான்
உதவியாக இருந்தது என்று சொல்லி இருக்கிறீர்கள். அறிவியல் பிரிவில் மொழி
மிகவும் முக்கியமான ஒன்றா?</b><br />
<br />
நிச்சயமாக. அதில் சந்தேகமே
இல்லை. .தாய் மொழியில் மாணவர்களுக்குப் பாடம் நடத்துவது தான் நல்லது.
ஆங்கிலமும் தமிழும் கலந்து அவர்களுக்குப் புரியும்படி சொல்லிக்கொடுத்தால்
அவர்களுக்கு பாடம் நிச்சயம் புரியவரும். என்னைப் போல பலர் அவ்வாறு சொல்லிக்
கொடுத்திருக்கிறார்கள். இது நானாக நினைத்து செயல்படுத்திய விஷயம் அல்ல.
என் துறைத்தலைவர் ஒருவர் -அவரைப் போர்வை என்று அழைப்பார்கள் - ரொம்பக்
கண்டிப்பானவர். அவர் நான் புத்தகங்கள் வாசிக்கும்போது சொல்வார்.
'நீங்களெல்லாம் ஃபிராடு பசங்கள். உன் தொழில் என்ன? மாணவர்களுக்குப்
புரியும்படிச் சொல்லிக் கொடுக்க வேண்டியது. இங்கே உட்கார்ந்து மார்க்சியம்
படித்துக்கொண்டிருந்தால் மாணவர்களுக்கு என்ன பயன்?' என்றார். கடுமையாகச்
சொல்லவில்லை. உறைக்கும்படியாக சொன்னார்.அது எனக்கு பெரிய தூண்டுதலாக
இருந்தது.<br />
<br />
<b>பயணம் சார்ந்த உங்கள் கட்டுரைகள் மற்ற எவரையும்
விட மிக வித்தியாசமாக உள்ளன. அந்த அனுபவங்கள் வாழ்வின் சட்டகத்தில்
பொருந்தும் விதமனான எழுத்து உங்களுடையது. தன்முனைப்பு இல்லாதது. இப்படித்
தான் இருக்க வேண்டும் அல்லது சிலவற்றைப் போல் இருக்கக் கூடாது என்ற
தீர்மானம் உங்களிடம் இருந்ததா?</b><br />
<br />
எனக்கு ஆங்கிலத்திலேயே
travel writing ரொம்பப் பிடிக்கும். ......பால் தோரோ, காலின் தப்ரான், பில்
ப்ரைஸன் போன்ற எழுத்தாளர்கள் பிடித்தமானவர்கள்.அவர்களைப் போல, ஒரு
நாட்டைப் பற்றி எழுதும்போது அதன் சில பரிமாணங்களையாவது தமிழர்களுக்குக்
காட்ட வேண்டும் என்று தோன்றியது. இந்த வகையில் சில கட்டுரைகள்
எழுதியிருக்கிறேன். இன்னும் நிறைய எழுத வேண்டும்.<br />
<br />
<b>காந்தியம் பற்றிய அப்போதைய சிந்தனைக்கும் தற்போதைய சிந்தனைக்கும் என்ன மாற்றம் காண்கிறீர்கள்?</b><br />
<br />
காந்தியம்
முன்பை விட வலுப் பெற்றிருக்கிறது என்று சொல்வேன். எழுபதுகளில்
மார்க்சியவாதிகள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் காந்தி
என்றாலே கெட்ட வார்த்தை என்று நினைத்தார்கள். இப்போது உலகம் மாறிவிட்டது.
காந்தி சொன்னது சரியாக இருக்குமோ என்று மக்கள் நினைக்கத் தொடங்கி
இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.<br />
<br />
<b>இளமையில் காந்தியின் மேல் கோபமாக இருந்ததாக கூறியிருக்கிறீர்கள்..</b><br />
<br />
பகத்சிங் விஷயத்தில் காந்தி நடந்து கொண்டது தவறானது என்று அப்போது நினைத்தேன்.<br />
<br />
அப்புறம்
ஆர்.பி தத் .பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் பார்ட்டியில் ஜெனெரல் செகரட்டரியாக
இருந்தவர். இந்தியா டுடே என்ற புத்தகம் எழுதியவர். அவர், எம்.என். ராய்
போன்றவர்கள் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். போராட்டத்துக்கு
மக்களைத் தயார்படுத்தி விட்டு பிறகு ஒரு கட்டத்தில் விலகியவர். போராட்டத்தை
முழுமையாக முன்னெடுத்து செல்லாதவர் என்றெல்லாம் சொன்னார்கள். அவர்
பணக்காரர்களின் கைக்கூலி என்று ஒரு குற்றச்சாட்டு இருந்தது.
இக்குற்றச்சாட்டுகள் உண்மைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாதவை என்பது புரிய
எனக்கு அதிக நாட்கள் எடுக்கவில்லை.<br />
<br />
<b>ஜெகந்நாதன்-கிருஷ்ணம்மாள்
தம்பதியினரின் பூதான இயக்கங்கள் பற்றி மார்க்சியர்கள் விமர்சித்தார்கள்
என்று கூறியிருக்கிறீர்கள்..ஒரு மார்க்சிய ஆதரவாளராக நீங்கள் எவ்வாறு இதை
பார்க்கிறீர்கள்?</b><br />
<br />
அப்போது கூர்மையாகிக் கொண்டிருந்த
வர்க்கப் போராட்டத்தை இவர்கள் மழுங்கடித்து விடுவார்கள் என்று
மார்க்ஸிஸ்டுகள் நினைத்தார்கள். அவர்கள் பார்வையில் அது சரியாக இருக்கலாம்.
என்றாலும் இந்த காந்தியவாதிகள் முயற்சியால் மக்களுக்கு நிலம் கிடைத்தது
மறைக்க முடியாத உண்மை. சர்வோதயா இயக்கங்களால் மக்கள் பிரச்சினைகளுக்கு
முழுத் தீர்வு கொடுக்க முடியாது என்று மார்க்சிஸ்டுகள் சொன்னார்கள். அது
உண்மையாக இருக்கலாம்.ஆனால் மக்களின் வாழ்வாதாரத்துக்கு கிருஷ்ணம்மாள்
ஜெகன்னாதன் உதவினார்கள் என்பது உண்மை. இத்தகைய நிகழ்வுகள் நாடு முழுவதும்
பரவலாக நடக்காமல் இருக்கலாம். ஒரு இடத்தில் நடந்தாலும் அது நல்ல
விஷயம்தான்..<br />
<br />
<b>ஆரம்பத்தில் திராவிட இயக்கங்களால்
ஈர்க்கப்பட்டதாக சொல்லி இருக்கிறீர்கள். அதன் பாதிப்பில் வெண்பாக்கள்
எழுதிப் பழகியதாகவும் சொல்லி இருக்கிறீர்கள். திராவிட இயக்கம் உங்களை
ஈர்க்க சமூக அடுக்குகள் காரணமாக இருந்தனவா?</b><br />
<br />
இல்லை..நான்
திராவிட இயக்கங்களால் ஈர்க்கப்படவே இல்லை. விடலைப் பருவத்தில் சில
விஷயங்கள் நடந்தன. பதினைந்து வயதில் எம்.ஜி.ஆர் படம் பார்ப்பதும், வெண்பா
எழுத முயற்சிப்பதும், ஆசிரியைகளின் மேல் காதல்வயப்படுவதும் அந்தக்
காலத்தில் பலருக்கு இயல்பாக நடந்தவை. இதை ஈர்ப்பு என்று நீங்கள் நினைத்தால்
அதற்கு நான் பொறுப்பு அல்ல!<br />
<br />
<b>திராவிட இயக்கங்கள் அரசாட்சிக்கு வந்த பின்னர் நடந்த விஷயங்களைப் பற்றி..</b><br />
<br />
எல்லோருக்கும்
தெரிந்த. வெட்ட வெளிச்சமான விஷயத்தைப் பற்றி நான் என்ன சொல்ல? இருந்தாலும்
தமிழ் நாட்டின் பிற்படுத்தப்பட்ட மக்கள் இட ஒதுக்கீடு மூலம் அரசாங்க வேலை
கிடைத்து முன்னேறியது என்பது அவர்கள் ஆட்சியில் நடந்தது. அவர்களுக்கு
முன்பே காங்கிரஸ் அரசு இதை செய்யத் துவங்கி விட்டது. என்றாலும் அதை
செயல்படுத்தியது திராவிட இயக்கங்களின் ஆட்சி தான் என்பதில்
சந்தேகமில்லை....தமிழ் சினிமாவின் இன்றைய நிலைமைக்கு எம்ஜியார் ஒரு
முக்கியமான காரணம் என்ற எண்ணம் உறுத்திக் கொண்டிருந்தாலும் மதிய உணவு
திட்டத்தைக் கொண்டு வந்தவர் அவர் என்பதை என்னால் மறக்க முடியாது.<br />
<br />
<b>உலக சினிமா பற்றி எழுதி வருகிறீர்கள்..அந்த அளவீட்டில் இந்திய சினிமாவின் தரம் எவ்வாறு உள்ளதாக நினைக்கிறீர்கள்?</b><br />
<br />
இந்திய
சினிமாவில் சத்யஜித் ரே, ரித்விக் கட்டக் போன்றவர்கள் இல்லையா? அடுத்த
தளத்தில் ம்ருளால் சென், ஷ்யாம் பெனகல் அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள்.
தமிழில் எண்பது ஆண்டுகளாக திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால்
இந்த ஊடகத்தைப் பற்றிய எந்த ஒரு மதிப்பீடும் இங்கு இருப்பதாகத்
தெரியவில்லை. தொழில்நுட்பம் என்ற வகையில் .நல்ல முன்னேற்றம் இருக்கிறது.
தமிழில் வெற்றி பெற்ற நடிகர்கள், இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால்
அவர்களில் யாரும் உலகத்தரத்தைத் தொட்டவர்கள் என்று என்னால் கூற முடியாது.
(திரை இசையமைப்பாளர்கள் சிலர் இதற்கு விதி விலக்கு. அவர்களைப் பற்றி
இன்னொரு நாள் விரிவாகப் பேசலாம்.) பொழுதுபோக்குப் படங்கள், நகைச்சுவைப்
படங்கள் என்ற விதத்தில் தமிழில் நல்ல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால்
தமிழ்த் திரைப்படங்கள் இந்த எல்லைகளைத் தாண்டி வெகுதூரம் சென்றிருக்க
வேண்டும். செல்லவில்லை என்பதுதான் உண்மை. இதற்கு முக்கியமான ஒரு காரணம்
நமது நாயகர்கள். மற்றொரு காரணம் எதையும் மலினப்படுத்தி விடலாம்- வரலாறு,
இலக்கியம், புராணம், கலாச்சரம் போன்றவைகளைக் கூட – என்ற உறுதி - தடித்தனம்
என்றும் சொல்லலாம் - தமிழர்களிடம் மற்றவர்களை விட கொஞ்சம் அதிகம் இருப்பது.<br />
<br />
உதாரணமாக கட்டபொம்மன் , மருது பாண்டியர் வரலாறு சிறிது சிக்கலானது. சுதந்திர போராட்ட்த்திற்கு பல அடுக்குகள் இருக்கின்றன.<br />
<br />
சென்ற
நூற்றாண்டின் ஐம்பதுகளில் கட்டபொம்மன் பக்கிங்ஹாம் அரண்மணை போன்ற ஒரு
இடத்திலிருந்து கோலோச்சுவது போலவும், ஜாக்ஸனை மஞ்சள் அரைக்க அழைப்பு
விடுவது போலவும் படம் எடுத்த்தை நாம் மன்னித்து விடலாம். தூக்கு மேடையில்
நின்று பெருக்கல் வாய்ப்பாட்டை ஒப்பிப்பது போல மருது பாண்டியர் வசனம்
பேசுவதையும் மன்னித்து விடலாம். சிதம்பரம் பிள்ளை Ministry of Defence என்ற
பட்டை எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருக்கும் கப்பலில் நின்று கொண்டு
சுதேசிக் கப்பல் விடுவதைப் பற்றிப் பாட்டுப் பாடுவதையும் மன்னித்து
விடலாம். ஆனாலும் அறுபது வருடங்கள் கழித்தும் நமது வரலாறு, கலாச்சாரம்
சார்ந்த ஒரு நல்ல படம் இது வரை ஏன் வரவில்லை? நான் உளியின் ஓசை, எலியின்
மீசை போன்ற படங்களைப் பற்றிப் பேசவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்
என்று நம்புகிறேன். காரணம் நமக்கு சரித்திரம் பற்றிய பிரக்ஞையே இல்லை.<br />
<br />
1908ல்
திருநெல்வேலி கலவரம் நடந்தது. சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கியமான
சம்பவம் அது. வ.உ.சிக்கு நாற்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது. தமிழன்
சுரணையுடன் இருந்தால் 2008 இல் அந்த நிகழ்வின் நூற்றாண்டு விழாவை
பெரிதளவில் கொண்டாடியிருக்க வேண்டாமா?<br />
<br />
<b>மருதுபாண்டியர்கள் பற்றிய உங்கள் கட்டுரை நல்ல வரவேற்பு பெற்றது..</b><br />
<br />
ஆமாம்.
மருதுபாண்டியர்கள் பற்றி கோர்லே என்ற ஆங்கில எழுத்தாளர் எழுதிய புத்தகம்
தொடர்பான கட்டுரை அது. காலச்சுவட்டில் வெளியானது . வரவேற்பிற்கு பல
காரணங்கள் சொல்லப்பட்டன. அது தேவர் சமூகத்தை உயர்த்தும் விதமாக தொனித்ததால்
அக்கட்டுரைக்கு வரவேற்பு கிடைத்தது என்றும் சொல்கிறார்கள். தமிழர்களுக்கு
சரித்திரத்தில் மீது திடீரென்று ஏற்பட்ட ஈடுபாட்டால் இந்த வரவேற்புக்
கிடைத்த்து என்று சொல்லத் தயக்கமாக இருக்கிறது.<br />
<br />
<b>1857 சிப்பாய் கலகத்தில் தென்னகத்தை சேர்ந்தவர்கள் ஏன் பங்கேற்கவில்லை என்பது பற்றிய கட்டுரையும் அந்த வகையில் வரும்..</b><br />
<br />
ஆமாம். அது சம்பந்தமான ஆவணங்களைப் பார்த்தாலே எளிதாகத் தெரியும். அன்றைய
மெட்ராஸ் ஆர்மியில் தலித்துகள் நிறைய இருந்தார்கள். படை செல்லும்
இடங்களுக்கு எல்லாம் குடும்பத்தோடு சென்றார்கள்.. ஆங்கிலேயர்கள் அவர்களை
ஓரளவு நன்றாக வைத்திருந்தார்கள்... ஆங்கிலேயர் வீட்டுக்குள் அவர்கள் போக
முடியும். சமையல் செய்ய முடியும். பின்னர் எதற்காக அவர்கள் போராடவேண்டும்?
வடக்கில் கதை வேறு மாதிரி. நிலம் இருந்த உயர்சாதிக்கார்ர்கள் அங்கு
பெருமளவில் ராணுவத்தில் சேர்ந்திருந்தனர். இவையெல்லாம் என்னுடைய
புரிதல்கள். இவை சரியா இல்லையா என்று சரித்திர ஆசிரியர்கள் தான் சொல்ல
வேண்டும்.<br />
<br />
<b>தனியார் துறையில் எங்கு வேலை பார்க்கிறீர்கள்?
அரசுத் துறைக்கும் தனியார் துறைக்கும் வேறுபாடுகள் எந்த அளவில்
உள்ளன?நீங்கள் எழுதிய The Muddy River நாவலில் வரும் சந்திரன் டீ
விஷயத்தில் அவரது மேலதிகாரியின் விரோதத்தை சம்பாதிக்கும் நிலைக்குத்
தள்ளப்படுவான். உங்களுக்கு இதுபோன்ற அனுபவங்கள் உண்டா?</b><br />
<br />
Intellectual
Ventures என்ற பன்னாட்டு நிறுவனத்தில் பணி செய்கிறேன். அரசுத் துறையில்
இந்தியா முழுவதிலும் ஏற்படக் கூடிய பல பிரச்சினைகளக் கையாளக் கூடிய
பதவிகளில் இருந்தேன். அதனால் எனக்கு ஓர் அகன்றப் பார்வை கிடைத்தது என்று
சொல்லலாம். தனியார் துறையில் இந்த அனுபவம் கிடைக்க சாத்தியம் இல்லை. எனக்கு
அரசுத் துறையில் வேலை பார்த்தது பிடித்திருந்தது. தனியார் துறை தரும் பணம்
மிகவும் பிடித்திருக்கிறது. தனியார் துறையில் நீங்கள் நன்றாக வேலை
பார்த்தீர்கள் என்றால் அதன் பலன் உங்களுக்கு உடனடியாக தெரியவரும்.
குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களில். அதே சமயம் உங்களைப்
பிடிக்கவில்லையென்றால் உடனே வெளியேத் தள்ள தயங்கவும் மாட்டார்கள். ஆனால்
அங்கேயும் முட்டாள்கள் உண்டு. முட்டாள்கள் உலகெங்கிலும் பரவி
விரிந்திருக்கிறார்கள். அவர்களைச் சலித்து ஒதுக்கும் வலை இன்று வரை
கண்டுபிடிக்கப் படவில்லை. என்னைப் பொறுத்தவரையில் எனக்கு அரசுத் துறையிலும்
சரி, தனியார் துறையிலும் நல்ல சுதந்திரம் கிடைத்தது கிடைத்து வருகிறது.
சந்திரனுக்கு நடந்த்து போன்ற மோசமான சம்பவங்கள் என் வாழ்வில் நடக்கவில்லை.<br />
<br />
<b>பல்வேறு நகரங்களில் பணி, பயணம் என்று தங்கி இருப்பீர்கள். மனதுக்கு நிறைவு தந்த நகரம் எது?</b><br />
<br />
இந்திய
நகரங்களில் எனக்குப் பிடித்தது, கொல்கத்தா தான். அதன் கவர்ச்சி
வார்த்தைகளுக்கும், அந்த நகரத்தின் அழுக்குகளுக்கும் அப்பாற்பட்டது.
தமிழகத்தில் எனக்குப் பிடித்த ஊர் காரைக்குடி. பழைய அழகுகள் சிறிது
மிஞ்சியிருக்கும் ஊர். காரைக்குடியைச் சுற்றி மிக அருமையான இடங்கள் உண்டு.
திருமயம், ராமேஸ்வரம் போன்ற இடங்கள். நாங்குநேரிக்கு அருகில் உள்ள
திருக்குறுங்குடி கிராமம் மிக அழகியது. உலக அளவில் என்று பார்த்தால் எனக்கு
மிகவும் படித்த நகரம் லண்டன் . நகரம் முழுவதும் உலகப் புகழ்
பெற்றஅருங்காட்சியகங்கள்,ஓவியக் காட்சியகங்கள். . முக்கியமான விஷயம எல்லா
இடங்களுக்கும் அனுமதி இலவசம். எனக்குப் பிடித்த மற்றொரு நகரம்
சான்பிரான்ஸிஸ்கொ.<br />
<br />
<b>எழுத்தாளர்களை நேரில் காண்பதில்
விருப்பமில்லை என்று சொல்லி இருக்கிறீர்கள். டெல்லியில் பல எழுத்தாளர்கள்
இருந்தார்கள்.அவர்களுடன் நட்பு இருந்ததா?</b><br />
<br />
ஆமாம். எனக்கு
எழுத்தாளர்களை சென்று சந்திக்க வேண்டும் என்று எண்ணம் இருந்த்தில்லை.
என்றாலும் டெல்லியில் சில நண்பர்கள் இருந்தார்கள். இருக்கிறார்கள்.வெங்கட்
சாமிநாதன் எனக்கு நண்பரானது Tiger Claw Tree வெளியான பின்னர் தான்.
அதற்குப் பின்னர் தான் பல எழுத்தாளர்கள் எனக்கு நண்பர்களானார்கள்.. இந்திரா
பார்த்தசாரதியை வாசந்தி எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்திரா
பார்த்தசாரதி இன்று எனக்கு தந்தை ஸ்தானத்தில் இருப்பவர். வெங்கட் சாமிநாதன்
எனது கடுமையான விமர்சகர். அவர் என்ன சொன்னாலும் அதை நான் மதிப்பேன்.
முன்பு டெல்லியில் இருந்த பாரதிமணி, டெல்லியில் வசிக்கும் யதார்த்தா
பென்னேஸ்வரன் போன்றோர் நல்ல நண்பர்கள். தி.ஜானகிராமனை ஒரு முறை
பார்த்திருக்கிறேன். டெல்லியில் க.நா.சு வை பார்த்திருக்கிறேன்என்றாலும்
அவரிடம் பழக்கம் கிடையாது. அவர் டெல்லியில் இருக்கும்போது நானும்
இருந்தேன்.<br />
<br />
<b>டெல்லியில் தமிழ் இலக்கிய வாசிப்பு, நூலகங்கள் பற்றி சொல்லுங்கள்..</b><br />
<br />
டெல்லியில்
இருக்கும் வாசகர்களை விட நூலகங்கள் அதிகம் என்று நினைக்கிறேன். இங்கு
புத்தகங்கள் எளிதாகக் கிடைக்கின்றன. தமிழ் இலக்கிய வாசிப்பு என்பது மிக
அரிதாக நடக்கக் கூடிய ஒரு விஷயம். தில்லிகை என்ற அமைப்பு கடந்த சில
மாதங்களாக மாதம் ஓர் இலக்கியச் சந்திப்பை தவறாமல் நடத்தி வருகிறது. இதுவரை
இலக்கிய பரமார்த்த குருக்கள் அங்கு பேச அழைக்கப்படாதது நல்லதொடக்கத்தின்
அறிகுறி என்று சொல்ல வேண்டும். தில்லியில் சமீபத்தில் நடந்த ஒரு பெரிய
இலக்கிய இழப்பு வடக்கு வாசல் பத்திரிகை நின்று போனதுதான். பென்னேஸ்வரனின்
நண்பர்களாகிய நாங்கள் பிடிவாதமாக பத்திரிகையை நிறுத்தச் சொன்னோம். சொந்தப்
பணத்தைப் போட்டு அவர் பத்திரிகை நடத்துவது எங்களுக்குச் சரியாகப் படவில்லை.
தில்லியிலிருந்து வடக்கு வாசல் மீண்டும் வரும் சூழ்நிலையை இலக்கியத்தில்
நம்பிக்கை கொண்ட தமிழர்கள் சீக்கிரம் உருவாக வேண்டும்.<br />
<br />
<b>தற்போது எழுதி வரும் படைப்புகள் பற்றி சொல்லுங்களேன்..</b><br />
<br />
பதினெட்டாம்
நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க
ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகளைச் சார்ந்த நாவல் ஒன்றிற்கான வரைவைத்
தயாரித்திக்கிறேன். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் வரும். இந்த முறை மூலம்
தமிழில் இருக்கும் என்று தோன்றுகிறது. இதைத் தவிர ‘மேற்கத்திய ஓவியங்கள்
–ஓர் எளிய அறிமுகம்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்று எழுதி வருகிறேன்..<br />
<br />
<b>உங்களுக்குப் பல முகங்கள் உண்டு. இவற்றில் எந்த முகம் மக்களுக்கு அறியப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?</b><br />
<br />
ஓர் எழுத்தாளனாக, அதுவும் தமிழ் எழுத்தாளனாக அறியப்படவேண்டும் என்பது தான் என் ஆசை.<br />
<br />
<a href="http://www.thesundayindian.com/ta/story/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9E%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/34/2870/">த சன்டே இந்தியன் நேர்காணல் </a></div>
chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-7803965437241074632012-09-12T18:29:00.004+05:302012-09-12T19:03:44.096+05:30பரவசமூட்டிய படம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjydMW_A38KI1GyN6B0xQ50TSF5sEa3OL79no0c6Mh3dWU9-ezwndsFhmSMVGBMDRBT7q_b1k7xKGo5oVQtj8X0GHzPuHAO76UiM5jwygO6nf7uQSnkOemG3DbcZg5Bl6V-t8mYrtrRiHg/s1600/Mystic_India_poster.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjydMW_A38KI1GyN6B0xQ50TSF5sEa3OL79no0c6Mh3dWU9-ezwndsFhmSMVGBMDRBT7q_b1k7xKGo5oVQtj8X0GHzPuHAO76UiM5jwygO6nf7uQSnkOemG3DbcZg5Bl6V-t8mYrtrRiHg/s400/Mystic_India_poster.jpg" width="271" /></a></div>
<b> </b>தில்லியில் பக்தகோடிகள் பரவசமாக தரிசிக்கும் இடங்களில் முக்கியமானது
அக்ஷர்தாம் கோவில். கோடிக்கணக்கில் செலவு செய்து பண்டைய இந்தியாவையே
தரிசிக்க வைக்கும் அனுபவம் தரும் இந்தக் கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட நிலம்
பற்றி சர்ச்சைகள் கூட உண்டு. கடும் கட்டுப்பாட்டுடன் நடத்தப்படும் இந்தக்
கோயிலில் பக்தி கிடைக்கிறதோ இல்லையோ ஒரு தீம் பார்க் சென்று வந்த அனுபவம்
நிச்சயம் கிடைக்கும். சமீபத்தில் டெல்லி வந்திருந்த என் பெற்றோருடன் அங்கு
சென்று வந்தோம். நான் இதற்கு முன்னரே இங்கு வந்திருக்கிறேன்.இதில் சுவாமி
நாராயண் என்ற ஒரு யோகியைப் பற்றியும் பண்டைய இந்தியாவின் சிறப்புகள்
பற்றியும் விளக்க ரோபோட்டிக்ஸ் முறையில் தத்ரூபமான மனித உருவங்களுக்கு
அசைவும் பின்னணிக் குரலும் (ஆங்கிலம் - ஹிந்தி இரண்டிலும்) தந்து
பிரமிப்பூட்டுகிறார்கள்.<br />
<br />
ஒரு சினிமா ரசிகனாக என்னை மிகவும் கவர்ந்த அம்சம். அங்கு இருக்கும்
ஐ-மேக்ஸ் திரையரங்கம் ஒன்றில் திரையிடப்படும் சுவாமி நாராயன் பற்றிய
ஆவணப்படம் தான். அது ஆவணப்படமோ விளம்பரப்படமோ, அதில் சொல்லப்பட்டவை உண்மையோ
பொய்யோ தெரியாது. படம் எடுக்கப்பட்ட முறை நான் இது வரை எங்குமே
பார்த்திராத திரையனுபவத்தை வழங்கியது என்பது மட்டும் நிச்சயம். இதற்காகவே
இரண்டாம் முறையும் சென்றேன். முதல் முறை பார்த்த போது ஏற்பட்ட அந்த சிலிர்ப்பு இப்போதும் ஏற்பட்டது. <br />
<br />
85 அடி உயரமும் 65 அடி நீளமும் கொண்ட பிரமாண்டமான திரை. ஐ.மேக்ஸில்
படம் பார்த்தவர்களுக்குத் தெரியும்.அது முற்றிலும் புதிய
அனுபவம். திரை என்னும் பிரமாண்டமான மாய உலகுக்குள் சிறுதுரும்பாக நம்மை
மிதக்கும்படி செய்து நம் கர்வத்தைப் போக்கி விடும் அதியற்புத அனுபவம் அது.
அதுவும் ஏதாவது நல்ல படங்கள் வந்தால் மட்டுமே தியேட்டர் பக்கம்
தலைவைக்கும் பேர்வழியான எனக்கு இந்த மெகா திரையனுபவம் பரவசம் தந்தது. அது
வரை எல்லா காட்சிக்கூடங்களிலும் பத்து இருபது என்ற எண்ணிக்கையில் அமர்ந்து
பார்க்கும் பார்வையாளர்கள் மொத்தமும் சேர்ந்து பார்க்கும்படி வசதியான
திரையரங்கம். மிகச் சிறப்பான ஒலியமைப்பு. <br />
<br />
படம் சுவாமி நாராயன் என்ற ஆன்மீக ஒளிசிந்தும் பத்து பதினொன்று வயதுள்ள
சிறுவன் தன் குடும்பத்தையும் வீட்டையும் ஊரையும் விட்டு நள்ளிரவில்
தொடங்கும் ஆன்மீகத் தேடல் கொண்ட பயணம். முதல் காட்சியே இது வழக்கமான,
பின்னணியில் சிதாரோ வீணையோ ஒலிக்க சூர்ய உதயம்-அஸ்தமனம் கிளிஷேக்களுடன்
தொடங்கி கோவில் சிற்பங்கள் பக்தகோடிகளின் பரவச முகங்களுடன் வரும் ஆன்மீக
ஆவணப்படம் இல்லை என்பதை உணர்த்தியது. சுவாமி நாராயனாக நடித்த அந்த சிறுவன்
நல்ல தேர்வு. மழை பெய்த இரவின் பின்னணியில் பதினெட்டாம் நூற்றாண்டு
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் ஒரு கிராமத்தை அவ்வளவு பெரிய திரையில்
பார்க்கும்போது நம்முள் பின்னோக்கிய ஒரு காலப்பயணம் தொடங்குவது உண்மை.
அந்தக் காட்சியில் அந்த சிறு வீட்டின் செட், ஒளியமைப்பு எல்லாமே இது வேறு
வகை என்று உணர்த்தியது. வெளியில் வரும் சிறுவன் பார்வையில் அந்த
பின்னிரவில் யாருக்காகவோ ரொட்டி செய்ய மாவரைக்கும் ஒரு மூதாட்டி படுகிறாள்.
அன்புக்குரிய அவளையும் பிரிந்து ஆன்மீக சஞ்சாரத்தில் நீந்த முடிவெடுக்கும்
சிறுவன் இதழோரம் தெய்வீகப் புன்னைகையுடன் அங்கிருந்து நகர்கிறான்.
காட்சியில் அந்த மூதாட்டியின் வீட்டில் மட்டும் வெளிச்சம். சில
நூற்றாண்டுகள் பின்னே உள்ள அந்த நீண்ட தெருவில் உள்ள வீடுகள் சற்று முன்
பெய்த மழையால் நனைந்து வெளிறிய பழுப்பு நிறத்தில் உறைந்திருக்க, சிறுவன்
தேங்கியிருக்கும் மழை நீர் துளிகள் தெறிக்க அதில் காலடி எடுத்து வைத்து தன்
பயணத்தைத் துவங்கும் அந்தக் காட்சி அதியற்புதமானது. <br />
<br />
பிறகு அடர்ந்த காடுகள், புரண்டோடும் காட்டாறுகள், சிலிர்க்கவைக்கும்
உயரம் கொண்ட பணி படர்ந்த மலைகளில் வெறும் காலுடன் பயணிக்கும் அந்த
சிறுவனின் பயணத்தில் நாமும் பங்கேற்கிறோம். ஆற்றில் கால் வைக்கும் அவனை
ஆற்றின் நீரோட்டம் அப்படியே இழுத்து செல்ல, பின்னணியில் திகிலூட்டும் இசை
ஒலிக்க சிறுவன் ஆற்றுடன் பயணித்து அதைக் கடக்கிறான். நமக்கு மனம்
பதைக்கிறது. அத்தனை தத்ரூபம். தொடர்ந்து மலைகளின் மீது அடர்ந்து
செழித்திருக்கும் கரும்பச்சை இலைகள் கொண்ட மரங்களும் ஈர மண்ணும் செடி
கொடிகளும் அவன் பயணத்துக்கான பாதையாகின்றன. வெள்ளை வெளேரென்ற இமையமலைப்
பனிச் சூழலில் அத்தனை உயரமாக பரந்து படர்ந்திருக்கும் அந்த பிரமாண்டத்தில்
ஒரு சிறு எறும்பு போல் அவன் நடக்க நீலவானத்தின் பேரமைதியும் சூரியக்
கதிரில் வெளிரும் மேகங்களும் அந்த மெகா திரையில் விரிய ..அந்த அனுபவம் ஆஹா!
<br />
<br />
சிறுவன் ஒரு கிராமத்துக்கு வெளியே கிராமத்து அரண்சுவர் இருக்கும்
இடத்தில அமர்ந்திருக்க அங்குள்ள மடத்தின் தலைமை பூசாரி அவன் அங்கு
அமர்ந்திருப்பது ஆபத்து என்று சொல்லி உள்ளே அழைக்கிறார். இரவில் அங்கு ஒரு
சிங்கம் வருமென்றும் அது அவனைக் கொன்று விடும் என்று கூறி அவனை
கிராமத்துக்குள் அழைத்தாலும் சிறுவன் தெய்வீகப் புன்னகையுடன் மறுத்து
விடுகிறான். தனக்கு அந்த ஜீவனைக் கண்டு பயமேதுமில்லை என்று அவன் சொல்ல வேறு
வழியின்றி சங்கடத்துடன் அந்தப் பெரியவர் சென்று விடுகிறார். மெல்லப்
பரவும் இருள் அந்த கிராமத்தை சூழத் தொடங்க கிராமத்து மக்கள் பதட்டத்துடன்
தங்கள் குழந்தைகள் கால்நடைகளுடன் தங்கள் வீடுகள் நோக்கி விரைகிறார்கள்.
இரவில் சிறுவன் அமர்ந்திருக்கும் மரத்தடிக்கு எதிரே இருக்கும் அடர்ந்த
புதர்களின் உள்ளே இருந்து ஒரு சிங்கம் வருகிறது. சிங்கம் என்றால்
பல்பிடுங்கப்பட்டு கட்டிப் போட்டிருப்பதால் தைரியமாக அதை புரட்டி எடுக்கும்
எம்.ஜியார் காட்சி பாணி கிழச் சிங்கம் அல்ல. அத்தனை உயரத்துடன், அலையாகத்
திமிரும் அடர்ந்த சிகையும் பெரிய உடலும் கொண்ட அசல் சிங்கம். அது எழுப்பிய
சத்தத்தில் இங்கே அரங்கில் குழந்தைகள் அலறின. பெரியவர்களுக்கே கொஞ்சம் பீதி
ஏற்பட்டிருக்கும். உள்ளே இருந்து பதைப்புடன் அந்தப் பெரியவர்
பார்த்துக்கொண்டிருக்க ஆன்மீகப் பேரொளி சிந்தும் புன்னகையுடன்
அமர்ந்திருக்கும் அந்த சிறுவன் முன் மண்டியிடுகிறது அந்த கம்பீர விலங்கு.
சற்று நேரத்தில் அவன் காலடியிலேயே சுகமாக உறங்கவும் செய்கிறது.
பார்த்துக்கொண்டிருக்கும் பெரியவருக்குள் ஏற்படும் சிலிர்ப்பு நமக்கும் தொற்றுகிறது. இது போன்ற 'கதைகளில்' எத்தனை உண்மை இருக்கிறது என்பது இங்கு
பெரிதல்ல. அந்தக் கதைகள் தரும் ஒரு mysterious உணர்வை நம் உள்மனது
எப்போதும் ரசிக்கும். அதைக் காட்சிப்படுத்திய விதம். அந்த சூழல் அந்த
சத்தம் அமைதி எல்லாமே இந்த படம் எடுத்தவர்கள் அனுபவசாலிகள். அதுவும்
நம்மூர் ஆட்கள் அல்ல என்று உணர்த்தின . இது போல் பல காட்சிகள் உள்ளன இந்த
படத்தில். <br />
<br />
சுமார் 20 நிமிடம் ஓடும் அந்த ஆவணப் படத்தின் தரம் உணமையை சொன்னால் நான்
பார்த்த எந்த மெகா பட்ஜெட் திரைப்படங்களை விடவும் பல மடங்கு அதிகம். நான்
எதிர்பார்த்தது போலவே படம் Keith Melton என்ற இயக்குனர் படத்தை இயக்கியிருக்கிறார். ஆவணப்படங்களில் தேர்ச்சி பெற்ற ஒரு பெருங்குழு படத்தில் பணியாற்றியிருக்கிறது. Keith Melton பல 70 mm
மற்றும் ஐ- மேக்ஸ் படங்கள் எடுத்த அனுபவம் உள்ளவர். இந்தப் படத்துக்காக
நிச்சயம் பெருந்தொகை செலவாகி இருக்கும் என்று நினைக்கிறேன். நம்மூரில்
பிரமாண்டம் என்று சொல்லி ஹோட்டல் வரவேற்பறையை நாயகனின் வீடாய் காட்டும்
ஹை-டெக் இயக்குனர்களெல்லாம் இந்தப் படத்தைப் பார்த்தால் வெட்கித்
தலைகுனிவார்கள். தரத்தில் அத்தனை உயரத்தில் இருக்கிறது படம். <br />
<br />
நான் முன்பே சொன்னபடி படத்தின் கருத்து, கதை இவை என்னை பெரிதாக
பாதிக்காவிட்டாலும் அதன் தரம் என்னை பரவசப்படுத்தியது உண்மை. இத்தனை
குறைந்த கால அளவு கொண்ட ஒரு படத்தில் எவற்றைக் காட்சிப் படுத்தினால்
சுவாரஸ்யமாக இருக்கும் என்று யோசித்து, சிறுபிள்ளைத்தனம் இல்லாத
காட்சியமைப்புகளால் திரைக்கதைக்கு வலுசேர்த்து
பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். டெல்லியில் உள்ள அக்ஷர்தாமில் தான் இந்தப்
படம் திரையிடப்படுகிறதா இல்லை மற்ற இடங்களில் உள்ள அக்ஷர்தாமிலும் இப்படம்
திரையிடப் படுகிறதா என்று தெரியவில்லை. ஒரு சினிமா ரசிகனாக சக சினிமா
ரசிகர்களிடம் நான் சொல்வது இது தான். சந்தர்ப்பம் கிடைத்தால் இந்தப்
படத்தைப் பார்க்கும் வாய்ப்பை தவற விடாதீர்கள். <br />
<br />
திரையரங்கில் அமர்ந்தவுடன் பின்னால் அமர்ந்திருந்த ஒரு வடக்கத்தி
குடுமபத்தின் குழந்தை ஒன்று திரையைப் பார்த்த பிரமிப்பில் சொன்னது. "மம்மி
...கித்னீ படீ டி.வி. ஹே!" (எத்தனை பெரிய டிவி!)</div>
chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-75676301230466542592012-09-06T17:31:00.001+05:302012-09-06T17:35:12.724+05:30பொன்வசந்தம் நிஜமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZotVsZ1eoBIXsaEv2A33ALaCTtcRRzCCLFjMTXAdsbi-CshyphenhyphenQIehASecKJsJMJJBTwKraUJiojEOC4Fh_otmuq2mTPxdUa8ouBeLKj9NTYu1GzH1Q2ECsqFtTBpFw1FwkpPTHc35iDcE/s1600/tamil-movies-neethane-en-ponvasantham-audio-01.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="188" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZotVsZ1eoBIXsaEv2A33ALaCTtcRRzCCLFjMTXAdsbi-CshyphenhyphenQIehASecKJsJMJJBTwKraUJiojEOC4Fh_otmuq2mTPxdUa8ouBeLKj9NTYu1GzH1Q2ECsqFtTBpFw1FwkpPTHc35iDcE/s320/tamil-movies-neethane-en-ponvasantham-audio-01.jpg" width="320" /></a></div>
தொன்னுத்தி ரெண்டில் சிம்பனி செய்ய ராஜா வேட்டி குர்தா அங்க
வஸ்திரங்களுடன் லண்டன் சென்றிருந்த நாட்களுக்கும் நீதானே என் பொன்வசந்தம்
ரெக்கார்டிங்குக்காக கருப்பு கோட்டெல்லாம் போட்டு சென்றிருந்த
நாட்களுக்கும் இடையில் சுமார் இருபதாண்டுகள் ஓட்டம் இருக்கிறது. இந்தக் கால
இடைவெளியில் ரஹ்மான் நுழைந்து வளர்ந்து அமைத்த ராஜ்ஜியம் கூட முடிந்து
யுவன்ஷங்கர், ஹாரிஸ் காலம் கூட பழசாகி ஜி .வி.பிரகாஷ்குமார், சந்தோஷ்
நாயணன் வரைக்கும் வந்து விட்டது.<br />
<br />
திரைத்துறையில் ஒரு காலத்தில் ராஜா ராஜா என்று அலைந்து திரிந்த பாலா,
தங்கர்பச்சான் கும்பல் கூட அவரை விட்டு விட்டு வேறு இசையமைப்பாளர்கள்
பக்கம் போய் விட்ட நிலையில், ஹாரிஸ் - ரஹ்மான் கூட்டணிகளில் ஹைடெக் இசைக்
காவியங்கள் தந்த கவுதம் மேனன் ராஜாவை வைத்து படம் பண்ணப் போவதாக வந்த
செய்திகளே ஆச்சர்யப்படுத்தின. ஒரு இயக்குனராக சில நவீன தொழில்நுட்பங்களை
தமிழுக்கு கொண்டு வந்தவர் என்பதைத் தாண்டி அவர் மீது பெரிய கலை மதிப்பீடு
எவருக்கும் இல்லை என்றாலும் இந்த புதுக் கூட்டணி பெரிய எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியது உண்மை.<br />
<br />
நாளுக்கொரு செய்தி. சமூக வலைத் தளங்களில் டீசர் என்ற பெயரில் மைக்ரோ
செகண்டுகளில் இசைத் துண்டுகள் என்று படத்தின் இசை பற்றிய எதிர்பார்ப்பை
அதிகரித்ததில் கவுதம் மேனனுக்கு நிச்சயம் வெற்றி தான். பாடல்
வெளியீட்டிலும் கூட ஹங்கேரி இசைக் குழுவை இறக்குமதி செய்து மூத்த
இயக்குனர்களை வைத்து ராஜாவுக்கு பெரிய மரியாதையும் செய்தார். மகிழ்ச்சி.<br />
<br />
என்ன சொல்லி விற்றாலும் ப்ராடக்ட் எப்படி இருக்கிறது என்று யூசர்
பார்ப்பானே! நான் இசை தெரியாத எண்டு யூசர் என்பதால் பாடல்களைப் பற்றி ஒரு
சினிமா இசை ரசிகனாகவே என் கருத்தை சொல்கிறேன்.ராஜா ரசிகர்களைப் பொறுத்தவரை
அவரது பொற்கால இசையை நவீனத் தொழில்நுட்பங்களுடன் தந்திருப்பார் அல்லது
இதுவரை அவரிடமிருந்து கேட்டிராத புது வகை பொழியும் என்ற எதிர்பார்ப்பில்
இருந்தார்கள். நானும் அப்படியே. <br />
<br />
கேட்டவுடன் பிடிப்பவை என்றால் காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன் பாடலும்,
முதல் முறை பார்த்த ஞாபகம் பாடலும் தான். யுவனுக்கு ரெண்டு பாடல்
கொடுத்ததன் மூலம் இந்திய வாரிசு அரசியல்வாதிகள் சினிமாக்காரர்களின் கெட்ட
லிஸ்டில் ராஜாவும் சேர்ந்து விட்டாரே என்ற வருத்தம் தான் வந்தது .
யுவனுக்கெல்லாம் பாடவே வராது என்பது யுனிவெர்சல் ட்ரூத். மாபெரும் இசைக்
கலைஞனான ராஜாவுக்கு அது தெரியவே இல்லையா என்ன? என்ன மோசமான பாடும் முறை
யுவனிடம்.. கொஞ்சம் செருமி விட்டு நோட்சைப் பார்த்து பாடு என்று ராஜா அவரை
சொல்லவே இல்லையா? அருமையான பாடகரான கார்திக்குக்கே எல்லா பாடலையும்
தந்திருக்கலாம். என்றாலும் பெரிய மாற்றம் இருந்திருக்காது தான். முழுக்க
முழுக்க மேற்கத்திய முறைப்படி இசை தந்திருந்தாலும் இசையில் சுவாரஸ்யம்
ரொம்பக் கம்மி. மலையாளப் படமான குரு மற்றும் நாசரின் தேவதை பாடல்களின்
சாயல் நிறையவே தெரிகிறது. இதே இசைக் கருவிகளை வைத்து தான் இளம்பனி துளி
விழும் நேரம், புத்தம் புது காலை முதல் ஒரு பூங்காவனம் என்று புதுமைகளின்
குவியலைக் கொட்டி நம் காதுகளுக்கு இசை இனிப்புகளை ஊட்டினார்
ராஜா..இதிலோ...என்ன சொல்ல?<br />
<br />
ராஜாவிடம் தற்போது இருக்கும் மிகப் பெரிய குறை நல்ல பாடலாசிரியர் இல்லாதது தான். நா.
முத்துக்குமார் கொஞ்சம் கவித்துவமாக யோசித்து எழுதி இருந்தாலும் 'தம்பி
சிம்பிளா குடு..என்னைய மாதிரி பாமரனுக்கும் புரியணும்' என்று
தடுத்திருப்பாரோ ராஜா? கண்கள் உள்ள காரணம்....உன்னைப் பார்க்கத் தானே என்று
கேட்டுப் புளித்த வரிகள் வேறு. புடிக்கல மாமு ..நெஜமாவே புடிக்கல மாமு.
அப்படி ஒரு பாடலை ஏன் வைக்க வேண்டும் என்று தெரியவில்லை. <br />
<br />
ஒரு வேளை படத்துடன் பார்த்தால் பிடிக்குமோ என்று கூட தோன்றுகிறது.. இன்னும்
பல முறை கேட்டால் ஒரு வேளை பிடிக்கலாமோ என்று சுரேஷ்கண்ணன் போலவே நானும்
யோசிக்கிறேன். ஒன்றுமே இல்லை..ஜப்பானில் கல்யாண ராமனில் 'சின்னப் பூ
சின்னப் பூ' என்றொரு பாடல் இருக்கிறது. அதன் முகப்பு இசையை ஒரு முறை
கேளுங்கள். அந்த வசந்தம் இனி வருமா என்றிருக்கிறது. <br />
<br />
ராஜா..... நீங்கள் தான் எங்கள் பொன் வசந்தம்!!! உங்களுக்கு அது தெரியும் தானே?</div>
chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-79263871768022117102012-09-04T12:56:00.001+05:302012-09-19T17:17:56.250+05:30நான் அறிந்த R.P.ராஜநாயஹம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தற்போது டெல்லியில் வேலைபார்க்கும் என் தம்பி முன்பு திருப்பூரில் ஒரு
கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலைபார்க்கும்போது தன்னோடு ஒரு எழுத்தாளர்
வேலைபார்க்கிறார் என்று சொல்வான். மற்றவர்களிடம் அவ்வளவாக பேசாத அவர்
அவனுடன் மட்டும் மனம் விட்டுப் பேசுவாராம். பிறகு அவன் டெல்லி வந்த பின்
அவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான். வாங்கிப் பேசினால் அவர் தான்
ஆர்.பி.ராஜநாயகம். <br />
<br />
எழுத்தாளர் என்ற தோரணை சிறிதும் இல்லாத சாதாரண மனிதன் போன்ற பேச்சு. அந்த
குரலில் அத்தனை நேசம் இருந்தது. அவரது வலைப்பூவை முன்பு தொடர்ந்து படித்து
வந்திருந்தாலும் அவருடன் பேசிய அந்த காலகட்டத்தில் - இரண்டு வருடங்களுக்கு
முன்னர்- அவர் தொடர்ந்து எழுத முடியாத அளவுக்கு வேலைப் பளுவில் இருப்பதாகக்
குறிப்பிட்டார். அலுவலகத்தில் கம்ப்யூட்டர் இருந்தாலும் வலைப்பூவுக்காக
எழுதும் அளவுக்கு நேரம் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. எனக்கு மிகவும்
வருத்தமாக இருந்தது. <br />
<br />
அப்போது என் வலைப்பூவில் அவரது வலைப்பூவின் இணைப்பை நான் வாசிக்கும்
தளங்கள் பட்டியலில் இட்டேன். எனது ஆதர்ச எழுத்தாளர் ஒருவருக்கும்
இவருக்கும் ஆகாது என்று எனக்கு நன்றாகத் தெரிந்தும், அதையெல்லாம் அவர்
பொருட்படுத்த மாட்டார் என்று நினைத்து அதை செய்தேன். அதற்குப் பிறகு என்
ஆதர்ச எழுத்தாளர் என்னை முற்றிலும் புறக்கணித்து விட்டார். தற்போது தொடர்ந்து வலைப்பூவில் எழுதி வருகிறார் ராஜநாயகம். இலக்கியம்
மட்டுமல்லாமல் சினிமாவிலும் நல்ல பரிச்சயமும் ஞானமும் உள்ளவர். சில
படங்களில் நடித்து அந்தக் காட்சிகள் வெளிவராத விஷயங்களையும் பதிவு
செய்திருக்கிறார். பல நடிகர்கள், துணை நடிகர்களுடன் நேரில் பழகியிருப்பதால்
அவரது சினிமா பற்றிய பதிவுகளில் அத்தனை இயல்பும் அழகும் இருக்கிறது. <br />
<br />
சில நாட்களுக்கு முன்னர் அவரிடம் பேசினேன். தற்போது ஒரு அரசு சாரா அமைப்பு
ஒன்றில் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்ட அவர் இப்போது முன்பை விடவும்
குறைந்த நேரமே எழுதக் கிடைப்பதாகவும் இருந்தாலும் கிடைக்கும் நேரத்தில் சில
பதிவுகளையும் மீள் பதிவுகளையும் பதிவேற்றம் செய்து வருவதாகவும் கூறினார். <br />
<br />
"உங்க குரல் அப்படியே சிவா (என் தம்பி) மாதிரியே இருக்கு.. அதனாலேயே கூட
உங்க கிட்டே அதிக நேரம் பேசுறேன். இல்லேன்னா எனக்கு இருக்கும் வேலைப்
பளுவில் யார்க்கிட்டேயும் பேசக் கூட முடியாது " என்றார். களப்பணி
ஒன்றுக்காக மற்றவர்களுடன் வந்திருந்த அவர் என்னிடம் பேசுவதற்காக ஒரு
மரநிழலில் ஒதுங்கி நிற்பதாக சொன்னார். அந்தக் குரலும் காட்சியும் என்னுள்
ஓடிக்கொண்டிருந்தது.தொடர்ந்து சினிமா, இலக்கியம் என்று பேசிக்கொண்டே
இருந்தார். அவரது ஆங்கில வீச்சு அற்புதமாக இருக்கும். "எப்படி ஸார் இப்படி
ஒரு லாங்குவேஜ் பிடிச்சீங்க?" என்றதற்கு அவர் சொன்ன பதில் " நான் எம்.ஏ.
இங்கிலீஷ் லிட்ரேச்சர்ங்க"!<br />
<br />
இவருக்கு மட்டும் நேரம் கிடைத்தால் எத்தனை விஷயங்களை நாம் அறிந்துகொள்ளலாம் என்று தோன்றியது. <br />
<br />
<br />
<a href="http://rprajanayahem.blogspot.in/">http://rprajanayahem.blogspot.in/</a><br />
<br />
<br /></div>
chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-55968042577343264502012-09-03T16:09:00.001+05:302012-09-03T16:09:36.034+05:30அபத்தக் குவியல்கள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRrDVQOjb-txFzA-HLQQH8MrneKN3981y0_wyEgs5IOzceLgSDzMMo7x9c7V2GPpp4AD-M1p3L1NphBZAmvstyiYYFt6Nt6Rbmfqm3WdubNBf_u9WRGm0zOvVPrhOufqzCzUd-7AYH57Q/s1600/Dhayam-Onnu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRrDVQOjb-txFzA-HLQQH8MrneKN3981y0_wyEgs5IOzceLgSDzMMo7x9c7V2GPpp4AD-M1p3L1NphBZAmvstyiYYFt6Nt6Rbmfqm3WdubNBf_u9WRGm0zOvVPrhOufqzCzUd-7AYH57Q/s1600/Dhayam-Onnu.jpg" /></a></div>
தமிழ்ப் படங்களில் அபத்தங்கள் ஆரம்ப காலத்திலிருந்தே அதிகம் என்பதற்கு
யதேச்சையாக சில தினங்களுக்கு முன் டி.வியில் கண்ட திரைக்காட்சிகள் உதாரணம்.
ஒரு எம்ஜியார் படம். நம்பியார் தலைமையில் ஆறேழு பேர் துப்பாக்கிகளை
வைத்துக்கொண்டு ஒருவனைத் துரத்துகிறார்கள். எதிர்த்தாற்போல் எம்ஜியார்.
வந்தவர்கள் அத்தனை துப்பாக்கிகளையும் விட்டு விட்டு கத்தியால் அந்த மனிதன்
முதுகில் குத்துகிறார்கள். அவன் கையில் இருக்கும் ரகசியங்கள் அடங்கிய
பெட்டியை பறிக்குமுன் எம்ஜியார் சின்னூண்டு ரிவால்வரை உயர்த்தி வானத்தை
நோக்கி சுடுகிறார். வில்லன் கூட்டம் துண்டக்காணோம் துணியக் காணோம் என்று
ஓடிவிடுகிறது. இத்தனைக்கும் அனைவரிடமும் இருக்கும் துப்பாக்கி அவர்களை விட
உயரம். என்னடா இது கொடுமை என்று சேனலை திருப்பினால் அர்ஜுன் நடித்த தாயம்
ஒண்ணு படம். அவ்வளவு செலவு பண்ணி துப்பாக்கிகள், ஹீரோயின்கள், அவர்கள்
அழகிய உடல்கள் மேல் சூட்கேஸ் துணிகளால் தைக்கப்பட்ட போராளிச் சீருடைகள்,
கப்பல்கள்,கடல்கள்...என்று தயாரிப்பாளர் கந்து வட்டிக்கு கடன்வாங்கிக்
கொடுத்தக் காசில் படமெடுத்துப் பழகி இருக்கிறார்கள் போலும். ஆக்ஷன் கிங்
அர்ஜுன் கப்பலில் பயணிக்க ஏதோ சோகத்தில் ஒரு பாட்டுப்பாட (மனதிலே ஒரு
பாட்டு- என்ன மென்மையான பாடல்!) கப்பலின் வேறொரு தளத்தில் சாத்தப்பட்ட
வேறொரு அறையில் இருந்து சுசிலா குரலில் எட்டு வயசுக் குட்டிப்பெண் ஒன்று
பதிலுக்குப் பாட...தேடி வந்தக் குழந்தை கிடைத்து விட்டது என்று அர்ஜுன் போக
அங்கே வில்லன் என்ட்ரி. யாரடா அது என்று பார்த்தால் லிவிங்க்ஸ்டன். ஸ்நேக்
பாபு வடிவேலு ஹேர் ஸ்டைலில் அவரைப் பார்க்கவே சிரிப்பு தாளவில்லை.
தடார்புடாரென்று சண்டை. கடைசியில் போலீஸ் வந்து ரெண்டு ரவுண்டு
லிவிங்க்ஸ்டன் நெஞ்சைபார்த்து சுட குங்குமம் கலந்த தண்ணீர் பீய்ச்சியடித்து
லிவிங்க்ஸ்டன் சரிகிறார். இடையில் குழந்தையைக் காப்பாற்ற ஓடி வரும்
மாதுரி உடலில் பல குண்டுகளை செலுத்தி விடுகிறார் லிவிங்க்ஸ்டன் ("எங்க
பாதர் மாதர் எல்லாமே அங்க தானே லிவிங்க்ஸ்டன்" - ஸ்டீவ் வாவ் வடிவேலு!) <br />
<br />
அட முடிந்து விட்டதே என்று பார்த்தால் திடீரென்று குண்டடிப்பட்ட
லிவிங்க்ஸ்டன் எதிரே துப்பாக்கியுடன். பின்னர் அவர் என்ன நினைத்தாரோ தானே
நெஞ்சைப் பிடித்துக் கீழே விழுந்து செத்துப் போகிறார். திரும்பவும் மனதிலே
ஒரு பாட்டு. எனக்கென்னவோ அதற்க்கப்புறம் இளையராஜா அர்ஜுன் படங்களுக்கு இசை
அமைக்காததற்கு தாயம் ஒண்ணு தான் காரணம் என்று தோன்றுகிறது. </div>
chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-54467254095738304692012-08-23T17:07:00.001+05:302012-08-23T17:11:25.625+05:30நீரில் கரையாத கறைகள்:சிறுகதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கனகு அக்கா அந்தச் சுவரில் என்றோ படிந்து விட்ட பெரும் கறையைப் போல
அசையாமல் நின்றுகொண்டிருந்தாள். நீண்ட நேரம் அப்படியே
நின்றுகொண்டிருந்தவளிடம் சரியாகப் பேச முடியாதபடி அலுவலகத்துக்குக் கிளம்ப
வேண்டிய அவசியத்தில் அங்குமிங்கும் அலைந்து உடைகளைத்
தேடிக்கொண்டிருந்தேன். மணிகண்டன் இன்னும் குளித்துக் கொண்டிருந்தான். இந்த
அறைக்கு வந்து மூன்று நாட்கள் தான் ஆகின்றன. வந்த நாளிலிருந்து வேலை வேலை
என்று ஓடிக்கொண்டே இருந்ததால் புதிய அறையில் பொருட்களை அவற்றுக்குரிய
இடங்களில் வைக்க நேரமே இருக்கவில்லை. ஏதாவது ஒரு காரணம். களைப்பு. குடி.
சோம்பேறித்தனம் என்று நானும் மணிகண்டனும் கிடைத்த நேரத்தில் ஓய்வாக
சந்தோஷமாக இருப்பதையே விரும்பியதால் உடைகளும் போர்வைகள் ரஜாய்களும்
சுருண்டு குவிந்து ஒரு ஜவுளிக்கடையின் பழைய ஸ்டோர் ரூம் மாதிரி இருந்தது
அறை. வீட்டுக்காரன் மாட்டி வைத்திருந்த பழைய விளக்கில் அந்தப் புதிய அறை
புராதனத் தன்மையுடன் மங்கிப் போய் தெரிந்தது. நெருக்கமான சந்துகளுக்குள்
இருக்கும் வீடுகளின் அறைகள் என்பதால் பகலிலும் விளக்கு எரிந்தாகவேண்டும்.
நீங்கள் ஒரு இரண்டு வாரம் ஒரு சந்துப் பக்கம் போகாமல் இருந்து விட்டு,
மீண்டும் சென்று பார்த்தால் அங்கு ஒரு புதிய கட்டிடம் உங்களை வரவேற்கும்.
எங்களைப் போல் பிழைப்புக்காக இங்கு வருபவர்களைத் தங்கவைத்து காசு
பார்க்கவென்றே புறாக்கூண்டு முதல் நவீன வசதிகொண்ட அறைகள் வரை கட்ட ,
முனிர்கா கிராம மக்கள் எந்நேரமும் சிமென்ட் மூட்டைகளை கழுதைகளின் மேலேற்றி
வருடம் முழுதும் அலைந்துகொண்டே இருப்பார்கள்.<br />
<br />
காலையில் சீக்கிரமே வேலைக்குச் சென்று இரவு நேரம்கழித்து அறை வந்து
சேரும்போது உடலே அசதியாகிவிடும். கனகு அக்கா தான் எங்கள் துணிகளைத்
துவைப்பதுடன் வீட்டைக் கூட்டிப் பெருக்கி வைப்பாள். வாரம் நான்கு நாள்.
எல்லாவற்றுக்கும் சேர்த்து மாதம் அவளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து
விடுவோம். நான் டெல்லி வந்த புதிதில் இருந்தே அவள் தான் எனக்குத் துணி
துவைக்கிறாள். டெல்லியில் தமிழர்கள் கணிசமாக வாழும் பகுதிகளில் ஒன்றான
முனிர்காவில் கனகு அக்கா போல் பல தமிழ்ப் பெண்கள் வேலை செய்கிறார்கள்.
பழக்கத்தைப் பொறுத்து சம்பளம் தருவார்கள் இங்கு வேலை கிடைத்து தங்குவதற்கு
முனிர்காவுக்கு வந்து விட்ட தமிழ் இளைஞர்கள். எனக்குத் தெரிந்து இவ்வளவு
தான் தர வேண்டும் என்று கெடுபிடி செய்யும் பெண்களைப் பார்த்ததில்லை.
தினமும் காலை கதிர்வேல் மெஸ்சுக்கு சாப்பிடப்போகும்போது இந்தப் பெண்கள்
மெஸ்சுக்கு வெளியே சுவரில் சாய்ந்து டீ குடித்துக் கொண்டிருப்பதைப்
பார்க்கலாம். இன்று எந்த வீட்டுக்கு வேலைக்குப் போவது என்று முடிவெடுப்பது
முதல் வேலை செய்யும் வீடுகளில் நடக்கும் விவகாரங்கள் வரை தணிந்த குரலில்
பகிர்ந்து கொண்டிருப்பார்கள். ஓரிருவர் தரையில் குந்தியபடி
அமர்ந்திருப்பார்கள். பெரும்பாலும் சேலம் பக்கத்திலிருந்து பிழைப்புக்காக
வந்தவர்கள்.<br />
“இல்லீங்..ஆமாங் ..” என்று தான் பேசுவார்கள்.<br />
<br />
கோடை காலத்தில் வியர்வையும் குளிர்காலத்தில் எலும்பில் வலியெடுக்க
வைக்கும் குளிர் நீரும் எங்களைப் போன்ற சோம்பேறிகளை துணி துவைக்கும்
பணியில் இருந்து தள்ளி வைக்கும். எங்கள் அழுக்குகளைத் துவைக்கத் தெரிந்த
இந்தப் பெண்களுக்கு மட்டும் வியர்வையும் குளிரும் ஏன் ஒன்றுமே செய்வதில்லை
என்று தோன்றும். பிழைப்புக்காகத் தான் அவர்களும் நாங்களும் இரண்டாயிரம்
கிலோமீட்டர்களை உறவுகளின் விசும்பல்களுக்கு இடையில் கடந்து
வந்திருக்கிறோம்.<br />
<br />
எங்களால் முடிந்தவரைத் துணிகளை அழுக்காக்கி அவர்களிடம் கொடுத்தால்
அவர்கள் திரும்பவும் சுத்தமாக்கி எங்களுக்குத் தருவார்கள். சில சமயம்
ஊருக்குப் போக நேர்ந்தால் தங்களுக்கு பதில் வேறு பெண்கள் யாரையாவது
அறிமுகப்படுத்தி விட்டுப் போவார்கள். தற்காலிக ஏற்பாடு. எனக்கு கனகு
அக்காவை விட சரியாகத் துணி துவைக்கும் பெண்ணாக யாரும் ஏனோ அமையவில்லை.
அவள் எத்தனை துணி என்றாலும் முகம் சுளிக்காமல் தன் சகோதரன் துணியைத்
துவைப்பவள் போல் அக்கறையுடன் நேரம் எடுத்துக்கொண்டு துவைப்பாள். சட்டையின்
காலரில் அழுக்கைத் தேட வேண்டி இருக்கும். எங்கள் உள்ளாடைகள் தவிர்த்த மற்ற
எல்லாத் துணிகளும் அவள் கை பட்டு ஒளிரும். நானும் மணியும் ஆளுக்கொரு சாவியை
எடுத்துக் கொண்டு அவளிடம் ஒரு சாவியைக் கொடுத்து வைத்திருந்தோம். அவள்
நாங்கள் அலுவலகம் சென்ற பின் வந்து துணிகளைத் துவைத்து அறையை சுத்தமாக்கி
வைப்பாள். இரண்டே நாளில் அறை மீண்டும் குப்பையாகி விடும். சிகரட்
துண்டுகள், மிச்சமிருக்கும் நம்கீன் பாக்கெட்டுகள் அறையெங்கும் விரவிக்
கிடக்கும். நான் எடுப்பேன் என்று மணியும் அவன் எடுப்பான் என்றும் நானும்
நினைத்து கடைசிவரை அங்கேயே கிடக்கும் பொருட்களை கனகு அக்கா தான் எடுத்து
வைப்பாள். கட்டாயமாக வார இறுதியிலும் அவ்வப்போது வார நாட்களிலும் குடி
இருக்கும் என்பதால் எங்கள் அறையில் பாட்டில்களுக்குப் பஞ்சம் இருக்காது.
ஒரு முறை, உபயோகிக்கப்படாமல் கிடக்கும் எங்கள் கிச்சனுக்குள் நுழைந்து
பார்த்த சதீஷின் மனைவிக்கு மயக்கம் வராத குறை. ” என்னண்ணா ..இவ்வளவா
குடிப்பீங்க ?” என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தாள்.
சொல்லாமல் சதீஷும் அவளும் வருவார்கள் என்று நாங்கள் நினைக்கவே இல்லை.<br />
<br />
கனகு அக்கா அந்த பாட்டிலகளை எடுத்துக் கொள்வாள். நிறைய இருக்கும்
என்பதால் அவற்றை வெளியில் கொடுத்து காசு வாங்கிக்கொள்ளட்டும் என்று
அவளுக்கு அவற்றைக் கொடுத்து விடுவோம். அதே போல் பழைய துணிகளையும்
அவளுக்குக் கொடுத்து விடுவோம். மற்றப் பெண்களாவது ஹோலி தீபாவளி சமயத்தில்
போனஸ் பணம், புதுத் துணி கேட்பார்கள். கனகு அக்கா அதையும் கேட்கமாட்டாள்.
நாங்களாகக் கொடுத்தால் மறு பேச்சிலாமல் வாங்கிக் கொள்வாள்.அது அவள்
சுபாவம். அதிர்ந்து பேச மாட்டாள். அவளிடம் ஒரு செல்போன் உண்டு. ஆனால் அவளாக
போன் பண்ணிப் பேசத் தெரியாது. படிக்கத் தெரியாதவளுக்கு ஆட்களின்
பெயர்களுடன் நம்பரை சேமித்துவைத்துக்கொள்ள என்று இங்கு யார் மொபைல்
தயாரிக்கிறார்கள்? ஏதோ அழைப்புகளை எடுத்துப் பேசும் அளவுக்கு தெரிந்து
வைத்திருக்கிறாள்.<br />
<br />
சம்பளம் கொடுக்கிறார்கள் என்றோ மரியாதைக்கோ அவள் தம்பி அல்லது மகன் வயதுள்ள எங்களை அண்ணே என்று தான் அழைப்பாள்.<br />
யார் வீட்டிலாவது அதிகத் துணிகள் ஊற வைத்துத் துவைக்க சொன்னால் எதுவும்
பேசாமல் துவைத்து விடுவாள். இங்கு வந்து அழுவாள். “அப்பிடி என்ன
அவசியம்…துவைக்க முடியாதுன்னு சொல்லவேண்டியது தானே?” என்றால் பேசாமல்
இருப்பாள். பல இடங்களில் துவைக்க வேண்டிய கட்டாயம். அவள் இருக்கும் ஜுக்கி
குடிசைப் பகுதிக்கு அவளுக்கு இருக்கும் கடன் அதிகம் தான். மூன்று லட்சம்
கடன் வைத்திருந்தாள். பையன் கல்யாணத்துக்கு செலவு செய்ய இன்ன பிற
தேவைகளுக்கு என்று வெளியில் வாங்கி வாங்கி இந்த அளவுக்கு கடன்
சேர்ந்திருந்தது. அந்தப் பையன் கல்யாணமான இரண்டாவது நாளில்
தூக்குமாட்டிகொண்டு இறந்து போனான். ஏதோ மெக்கானிக் வேலை பார்த்துக்
கொண்டிருந்த அவனை நம்பி கனகு அக்கா வாங்கிய கடன் அவளை ஒரு நாளைக்கு குறைந்த
பட்சம் பத்து வீடுகளுக்காவது கை ஒடியத் துவைக்க வைத்துக்கொண்டிருக்கிறது.
இனி எத்தனை முறை பிறந்தாலும் அவள் சம்பாத்தியம் கடனை அடைத்து விடுமா
தெரியவில்லை. அவளது கணவனும் ஆதரவாக இருப்பது போல் தெரியவில்லை.
சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் அவன் குடிக்கே செலவு செய்துவிடுவான் என்று
அவ்வப்போது சொல்வாள். வாரத்துக்கு எட்டுநாள் குடிக்கும் எங்களால் என்ன
நியாயம் சொல்லி விட முடியும்?<br />
<div style="text-align: center;">
<img alt="" class="aligncenter size-large wp-image-21476" height="320" src="http://solvanam.com/wp-content/uploads/2012/08/v_c-926x1024.jpg" width="289" /></div>
மணிகண்டன் குளித்து முடிக்க வழக்கத்தை விட அதிக நேரமானது. என் நீண்ட
நேரத் தேடுதலுக்குப் பிறகு கிடைத்த சாக்சின் அடிப்பாகம் நூல் பிரிந்து
தொங்கியது. அதை வீசியெறிந்து விட்டு வேறொன்றைத் தேட அந்த துணிக்
குவியலுக்குள் கைவிட்டபோது தான் எதேச்சையாக அறையின் மூலையில் அந்தப் பையைப்
பார்த்தேன். திடீரென்று அந்த இடத்தில அது முளைத்திருந்தது போலிருந்தது.
அதற்குள் நேற்று கைலி பனியன் உள்ளிட்ட சில துணிகள் தெரிந்தன. கனகு அக்கா
அதன் அருகில் தான் நின்று கொண்டிருந்தாள். அப்போது தான் ஏதோ விஷயம்
புரிந்தவன் போல் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தேன். அவள் முகம் அழுது
அழுது வீங்கியிருப்பது தெரிந்தது. சந்தேகம் கலந்த குற்றவுணர்ச்சி மனதின்
சுவர்களில் அழுத்தமாய் படிய ” என்ன ஆச்சு அக்கா?” என்றேன். இதுவரை அவள்
மணிகண்டன் குளித்து முடித்தவுடன் துணிகளை ஊறவைக்கக் காத்திருந்தாள் என்றே
நினைத்திருந்தேன்.<br />
“இத வச்சிக்கிங்க அண்ணே” என்றாள், வெடித்துவிடத் தயாராய் இருக்கும்
அழுகையின் மேல் வார்த்தைகளை ஒட்டவைத்து. “நான் இதை திருடிட்டுப் போகலைண்ணே”
அந்தப் பையை எடுத்து என்னிடம் நீட்டினாள். நடுக்கத்தை மறைக்க அவள் உடலை
விறைப்பாக்கி நிற்க முயல்வது போலிருந்தது.<br />
“அதான் இத வேணாம்னு சொல்லிட்டனே ..எதுக்கு இதக் கொண்டாந்தீங்க” என்றேன். குற்றவுணர்வை சமாளிக்க குரல் சற்று உயர்ந்தது.<br />
“எம்புருஷன் என்ன வீட்டுக்குள்ள சேக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு..ஊரான்
வீட்டுலே திருடுற தேவடியான்னு என்னை போட்டு அடிச்சிட்டாருண்ணே” என்றவள்
கண்களில் அதுவரை தேக்கப்பட்டிருந்த கண்ணீர் அந்தக் கறுத்த முகத்தில்
பாறையில் கசியும் நீரைப் போல் வழியத் தொடங்கியது.<br />
<br />
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. விஷயம் மெள்ள மெள்ள நினைவுக்கு
வந்து சம்பவத்தின் தீவிரம் ஒரு கனத்த இருள் போல் என் மனதுக்குள் படிந்தது.
முன்பிருந்த அறையை காலி செய்யும்போது பழைய உபயோகப்படாத துணிகள் பேப்பர்கள்
உள்ளிட்ட பொருட்களை அங்கேயே விட்டு விட்டோம். எப்படியும் சுத்தம் செய்ய
வரும் கனகு அக்கா அவளுக்கு உபயோகப்படும் என்று நினைக்கும் பொருட்களை
எடுத்துக்கொள்வாள் என்பது எங்களுக்குத் தெரியும். ஒவ்வொருமுறை அறை
மாறும்போதும் இது தான் வழக்கம். அன்றும் இப்படித் தான் நடந்தது.
இத்தனைக்கும் அவள் பக்கத்துக்கு அறைக்காரனிடம் எனக்கு போன் பண்ண சொல்லிப்
பேசி பழையப் பொருட்களை எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்கவும் செய்தாள்.<br />
சரியென்று விட்டு அவசரமாக என் பாஸ் அழைத்ததின் பேரில் லீவ் போட்ட நாளில்
அலுவலகம் சென்று விட்டேன். இரவு எட்டுமணிக்கு வந்து பார்க்கும்போது தான்
அந்தப் பழைய அறைக்கு வெளியில் உள்ள கொடியில் காய்ந்து கொண்டிருந்த என்
பனியன்கள் இரண்டு கைலி மற்றும் வீட்டுக்குள் அணியும் டீஷர்ட் போன்றவை
இல்லாதது உறைத்தது. எல்லா துணிகளையும் கிடைத்தவாக்கில் அள்ளி வெவ்வேறு
பைகளில் அடைத்து விட்டதால் ஷார்ட்ஸ்,கைலி போன்றவை எந்தப் பையில்
இருக்கின்றன என்று குழம்பி நின்றுகொண்டிருந்தேன்.<br />
<br />
அந்த நேரத்தில் என் கையாலாகதத் தனமும் அவசரமும் உருமாறி அக்கா மேல்
எரிச்சல் தோன்றியது. அந்தக் கைலியும் பனியனும் நான் வழக்கமாக அணிவது தானே.
அதை எதற்காக எடுத்துச் சென்றாள் என்று கணநேரம் கோபம் தோன்றியது. நேரம்
பார்க்காமல் அவள் நம்பருக்கு போன் செய்தேன். அவள் கணவன் தான் பேசினான்.
இந்த நேரத்துக்கு என்ன போன் என்று கேட்கும் குரலில் “சொல்லுங்க ஸார்..என்ன
விஷயம்..அவ சமச்சிக்கிட்டிருக்கா” என்றான்.<br />
“இல்ல ..அவுங்க கிட்டே ஒண்ணு கேக்கணும்” என்றேன்.<br />
“இந்தா..சாரோருத்தர் பேசுறாரு..பேசு” என்று அவளிடம் கொடுத்தான் அந்தாள்.<br />
எடுத்தவுடன் “என்னைக் கேட்காமல் ஏன் என் கைலியை எடுத்துட்டுப் போனீங்க
?” என்றேன். என் குரலில் கலந்திருந்த கோபம் அவளை எப்படி உறுத்தி இருக்கும்
என்று நான் நினைக்கவே இல்லை.<br />
“இல்லேண்ணே ..ஒங்க கிட்டே கூட போன் பண்ணிக் கேட்டேனே..நீங்க தானே
எடுத்துக்க சொன்னீங்க ” என்றாள் குழம்பிய குரலில். அந்தக் கைலி பனியன்
பற்றி அவள் போன் பண்ணிக் கேட்கும்போது எனக்கு நினைவே இல்லை. சரி ஏதோ
குழப்பம் என்று தோன்றியது.<br />
“சரி ..பரவால்லே..நா வேற கைலி தேடிக்கிறேன்..அத நீங்களே வச்சிக்குங்க” என்றேன்.<br />
“சரிண்ணே” என்றவளின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பிறகு மணிகண்டன் வந்த
பின் புது அறைக்கான சந்தோஷத்தில் குடிக்க ஆரம்பித்ததில் எல்லாமே மறந்து
விட்டது. அது ஒரு விஷயமே இல்லை என்பதால் நான் வழக்கமான வேலைகளில்
தொலைந்திருந்தேன்.<br />
<br />
அக்கா இரண்டு நாளும் இங்கு வந்திருக்கிறாள். இரண்டு நாளும் எனக்கும்
மணிக்கும் சீக்கிரமே அலுவலகம் செல்ல வேண்டி வந்ததால் அவள் வரும் நேரம்
முன்பே கிளம்பிவிட்டிருந்தோம். புது அறைக்கு கதவிலேயே பொருத்தப்பட்ட பூட்டு
என்பதால் பழைய சாவி அவளுக்கு பயன்படவில்லை. இன்று வீட்டில் நாங்கள்
இருக்கும்போது வந்து விட்டாள்.<br />
“என்னக்கா ..அவரு என்ன சொன்னாரு? நீங்க திருடினீங்கன்னு நான் சொல்லவே இல்லையே?” என்றேன் அடைக்கும் குரலில்.<br />
அந்தாள் அக்கா போனில் பேசும்போதே மொபைலுக்கு அருகில் காதை வைத்துக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறான்.<br />
நான் பேசியதை அவன் வேறு மாதிரி எடுத்துக்கொண்டு அவளைத் திருடி என்று
சொல்லி அடித்திருக்கிறான். தான் திருடவில்லை என்று திரும்பத் திரும்ப
கண்ணீர் மல்க சொன்ன போதும் அவளைக் கெட்ட வார்த்தைகளில் திட்டி
உதைத்திருக்கிறான்.<br />
“இன்னிக்கு.. கைலியக் காணோம்னு சொல்லுவானுங்க..நாளைக்கி செயினைக்
காணோம்னு போலீசோட வருவானுங்க..ஏண்டி இப்படிப் பண்ணின தேவடியா” என்று
கேட்டுக் கேட்டு அடித்ததாக அவள் அழுதபடி சொன்னபோது நான் உறைந்திருந்தேன்.<br />
அன்று இரவு முழுவதும் அவளை வீட்டிற்கு வெளியிலேயே நிறுத்தி வைத்தானாம் அவன்.<br />
“அவர் அடிச்சது கூட பரவாயில்லண்ணே ..என்ன திருடின்னு சொல்லி சொல்லி
திட்டுனதத் தான் என்னாலே தாங்கவே முடியல” என்றாள் விசும்பல்களுக்கு இடையே.
தாயை ஒத்த வயதுடைய ஒருத்தி ஒன்றுமே செய்யாத குற்றத்துக்கு பழி சுமந்து என்
முன் நின்று கொண்டிருக்கிறாள். பேச்சு மறந்தவன் போல் நின்றுகொண்டிருந்தேன்.<br />
<br />
எத்தனை வருடங்களாக என் அழுக்குகளைத் துவைப்பவள். எத்தனை முறை நான்
பாக்கெட்டுகளில் மறந்து வைத்து விட்ட பணத்தை எடுத்து டேபிளில் வைத்து
விட்டுப் போயிருக்கிறாள். எத்தனை முறை சம்பளம் தர தாமதமானாலும் அதைப்
பற்றி கேட்காமலேயே துணி துவைத்து சென்றிருக்கிறாள். அந்த அழுக்கு கைலியை
வைத்து அவள் எந்த ராஜ்ஜியத்தை ஆளப் போகிறாள். அவசரப்பட்டு நான் செய்த
முட்டாள் தனம் அவள் வாழ்க்கையில் எத்தனை வலி தரும் கொடூரத்துக்குக்
காரணமாகி விட்டது என்று குமைந்து கொண்டிருந்தேன். அதற்குள் குளித்து விட்டு
வந்திருந்த மணிகண்டன் நடந்ததை யூகித்தவனாக என்னையும் அவளையும்
பார்த்துக்கொண்டே இருந்தான்.<br />
<br />
“இத உங்க கிட்டே குடுத்துட்டு வந்தா தான் என்ன வீட்டுக்குள்ளாற
விடுவேன்னு சொல்லிட்டாரு” என்று அந்தப் பையை என் கைபிடித்துக் கொடுத்தாள்.
நான் அசூசையாக அதை உதறி ” தயவு செஞ்சி நீங்களே வச்சிக்கிங்கக்கா..நா
அந்தாளு கிட்டே பேசிக்கிறேன்” என்றேன்.<br />
பலமுறை வற்புறுத்திய பின் அந்தப் பையை அவள் தன் கையில்
எடுத்துக்கொண்டாள். வீட்டுக்குக் கொண்டு செல்வாளா தெரியவில்லை. செல்லும்
வழியில் எங்காவது வீசி எறியும் அளவுக்குக் கூட எதிர்மறையாக யோசிக்கத்
தெரியாதவள்.<br />
<br />
“நா பேசிக்கிறேன்..எடுத்திக்கிட்டுப் போங்க ” என்றேன் உறுதியான குரலில்.
அந்தப் பைக்குள் ஒரு ஐநூறு ரூபாயை வைத்தேன். அவள் கணவனிடம் நான் என்ன பேசி
அவளை நிரூபிக்க முடியும் என்றெல்லாம் யோசிக்கவேயில்லை. அந்த நேரத்துக்கு
எப்படியாவது அவளை சமாதானம் செய்துவிட வேண்டும் என்று மட்டும் தோன்றியது.
போகும் போது இனிமேல் வருவாளா என்று கேட்க எனக்குத் தோன்றவில்லை. என்னைப்போல
எத்தனை அற்பர்களிடம் துணி துவைத்து சம்பாதிப்பவள். இதற்கெல்லாம்
கோபித்துக்கொண்டு வராமல் இருந்தால் அவளால் என்ன செய்து கடனை அடைக்க
முடியும். சாவியை வீட்டுக்காரனிடம் கொடுத்து வைக்கிறேன் என்று மட்டும்
சொன்னேன். மன்னித்து விட்ட முகத்தோடு தலையை அசைத்து விட்டு சென்றாள்.<br />
<br />
பிறகு மணியிடம் நடந்ததை முழுவதுமாக சொன்னேன். என்னை ஒரு முறை உற்றுப்
பார்த்து விட்டு “பரவால்லே விடுங்க..அதான் செலவுக்கும் கொஞ்சம் பணம்
குடுத்துட்டீங்கள்ளே ” என்றான். திட்டியிருக்கக் கூடாதா என்று தோன்றியது.
அவ்வளவு தான். திரும்பவும் வேலை களைப்பு என்று நேரம் ஓடி இரவில்
நண்பர்களுடன் சேர்ந்து குடி தொடங்கியது. சில விருந்தினர்கள் வேறு.
பின்னணியில் இளையராஜாவின் வயலின் கம்பிகள் வழியாக பால்யமும் பருவமும்
திரும்பவும் உருவாகி உருவாகி கண்முன் கரைந்துகொண்டிருந்தன. பள்ளி முடிந்து
வீடு வரும் வழியில் எப்போதும் எதிர்ப்படும் சர்வேயர் வீட்டு ஆடு, சின்ன
சின்ன மணிகள் கட்டப்பட்டு காற்றெங்கும் மணியின் ஓசையைப் பரப்பும் தேவசகாயம்
வீட்டு வாசல்படி, எந்நேரமும் அடுக்களை ஜன்னலில் தெரியும் வெள்ளையக்காவின்
முகம் என்று காட்சிகள் மங்கலாக மறைந்துகொண்டே போகையில்
அத்திரைச்சீலைகளுக்குப் பின் மறைக்கப்பட்டு மறக்க நினைத்துப் புதைக்கப்
பட்ட அல்லது புதைத்து விட்டதாய் நினைத்த அவ்வளவும் ….ஒரு முறை அப்பா
மஞ்சள்காமாலை வந்து படுத்தது, சித்தப்பாக்கள் ஒதுங்கிக்கொள்ள வீட்டுப்
பொருள் ஒவ்வொன்றும் அடமானமாய் ஆனது, ஒரு கட்டத்தில் அம்மா தெரிந்தவர்களின்
வீடுகளுக்கு பாத்திரம் தேய்க்கப் போனது, ஒரே வாரம் தான், அதற்குள்
அப்பாவுக்கு உடல்நிலை சரியாகி அவர் விண்ணப்பித்திருந்த வேலையும் கிடைத்தது,
வீட்டு வேலைக்கு சென்று வந்த ஒரு நாளில் அம்மா யாரிடமும் பேசாமல் சாமி
விளக்கைப் பார்த்துக்கொண்டே அழுதது என மறையாமல் நினைவில் உறைந்து விட்ட
காட்சிகள் மெல்ல நகரும் சலனப்படம் போல் அழிக்கவொட்டாமல், மறக்கவொட்டாமல்
மீண்டும் தோன்ற…அக்காட்சியின் தொடர்ச்சி போல் இரவில் ஒற்றை உருவமாய் கனகு
அக்கா தனது குடிசைக்கு வெளியே அழுதபடி நின்றிருக்கும் தோற்றம் கண்முன்
வந்தது. அடர்ந்திருந்த இருளில் மின்னும் கண்கள் அவளைச் சுற்றிலும்
சிமிட்டியபடி இருந்தன .என்னென்னவோ சொல்லிப் புலம்பியபடி நடுங்கிக் கொண்டே
அவள் சாத்தப்பட்டிருக்கும் கதவை பார்த்துக் கொண்டே நின்றுகொண்டிருந்தாள்.<br />
என்னை அறியாமல் கண்களில் நீர் பெருகி வழிந்தது.<br />
<br />
மணி சொன்னான். ” நம்மாளு ..சரக்கடிக்கும்போது ராஜா பாட்டு கேட்டா
போதும் ..உருகி ஊத்திடுவாப்புலே”. நண்பர்கள் கேலியாக சிரித்துக்கொண்டே
என்னை நோக்கி கோப்பைகளை உயர்த்தினார்கள். இசையை மீறி சிரிப்பு சத்தம்
எழுந்து அறையை நிறைத்தது.<br />
<br />
-<a href="http://solvanam.com/?p=21475">சொல்வனம்</a> இணைய இதழில் வெளியான சிறுகதை<br />
<a href="http://solvanam.com/?p=21475%20">http://solvanam.com/?p=21475 </a></div>
chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.com4